Contact us at: sooddram@gmail.com

 

ஒரு புதிய திரைமொழிவழக்கு எண் பதினெட்டுங் கீழ் ஒன்பது

(திரைவிமர்சனம்)

திரைப்படத்திற்கு ஒரு புது மொழி இருக்குமெனில் அதை இனி இவ்வுலகம் தமிழரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். சொல்லித் தருவோர் முன்வரிசையில் நம் பாலாஜி சக்திவேலை முன்னிறுத்தலாம். மனதை அறுக்கும் காட்சிகளிடையே முகம் அதட்டாமல் ஒரு அறிவுரையை உள்புகுத்தும் பாடலை அமைப்பதெப்படியென இந்தப்படத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். பார்க்கப் பார்க்க திகட்டாமல் உணர்வில் ஒட்டிக் கொள்ளுமளவிற்கு பாத்திரத்திற்கு ஏற்றார் போல் புதுமுகங்களைத் தேர்ந்தெடுக்க இவருக்கே ஒரு புதிய விருதை கொடுக்கவேண்டி அறிமுகப்படுத்தலாம்இதையெல்லாம் நான் சொல்லவில்லை, நீங்கள் சென்று படம் பார்த்தாலும் உங்கள் எண்ணமும் இப்படித்தானிருக்குமென மெச்சிக்கொள்ளத் தக்கப் படமிதுவழக்கு எண் பதினெட்டுங் கீழ் ஒன்பது”.

உண்மையில் சப்தமில்லாமல் ஒரு யுத்தம் என்பார்கள், இது சப்தத்தின் ருசியில் ரசனை தேன் கலந்த யுத்தம். ஆம், மனம் அதிர அதிர கண்முன் காணும் பல கொடுமைகளை காட்சிபடுத்தி இச்மூக அவலத்திற்கு எதிராக ஒரு போர் தொடுக்கிறது இத்திரைப்படம், அதில் தொக்கிநிற்கும் வெற்றியை நமையறியாமலேயே நம் மனசோடு சேர்த்துத் தட்டிச்செல்கிறார் இப்படத்தின் இயக்குனர் திரு. பாலாஜி சக்திவேல்.

காதல் எது? தர்மம் எது? ஏழ்மையின் தவிப்பு என்ன? பணத்திமிர் எப்படி இருக்கும்? படிப்பின் உயரமெவ்வளவு? பதவிகளின் குற்றங்கள் யாவை? ஒரு வெள்ளைவேட்டி எங்கே எப்படிக் கரைபட்டு நம் கண்ணில் உறுத்துகிறது? நம் குழந்தைகள் அனுபவிக்கும் வலி என் ? ஏன ? எவ்வாறு அதை சற்றேனும் நாம் நம் கண்முன் கண்ட காட்சியாக உணரலாம ? எப்படிப் பின் அதை சரிபடுத்திக்கொள்ளலாம்? இனி நீதி எந்த புள்ளியில் தன் கண்களைத் திறக்கும்? தர்மம் என்றுஎங்குஎப்படி நின்று கர்ஜிக்கும்? இப்படியான பல கேள்விகளை மனதில் சுமந்து இப்படத்திற்குச் செல்வீர்களேயானால், திரும்பி வருகையில் பதிலை இப்படத்தில் தொலைத்திருப்பீர்கள். காரணம், நாம் தொலைக்க இருப்பதை எல்லாம் பத்திரமாக சேகரித்து தமிழ் திரையுலகிற்குப் பெருமைசேர்க்க ஒரு திரைப்படம் செய்திருக்கிறார் இயக்குனர் திரு. பாலாஜி சக்திவேல்.

உழைப்பை தன் வியர்வையை ஒவ்வொரு சொட்டாக இடம்பார்த்து இடம்பார்த்து தெளிவாக சிந்தித்து சிந்தப்பட்ட ஒரு ஈர மனதின், அக்கறையுள்ள ஒரு மனிதரின் திட்டமிட்ட ஒரு கலைக்குவியல் இத்திரைப்படம் என்றாலும் அது மிகையில்லை. அந்தளவிற்கு, திரைப்படமென்பது ஒரு பொழுதுபோக்கிற்கானது எனுமிடத்தை உடைத்தெறிந்து நம் இனி வரும் காலத்தைக் கொஞ்சம்நமக்கென ஆக்கித் தர முயலுமொரு கலைப் பிரயத்தனம் இத்திரைப்படம்.

வசனமும் திரைக்கதை நகரும் அதிர்வும் புரிய புரிய நகரும் காட்சிகளும் முகம் சுழிக்க வேண்டாத, மனசு கோணாத ஒரு யதார்த்த வாழ்வை சுருள்படுத்தி படப்பெட்டிக்குள் அடைத்த திறனும், சண்டைபாட்டுகுத்துவெட்டுகாமம்கொலைகொள்ளை என எதையுமே பெரிதாக எதிர்பார்த்திடாமல் தான் சொல்லவந்த விசயத்தைமட்டும் மிக சாதுர்யமாக நம் அறிவுக்குள் அகப்படுத்திய லாவகமும் உண்மையில் விருதுகளை துச்சப்படுத்தி ஒரு உயர்ந்த மனநிலையில் பெரிய சிம்மாசனமிட்டு அதில் அந்த பாலாஜி சக்திவேல் எனும் ஒற்றை மனிதரை பொக்கிஷமாக பத்திரப்படுத்திக் கொள்கிறது மனசு.

அவரின் நோக்கம் என்னவாக இருக்கும்? அவரின் திரைப்படத்திற்கான காரணங்கள் என்ன? எங்கே அவரை முன்வைக்கத் துடிக்கிறார் என்று மண்டை முழுதும் ஒரு இயக்குனரின் சமூக அக்கறையை மட்டுமே எண்ணி எண்ணி பிரம்மிக்கத் தக்கதொரு திரை வேள்வியை நடத்தி படம்பார்க்க வந்த அத்தனைப்பேரின் கைத்தட்டல் சப்தத்தோடு மனது கனக்க கனக்க காதல் காதல் என்று மனது கத்தி கத்தி முடிகிறது இத்திரைப்படம்.

துள்ளளில்லாத ஒரு காதல் கதையை மனசு துள்ள துள்ள நிரப்பி வருகையில், அது நிரம்பிய இடத்தை இதுவென்று அந்த ஒற்றைப் பாடல் சொல்கிறது பாருங்கள்;

வானத்தையே எட்டிப் புடிப்பேன்

பூமியையே சுத்தி வருவேன்...

உன் கண்ணக்குழி அழகினில்தான்

என் கற்பனையை நான் வளர்த்தேன்

உன் நெஞ்சுக் குழி மீதுதான்டி

என் நிம்மதியை நான் புதச்சேன்;

அடி பெண்ணே நீயும் பெண் தானோ

இல்லை பிரம்மன் செய்த சிலை தானோ...

என்றுவருமந்த ஒரு பாடலுக்கு மொத்த விருதையும் வாரித் தரலாம். அத்தனை இப்பாடலில் என்ன தானிருக்க(?) எவ்வளவு ரகசியமுள்ளே கொட்டிக்கிடக்கோ(?) இப்பாடலில் எது சிறப்பு? வரியா? இல்லை பாடியதா? அல்லது இசையா? வெறும் பாடலிட்ட இடமா எனில், மொத்த சிறப்பும் உண்மையில் முழு இப்படத்திற்கே உரியதுங்க, மனசை இசையால் அறுப்பது என்னன்னு கேள்வி கேட்டா அதுக்கு இந்த பாடலை உதாரணம் சொல்லலாம். அத்தனை பொருத்தமான இடத்தில் இப்பாடல் முழுமையாய் ஒலிக்க, படம் முடிந்தும் திரையரங்கம் விட்டு வெளியேற முடியமால் முழு பாடலையும் வாசலில் நின்று கேட்டேனும் உச்சுக் கொட்டிவிட்டே நகர்ந்தன படம்பார்க்க வந்த மொத்த கூட்டமும்.

ஒரு இடத்தில் ஜோதி வேலுவின் தன்மீதான காதலை அறிகிறாள், அவனின் நியாயத்தைப் புரிகிறாள், இனி நீதி வேணும், ஆனால் நிலையான பொதுதர்மம் குறித்த அறிவு நிறைவில்லா மனிதர்களுக்கு மத்தியில் எங்கு கிடைக்கும் தனக்கான நீதி என்றெண்ணி முடிவை தானே தீர்மானிக்கிறாள், அந்த முடிவு சரியென்று மொத்த சனத்தையும் கைதட்ட வைக்கிறது ஒரு கடிதம். வரிக்கு வரி பட்டைதீட்டிய கத்தியில் வெட்ட வெட்ட விழும் கழுத்துபோல அவளின் குரலில் அந்த நயவஞ்சகன் அந்த கடிதத்தைப் படிக்க படிக்க திரையரங்கிற்குள் அதுபோலவே தவறு செய்து அமர்ந்திருக்கும் மனிதர்கள் இருந்திருப்பின் செத்து அவரும் விழுந்திருப்பர். அல்லது திருந்தி விட்டேன் நன்றி என்று இந்த படத்தின் இயக்குனருக்கு ஒரு கடிதமேனும் எழுதி இருப்பர்.

இப்படத்தில் இன்னொரு பெரிய சிறப்பு உண்டு. அது மிக நேர்த்தியாக நடித்த புதுமுகங்கள். சுழலும் ஒவ்வொரு படச்சுருளிலும் யாரேனும் ஒருவரின் வாழ்க்கைக்கான வாசலை திறக்கும் முயற்சியில் வெகு ஒய்யாரமாய் வென்றுவிடுகிறது இப்படம்.

ஒரு பார்வை அழகு, பேச்சு ரசம், நடை வசனம் யதார்த்தம், நடிப்பு, ‘நடிப்பு இதுக்குமேல வேறென்ன வேணுமெனநாம் சமாதனப்பட்டுப் போன இடத்தில் பெயர்வரிசை கொண்டுவிடுகிறார்கள் இப்படத்தில் நடித்த மொத்தப்பேரும் வருங்கால சிறந்த நடிகர்களென.

ஒரு மகனைப் பெற்றவன் சிங்கத்திற்கு தகப்பனாகிறான், அதே ஒரு மகளைப் பெற்றவன் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு திரிகிறான்; அதன் கனம் புரிந்துவிடும் புள்ளியில் நம் சமூகம் திருந்திக் கொள்ளும். ஆனால் -

தெருவில் ஒரு பெண் நடக்கையில் தென்றல் வீச, அந்த தென்றலைப் பெற்ற வயிற்றில் விஷம் சுரக்குமொரு பயத்தை ஏற்படுத்திய நம் சமூகம் எத்தனை சரி?

எதிரே வரும் ஒரு வாலிபன் பார்க்கும் பார்வைக்கெல்லாம் தன் மகளை சந்தேகப் படும் அப்பாக்களையும், சந்தேகப் படாத அப்பாக்களை ஏமாற்றி தன் மனதை ஏமாற்றத்தால் சுமக்கும் மகள்களையும், ஏமாற்றியும் ஏமாந்தும் நிற்கும் நம் மகன்களையும், எல்லோரின் சூடுபட்ட காயத்திற்கும் தன் இதயத்தில் வலிக்க வலிக்க ரணமேற்படுத்திக் கொள்ளும் அம்மாக்களையும், அத்தகு காதலையும், அக்காதலின் எதிர்ப்பையும், காதலின் மீதான ஒரு செயற்கைத் தன செய்கைகளையும் இச் சமூகத்தில் யார் திணித்தார்?

பள்ளிக்குச் செல்ல சடைப் போட்டு, சீருடையுடுத்தி, புத்தகப் பை நிறைய தன் தவிப்பை நிரப்பி அனுப்பிவிட்டு மாலையில் திரும்பிவரும் மகளுக்கு நல்ல புத்தியை குடு சாமீன்ன்ன்னு அழுற பெற்றோரின் அழை எத்தனை இளைஞர்களுக்குப் புரியும்?

ஆசிட் ஊத்துறதும், அரை ஆடையில் படமெடுத்து ரசிப்பதும், பாதிவகுப்பில் வெளியேறி பிடித்தவரோடு வருத்தமொழித்து அலைவதும், சும்மா பொழுதுபோக்கிற்குக் காதலிப்பதும், பொழுதுதெல்லாம் இதயத்தை ஒரு வெற்றிடம் அமர்ந்து மென்றுத் துப்புவதும், காதலில் வாழ்க்கையை தொலைப்பதும், கண்முன்னே ஒரு சமூகம்ஒரு பண்பட்ட இனம்இப்படிக் கெட்டுச் சீரழிவதுமாநம் அய்யன் திருவள்ளுவன் காட்டிய பாதையில் நடப்பது?

காதல் தப்பில்லை, ஆண்பெண் சமபங்காக அமர்ந்து முகத்திற்கு நேராக நட்பு கொள்வது தவறல்ல, பெண்கள் வெளியேறி விண்வெளியை எட்டிவிட்டதும் பெருமைதான், ஆண்கள் தன் சகதோழிகளை மதிப்பதும், அக்காத் தங்கைகளுக்காக தனது வாழ்க்கையையே அர்பணித்து ஒரு பெருந்தன்மை சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதும் ஒருபுறம் பெரிதுதான், ஆக இப்போதைய மாற்றங்கள் எல்லாமே சரி எனில், வேறெது தவறு?

என இத்தனைக் கேள்விகளையும், அத்தனைக் கேள்விகளுக்கான பதிலையும் மிக சமமாக கலந்துவைத்துக் கொண்டிருக்கிறது இந்த வருட தேசிய விருதிற்கான இத்திரைப்படம்வழக்கு எண் பதினெட்டுங் கீழ் ஒன்பது”.

சென்று திரையரங்கில் பாருங்கள் உங்களுக்கும் அதன் உண்மைப் புரியும். ரசனைப் பூரிக்கும். இன்னொருமுறை படம் பார்க்க மனசு விரும்பும். ஒரு புனிதமான அன்பு எனில் என்னவென்று உணர்வீர்கள். மனதும் மனதும் காதலிக்கும் அதிர்வில் ஒரு நன்னடத்தை ஆழ நேசிப்பிலிருந்து துளிர்விட அகந்தை அடிபட்டு, சகிப்புத் தன்மை கூடி, விட்டுக் கொடல் உயர்ந்துப் போய்ஒரு பெருந்தன்மை மனதெல்லாம் வியாபிக்கத் தக்க பரிசுத்த உணர்வொன்று மரணம் வரை நிலைகொள்ளுமந்த இடம் இப்படத்தினாலும் புரியும்.

அந்தப் புரிதலில் திருத்தத்தைக் கண்டுக்கொள்வீர்கள் எனில், அதன் நன்றியை நம் இயக்குனர் திரு பாலாஜி சக்திவேல் அவர்களுக்கும், இப்படத்தின் தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இன்னும் திரைக்குப் பின்னிருந்து உழைத்த மொத்தப்பேருக்கும், மறக்காமல் இப்படத்தின் நடிகர்களுக்கும் சொல்லிவிடுங்கள்...

அனைவருக்கும் என் நன்றிகளோடு..

வித்யாசாகர்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com