Contact us at: sooddram@gmail.com

 

ஜனநாயகத்துள் நுழையுமா எகிப்து?

எகிப்தின் எதேச்சதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த தாரிக் சதுக்க மக்கள் புரட்சியால் இன்று ஜனநாயக தேசமாக அந்நாடு நோக்கப்படுகிறது. ஹொஸ்னி முபாரக்கின் முப்பது வருட சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதில் தாரிக் சதுக்க மக்கள் புரட்சி பெரும்பாங்காற்றியது. மேற்குலக நாடுகளின் தூண்டுதலால் இந்தப் புரட்சி செயலூக்கம் பெற்றதென்றே பலரும் அபிப்பிராயங் கொள்கின்றனர். ஆனால் டுனீஷியாவில் ஏற்பட்ட அரபுப் புரட்சி சில அரபு நாடுகளையும் தொற்றிக் கொண்டபோது அமெரிக்காவுக்கு வேண்டப்பட்ட சில அரசியல்வாதிகளும் வேண்டப்படாத சில அரசியல்வாதிகளும் அதிகாரங்களிலிருந்து புரட்சியென்ற போர்வையில் தூக்கி வீசப்பட்டனர்.

இந்தப் புரட்சிகளையும், போராட்டங்களையும், அமெரிக்காவும், மேற்குலகமும் கையாண்ட, வழிநடத்திய விதங்களைக் கொண்டே இவற்றை அடையாளங் காணலாம். டுனீஷியா, எகிப்து ஆகிய நாடுகளில் மாற்றமொன்றுக்கான தேவை அமெரிக்காவுக்கு இருக்கவில்லை. குறிப்பாக எகிப்து ஜனாதிபதி ஹொன்ஸி முபாரக்கை அதிகாரத்திலிருந்து வீழ்த்த அமெரிக்கா விரும்பவில்லை. காரணம் முபாரக் பதவியிலிருக்கும் வரைக்கும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவே செயற்பட்டார். மேற்குலகின் தேவைகளுக்காக எகிப்தின் எல்லா வளங்களையும் தாரைவார்த்துக் கொடுத்தார். ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற இயக்கங்களை அமெரிக்காவின் பார்வையோடு சேர்ந்து பயங்கரவாதமாகவே பார்த்தார்.

நிலைமைகள் மோசமடைந்து தாரிக் சதுக்க புரட்சி ஹொஸ்னி முபாரக்கை அதிகாரத்திலிருந்து வீழ்த்தும் கட்டம் நெருங்கவே அமெரிக்காவும் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு முபாரக்கை கைவிட்டது. ஆனால் லிபியா, சிரியா போன்ற நாடுகளில் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்ற வேகத்துடன் போராட்டங்களையும், போராளிகளையும் பாலூட்டி வளர்த்தது. லிபியாவில் மொஹம்மர் கடாபியை அகற்றிவிட்டு வேண்டிய ஒருவரை அரியாசனத்தில் அமர்த்த மேற்குலகமும் அமெரிக்காவும் பாடுபட்டன. இறுதியில் அந்த இலட்சியத்தில் வெற்றியும் கண்டது. இதேபோல சிரியாவிலும் மொஹமட் பஷிர் அல் அஸாத்தை ஜனாதிபதி பதவியிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு கைப்பொம்மை அரசொன்றை நிறுவும் நோக்கமே அமெரிக்காவுக்குண்டு. ஆனால் நிலைமைகள் தனக்குச் சாதகமாகுமாவென்று ஒரு சந்தேகமும் உண்டு.

இதனால்தான் இன்றுவரை சிரியா தொடர்பாக சரியான நிலைப்பாட்டை எடுக்க அமெரிக்கா தயக்கம் காட்டுகின்றது போராளிகள், கிளர்ச்சியாளர்கள் தம் பக்கம் சார்ந்து விசுவாசமாக நடந்துகொள்வார்களா இல்லையா என்பதை நாடி பிடித்துப் பார்க்க அமெரிக்கா செய்யாத முயற்சிகளில்லை. என்றாலும் சிரிய ஜனாதிபதிக்கெதிரான போராட்டங்களை மறைமுகமாக மேற்குலகம் ஆதரிக்கின்றது. பின்னர் வரப்போவதை பிறகு பார்ப்போம். இப்போது ஆட்சியிலுள்ள மொஹமட் பஷிர் அல் அஸாத் தமக்கு எதிரானவர் ஈரானுடன் நட்புறவுடையவர் எனவே இவரையும் அரசாங்கத்தையும் அகற்றவே வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே அமெரிக்காவுள்ளது.

சிரியாவின் போராளிகளை தம் பக்கம் ஈர்க்க அமெரிக்கா பல உபாயங்களையும் பேரம், பேசுதல்களையும் விலையாக கோருகிறது. ஷியா, சுன்னி மத முரண்பாடுகளை உச்ச அளவில் தூண்டுகின்றது. என்ன செய்ய கிளர்ச்சியாளர்கள் ஒரு பொது நோக்குடனே பஷிர் அல் அஸாதை பதவி விலகக் கோருகின்றனர். மக்கள் புரட்சி வெல்லப்பட்டு சிரியாவில் ஆட்சி மாற்றமேற்பட்டால் என்ன நிகழும் என்பதை பின்னர் எழுதுவோம். இப்போது எகிப்தின் பக்கம் பார்வையை விடுவோம். இம்மாதம் 23, 24ஆம் திகதிகளில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் எந்த வேட்பாளரும் ஐம்பது வீதத்தை தாண்டாவிட்டால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு ஜூன் மாதம் 16, 17 ஆம் திகதிகளில் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எகிப்தின் முடிசூடா மன்னன் என்று வர்ணிக்கப்பட்ட ஹொஸ்னி முபாரக் முப்பது வருட ஆட்சியை துறக்க வேண்டியேற்பட்டது. இதையடுத்து இராணுவ அதிகாரிகளைக் கொண்ட சுப்ரிம் கெளன்சிலிடம் அதிகாரம் கையளிக்கப்பட்டது. எகிப்தின் அப்போதைய உதவி ஜனாதிபதியாகவிருந்த ஒமர் சுலைமான் அரச அதிகாரங்களை உத்தியோகபூர்வமாக இராணுவத்தினரிடம் கையளித்தார்.

இந்த அரசாங்கத்தை எகிப்து மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆங்காங்கே குழப்பங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். மக்கள் புரட்சி சுப்ரீம் கெளன்சிலையும் கவிழ்த்து விடுமெனப் பயந்த இராணுவ அதிகாரிகள் ஆட்சியைப் பொறுப்பேற்ற (2011) போதே 2012 ஜூன் மாதத்துக்குள் மக்களிடமே அரசாங்கமும், நிர்வாகமும் கையளிக்கப்படுமென்றனர்.

ஹொஸ்னி முபாரக்கின் ஊழல் நிறைந்த நிர்வாகத்தை சீரமைக்க கால அவகாசம் தருமாறும் மக்களைக் கேட்டனர்.

ஹொஸ்னி முபாரக்கிற்குப் பின்னர் இராணுவ உயரதிகாரிகளையுடைய சுப்ரீம் கெளன்சில் எகிப்தில் செய்த மாற்றங்கள் பல. அரசியலமைப்பில் மாற்றம் செய்ய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன் உள்ளூராட்சி மன்றங்கள், பாராளுமன்ற தேர்தல் தொகுதிகள் என்பன மாற்றம் செய்யப்பட்டன. ஐந்தாண்டு கால ஆயுளைக் கொண்டதாக உள்ளூராட்சி மன்றங்கள் மாற்றம் பெற்றன. ஹொஸ்னி முபாரக்கின் சொந்தக்காரர்கள், குடும்பத்தவர்கள் போட்டியின்றி இலகுவாக சில இடங்களில் விரிவாக்கப்பட்டும் ஏனையோரும் பாராளுமன்றம் வர வழிசெய்ய ப்பட்டன. ஆகக்குறைந்த வாக்களிப்பு வய தெல்லையாக விருந்த 30 வயது 25 ஆகக் குறைக்கப்பட்டன. சூறாக் கெளன்ஸில், பாராளுமன்ற ஆயுள் காலங்களும் மட்டுப்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பகிரப்பட்டதுடன் சூறாக் கெள்ன்சிலுக்கு தெரிவாகும் மத அறிஞர்கள், பெரியார்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை, அறிவுரைகள் வழங்க வழியேற்படுத்தப்பட்டது. இவ்விடயங்கள் ஜனாதிபதியின் எதேச்சதிகார அதிகாரங்களை மட்டுப்படுத்தும் முயற்சியாகவே கருதப்பட்டன.

விவசாயிகளையும், தொழிலாளர்களையும் அரசியலுக்குள் அழைக்கும் மாற்றங்களாகவும் இந்த தொகுதி மீள் நிர்ணயம் மற்றும் அரசியலமைப்பு மாற்றங்கள் கருதப்பட்டாலும் இராணுவ அதிகாரிகளின் போக்குகளில் மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. சில வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டமையும், முக்கியமான சிலர் இன்னும் விசாரணையென்ற போர்வையில் தடுப்புக் காவலிலுள்ளமை, இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற சூறா கெளன்சில் தேர்தல்களில் சுப்ரீம் கெளன்சில் நடந்து கொண்ட முறைகளே எகிப்தியர்களை, அச்சமடையச் செய்துள்ளன.

508 ஆசனங்களையுடைய எகிப்து பாராளுமன்றத்துக்கான தேர்தல் 2012ன் ஆரம்ப நாட்களில் நடத்தப்பட்டது. 498 ஆசனங்களுக்கே தேர்தல் நடந்தன. 332 ஆசனங்களைப் பெறும் கட்சி பெரும்பான்மை பலத்தையுடையது எனக் கருதப்பட்டு ஆட்சியமைக்க அழைக்கப்படும். சாதாரண பெரும்பான்மையை பெற்ற கட்சி ஆட்சி அமைத்தாலும் சட்டங்கள், திட்டங்களை பாராளுமன்றத்தில் இயற்ற தடுமாற வேண்டி வரும். இதற்காக பத்து ஆசனங்கள் இக்கட்சிக்கு போனஸாக வழங்கப்படும்.

இந்நிலையில் மொஹமட் மொர்ஸி தலைமையிலான 22 கட்சிகளின் கூட்டு ஜனநாயக முன்னணி 235 ஆசனங்களை வென்று 37.5% வாக்குகளை பெற்றுள்ளது. அல்படாவியின் கட்சி 38 ஆசனங்களை வென்று 9.2% வாக்குகளைப் பெற்றுள்ளது. எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமுன் கட்சி தேர்தலில் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இக்கட்சியுட்பட பல கட்சிகள் சுப்ரீம் கெளன்சில் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டங்களில் இறங்கியுள்ளது.

மே மாதம் முடியும் வரை எது நடக்குமென்பதை பார்ப்போம். நடக்குமென்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும்.

(ஏ. ஜீ. எம். தெளபீக்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com