Contact us at: sooddram@gmail.com

 

ஈரோஸ் சுந்தர் பற்றி புஷ்பராணியும், டக்ளஸ் உம் நினைவு கூருகின்றனர்

எம்மை விட்டு மறைந்து போன கி. பி. அரவிந்தன்[பிரான்சிஸ்] நினைவாகத் "தேனீ இணையதளத்துக்கு தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுதியிருந்த நினைவாஞ்சலியைப் படித்தேன். இதன் ஆரம்பத்தில் இவர் சொல்லியிருப்பவை தவறானவையாகும். "தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியாக அப்போது இளைஞர் பேரவையே இருந்தது." -- இதை எந்தக் காலத்தை மனதில் இருத்தி இவர் எழுதியிருக்கின்றார் 1975ம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலமா ...அல்லது 1973ம் ஆண்டுக்கும் 1975ம் ஆண்டு வரையிலான தமிழ் இளைஞர் பேரவை பற்றியதா...விபரம் சரிவரத் தெரியாமல் குழம்பி எழுதியிருக்கின்றார் என்று நினைக்கிறேன். இன்னும் அவர் கூறுவதை இங்கு தருகின்றேன்.

"மாவை சேனாதிராஜாவின் தலைமையிலான அந்தத் தமிழ் இளைஞர் பேரவை தமிழ் மக்களைத் தவறாக வழி நடத்துவதாகப் பலராலும் உணரப்பட்டது. வெறும் பதவி மோகத்திலேயே அவர்கள் செயற்படுகின்றனர் என்பதை உணர்ந்த பலர் ,இளைஞர் பேரவையிலிருந்து வெளியேறித் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் [TELO ] என்ற அமைப்பை ஆரம்பித்தனர். அதில் பிரதானமானவர் பிரான்சிஸ்.." இவ்வளவும் இவர் கூறிய பிழையான தகவல்களாகும் ...

எனக்குத் தெரிந்தவரை!....இனி என் விளக்கத்துக்கு வருகின்றேன். தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதாகச் சொன்ன தமிழர் கூட்டணியின் [ஞாபகத்தில் இருத்தவும் அப்போது தமிழரசுக் கட்சிஎன்பது மாறித் தமிழர் கூட்டணியாக மாறியிருந்தது.] நாடாளுமன்ற நாற்காலி அரசியலில் தமிழ் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிருப்தி அடைந்து கொண்டிருந்தார்கள். நாடாளுமன்ற அரசியலை நிராகரித்து ,ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ் ஈழ விடுதலையை வெற்றி கொள்ளும் நோக்குடன் 1973 ஜனவரியில் தமிழ் இளைஞர் பேரவை தொடங்கப்பட்டது.

பரந்து பட்ட அரசியல் வேலைகளின் ஊடாக மக்களைத் திரட்டி ,மக்களின் பலத்தில் தங்கிநின்று ,தமிழ்த் தேசிய இனத்தின் ஆயுதப் போராட்டத்தைக் கட்டி எழுப்புவதே தமிழ் இளைஞர் பேரவையின் செயல் திட்டமாயிருந்தது. இது ஒரே நாளில் முடிவெடுக்கப் பட்டதல்ல . பல நாட்கள் திட்டமிட்டுப் பிறந்ததுதான் இளைஞர் பேரவை. புஷ்பராஜா ,பத்ம நாபா, வரதராஜப் பெருமாள் , .பிரான்சிஸ் ஆகியோரே இளைஞர் பேரவையின் உருவாக்கத்தில் முதன்மையானவர்கள். மாவை சேனாதி ராஜா எமது இளைஞர் பேரவையில் தலைவராக இருக்கவும் இல்லை .இளைஞர் பேரவையில் அங்கம் வகிக்கவும் இல்லை.,அப்போது எல்லோராலும் ஏகமனதாகத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர் புஸ்பராஜாவே .


.சேனாதி ராஜாவே இளைஞர் பேரவையைத் துவக்கியவர் என்ற பொய்ப் பிரச்சாரத்தைப் பின்னாட்களில் தமிழர் கூட்டணியினர் மேடை மேடையாக முன்னெடுத்தனர்.. அப்போது தமிழ் இளைஞர் பேரவையினர் நடத்திய ஐம்பது நாள் தொடர் பட்டினிப் போராட்டத்தில் [ ,அது தமிழர் கூட்டணியினர் தமது மிதவாதப் போக்கினால் அரசியல் உணர்வுள்ள . தமிழ் இளைஞர் மத்தியில் செல்வாக்கை இழந்திருந்த காலம்.] இதில் மெதுவாக நுழைந்து கலந்து கொண்ட கூட்டணியினர் .படிப்படியாக இளைஞர் பேரவையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரச் செயல் பட்டதை இளைஞர் பேரவை அறிந்தபோது ,இளைஞர் பேரவைக்குள் இருந்த சில இளைஞர்கள் கூட்டணியுடன் சேர்ந்தியங்க வேண்டுமென்ற முனைப்பில் இறங்கிவிட்டனர்.

ஒரு பகுதியினர் கூட்டணியோடு இயங்க வேண்டுமென்று விடாப்பிடியாக நிற்க...இன்னோர் பகுதியினர் தனித்தே இயங்கவேண்டுமென்று உறுதியாகிவிட்டனர் ..தனித்தே இயங்க வேண்டுமென்பதில் உக்கிரமாக முழு மூச்சாக நின்றவர்களில் பிரான்சிஸ்,கமிலஸ் ,திருஞானம் ஆகியோர் முதன்மையானவர்கள் .பிரான்சிஸ் ஆவது சேனாதி ராஜாவுக்குக் கீழ் இயங்கியதாவது......

.இளைஞர்களின் உடைவுகளுக்கு ஆரம்பப் புள்ளியிட்டவர்கள் கூட்டணியினரே.... தாங்கள் கட்டி எழுப்பிய தமிழ் இளைஞர் பேரவையைக் கண்ணீருடன் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டுத் தமிழ் இளைஞர் பேரவையிலிருந்து வெளியேறிய இளைஞர்கள் ,1975 ஜூன் மாதம் தொடங்கியதுதான் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் [TLO ] பாலஸ்தீனர்களுக்கு ஒரு PLO போல எங்களுக்கொரு TLO தேவையென இயக்கத்துக்கான பெயரை புஷ்பராஜா முன் மொழிய ,"தமிழ் ஈழ விடுதலை இயக்கம் [TLO உருவாயிற்று

.மக்களை அரசியல் ரீதியாக ஒன்றுபடுத்தி ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத் தமிழ் ஈழத்தை நோக்கிப் பயணிப்பது என்ற உறுதியோடு இயக்கம் உருவாயிற்று . இதில் முன்னணியில் நின்று முழு மூச்சாகச் செயல் பட்டவர்கள். முத்துக்குமாரசாமி ,வரதராஜப்பெருமாள் ,புஷ்பராஜா,,பிரான்சிஸ், தங்கமகேந்திரன், சந்திரமோகன். , என்று இன்னும் பட்டியல் நீளும் முத்துகுமாரசாமி ,வரதராஜப்பெருமாள் ,,புஷ்பராஜா, சந்திரமோகன்,,தங்கமகேந்திரன் ஆகியோர் தலைமைக்குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர், .

இதன் பின் இளைஞர் மத்தியில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் செல்வாக்குடன் வளர்ந்ததும் பின்னர் இயக்கம் சிதைந்து ஆளொரு பக்கமாகப் போனதும் தனிக்கதை ..இவற்றை விரிவாக என்."அகாலத்தில் எழுதியுள்ளேன். எல்லாவற்றையும் இங்கே எழுதினால் படிப்போருக்குப் பொறுமை இருக்காது,.

..இந்த TELO ,TLO ஆகியவற்றுக்கான விளக்கத்தைக் கட்டாயம் சொல்லியாகவேண்டும் ...குட்டிமணி ,தங்கத்துரை ,சிறீ சபாரத்தினம், ,போன்றவர்கள் ஏற்கனவே வேறொரு போராட்டக்குழுவாக இயங்கிக் கொண்டிருந்தனர். போலீசார் மீதான பழி வாங்குதல்களையும், சில கொள்ளைகளையும் நிகழ்த்திக் கொண்டிருந்த அவர்கள் ,குழு நிலையிலிருந்து ஓர் அரசியல் இயக்கமாக வளர்ச்சியடைந்தபோது ,அவர்களது இயக்கத்துக்கு ,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் "என்ற எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார்கள். இந்தப் பெயர் கைமாற்றம் குறித்துக் குட்டிமணி குழுவினர் எமது தலைமைக் குழு உறுப்பினர்களான முத்துக்குமாரசாமியிடமும்,புஷ்பராஜாவிடமும் பேசியபோது ,அவர்களும் பெயரைக் கைமாற்ற ஒப்புதல் தெரிவித்தார்கள். புதிய ,"தமிழ் ஈழ விடுதலை இயக்கம்"TLO என்ற எழுத்துக்களுடன் ஓர் E சேர்த்து TELO என வைத்துக்கொண்டனர். ----என் அகாலம் நூலில் இருந்தும்.....--

(Pushparani Sithampari)

(இந்தக் கட்டுரைக்கான தலைப்பு மட்டும் சூத்திரம் இணையத் தளத்தால் வழங்கப்பட்டது. ஏனைய விடயங்கள் புஷ்பராணி அவர்களால் எழுதப்பட்டதாகும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com