Contact us at: sooddram@gmail.com

 

யார் யாருக்குப் பிச்சை போடுவது?

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனை விடுவதில்லை!

உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாக தேசியம் கட்டி வளர்த்த உலகத்தமிழர் வார ஏடு மஞ்சள் ஏட்டின் தரத்துக்கு மாறிவருகிறது. நாய்க்குக் கல் எங்கு பட்டாலும் காலைத் தூக்குவது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொதுவாகவும் திரு சம்பந்தன் அவர்களைக் குறிப்பாகவும் தாக்குவதில், இழிப்பதில், பழிப்பதில் தனது காலத்தையும் கருத்தையும் வீணாகச் செலவிடுகிறது.

சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு இந்தியத் தூதரகம் வைத்த இரவு விருந்தில்  அதில் பங்கேற்ற பசில் இராசபக்சே, இரா.சம்பந்தன்,  ரி.கே.இரங்கராஜன் (கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)  ஆகியோர் தேசியத் தலைவர் பிரபாகரன்பற்றி கலந்துரையாடியதாக கொழும்பில் இருந்த வெளியாகும் அய்லன்ட்  நாளேடு ஒரு கிசு கிசு செய்தியை எழுதியிருந்தது. இந்த அய்லன்ட் நாளேடு  வெறிபிடித்த சிங்களபவுத்த இனவாதத்துக்கு ஊது குழலாக விளங்கும் ஏடு.திரு இரங்கராஜன் ஒரு கதை சொல்லப் போவதாகத் தொடங்கினார். அவர் கூறி முடித்த பின்னர் ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் தொடங்கினார்."போர் முடிவடைய முன்னதாக பிரபாகரனைச் சந்தித்த போது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்களை வலியுறுத்தினேன். முதலாவது அரசியல் தீர்வு. இரண்டாவது மனித உரிமைகள். இந்த இரண்டையுமே அவர் கவனத்தில் கொள்ளவில்லை" என்றார் இரா.சம்பந்தன்.

திரு சம்பந்தன் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்பது விளங்கவில்லை. சிறார்களை வி.புலிகள் படையில் சேர்க்கிறார்கள் என்பது அனைத்து மனிதவுரிமை அமைப்புகளாலும் அய். நாவாலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அதையிட்டு வி.புலிகள் நடவடிக்கை எடுத்தார்கள்.  இரண்டு அரசியல் தீர்வு. அதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேசியத் தலைவரிடம் திரு.இரா சம்பந்தன் சொல்லியிருந்தால் அது என்ன பஞ்சமா பாதகமா? அப்படி உலகத்தமிழர் நினைக்கிறதா?இதைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர் பசில் இராசபக்சே இரங்கராஜனைப் பார்த்து "விடுதலைப் புலிகளது கொலைப்பட்டியலில் முதலாவதாக இருந்தது யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.  "அவர்களின் கொலைப்பட்டியலில் இருந்தது எனது சகோதரர் மகிந்த இராசபக்சேதான். அதற்கடுத்ததாக இருந்தது யார் என்று தெரியுமா? அது சம்பந்தன்தான்" என்றார்."அதை நீங்கள் அறிவீர்களா?" என்று இரா.சம்பந்தனை பார்த்துக் கேட்டார் பசில் இராசபக்சே. அதற்கு அவர் தனக்குத் தெரியும் என்று பதிலளித்தார் என்ற  அய்லாந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது என்று முடிக்கிறது உலகத்தமிழர் வாரஏடு.

வி.புலிகளின் கொலைப்பட்டியலில் திரு சம்பந்தன் பெயர் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏன் என்றால் அவர் கிளிநொச்சிக்கு அடிக்கடி தேசியத் தலைவரையும் ஏனைய தளபதிகளையும  சந்திக்கப் போகிறவர்.  சந்திப்பின் போது தேசியத் தலைவருக்கு அருகில் அவர்தான் உட்கார்ந்து இருப்பார்.  கருணா மாதிரி கிளிநொச்சிக்குப் போவதை திரு. சம்பந்தன் ஒரு போதும் தவிர்த்தவர் அல்லர். இந்தச் செய்தியை தோண்டி எடுத்துப் போட்டதன் மூலம் உலகத்தமிழர் வாரஏடு திரு சம்பந்தரை அல்ல, தேசியத் தலைவர்மேதகு பிரபாகரன் அவர்களைத்தான் அவமதிக்கிறது. வி.புலிகளைத்தான் இகழ்கிறது.  இது ஏன் உலகத்தமிழர் ஆசிரியருக்குப் புரியவில்லை?  ஒரு சந்திப்பில் தேசியத் தலைவர் சம்பந்தனுக்குச் சொன்னது "நான் இராணுவ நடவடிக்கையைப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அரசியல்துறையைப் பார்த்துக் கொள்ளுங்கள்."

அத்தோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம்.  நிறுத்தவில்லை.

தேளுக்கு கொடுக்கு, பாம்புக்கு பல் உலகத்தமிழருக்கு வாலில் விஷம்.  அது தனது கதையை இப்படி முடிக்கிறது."சம்பந்தன் அய்யா! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு இன்று தலைமை சக்தியாக இருப்பது என்பது தேசியத் தலைவர் போட்ட பிச்சை என்பதை மறந்திடாதீங்க ...."முதலில் தேசியத் தலைவர் யாருக்காவது பிச்சை போட்டதாகச் சொல்லிக் கொண்டதில்லை.  அது அவரது பண்பாடு அல்ல. தமிழ்த  ேசியக் கூட்டமைப்பு துளிர்விடாத காலத்திலேயே திரு சம்பந்தன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக  1977 இல் நடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 6 ஆவத  சட்ட திருத்தத்துக்கு உறுதிமொழி எடுக்க மறுத்த காரணத்தால் 1983  செப்தெம்பர் மாதம் பதவி இழந்தார். 2001 ஆம் ஆண்டு ததேகூ தொடக்கப்பட்ட போத  அதில் சேருவதை  தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி எதிர்த்தார். ஆனால் திரு சம்பந்தன் தலைமையில் பெரும்பான்மையினர் ததேகூ இல் சேர்ந்து கொண்டனர்.அது சரி. அதென்  தமிழ் மக்களுக்கு இன்று தலைமை சக்தியாக இருப்பது என்பது தேசியத் தலைவர் போட்ட பிச்சை என்பதை மறந்திடாதீங்க ...." என்ற நக்கல்?  இதே ததேகூ எதிராகத் தானே உலகத்தமிழர் ஆசிரியர் கொடுக்கை வரிந்து கட்டிக் கொண்டு 2010 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பரப்புரை செய்தார்?  நோஞ்சான்களை பயில்வானகளாக சித்திரித்துக் காட்டினார்?  தேர்தல் மழையில் முளைத்த காளான் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தேசியத்தலைவரோடு தொடர்பு படுத்தி பரப்புரை செய்தது?  உலகத்தமிழர் ஏட்டின் ஊதுகுழலான கனடிய தமிழ் வானொலியும் தன் பங்குக்குத் தலையாலே உழுது பார்த்தது.  துரும்பைத் தூணாக்கிக் காட்டியது? ஒரு சக்தியும் இல்லாதவர்களை பரமசக்தியாக படம் காட்டியது? பாவம் பலன்தான  இல்லை. அய்ந்து விழுக்காடு வாக்குகளைப் பெறத் தவறியதால் முதல் சுற்றிலேயே அதன் கதை முடிந்துவிட்டது. கட்டுக் காசும் பறிபோய்விட்டது. யானைக் கட்சி கூட மிதிவண்டியை மிதித்து நசுக்கிவிட்டது உண்மையில் பெரிய சோகம்!

ததேமமு கொள்கை வேறுபாடு காரணமாக தொடக்கப்பட்ட கட்சி அல்ல.  வேட்பு மன  ாக்கல் செய்யப்பட வேண்டிய கடைசி நாளுக்கு முதல் நாளும் செல்வராசா கஜேந்திரனுக்கும் பத்மினி சிதம்பரநாதனுக்கும் நியமனம் கேட்டு அலைந்ததை உலகத்தமிழர் ஆசிரியர் இவ்வளவு விரைவில் மறந்திருக்க நியாயமில்லை!பிச்சை பற்றி யார் பேசினாலும் உலகத்தமிழர் ஏடு பேசக் கூடாது.  இந்  ஏட சரி கனடிய தமிழர் வானொலி சரி இரண்டும் பொதுமக்கள் போட்ட பிச்சை!  இதை விரித்து எழுத வேண்டியதில்லை என நினைக்கிறேன்.வன்னித் தலைமை இல்லை என்ற துணிவில்தான் உலகத்தமிழர் முழுப் பக்கத்தில் இராசி பலன் போடுகிறது.  சோதிடப் புரட்டர்களின் விளம்பரங்களைப் போடுகிறது. அவற்றின் மூலம் மூடநம்பிக்கையை தண்ணீர் ஊற்றி வளர்க்கிறது. தன்னம்பிக்கையைத் தகர்க்கிறது.  புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பார்களே?  உலகத்தமிழர் ஏட்டைப் பொறுத்தளவில் அது பொய்த்துவிட்டது!

முடிவாக,  எழுதும் போது சொற்களை அளந்து எழுதுங்கள்.  ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துவிட்டு எழுதுங்கள். உங்களிடம் ஒரு ஏடு சிக்கிக் கொண்டதால் மனம்போன போக்கில் எதனையும் கிறுக்கலாம் என்று நினைப்பது தவறு.  உலகத்தமிழர் என்ற ஏட்டுக்கு சில விழுமியங்கள் இருக்கின்றன. ஒரு மரபு இருக்கிறது. ஒரு வரலாறு இருக்கிறது.

(நக்கீரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com