Contact us at: sooddram@gmail.com

 

தலைவர் சம்பந்தனின் செயற்பாடுகள் தெரிவுக் குழுவில் பங்கேற்பதற்கான சமிக்ஞையா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் யாழ் மேதினக் கூட்டத்தில் வைத்து தேசியக் கொடியை ஏந்தியமை அல்லது அசைத்தமை - தேசியப் பிரச்சினை தொடர்பிலான தேசிய சம்பாஷணைக்குள்ளாகியிருக்கிறது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர் அவரது தேசியத்துவ நல்லெண்ணங்களையும் தேசப்பற்று சார்வுப் போக்கினையும் சந்தேகத்துக்குட்படுத்தி நோக்கியிருக்கலாம். அதேநேரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியத் தூதுக் குழுவிடம் தான் ஒரு இலங்கையராக மரணிப்பதை பெருமைப்படுவேன் என்றும் கூறியிருந்ததை நினைவூட்டிப் பார்க்க முடியும். இது அரசாங்கத்துக்குள்ளும் வெளியேயும் உள்ள கடுங்கோட்பாளர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட வேண்டியதாகும். அந்த வகையில் தமிழ் தேசியவாதிகளை தமிழ் தேசியவாதம் கொண்டவர்களாக மாத்திரம் வர்ணிக்க முடியாத நிலை தற்போதைக்கு தோன்றியுள்ளதாக நோக்கர்கள் அபிப் பிராயப்படுகின்றனர்.

சம்பந்தரின் சமிக்ஞைகள் ஒரு அடையாளமாகவன்றி அதையும் விட கூடுதலாக உற்றுநோக்கப் பட்டன என்று அவதானிகள் கூறுகின்றனர். ஏனெனில் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இலங்கையில் தனித் தமிழ் ஈழம் மலருவதை கனவு கண்டு கொண்டிருக்கின்ற தரு ணத்திலும் அதற்காக அழைப்பு விடுத்துள்ள காலகட்டத்திலும், சம்பந்தரது ஜாடைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதேவேளை யாழ் மேதின கூட்டத்தின் மூலம் தமிழ் கூட்டமைப்புக்கும்/ கூட்டமைப்பிடம் இருந்தும் ஒரு செய்தி உள்ளது. அதாவது, நாடுதழுவிய அரசியல் இணக்கப்பாடுகள் ஊடாக இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக ஜனாதிபதியால் முடுக்கிவிடப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதற்கான தகுந்த சூழலை ஏற்படுத்துமாறு/ அரசாங்கத்தை வற்புறுத்தும் மற்றுமொரு சந்தர்ப்பமாக/ மேதின, மேடை பயன்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும் ஐ. தே. க. அனுசரணையுடன் தென்பகுதி சிங்கள மக்களால் வெற்றி கொள்ளப்பட்டதான யாழ். மே தினக் கூட்டத்தில் சிறியளவான உள்ளூர் தமிழர்களே கலந்துகொண்டதாக சிவில் சமூக பிரிவினரிடமிருந்து வரும் தகவல்/ தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான செய்தியாக கருதப்படலாம்.

எதிரொலி

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தேசியக் கொடியை ஏந்தியமை தொடர்பில் யாழ். மக்கள் மத்தியில் ஒருவகை அமைதியின்மை இருந்ததாகவும், ஏற்கனவே ஐ. தே. க. வுடன் சேர்ந்து மே தினக் கூட்டத்தை நடத்துவதிலும் முழுமையான உடன்பாடு இருக்கவில்லை என்றும் கூறிய மாவை சேனாதிராஜா - சம்பந்தனின் செயல்பாடுகள் தொடர்பில் மன்னிப்புக் கோருவதாக கூறினார். அவ்வாறு கொடியை ஏந்தியமைக்காக மன்னிப்பு கோரத் தேவையில்லை என்று சம்பந்தனே தட்டிக்கழித்துவிட்டார். சொல்லிலும், செயலிலும், முக்கிய அரசியல் பிரமுகர்கள், குழப்பமடைந்து தென்படுவது இது முதல் தடவையல்ல.

பாராளுமன்றத்தில் பாராட்டு

இது இவ்வாறிருக்க TNA தலைமைத்துவம் தேசியக் கொடியை கையில் ஏந்தியமையை பாராட்டுவதாகவும் அது சாத்தியமான முன்னேற்றம் என்றும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது செய்தியாகும். மன்றில் கருத்துரைத்த சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா - ஐ. தே. க. தலைமைத்துவத்துடன் இணைந்து, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தேசியக் கொடியை உயர்த்திக் காண்பித்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்ற தேசிய நல்லிணக்கத்துக்கு நிஜமாகவே ஒரு சாத்தியமான சமிக்ஞை என்றும் கூறிய அவர் இந்த முன்னேற்றம் தொடர்பில் வேறு எவரையும் விட தான் மகிழ்ச்சியடைந்ததாக சுட்டிக்காட்டத் தவறவில்லை. மேலும் பேசுகையில்யாழில் வெற்றிகரமான மே தினக் கூட்டம், கூட்டம் நடத்தக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்த அரசாங்கத்தின் முயற்சிகள் பாராட்டத்தக்கது, என்றும் கூறினார்.

கடந்த காலத்தில் ஒரு சிலர் கூட அந்தப் பகுதியில் எந்த விடயத்துக்காகவும் ஒன்றுகூட முடியாத நிலை இருந்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர் தமிழ்க் கூட்டமைப்பு அதன் பங்கு பற்றுகையை உறுதிசெய்தால் உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழு முயற்சியை அரசாங்கம் முடுக்கிவிடத் தயாராக இருப்பதையும் கூறத் தவறவில்லை. அதேநேரம் தென்பகுதி அரசியல் கட்சிகளின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படாவிட்டால் அரசியல் தீர்வு ஸ்திரமானதாக இருக்க மாட்டாது என்பதைக் கூறிய அவர், தமிழ் கூட்டமைப்பின் பங்கேற்பு இல்லாமல், தெரிவுக் குழுக் கூட்டங்களை நடத்த தாங்கள் விரும்பவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சமாதான பேச்சுக்களில் ஈடுபட வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பு கிட்டியி ருப்பதாக கூறிய சபை முதல்வர் கடந்த காலத்தில் அத்தகைய சகல சந்தர்ப் பங்களையும் புலிகள் தட்டிக் கழித்ததாக நினைவூட்டினார்.

தமிழ் சிவில் சமூகம்

தமிழர் பிரச்சினைக்காக ஆதரவு தேடி சிங்கள அரசியல் தலைமைகளிடமோ அல்லது அரசாங்கத்திடம் பேசுவதை காண்பதோ தமிழ் சிவில் சமூக பிரிவினர் சிலருக்கு தங்களது பலத்தை பலவீனப்படுத்துவதான அபிப்பிராய முண்டாம். சிலர் மகிழ்ச்சியின்மையையும் விருப்பமின்மையையும் காண்பிக்கின்றனர். தமிழ் மிதவாத சக்திகள், தேசிய நல் லிணக்கம் தொடர்பில் எடுக்க முனைகின்ற முயற்சிகள் குறைத்து மதிப்பிடப்படு கின்றன. இவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய தருணங்களில் குறித்த விடயம் தொடர்பில் கடந்த கால தோல்விகளை குறிப்பிட்டு பின்வாங்கச் செய்யப்பட்டிருக்கலாம். அதில் உண்மைகள் இல்லாமலில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கதே!

அரசாங்கம் - தெரிவுக்குழு

பேச்சுவார்த்தை முறைமையை மீளத் துவங்குவதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கூட்டமைப்பை இணைத்துக் கொள்வதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் பின்னணியில் குறித்த நோக்கத்துக்கான முன் நிபந்தனைகளை தளர்த்திப் பார்க்க வேண்டிய அல்லது மீளக் கருத்திற்கொள்ள வேண்டிய நிலையில் கூட்டமைப்பு காணப்படுகிறது.

சிங்கள பெரும்பான்மைக் கட்சிகள்குறிப்பாக ஐ. தே. க. மற்றும் ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சிகளுக்கிடையில் தேசிய இணக்கப்பாடுகள் இன்றி பெறுமதிமிக்க ஏற்புடையதான எதிர்பார்க்கப்படுகின்ற தீர்வு ஏகோபித்த வகையிலாக அமைவதற்கு வாய்ப்பின்மை என்பதை கூட்டமைப்பு உணர்ந்து கொள்ள முடியும். என்றாலும் சம காலத்தில் ஜனாதிபதி விரும்பிவிட்டால் எத்தகைய தீர்வையும் சாத்தியமாக்கலாம். அதேநேரம் தமிழ் கூட்டமைப்பு - தமிழ் சிவில் சமூகத்திற்கில்லை என்றாலும், தமிழ் தேசியவாதப் பிரிவினருக்கு செவி சாய்க்க வேண்டியிருப்பதுபோல், சிங்கள பெளத்த தேசியவாதிகளின் குரல்களுக்கு, செவி சாய்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் சவாலாகக் கொண்டுள்ளது.

சந்தர்ப்பம்

போருக்கு முன்னரும், பின்னரும் தமிழ்க் கட்சிகள் பேச்சுக்களில் ஈடுபட்டு வந்த வரலாறுகள் உண்டு. கட்சிக்கு கட்சி மாறி மாறி கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தமையும் தெரிந்ததே!

மனோபாவம்

கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட தமிழர்களின் கவலைகள் அவர்களது விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் மாறுபட்ட தன்மைகளை கோடிட்டுக் காட்டுவதாக கூறப்படுகின்றது. அவ்வாறானால் அத்தகைய முறைப்பாடுகள் கட்டமைப்புக்குட்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளதாக சிலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும் போருக்குப் பிந்திய மற்றும் ஜெனீவா தீர்மானத்தின் பின்னரான காலகட்டத்தில் உலகின் கவனம் இலங்கையை நோக்கி அதிகம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, இலங்கை அரசின் வெளிப்படையான புனர்வாழ்வு, புனரமைப்பு வேலைத் திட்டங்களின் முன்னேற்றத்தை ஒப்புக்கொள்ளக் கூடியதாக உள்ள போதிலும் கூட அரசியலிலும், ஆட்சித் துறையிலும் தமிழர்களின் துரதிஷ்டமான நிலையை நோக்காகக் கொண்டமைந்துள்ளதாக நோக்கர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் ஐ. தே. கவின் விருப்பங்களை அசெளகரியத்துக்குள்ளாக்காமல் தேசிய பின்னணியை முன்னோக்கி நகர்த்துவதற்கான அரிய வாய்ப்பை பாராளுமன்ற தெரிவுக் குழு ஏற்படுத்தும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகும்.

சட்டத்தரணி

இஸ்மாயில் பி. மஆரிஃப்

தலைவர் - சுயாதீன தேசிய முன்னணி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com