Contact us at: sooddram@gmail.com

 

அஞ்சலி
கி.பி. அரவிந்தன்.

முகம்திருப்பு

சில - பலவிடயங்களுக்கு சாட்சியாக இருப்பதல்ல ,காலத்தின் வாழும் சாட்சியாக இருத்தல் மிகவும் துயரமானது ,அது தண்டனையும்கூட .நீத்தார் பெருமை ,துயர் பகிர்தல் சிறப்பான மானிடப் பண்பாகப் பேணப்படும் நம் மரபில் இறந்துபோன ஒருவரின் ஆளுமை இன்னபிற பெருமைகளைப் பேசும் நாட்களில் அவர் விட்டுச்சென்ற தவறான பக்கங்களை நினைவுகூரல் நற் பண்பாக நம்மிடையே கொள்ளப்படுவதில்லை ,ஒருசிலர் மனம் வெதும்பி அல்லலுற்று ஆற்றாமல் அழுத கண்ணீரோடு அவற்றை பேசி பதிந்துவிடுகின்றனர் , சக நண்பர்களுடன் ஆற்றாமல் முறையிடுகின்றனர் .இப்படி நண்பர் சோபா , கி .பி அரவிந்தன் குறித்த இரங்கலுரையில் குறித்தவற்றை சில பக்குவப்பட்ட அவதானிகள் அசூசையுடனும் கண்ணியம் இன்றியதாயும் கருதுகின்றனர் ,அந்தப் பதிவை எடுத்துவிடும்படியும் அவரை கேட்டுக்கொள்கின்றனர் .நானும் இவற்றிற்கு மௌன சாட்சியாயும் உரத்த சாட்சியாயும் இருப்பதன் நிமித்தமாய் இது குறித்து கருத்துக்கூறவேண்டி இருக்கிறது .இது அவர் குறித்த "போஸ்ட்மோர்ட்டம் ரிப்போர்ட்" அல்ல ,அவரை இயங்கச் செய்த பாசிச யுத்த சூழல் அதன் கருத்தமைவுகள் தொடர்பானது.


ராஜினி கொல்லப்பட்ட சூட்டோடு அதைக் கண்டித்து பாரிஸில் நாங்கள் நடாத்திய கண்டனக் கூட்டம் குறித்த துண்டுப்பிரசுரம் விநியோகித்தபோது ஒரு சலூன் கடைக்காரர் மிகப் பொருத்தமாகவே என்னிடம் சொன்னார் " அங்கை செத்தவருக்கு இங்கை போஸ்ட்மோர்ட்டம் "
"இறந்தவன் தன்னுடைய பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்படுகிறான் "என பைபிள் (ரோமர் :6:7)சொல்கிறது .அரவிந்தன் தன் இயக்க சார்பாக கொண்டுவந்த "நட்புறவுப் பாலம்" வழியே எனக்கு எழுத்துவழி அறிமுகமானார் .ஈரோஸ் ஸ்தாபர்களில் ஒருவரான தோழர் அழகிரி எனக்கு அவற்றின் பலபிரதிகளை தந்துதவினார் ,அழகிரியோடு நான் எப்போதும் கருத்து மன வேற்றுமை கொண்டவனில்லை .தன் வாழ்வின் அத்தனை துயர்களையும் இந்த தமிழ் அரசியல் வழி அடைந்தவர் அவர் . நம்மில் அனேகமாக எல்லோருமே இந்த அரசியல் வழியில் துன்பங்களையும் துயரங்களையும் மட்டுமே கண்டுள்ளோம் ,ஒரே ஒருவரைத் தவிர ,அவர் யாரென உங்களுக்கு மிகை விளக்கம் சொல்லி உங்களை சலிப்பூட்ட நான் விரும்பவில்லை ,இந்த அரசியலின் அத்தனை நலன்களையும் அவர் அடைந்தார் ,கலாநிதி ,பென்விருது இப்படி ,இன்னும் அவர் அடையவேண்டிய உச்சங்கள் அநேகம் உண்டு ,வாழ்க ,!அழகிரி அவர்கள் பிரபாகரன்மீது அவர் கொண்டிருந்த ஆழமான வெறுப்பு ,பிரபாகரனின் உளவியல் பற்றிய அவரது அவதானங்கள் அவரை என்னுடன் இணைத்தது .
பிரான்சில் புலிகளின் வன்முறை நடவடிக்கைகளால் பெரிதும் துயருற்றார் ,அவர் செய்துகொண்டிருந்த செய்திச் சேவையின் காரணமாக அவர் குடும்பம் நாள்தொறும் ஆபாசப் பேச்சுக்களையே கேட்டுக்கொண்டிருந்தது ,அவர் மகன்கள் ஈழ நாதனும் வள்ளுவனும் புலிகள் மிரட்டும் ஆபாச தூஷணை வார்த்தைகளைக் கேட்டே தமிழை ஆழமாக உணர்வுபூர்வமாக கற்றவர்கள் ,அவரைச் சென்று தாக்கும்படி புலிகள் அனாமதேய துண்டுப்பிரசுரங்களை கொடுத்தார்கள் ,தனி ஒருவராக தன் குடும்பத்தோடு அவர் புலிகளின் வன்முறையை எதிர்கொண்டார் ,மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது பிரான்ஸ் அதிகூடிய புலிகளின் அதிகூடிய வன்முறை காடாக இருந்தது ,
சபாலிங்கம் கொல்லப்பட்டார் , "சொல்லாயோ வாய்திறந்து வார்த்தையொன்று சொல்லாயோ வாய்திறந்து "என சபாலிங்கம் படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசச்சொல்ல அப்போது எழுதிக்கொண்டிருந்தவர்களை நாம் கெஞ்சினோம் ,சபாலிங்கத்தின் நெருங்கிய நண்பரான அரவிந்தன் அப்படி ஒரு சம்பவமே நடந்ததாக எங்கும் காட்டிக்கொள்ளவில்லை ,சபாலிங்கத்தின் இறுதிகிரியைக்கும் அவர் வரவில்லை ,எழுத்தாளர்களை புலிகளுக்கு ஆட் சேர்க்கும் வேலையில் அவர் முனைப்பாக இருந்தார் .ஈற்றில் "நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்" பிரச்சாரகராகவும் ,தேர்தல் கொமிசனராகவும் இருந்து தன் கனவின் மீதியையும் வாழ்ந்து முடித்தார் .
சில விடயங்களை மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது ,கடவுள் மன்னிக்கலாம் ,நாம் சாதாரண மனிதர் ,அதனால்தான் :"இறந்தவன் தன்னுடைய பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்படுகிறான் "என பைபிள் (ரோமர் :6:7)சொல்கிறது: இத்தகைய கொலைக்கலாசாரத்தை கண்டிக்க மனமின்றி இருந்த அதிலே ஆறுதல் அடைந்த மகிழ்ச்சிப்பட்ட பிரான்சில்தான் பின்னர் அவர்களுக்குள்ளே அடுக்கடுக்காக பல கொலைகள் நடந்தன ,சில நாட்கள் முன்னரும் ஒருவர் தாக்கப்பட்டார் ,கண்டிக்கத்தான் எப்போதும் நாங்கள் இருக்கிறோமே !, கண்டிக்கவும் இறப்புக்கு அஞ்சலி செலுத்தவும் ,மரியாதை செலுத்தவும் ஒருவரே இருந்துவந்த நிலை போய் இப்போது தனி அஞ்சலி செலுத்தும் காலம் கனிந்திருப்பது ஆறுதலளிக்கிறது .
• "சபாலிங்கம் கொல்லப்பட்டார் , "சொல்லாயோ வாய்திறந்து வார்த்தையொன்று சொல்லாயோ வாய்திறந்து "என சபாலிங்கம் படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசச்சொல்ல அப்போது எழுதிக்கொண்டிருந்தவர்களை நாம் கெஞ்சினோம் ,சபாலிங்கத்தின் நெருங்கிய நண்பரான அரவிந்தன் அப்படி ஒரு சம்பவமே நடந்ததாக எங்கும் காட்டிக்கொள்ளவில்லை ,சபாலிங்கத்தின் இறுதிகிரியைக்கும் அவர் வரவில்லை ,எழுத்தாளர்களை புலிகளுக்கு ஆட் சேர்க்கும் வேலையில் அவர் முனைப்பாக இருந்தார் .ஈற்றில் "நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்" பிரச்சாரகராகவும் ,தேர்தல் கொமிசனராகவும் இருந்து தன் கனவின் மீதியையும் வாழ்ந்து முடித்தார் "
(சுகன் கனகசபை)

.......சபாலிங்கம் மரணமாவது பரவாயில்லை பயத்தின் காரணமாக தவிர்த்துக்கொண்டார் என்று விட்டுவிடலாம். மரணப்படுக்கையிலிருந்து புஸ்பராஜா, கி பி அரவிந்தனுக்கு க்கு ரெலிபொன் செய்து, நான் சாவதற்கு முன் ஒரு தடவை உன்னைப் பார்க்க விரும்புகிறேன் .
வாடா! என்று கூப்பிடதை கூட அரவிந்தன் தட்டிக்கழித்தை என்னவெண்று சொல்ல!!...

(Annam Sinthu Jeevamuraly)
 

......உங்கள் கருத்துகளோடு நானும் உடன்படுகின்றேன் . கி.பி அரவிந்தன் இறந்துபோனது கேட்டு நான் துயர்மிகு கொண்டது உண்மை. ஏனென்றால் எங்கள் கடந்தகாலங்கள் உண்மை இலட்சியத்தோடு...நட்பின் வலிமையோடு கட்டப்பட்டிருந்த மறக்கமுடியாத நினைவுகளைக்கொண்டது. ஆனால் பின்னாட்களில் பிரான்சிசின் நடவடிக்கைகள் சுயநலம் கொண்டதாகத் தலைமைக்குத் துதிபாடும் நசிந்த மனோபாவத்தோடு அவருடைய நடவடிக்கைகளும் எழுத்தும் பொய்மை நிரம்பியதாக இருந்ததையும் நான் மறுப்பதற்கில்லை..ஒரே இலட்சியத்தோடு ,மிகுந்த நட்போடு பழகிய புஸ்பராஜாவைப் பற்றி, புஷ்பராஜா உயிரோடு இல்லை என்ற துணிவில் , இவர் தனது ,இருப்பும் வெறுப்பும் நூலில் , மிக அவதூறாக எழுதியது கண்டு நான் மட்டுமல்ல .என் குடும்பமே கொதித்தது.இப்படி எழுதுமளவுக்கு அவர் ஒன்றும் வீராதி சூரனில்லை. அவ்வளவுக்குத் தன் தலைமையைத் திருப்திப்படுத்தி ,அடிபணியும் நோக்கில் நன்றி என்ற சொல்லையே மறந்துவிட்டார்.. அவர் மறைவால் நான் துயர் கொண்டதும் உண்மை; நான்கொண்ட வெறுப்பும் உண்மை. அகாலத்தில் இவர் பற்றி நான் எழுதியதிலும் என்றும் மாற்றம் ஏற்படப்போவதில்லை.

(Pushparani Sithampari)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com