Contact us at: sooddram@gmail.com

 

தேர்தல் முடிவுகள்

சவால் மிகுந்த, நீண்ட நெடிய போராட்டத்தை நடத்துவோம்!

(பிரகாஷ் காரத்)

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இடது முன்னணிக் குப் பெரும் தோல்வியைத் தந்துள்ளது. இது மேற்கு வங்கத்தை இடதுசாரி களின் கோட்டை எனக் கருதிய நாட்டில் உள்ள இடது, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்குப் பெருமளவில் ஏமாற்றத் தைத் தந்துள்ளது. 1977ல் இருந்து ஏழு முறை அனைத்துத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, 34 ஆண்டு காலம் குறிப்பிடத்தக்க வரலாறு படைத்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன் னணி அரசாங்கம் பதவி விலகியுள்ளது. தேர்தல் முடிவில் சில பொதுவான அம் சங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. மக்கள் மாற்றத்திற்காகத் தீர்மானகரமான முறையில் தங்கள் விருப்பத்தைத் தெரி வித்திருக்கிறார்கள். அதற்காக, திரிணா முல் காங்கிரஸ் கூட் டணிக்குப் பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்திருக் கிறார்கள். இதற்காக இடதுசாரிகளுக்கு எதிரான அனைத்து சக்திகளும் - வலது சாரிகளிலிருந்து இடது அதிதீவிர மாவோ யிஸ்ட்டுகள் வரை - ஒன்று சேர்ந்திருக் கிறார்கள். மேலும் இடது முன்னணி இரண்டு ஆண்டுகளுக்கு முன் இழந்த தளத்தை எதிர்பார்த்த அளவிற்கு மீட்க முடியவில்லை என்பதும் தெளிவாகிறது.

விமர்சனப்பூர்வ ஆய்வு

இடது முன்னணியின் ஆதரவுத் தளத் தில் அரிப்பு ஏற்பட்டிருப்பதற்கும், கணிச மான அளவு அரசியல் திசைமாற்றம் ஏற் பட்டிருப்பதற்குமான காரணங்களை அடையாளம் காண மார்க்சிஸ்ட் கட்சி ஒரு முழுமையான ஆய்வினை மேற் கொள்ள இருக்கிறது.

2009 மக்களவைத் தேர்தலின்போது பெற்ற வாக்குகளைவிட, 11 லட்சம் வாக்கு களை இந்த முறை கூடுதலாக இடது முன்னணி பெற்றிருக்கிறது. இருப்பினும், மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகை யில் வாக்கு விகிதாசாரத்தில் 2.2 விழுக் காட்டுப் புள்ளிகள் குறைவு ஏற்பட்டிருக் கிறது. இடது முன்னணியின் ஆட்சியில் கடந்த முப்பதாண்டுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணற்றச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தபோதிலும், அரசாங்கத் தில் தொடர்ந்து நீடித்திருந்ததால், சில எதிர் மறைக் காரணிகள் குவிவதற்கும் இட்டுச் சென்றுள்ளது. கட்சியின் அரசி யல் மற்றும் ஸ்தாபனப் பணிகளின் பின் னணியில், இந்த தேர்தல் போக்குகள் குறித்து ஓர் ஆழமான ஆய்வினை மேற் கொள்வதென்பது, நம்முடைய அணுகு முறையில் காணப்படும் குறைபாடு களைச் சரிசெய்வதற்கும் ஸ்தாபனப் பல வீனங்களைக் களைவதற்கும் உரிய நட வடிக்கைகளை உருவாக்குவதற்கு உத விடும்.

கேரளாவில், இடது ஜனநாயக முன் னணி மிகவும் குறுகிய அளவிலேயே வெறும் மூன்றே மூன்று இடங்கள் குறை வாகப் பெற்று பெரும்பான்மையை பெற முடியாமல் போயுள்ளது. ஐக்கிய ஜனநா யக முன்னணி இரு இடங்களை மட்டுமே கூடுதலாகப் பெற்று நூலிழை அளவிற்கே பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையே யான வித்தியாசம் என்பது வாக்கு விகிதா சாரத்தில் வெறும் 0.89 விழுக்காடே யாகும். இது இடது ஜனநாயக முன்னணி அரசின் செயல்பாட்டின் மீது மக்கள் பரவலாக திருப்தியுடன் இருந்தனர் என் பதையும், அவர்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான மனநிலை எதுவும் இல்லை என்பதையுமே காட்டுகிறது. முதலமைச் சர் வி.எஸ்.அச்சுதானந்தன் லஞ்சத்திற்கு எதிராக மேற்கொண்ட யுத்தம் மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பினைப் பெற்றது. ஒருசில பிரிவினரிடையே சாதீய மற்றும் மத அமைப்புகள் சில சாகசமாக செல்வாக்கு செலுத்தி இடது ஜனநாயக முன்னணியின் வெற்றியை பாதிப்படைய செயல்பட்டன என்று பூர்வாங்க அறிக் கைகள் காட்டுகின்றன. மத்தியில் ஆட்சி செய்யும் ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தால் வரலாறு காணா அளவிற்கு ஊழலும் விலைவாசி உயர்வும் ஏற்பட்டுள்ளதால், காங்கிரஸ் கூட்டணியால் பெரும் பகுதி மக்களைக் கவர முடியவில்லை.

உள்நோக்கத்துடனான தாக்குதல்கள்

மேற்குவங்கத்தில் ஏற்பட்ட தோல்வி யை அடுத்து முதலாளித்துவ ஊடகங் கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் எதிராக வகை தொகையற்ற விதத்தில் துஷ்பிரச்சாரத் தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. தேர் தல் முடிவுகளானது மார்க்சிஸ்ட் கட்சி யின் மீது விழுந்த மரண அடி என்றும் அதி லிருந்து அது மீளவே முடியாது என்றும் சித்தரிக்க முயல்கின்றன. வேறு சில விமர்சகர் கள் தங்கள் விமர்சனங் களை வேறுவிதமாக முன்வைக்கிறார்கள். அதா வது, கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தம் அராஜகமானது, இக்காலத்திற்குப் பொருந்தாத ஒன்று என்றும், உலக அளவில் சோசலிசமும், மார்க்சியமும் பொருந்தாமல் போனதன் நீட்சியாகவே மேற்குவங்க தேர்தல் முடிவு அமைந் துள்ளது என்றும் திரிக்கின்றனர்.

சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந் ததானது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற் படுத்தவில்லை என்கிற உண்மையி லிருந்து இவர்களின் கூற்றுக்கள் பொய் யானவை என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். உண்மையில், 1990 களில் கட்சி மேற்கு வங்கத்திலும், கேர ளாவிலும் மேலும் உறுதியாகவும் வலு வாகவும் வளர்ந்தது. தத்துவார்த்த நிலை பாட்டை பொறுத்தவரை, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சியத் தத்துவத் தையும் நடைமுறையையும் இந்தியாவின் நிலைமைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமாக பிரயோகித்துக் கொண்டி ருக்கிறது. இது தேக்கமல்ல; மாறாக நிலைமைக்கேற்ப புதுப்பித்துக்கொண்டு வளரும் நிலை யாகும்.

மேற்கு வங்கத்தில் கடந்த நாற்பது ஆண்டு காலமாக எண்ணற்ற போராட் டங்களையும் மக்கள் இயக்கங்களையும் தொடர்ந்து வளர்த்தெடுத்ததன் மூலமா கத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியும், இடது முன்னணியும் வளர்ந்தன. இடது முன்னணியின் தேர்தல் வெற் றிகள் இத்தகைய இயக்கங்கள் மற்றும் போராட்டங்களின் மூலம் உருவான மக்கள் தளங்களின் வெளிப்பாடேயாகும். இடது முன்னணி, மேற்கு வங்கத்தில் வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல; தேர்தல் நடவடிக்கைகளால் மட்டுமே வலிமைமிகுந்த வெகுஜனக் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந் திட வில்லை.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும் இடது முன்னணிக் கும் முடிவுகட்டப்பட்டுவிட்டது என்று கூக்குரலிடுவோர், ஓர் உண்மை யைப் பார்க்க மறுக்கிறார்கள். அதாவது, இப் போது ஏற்பட்டுள்ள தோல்வியிலும் கூட, இடது முன்னணி 41 விழுக்காடு வாக்கு கள் பெற்றுள்ளது. ஒரு கோடியே 95 லட் சம் வாக்காளர்கள் இடது முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இத்தகைய உறுதியான வெகுஜனத் தளத்தின் காரண மாகத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி மீதும், இடது முன்னணி மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டு நிற்க முடிந்துள்ளது. கம்யூனிச எதிர்ப்பு விஷமப் பிரச்சார கர்கள் மற்றும் நவீன தாராளமய ஆதரவு விமர்சகர்களின் கூற்றுக்கள் தவறானவை என்று மெய்ப்பிக்கப்படும். விலகிச்சென் றுள்ள மக்களின் கோரிக்கைகளை முன் வைத்து வலுவான போராட்டங்களை நடத்துவதன் மூலம், விலகிச்சென்ற மக்களின் மனங்களை மார்க்சிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் வென்றெ டுக்கும் என்பது திண்ணம்.

மார்க்சிஸ்ட் கட்சி மீது தொடுக்கப்ப டும் மற்றொரு தாக்குதல், கட்சி மக் கள் மீது ஒடுக்குமுறையை மேற்கொண்ட எதேச்சதிகார சக்தி என்று சித்தரிப்பதும், இடது முன்னணி ஆட்சிக்காலத்தின் ஒட்டுமொத்த வரலாற்றின் மீதும் அவ தூறை அள்ளிவீசுவதுமாகும். இடது முன் னணியின் கடந்த கால வெற்றிகள்கூட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட் டளைகளுக்குக் கீழ்படிய மறுத்தவர்கள் மீது அல்லது அதனை எதிர்த்தவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவியதன் மூல மாகத்தான் கிடைத்தன என்று சொல் லும் அளவிற்குக் கூடச் சிலர் சென்றிருக் கிறார்கள். இத்தகைய விமர் சகர்கள் ஓர் அம்சத்தை வசதியாக மறந்துவிடுகிறார் கள். அதாவது, 1977க்குப்பின்னர் நடை பெற்ற ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், இடதுசாரிகளுக்கு எதிராக வாக்களித்தோரின் விகிதாசாரம் 40 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் இதற்கு முன் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் 45 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடுகள் வரை வாக்குகள் பெற்று குறிப்பிடத்தக்க வரலாறு படைத் திருக்கின்றன. மக்கள் மத்தியில் வெகு ஆழமாக வேரூன்றியிருப்பது குறிப்பாக கிராமப்புற மக்கள் மத் தியில் வெகுவாக செல்வாக்கு செலுத்தி வந்ததும்தான் இதற்குக் காரணங்களாகும். சுயநலம் சற்றும் இன்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் களை கொடுங்கோலர்கள், ஊழல் பேர் வழிகள் என்று பொய்யாக உள்நோக்கத் துடன் சித்தரிப்பதன் மூலம் கட்சியை பலவீனப்படுத்தி விடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

இடது முன்னணி அரசாங்கம் இயல் பாகவே ஜனநாயக விரோதமானது என் றும், எதிர்க்கட்சிகளுக்கு இடம் கொடாத சர்வாதிகாரத்தன்மை கொண்டது என்றும் எதிர்ப்பவர்களையெல்லாம் அழித்துவி டும் என்றும் ஒரு அவதூறு முன்வைக்கப் பட்டிருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ், ஜனநாயக முறையில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டுத்தான் இடது முன்னணி தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது சாரிகளும் நாட்டில் உள்ள அமைப்புக ளில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த பாடு படுவதில் மிகவும் உறுதியான சக்தி என்று நிரூபித்து வந்திருக்கின்றன. கேர ளாவில் 1957-ல் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வென்று நாட்டில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர வையை அமைத்ததிலிருந்தே, அது நாட் டில் ஜனநாயக நடைமுறைகளில் பெரு வாரியான மக்களைப் பங்கேற்க வைத்த தன் மூலம் ஜன நாயகத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்திருக்கிறது.

நாட்டில் அதிக மான அளவில் மக்கள் வாக்களிக்கும் மாநிலங்களாக மேற்கு வங் கம், கேரளம் மற்றும் திரிபுரா ஆகியவை மாறியிருப்பதென்பது யதேச்சையாக நிகழ்ந்ததல்ல. இம்மூன்று மாநிலங்களி லும் நடைபெற்ற நிலச்சீர்திருத்தங்கள், அங்கிருந்த பழைய நிலப்பிரபுத்துவக் கட் டமைப்பை சுக்குநூறாக தகர்த்து, ஜன நாயக அமைப்பினை விரிவாக்கியுள்ளன. பஞ்சாயத்து அமைப்புகளுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இடது சாரிகள் உருவாக்கிய ஜனநாயகப் பாரம் பரியத்தைக் களங்கப்படுத்தவும், சீர் குலைக்கவும்தான் ஆதிக்க வர்க்கங் களின் ஏஜெண்டுகளும், பிற்போக்கு சக்திகளும் இப்போது முயற்சிக்கின்றன.

இடதுசாரி அரசாங்கங்களின் பங்களிப்புகள்

மக்களின் ஆதரவைப் பெற முடிந்த இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசாங்கங்களை நடத்துவ தில் சொந்த அணுகுமுறையைக் கை யாண்டது. இடதுசாரிகள் தலைமையி லான அரசாங்கங்கள், இடது மற்றும் ஜன நாயக இயக்கங்கள் மற்றும் உழைக்கும் மக் களின் இயக்கங்கள் வளர்ந்து வலுப் பெறக்கூடிய வகையில் செயல்பட வேண்டி இருந்தன. அரசியலமைப்புச் சட்டம் தற்போது மாநில அரசுகளுக்கு அளித்துள்ள வரையறைக்கு உட்பட்டே, மக்களுக்கு நிவாரணம் தரக்கூடிய விதத் தில் மாற்றுக் கொள்கைகளை திட்ட மிட்டு செயல்படுத்திட வேண்டும் என்று கட்சித் திட்டம் விளக்கிக் கூறியிருக்கிறது. இவ்வாறு தன்னுடைய லட்சியத்தை அடைந்திட, மேற்குவங்க இடது முன் னணி அரசாங்கம் தீவிரமாகச் செயல் பட்டிருக்கிறது என்பதை இடது முன்ன ணியின் ஈடிணையற்ற வரலாறு காட்டு கிறது. இடதுசாரிகள் தலைமையிலான இத்தகையதோர் அரசாங்கத்தின் இழப்பு என்பது ஒரு பின்னடைவுதான். ஆயினும் இதனை நிரந்தரமான, அடிப்படையான இழப்பு என்று பார்க்கக் கூடாது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உழைக்கும் மக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி அணிதிரட்ட வேண்டியதன் அவசியத் தையும், அவர்களை வர்க்க மற்றும் வெகு ஜன அமைப்புகளின் மூலமாக அணி திரட்ட வேண்டியதன் அவசியத்தையும் வெகுஜன இயக்கங்களையும் போராட் டங்களையும் வளர்த்தெடுத்து, அதன் மூலம் மக்களின் அரசியலுணர்வை மேம் படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறது. இடதுசாரிகள் தலைமையிலான அரசாங் கங்கள் அமைந்தது இத்தகைய செயல் முறையின் வெளிப்பாடேயாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர் தல் முடிவுகள் குறித்து முழுமையாக ஆய் வுகள் செய்தபின், அடிப்படை வர்க்கங் களின் பிரச்சனைகள் குறித்தும், உழைக் கும் மக்களின் நலன்களுக்கான போராட் டங்கள் குறித்தும் சரியானதொரு திசை வழியில் உத்திகளை உருவாக்கிடும். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள் கைகளுக்கு எதிரான போராட்டம், மக் களின் வாழ்க்கைத்தரத்தைப் பாதுகாப் பதற்கான போராட்டம், நாட்டின் இறை யாண்மையை மற்றும் மதச்சார்பின் மையைப் பாதுகாப்பதற்கான போராட்டம் ஆகியவைதான், காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு எதிராக நாட்டின் முன்வைக்கப்படும் மாற்று அரசியல் பாதையாக இப்போதும் திகழ்கிறது.

மேற்கு வங்கத்தில் மாறியுள்ள அரசி யல் சூழ்நிலையில், கடந்த முப்பதாண்டு களுக்கும் மேலான இடது முன்னணி ஆட்சியில் மக்களுக்குக் கிடைத்திட்ட பலன்களை அவர்களிடமிருந்து எவரும் தட்டிப்பறித்திடாமல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பாதுகாத்திடும். ஆளும் கூட்டணியின் வர்க்கக் குணத் தின் காரணமாக அது நிலச்சீர்திருத்தங் கள் மூலம் மக்களுக்குக் கிடைத்திட்ட பயன்களைப் பறித்திடவும், உழைக்கும் மக்களுக்குக் கிடைத்திட்ட பலன் களை ஒழித்துக்கட்டவும் முயற்சிக்கும். நிலச் சீர்திருத்தத்தையும் குத்தகை தாரர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுவோம். தொழிலாளர்களை அவர்களது உரிமை களுக்கான போராட்டத்திற்கும், உழைக் கும் மக்களின் அனைத்துப் பிரிவினரை யும் தங்களின் வாழ்க்கைத்தரத் தினைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கும் மேலும் வலுவாக அணிதிரட்டிடுவோம். மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்க மாண்பினையும் பாதுகாத் திடுவோம். பிரிவினை சக்திகள் நாட்டின் ஒற்றுமை யையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைத் திட மேற்கொள்ளும் முயற்சி களையும் முறியடித்திடுவோம். இவை அனைத்தை யும் இடதுசாரி ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் நிறைவேற்றிடு வோம்.

கட்சியையும் இடது முன்னணியையும் பாதுகாத்திடுவோம்

தேர்தல் முடிவின் பின்னணியில் மேற்கு வங்கத்தில் கட்சியையும், இடது முன்னணியையும் இயக்கத்தையும் காப் பாற்ற வேண்டிய கடமை உட னடியாக நம் முன் வந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவரத்தொடங்கியதுமே, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் மீது எண்ணற்றத் தாக்குதல் கள் நடைபெற்றிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன் னணி ஊழியர்கள் மீதும் ஆதரவாளர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இரு நாட்களி லேயே கட்சியின் இரு தலைவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட் டிருக்கிறார் கள். திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் வெற்றியைப் பயன்படுத்திக் கொண்டு, மார்க்சிஸ்ட் கட்சியையும் இடதுசாரி களையும் பல பகுதிகளில் ஒடுக்கும் செயலில் இறங்கியிருக்கிறது. இது முறி யடிக்கப்பட்டாக வேண்டும். இத்தகைய வன்முறை வெறியாட்டங்களுக்கு எதி ராக மேற்கு வங்க மக்களின் ஜனநாயக உணர்வுகள் கிளர்ந்தெழச் செய்யப்பட வேண்டியுள்ளது. இத்தகைய தாக்குதல் களுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய விதத் தில் நாடு முழுவதும் உள்ள கட்சி அணி களும், இடதுசாரி ஜனநாயக சக்திகளும் மேற்கு வங்கத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் இடது முன்ன ணியுடனும் உறுதியுடன் நிற்க வேண்டும்.

தமிழில் : ச.வீரமணி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com