Contact us at: sooddram@gmail.com

 

சமஸ்கிருத இலக்கியங்கள்  ஒர பார்வை

(ஆயிஷா இரா. நடராசன )

வடமொழி என நாம் அழைக்கும் புராதன மொழி சமஸ்கிருதம். இந்தோ - இரானிய மொழி வரிசையில் முதன்மையானதாகவும் இந்தோ- அய்ரோப்பிய மொழி வகையில் ஒரு உட்பிரிவாகவும் சமஸ்கிருதம் உள்ளது. இன்று பேச்சு மற்றும் எழுத்தில் உபயோகப்படுத்தப்படாத (இவ்வகை மொழிகளை மொழி வல்லுனர்கள் நூலக மொழிகளென அழைப்பர்) வெறும் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் சுருக்கப்பட்டு விட்டது. புரோகிதர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், சாதுக்கள் என இந்துமத அடையாள புருஷர்களே அதிகம் உபயோகிக்கும் பக்தி மொழி அது. சுலோக வடிவிலான கவிதைகள் முதல் புராண அந்தஸ்து கொண்ட கதைகள் என விரிந்து, இன்று சிறுகதைகள், நாவல்கள் என நவீன வடிவத்தையும் அம்மொழி அடைந்துள்ளது.

சமஸ்கிருத இலக்கியம் இரண்டு காலக்கட்ட இலக்கியங்களாகப் பிரிக்கப்படுகின்றது. முதலாவது, வேதமொழிக் காலம். இது கி.மு. 1500 முதல் கி.மு. 200 வரை என்கிறார்கள். அதன்பிறகு அதாவது கி.மு. 200 முதல் கி.பி. 1100 வரையிலான காலம் சமஸ்கிருதக் காலம் என்றே வர லாற்று மொழியியலாளர்களால் வழங்கப் பெறுகிறது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள், பிராமணியம் என்றழைக்கப்படும் தனித்திரட்டு மற்றும் உபநிடதங்கள் வேத மொழிக் காலத்தவை.

இதிகாசங்களாகவும் புராணங்களாகவும் சமஸ்கிருதக் கவிதைகள் புனையப்பட்டன. மிக நீண்ட கவிதை எனும் அந்தஸ்தை மகாபாரதம் அடைந்துள்ளது. இது சமஸ்கிருதத்தில் கி.மு. 300க்கும் 100க்கும் இடையே புனையப்பட்டிருக்கலாம். இராமாயணம் சமஸ்கிருதத்தில் வால்மீகியால் எழுதப்பட்ட மற்றொரு புராணம். இது கி.மு. 240 இல் எழுதப்பட்டதாகக் கூறுகிறார்கள். இதையும் சேர்த்து சமஸ்கிருதத்தில் 18 புராணங்கள் உள்ளன.

காளிதாஸர் காலமான கி. பி. 5 ஆம் நூற்றாண்டு முதல், காவியங்களும், சமஸ்கிருதத்தில் புனையப்பட்டன. மேகதூதம் மற்றும் குமார சம்பவம் ஆகியவை அவரது முக்கிய நூல்கள். அவரது மற்றொரு பெரிய காவியம் ரிதுசம்ஹாரம்.

காளிதாஸருக்கு அடுத்தபடியாக சமஸ்கிருதத்தின் மாபெரும் கவிஞர் பார்த்ரிஹரி. அவரது பழமொழிகளையொத்த சுருங்கிய சமஸ்கிருத செய்யுள்கள் அற்புதமானவை. அவரது அடிச்சுவட்டில் வந்த மற்றொரு கவிஞர் அமரு. இவரது கவிதை தொகுதி அமருஸடக்கா

நாடகம் எனும் சொல் சமஸ்கிருத சொல்லான நடனத்தைக் குறிக்கும் நட (நீர்ட்) எனும் சொல்லாட்சியிலிருந்து தோன்றி இருக்க வேண்டும். சமஸ்கிருத இலக்கியத்தின் ஆர்வத்தைக் கிளப்பும் அற்புத வடிவம் நாடகம் ஆகும். சிவதாண்டவம், ஸ்ரீகிருஷ்ணபுராணம் ஆகியவையும், மகாவிஷ்ணுவின் பத்து அவதாரக் கதைகளும் நாடக வடிவிலேயே எழுதப்பட்டுள்ளன. இவை வங்காளத்தின் பங்களிப்பாக இருக்கலா மென்று வரலாற்றியலாளர்களில் ஒருசாரார் கருதுகின்றனர்.

சூத்ரகா மன்னர் எழுதிய மிருஷகதிக்கா தான் சமஸ்கிருதத்தில் குறிப்பிடத்தகுந்த முதல் நாடகம் ஆகும். பிறகு காளிதாஸரின் நாடகங்கள் பிரபலமானவை. அதே அரச சபையை அலங்கரித்த பாண்டின் ஒரு நாடக வித்தகர். அவர்களுக்கு அடுத்தபடியாக மாமன்னர் ஹர்ஷவர்த்த னர் மூன்று சமஸ்கிருத நாடகங்களை எழுதியுள்ளார். கி. பி. எட்டாம் நூற்றாண்டில் சமஸ்கிருத நாடகச் சிற்பியாகத் திகழ்ந்தவர் பவபுத்தி.

பலரும் நினைப்பதைப் போல சமஸ்கிருத மொழி இந்து மத மொழி மட்டுமே அல்ல. புத்தமதத்தின் பல அறநூல்கள் சமஸ்கிருதத்தில் தான் எழுதப்பட்டன. புத்தமத பெரியோர்களே சமஸ்கிருத உரைநடையை வளர்த்தெடுத்தார்கள் என்றால் அது மிகையாகாது.

நாடோடிக் கதைகள், குட்டிப்புராணக் கதைகள், ஊர் ராஜாக்கள், வீரதீரர் கதைகள் என ஏராளமான புதையல் உரைநடையில் உண்டு, பேச்சு வழக்கு, கதையாடல் குறைவு, சமஸ்கிருதம் பேச்சு விரைவில் வழக்கொழிந்தது என்பதனால் இருக்கலாம். சமஸ்கிருதத்தின் ஆரம்பகால அற்புத உரைநடைச் சித்திரங்கள் இரண்டு. ஒன்று பஞ்சதந் திர கலைத்திரட்டு, மற்றது ஹித்தோபாதேசம் இரண்டுமே பஞ்சதந்திர கதைத்திரட்டு. மற்றும் ஹித்தோபாதேசம . இரண்டுமே பௌத்த நூல்கள். இதைத்தவிர கி. மு. நாலாம் நூற்றாண்டிலிருந்தே பௌத்த மதநூல்கள் உரைநடைகளாக சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. புத்தர் பேசியவை சமஸ்கிருதத்தின் துணை மொழியான பாலி மொழியில் உள்ளது. அவை ஜடக்காக்கர் என்று வழங்கப் பெறுகின்றன.

மற்றொரு சமஸ்கிருத மொழித் தொகுதி கதாஸரித் சாகரம். காஷ்மீரத்துக் கவியான சாமதேவர் இதை கி.பி. 1070 இல் தொகுத்தார். ஹித்தோபாதேசத்தை நாராயணகவி தொகுத்தார்.

பதஞ்சலியின் யோகசாஸ்திரம் மிகவும் ஆரம்பகால சமஸ்கிருத சாஸ்திர நூல்களில் ஒன்று. ஆனால் பதஞ்சலி முனிவர் தமிழகத்தில் அதிலும் குறிப்பாக தென் ஆற்காட்டைச் சேர்ந்தவர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அதை அடியொற்றியே சமஸ்கிருதத்தில் பல சாஸ்திர நூல்கள் தோன்றின.

(வரலாற்றில் மொழிகள் நூலிலிருந்து)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com