Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்த் திரைப்படங்களில் ஈழத்தமிழர் போராட்டச் சூழலின் வெளிப்பாடு

(அ. யேசுராசா)

இவ்வாறான ஆய்வுகளின் போது, பெரும் பாலும் முதலில் பலியாவது கலைத்து வம். ஏனெனில், குறிப்பிட்ட தலைப் புடன் பொருந்திய விடயங்கள் எங்கு எப்படிக் காணப்படுகின்றன என்பதைத் தொகுப்பதே பொதுவாக நிகழ்கிறது. இத்தகைய செயற்பாடு எந்தளவிற்குச் சரி என்ற ஐயப்பாடு எனக்குண்டு. குறிப் பிட்ட விடயம் குறிப்பிட்ட கலை வடிவத் தில் வெளிப்படுவ திலுள்ள பிசிரற்ற தன் மைகள் - கலைத்துவம் - முக்கியமான தெனக் கருதுகிறேன். இது யாருடைய கலைத்துவம் என ஒருவர் கேட்டால், சமூக - அரசியல் தன்னுணர்வுடன் வடி வத்தின் அடிப்படை அம்சங்களைக் கணக்கிலெடுக்கும் அக்கறை கொண்ட வர்களின் கலைத்துவம் எனப் பதில் சொல்லலாம்.

திரைப்பட வடிவத்தில்காட்சிரூப மொழியேஅடிப்படையானது. பேச் சிற்கு முதன்மை கொடுக்காது, காட்சி களால் கதை நிகழ்வுகள் சித்தரிக்கப் படுவதே முக்கியமானது. அதனைப் போல கதைச் சித்தரிப்பில் பாத்திரங் களின் இயக்கத்தில் யதார்த்தப் பண்பு அதாவது உண்மைத்தன்மை பேணப் படுவது இன்றியமையாததாகிறது. விடயமும் வெளிப்பாட்டு முறைகளும் இணைந்து, மனதில் பதிவை ஏற்படுத் தியவற்றுக்கு முக்கியம் அளித்துள் ளேன்; இங்குப் பேசப்படும் எல்லாப் படங் களும் வீடியோப் பிரதியாகவே எனக் குப் பார்க்கக் கிடைத்தவையாகும்.

தமிழ்நாட்டுப் படங்கள் பெரிதும் வர்த்தக நோக்கிலேயே தயாரிக்கப் படுகின்றன; லாபம் பெறுவதே அவற் றைத் தயாரிப்பவர்களின் முதலும் முடிவுமான அக்கறை.

தற்போது, சுமார் ஏழு லட்சம் இலங் கைத் தமிழர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் வாழ்வதாகச் சொல்லப் படுகிறது. இந்தப்பரந்த சந்தை’யை இலக்காகக் கொண்டே ஈழத் தமிழர் தொடர்பான விடயங்களைக் கொண்ட படங்களைத் தமிழ்நாட்டில் தயாரிக் கிறார்கள். ஈழத் தமிழர் மீது கொண்ட உண்மையான அக்கறையால் இவற் றைத் தயாரிக்கவில்லை. இதனா லேயே பிறழ்வான வெளிப்பாடுகள் பல காணப்படுகின்றன. எமது அடிப்படைப் பிரச்சனைகள் கோடி காட்டப்படுவது கூட நிகழ்வதில்லை. எவ்வாறாயி னும், ாற்றுக்கென்ன வேலி’திரைப் படத்தை உருவாக்கிய புகழேந்தி தங்க ராஜ் போன்றோரின் நல் நோக்கத்தை - ஈழத்தமிழர் போராட்டத்தில் கொண் டுள்ள அனுதாப நிலைப்பாடைப் புரிந்து கொள்கிறேன்; தமிழ்நாட்டுத்திரை வியாபாரிகளிலிருந்து அவரை வேறுபடுத்திப் பார்ப்பதால், அவரது முயற்சியை நான் கொச்சைப்படுத்த வில்லை. ஈழத்தமிழர் போராட்டச் சூழ லோடு தொடர்பான அம்சங்களைக் கொண்டவையாக ஐந்து படங்கள் கவனத்தில் வருகின்றன.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

மிகச் சிறிய தொரு அம்சமே ஈழம் பற்றியதாகச் சித்தரிக்கப்படுகிறது.
முன்பு இலங்கையில் - வன்னியில் நடை பெற்ற போராளிகளின் தாக்குதலில் ஒரு கால் ஊனமுற்ற இந்திய அமைதிப் படை மேஜராக, மம்முட்டியின் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது; போராளிகளின் திடீர்த் தாக்குதல் காட்டப்படுகிறது.

பின்னர் ஒரு கட்டத்தில் அந்த மேஜர் கசப்புடன் சொல்கிறார். ஆயி ரத்து ஐநூறு பேர் கொல்லப்பட்டார் கள். இங்கு ஒரு நினைவுச் சின்னம் இருக்கா? சென்னைத் துறைமுகத்தில் நாங்க கால்வச்சப்போ யாருமே கண்டுக் கல்ல. அப்பதான் தோணிச்சு - யாருக் காக, எதுக்காக இந்தச் சண்டை? எல் லாமே வேஸ்ட் ... வேஸ்ட்..”

அமைதிப்படையின் இழப்பு, தமி ழகத்தில் அவர்கள் மீது காட்டப்பட்ட வெறுப்புடன்கூடிய அலட்சியம், இலங் கையில் இந்தியத்தரப்புச் சண்டையின் அர்த்தமின்மை என்பன இதனூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிறு பகுதி யேயாயினும் மம்முட்டியின் நடிப்பி னால் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நந்தா

இப்படத்திலும், யுத்தச்சூழலில் தப்பிவந்த தனுஷ்கோடிப் பகுதி மணற்றிடரில் மணல்திடலில் இறக்கி விடப்படும் இலங்கைத் தமிழ் அகதி கள்- அவர்கள்மீது இராமநாதபுரம் அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் காட் டும் அக்கறை என்பன, சிறுபகுதி யாகவே இடம் பெறுகின்றன. கதா நாயகி இலங்கை அகதிப் பெண்ணாக உருவாக்கப்பட்டுள்ள போதிலும் அகதிமுகாம் வாழ்க்கை - இலங்கை அகதிகள் அவலம் என்பன விபரமா கவோ, சரியாகவோ சித்தரிக்கப்படா மல், வழமையானதமிழ்ப்பட மசாலாத் தனங்களினுள்கரைந்து போயுள்ளன. ஈழத்தமிழர் பிரச்சினையைத் தொடு வது போன்ற ாவனையேஇதில் மிஞ்சுகிறது.

கன்னத்தில் முத்தமிட்டால்

முந்தைய இரு படங்களைப் போலல் லாது இப்படம் கூடுதலாக ஈழத்துடன் தொடர்புபடுகிறது.
1991ல் படகு மூலம் இராமேஸ்வரத்தில் அகதியாக வந்தி றங்கி, (இதற்காகவே வந்தவள் போல்!) பெண் குழந்தையைப் பிரசவித்து விட்டு இலங்கை திரும்பிவிட்ட ஒரு பெண் ஷியாமா. அந்தக் குழந்தையின் வளர்ப்புத் தந்தையும் தாயும் - குழந் தையின் வற்புறுத்தலால் - எட்டு ஆண்டுகளின் பின் கொழும்பு வழி யாக இலங்கை வருவதும், மாங்குளத் தில் தற்போது போராளியாகவுள்ள தாயைச் சிறுமி சந்திப்பதுமாக, வேறு இடைநிகழ்வுகளுடன் கதை பின்னப் பட்டுள்ளது. இந்த உயர் பிராமணிய ஆளும் வர்க்கத்தின் ஆதிக்க அரசிய லுக்குச் சார்பாக காஷ்மீரி, அஸ்ஸாம் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட் டங்களை முறையேரோஜா’, ‘உயிரேஆகிய படங்களில்பயங்கரவாதமாககொச்சைப்படுத்திய அதே மணிரத் தினம் தான் இந்தப் படத்தில் ஈழத்தின் யதார்த்தத்தையும், போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியுள்ளார். குறைந்த பட்சம் ஈழத்தமிழரின் அரசியல் அபிலா சைகள் என்னவென்பதைக் கோடி காட்டக்கூட அவர் முயலவில்லை! சிறுமி தாயைக் காணவேண்டு மென் பதுதான் முக்கிய பிரச்சனை போல போர்ச் சூழலில் காட்ட முனைந்தமை வலுவற்றது. ஈழத்தமிழர் போராட்டத் திற்கு எதிரான சித்தரிப்புகள்நுட்ப மாகபுகுத்தப்பட்டுள்ளன. கதையில் வரும் தமிழ் நாட்டுத் தம்பதி, அவர் களின் சிங்கள நண்பன் எல்லாம் நல் லவர்கள்; ஆனால் போராளிகள் கெட்ட வர்கள் - கொடுமைக்காரர்கள். தற் கொலைக்கு குண்டுத் தாக்குதலில் சிறுமி அமுதா காயப்படுகிறாள்; போரா ளிகளின் தீடிர்த் தாக்குதலின் இடை யில் அகப்பட்டு வளர்ப்புத்தாய் காயப் படுகிறாள்; கறுப்புநிறப் பெண் போராளி களைக் கண்டுதான் அமுதா பயப்படு கிறாள். மாங்குளத்தில் மக்கள் இடம் பெயரும் போது இராணுவம் துன்புறுத் துதலில் ஈடுபடாது நல்லதனத்துடன் நடந்துகொள்கிறது!; ஆனால், போராளி கள் தான் ஷெல் அடித்து மக்களைஅல்லோலகல்லோலத்திற்குஉள் ளாக்குகின்றனர்! தமிழ்நாட்டு எழுத் தாளக் கதாநாயகனையும் சிங்கள நண்பனையும் பிடிக்கும்போது போரா ளிகள் முரட்டுத்தனமாய் நடந்து கொள் வதாய்க் காட்டப்படுகின்றனர். அப் போது அதற்கு எதிராகக் கதாநாயகன்,

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக

எங்களை நீங்கள் வண்டியிற்று பூட்டுக

எங்கள் முதுகில் கசையால் அடிக்க...”

என்று சில கவிதைவரிகளை உரத்தகுரலில் சொல்கிறான். உண் மையில், ஈழத்தின் முக்கிய கவிஞர் சண்முக சிவலிங்கம், இலங்கை அர சின் அடக்குமுறைச் சக்திகளிற்கு எதி ராக எழுதிய கவிதை வரிகளைப் போரா ளிகளிற்கு எதிராகப் பாவிக்குமள விற்கு, வக்கரிப்புடனும் குயுக்தியுட னும் மணிரத்தினம் செயற்பட்டுள்ளார்.

மாங்குளத்தில் மலைகள் இருப் பது, 1999ல் மாங்குளத்தில் சிங்களக் குடும்பம் இருப்பது, மின்சாரம் - வெளி நாட்டுடன் தொடர்பு கொள்ளும் வகை யிலான தொலைபேசித் தொடர்பு வசதி இருப்பது போன்ற (இன்னும் பல) சித் திரிப்புகள், ஈழப்போராட்டக் களம் பற் றிய மணிரத்தினத்தின்அறியாமையையே வெளிப்படுத்துகின்றன. இந் திய - இராமேஸ்வர சூழலில் காட்சி ரூப வெளிப்பாடுகள் அழகிய சட்டங்களில் நன்றாக அமைந்துள்ளபோதிலும், பிற்போக்கான எதிர்ப்புரட்சிகர அம்சங் களை அடிப்படையாகக் கொண்டிருப் பதில் எரிச்சலும் கோபமும் மேலோங் குவதில், அந்த காட்சிரூபப்படுத்தல் களின் சிறப்பும் சந்தோஷமும் நசுங் கிப் போய்விடுகின்றன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com