Contact us at: sooddram@gmail.com

 

நல்லுறவுப் பாதையை சீர்குலைக்குமா வட மாகாண சபைத் தீர்மானம்?

‘இனஒழிப்பு’ என்ற தீர் மானத்தை வட மாகாண சபை நிறைவேற்றிக் கொண் டது. ஏலவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டிருந்த இத்தீர்மானம் தூசு தட்டப்பட்டு மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டு வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய ஜனாதிபதி தனது இந்தியாவுக்கான முதலாவது பயணத்தை மேற்கொள்ள விருந்த வேளையிலும் ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவையின் 28 வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெறவிருந்த வேளையிலும் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இது தவிர இலங்கையின் 67 வது சுதந்திர தின வைபவத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர சுமந்திரனும் பங்குகொண்ட சம்பவமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளே இருக்கும் கடும்போக்காளர்களை அதிருப்திக்குள்ளாக் கியிருந்தது. இவ்வாறான பின்புலத்தில் தான் இன ஒழிப்புத் தீர்மானம் வ.மா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசாங்கங்களி னால் மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கைகளையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

சர்வதேச சமுகத்தின் இன ஒழிப்புக்கு எதிரான பிரகடனம் 12. 01. 1951 இல் ஐ. நா சபையில் நிறைவேற்றப்பட்டது. இச்சாசனத்தின் 2வது உறுப்புரையின் பிரிவு (அ) ஒர் இனத்தின் உறுப்பினரை கொன்றொழித்தல், பிரிவு (ஆ) ஓர் இனத்தின் உறுப்பினர்களுக்கு உடல் அல்லது உள ரீதியில் காத்திரமான தாக்க த்தை ஏற்படுத்தல் என்பன முக்கியமான கூற்றுகளாகும். இங்கே யாரால் யாருக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது என்பது அவதானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஓர் அரசாங்கம் அல்லது இனம் இன்னுமொரு இனத்தின் மீது மேற்கொண்ட இன ஒழிப்பு நடவடிக் கைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கமானது தமிழ் மக்கள் மீது இன ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவே வட மாகாண முதலமைச்சரினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் எடுத்துச் சொல்கிறது. ஆனால இத்தீர்மானத்தை கொண்டு வந்தவர்கள் புலிகளினால் மற்றைய இனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கை பற்றி மெளனம் காத்திருப்பதானது ஆச்சரி யமாகவும் வேதனையாகவும் உள்ளது. 30 ஆண்டுகளாகபுலிகளால் மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மூடி மறைக்க முயலும் முன்னேற்பாடாக இதனைக் கருத வேண்டியுள்ளது. இக்காலப் பகுதியில் ஆயிரக்கணக்கான சிங்கள, முஸ்லிம் மக்கள் இன ஒழிப்புக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது மறைக்க முடியாத உண்மை.

1990ம் ஆண்டு புலிகள் வடபுலத்தைச் சேர்ந்த சுமார் 72 ஆயிரம் முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக ஒரு சில தினங்களில் வெளியேற்றி உள ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது இன ஒழிப்பு நடவடிக்கையே ஆகும். இவைபற்றி வட மாகாண முதலமைச்சர் மெளனம் காப்பதுடன் மெத்தனப் போக்கையும் கடைப்பிடிப்பதன் அர்த்தம் என்ன? மாற்றாந்தாய் மனப்பாங்கில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமாக வடபுல முஸ்லிம்கள் இதனைக் கருத இடமுண்டு. அன்று அகதியா வெளியேறி சொல்லொணா துன்பங்களுக்குள்ளான வடபுல இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் இன்றும் கூட அகதி முகாம்களில் அல்லல்பட்டுத் திரிவது அனைவரும் அறிந்த ஒரு விடயம். இவர்கள் மீது மேற் கொள்ளப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கைகளையிட்டு யார் தீர்மானம் இயற்றப்போகிறார்கள்?

வட மாகாண சபையில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் முழு இலங்கையிலும் சர்வதேச சமூகத்தின் மீதும் ஏற்றளவில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. இத்தீர்மானம் தென்னிலங்கையில் இனவாதிகளுக்கு அவல் கிடைத்தது போன்றதாகும். இது எதிர்வரும் பொதுத்தேர்தலில் இனவாதிகளால் பயன்படுத்தக்கூடும். தவிர புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை யாகவும் இருக்கக்கூடும். அண்டை நாடான இந்தியா கூட இத்தீர்மானத்தை விரும்பியதாகக் தெரியவல்லை. இத்தீர்மானம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பேசுகையில் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இன ஒடுக்கு முறையின் உண்மைத் தன்மை வெளிவர வேண்டும் என குறிப்பிட்டிருக்கின்றார்.

இதே உண்மை வடக்கு, கிழக்கு சிங்களவர், முஸ்லிம்களுக்கெதிராக புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் பொருந்துகிறது என்பதை மறக்கலாகாது. என்றாலும் வட மாகாண சபையின் தீர்மானமானது இலங்கை அரசாங்கத்தின் மீது எதுவித எழுந்தமான கட்டுப் பாட்டையும் விதிக்கக்கூடிய ஒன்றல்ல. சர்வதேச மனித உரிமைச்சட்டம், மனிதாபிமான உரிமைச்சட்டம், அடிப் படை மனித உரிமைச்சட்டம் என்பன சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு ஐ. நா சபையினால் பயன்படுத்தப்படுகின்றன. இன ஒழிப்புக்கெதிரான பிரகடனம் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டுள்ளது. இது யுத்தத்தினால் உண்டான நடவடிக்கைகளுக்கு பெரிதும் பொருந்தக்கூடிய ஒன்று என ஜெனீவா சாசனத்தல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஐ. நா. சபையின் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்படவிருக்கும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு என்ன முறையில் பாதுகாப்புத் தேடப் போகின்றது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. காலத்தை இழுத்தடித்தால் போர்க்குற்ற ரணம் குணமாகலாம் என எண்ணுவது போல் உணரப் படுகின்றது. தவரவும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆசியும் இந்தியாவின் இனக்கப்பாடும் இந்த மென்மைப் போக்குக்கு துணைபோவது போல் மேலோட்டமாகத் தெரிகின்றது. வெண்ணெய் திரண்டு வருகையில் தாழி உடைந்து போகும் தலைவிதிக்கு மீண்டும் ஆளாகிவிடக் கூடாது என்பதே சமாதான விரும்பிகளின் ஆதங்கமாக உள்ளது.

கலாநிதி
யூசுப் கே. மரைக்கார்...

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com