Contact us at: sooddram@gmail.com

 

சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து மீண்ட இலங்கை மீனவர்கள்

பயங்கர அனுபவங்களைப் பகர்கின்றார் பெருமாள் செல்வராஜா

சோமாலிய கடற் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப் பட்டு ஏழுமாதம் தடுத்து வைக்கப் பட்டு சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து விட்டு இலங்கை திரும்பிய மீனவர்களில் ஒருவரான பெருமாள் செல்வராஜாவை தினகரன் வாரமஞ்சரியின் சார்பாக அண்மையில் காணச் சென்றேன். நீர்கொழும்பில் மழை ‘சோ’ எனக் கொட்டிக்கொண்டிருந்தது. மழையில் நனைந்த நிலையில் நீர்கொழும்பு பிட்டிபனைக்குச் சென்றேன். பிட்டிபனை சந்தியிலிருந்து பெருமாள் செல்வராஜ் வீடு இருக்கும் (இரண்டாம்) தீவுக்குள் செல்ல வேண்டும். பிட்டிபன சந்தி யிலிருந்து தீவை இணைக்கும் பாலத்தில் ஏறியதும் அவரது இளைய மகள் டியூசன் வகுப்பு முடிந்துவரவும் எனக்கும் பயணம் எளிதாக இருந்தது. முதலாம் தீவைக் கடந்து இரண்டாம் தீவுக்குள் நுழைய வேண்டும் முதலாம் தீவையும் இரண்டாம் தீவையும் இணைக்கும் பாலத்தில் ஏறியதும் மழை தனது கோரத்தைக் காட்டியது. வீதியெங்கும் மழைச் சகதி அதன் மேல் நடந்து செல்வராஜ் வீட்டை அடைந்து விட்டேன். பிரதான வீதிக்கும் தீவுக்கும் சுமார் மூன்று கி.மீ. இருக்கும். எனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு பயணத்தை இதுவரை மேற்கொள்ளவே இல்லை. தீவு முழுவதுமாக காட்டுமரங்கள்.

எனது வருகையை எதிர்பார்த்து இருந்த செல்வராஜ் என்னை அன்புடன் வரவேற்றார். அவரின் கடத்தல் கதையை (என்னிடம்) சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சொன்னார். அவரின் கதை இனிப்பானது அல்ல.

கடந்த வருடம் செப்படம்பர் மாதம் 25ஆம் திகதி நீர்கொழும்பு கடல் இறங்கு துறையிலிருந்து ‘நிமோதுவ’ என்ற பெயரைக் கொண்ட நாற்பது அடி நீளத்தைக் கொண்ட படகில் ஆறு மீனவர்கள் தொழிலுக்காக கடலுக்குச் சென்றார் கள். நீர் கொழும்பைச் சேர்ந்தவர் ளான பெருமாள் செல்வராஜா (46 வயது) டபிள்யூ. எஸ். செபஸ்தியன் (32 வயது) டபிள்யூ. ஜே. லியோன் ரொட்ரிக்கோ, (வயது 26) ஜே. என். பெர்னாந்து (வயது 28) களுத்துறை யைச் சேர்ந்த எஸ்.கே.கே. வீரசிறி (வயது 50) மதுரங்குளியைச் சேர்ந்த தினேஷ் சுசந்த பெர்னாந்த (வயது 35) ஆகிய மீனவர்கள் இப்படகில் தொழிலுக்காக கடலில் பயணித்துக் கொண்டு இருந்தனர்.

இவர்கள் (வழமையாக) படகில் சுமார் மூன்று மாதம் தங்கி மீன் பிடித்த பின்னரே கரை சேர்வது வழக்கமாகும். இதற்குத் தேவையான உணவுவகைகளையும் எடுத்துச் செல்வர். செல்வராஜ் சென்ற படகில் மூன்று மாதங்களுக்குத் தேவையான சம்பா அரிசி 20 மூடை, பால்மா , சீனி, தேயிலை, பிஸ்கட் வகைகள், சிகரெட், பீடி, வெற்றிலை 1500, மருந்துவகைகள் குடிநீர் என அன் றாட தேவைக்கான அத்தியாவசிய பொருட்கள் களஞ்சியப்படுத்தி இருந்ததாம். குடிக்க... என நான் பேச்சை இழுத்த போது எப்போதுமே மீனவர்கள் கடற் தொழிலுக்கென கடலுக்குள் போகும் போது குடிவகை களை பாவிப்பதில்லை. அது எங்களின் தொழிலுக்கு நாம் தரும் கண்ணியமாகும். என செல்வராஜ் தெரிவித்ததும் அவர்களின் தொழில் மீதான பக்தியை அறிந்து கொண்டேன். பின்னர் செல்வராஜ் தனது சோக கதையை சொல்ல ஆரம்பித்தார்.

கடந்த செப்டெம்பர் 25ஆம் திகதி நீர்கொழும்பு லெல்லுமயிலிலி ருந்து மு. பகல் 12. மணியளவில் தொழிலுக்காக கடலுக்குச் சென் றோம். மூன்று நாட்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்தோம். பின்னர் 29ஆம் திகதி இந்திய மாலைத்தீவு எல்லைகளுக்கு அப்பால் சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தோம். அப்போது எங்களது படகில் 2000 கிலோவுக்கம் மேலதிகமான எடை யுள்ள 40 சுறா மீன்களைப் பிடித்து ஐஸ் போட்டு வைத்திருந்தோம். இதற்கும் மேலதிகமாக தளபத்து, கொப்பறா மீன் வகைகள் இருந் தன. இவற்றைக் கருவாடுக்காக வெட்டி உப்புப் போட்டு வைத்தி ருந்தோம். இது சுமார் 1000 கிலோ விலும் அதிகமானதாக இருந்தது. ஆறாவது நாளையும் கழித்தோம்.

சர்வதேச கடல் எல்லையின் நடுப்பகுதிக்கு செல்ல ஆயத்த மானோம். காலை 6 மணி இருக்கும். எங்களுக்கருகில் படகு ஒன்று வந்தது. அதில் இருந்தவர்கள் துப்பாக்கியால் எங்களை நோக்கிச் சுட்டனர். தெய்வாதீனமாக துப்பாக்கிச் சன்னங்கள் எங்களைத் துளைக்கவில்லை. ஆனால் படகு திசை மாறிச் செல்ல ஆரம்பித்தது. இரண்டு குண்டுகள் எங்களது படகை பதம் பார்த்தன. பயத்தில் படகின் என்ஜினை நிறுத்தினோம். படகு கடலில் மிதந்து கொண்டு இருந்தது.

http://thinakaran.lk/Vaaramanjari/2012/05/13/fea10-2.jpgஎங்களை பயமுறுத்திய படகிலி ருந்து 13 பேர் எங்களின் படகில் ஏறினர். அவர்களின் மொழி எங்களுக்குத் தெரியாது. திண்டாடி னோம். துப்பாக்கியைக் காட்டி எங்களை அச்சுறுத்தினர். யுத்த முனையில் பாவிக்கும் ஆயுதங்க ளையும், வைத்திருந்தனர். அவர் களின் உடலைச் சுற்றி துப்பாக்கி குண்டுகளைச் சுற்றி இருந்தனர். வந்தவர்களில் இருவர் ஆங்கில மொழியில் பெரும் சத்தத்துடன் அதட்டினர். அப்போது எங்களில் இருவருக்கு ஆங்கிலம் தெரியும். இவர்கள் ஆங்கிலத்தில் பதிலளித் தார்கள். பின்னர்தான் தெரியும் இவர்கள் சோமாலிய கடற்கொள்ளையர் குழு என்பது.

எங்களை வரிசைப்படுத்தி தலையை குனிந்த நிலையில் முழந்தாளிட்டு நிற்குமாறு கூறினர். நாங்கள் யார்! எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரித் தனர். அவர்களது படகில் பெற்றோல் இருக்கவில்லை. தங்களது படகை எங்களின் படகுடன் இணைத்துக் கட்டினர்.

எங்களிடம் பணம் கேட்டுப் பயமுறுத்தினர். பணம் இல்லை என்றோம். அவர்களின் மேலும் இரண்டு படகையும் எங்களின் படகுடன் இணைத்து சோமாலியா வுக்கு வாருங்கள் எனச் சொல்லி எங்களைக் கடத்தினர் கடலில் கடத்தல்காரர்களுடன் பத்து நாட்களைக் கடத்தியிருப்போம். இடையில் கடலில் செல்கையில் ஈரான் நாட்டுப் படகையும் கைப்பற்றினர். அப்படகில் ஈரான் நாட்டின் 15 மீனவர்கள் இருந்தனர். கடற் கொள்ளையர்கள் எங்களது படகிலும் 9 கடற்கொள்ளையர்கள் ஈரான் படகிலும் ஏறினர். இரண்டு படகும் ஒரேதிசையில் பயணித்தது. எங்களது படகில் சோமாலியரின் திசைகாட்டியையே பாவித்தோம். சோமாலியா எல்லைக்குள் நுழை யும் போது மிகவும் நுட்பமான வகையில் திசைகாட்டியை வேறு திசைக்குமாற்றி இந்தியாவின் வேறு கரைக்கு படகைத் திருப்பிச் சென்று இறங்கினோம். அங்கு நங்கூரமிட்டதும் கடத்தல் காரர்கள் நால்வரும் தங்களுக்குள் சண்டை பிடித்துக் கொண்டனர். திசை காட்டியை உரியமுறையில் அவர் களில் எவரும் கண்காணிக்கவில்லை என்றே அவர்கள் சண்டை பிடித்தனர்.

மீண்டும் சோமாலியாவின் கடற் கரை எல்லையை அடைவதற்கு உரிய திசையில் பயணித்தோம். கடற் கொள்ளையருடன் பதின்மூன்று நாட்களைத் தொலைத் திருந்தோம். பதின்மூன்றாவது நாள் சோமாலிய கடத்தல்காரர்களின் உரிய இடத்தை சென்றடைந்தோம். அவர்களின் கடல் எல்லையில் இரண்டு கப்பல்களைத் தடுத்து வைத்திருந்தனர். எங்களுடன் கடத்தப்பட்ட ஈரான் நாட்டு மீனவ படகும் தடுத்து வைக்கப்பட்டு இருந்தது. உண்மையிலேயே அக் கடற்கொள்ளையர்களின் பிரதேசம் ஒரு யுத்தமுனைப் பிரதேசம் போன்றே காணப்பட்டது.

கடற்கொள்ளையர்களால் நாங்கள் அறுவரும் பெரும் துன்புறுத்தப் பட்டோம். துப்பாக்கியால் கொள்ளை யர்கள் அடிப்பார்கள். கொதி நீரை உடலில் ஊற்றுவார்கள். துப்பாக்கி யால் சுட்டு பயமுறுத்துவார்கள். இரும்பு ஆயுதங்களால் அடித்துத் துன்புறுத்துவார்கள்.

தூண்டிலால் மீன்பிடித்து தரச் சொல்வார்கள். நாங்கள் ஏற்கனவே எங்களுக்கென கொண்டு வந்த அனைத்து உணவு வகைகளையும் அவர்களே எடுத்துக் கொண்டார் கள். எங்கள் அறுவருக்கும் சோறும், சீரகத்தையும் கலந்தே உணவாகத் தருவார்கள். அதனுடன் அவித்த மீனையும், கடல் நீரையும் தருவார்கள். ஒரு தினத்திற்கு ஒரு தடவை மட்டுமே உண்ண உணவு தருவார்கள். அதுவும் சிறதளவே இருக்கும். பசியால் தினமும் வாடி வதங்கிப் போய் விட்டோம்.

இந்நிலையில் ஒருநாள் எங்களின் படகுக்குள் புதிதாக ஆறு பேர் புகுந்தனர். துப்பாக்கிகளும் ரவை களும் அவர்களின் உடலைச் சுற்றி இருந்தன. எங்களது படகை சுற்றிப் பார்வையிட்டனர். இவர்களும் எங்களை விசாரிக்கத் தோடங்கினர். நாங்கள் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர் கள் இல்லை என தெரிவித்தனர். என்னையும், மற்றுமொருவரை மட்டுமே ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவ ர்கள் எனத் தெரிவித்தனர். ஏனைய நால்வரையும் துப்பாக்கியால் சுட முனைந்தனர். ஒருவரின் கைவிரல் களை உடைக்க எத்தனித்தனர்.

பின்னர் பணம் கேட்டு எங்களைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். ஆறு மில்லியன் டொலர்களைக் கேட்டனர். (அறுபத்து எட்டுக் கோடி ரூபா) நாங்கள் எங்களது நிலையைத் தெரிவித்தோம். எங்க ளது முதலாளிக்கும், வீட்டுக்கும் தொலைபேசியில் பேசி முடிவு காணுங்கள் என்றனர். இதே நிலை யில் இரண்டு மாதம் கழிந்தது.

எங்களில் நால்வரை கரைக்கு திடீரென ஒரு நாள் அழைத்துச் சென்றனர். நால்வரையும் காரில் ஏற்றி அவர்களின் காட்டுப்பகுதிக் குக் கொண்டு சென்றனர். கடற் கொள்ளையர்களின் தலைமை அலுவலகத்தில் வைத்து நால்வர் மீதும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

கடற்கொள்னையர்களின் தலைவன் தனது கைத் துப்பாக்கி யைக் காட்டி பயமுறுத்தி தனது சகாக்களுக்கு இவர்களிடமிருந்து பணத்தை பெற்றுத் தருமாறு கட்டளை பிறப்பித்துள்ளான். இவர் களின் பயங்கரமும் தொடர்ந்தது.

அன்றையதினம் காட்டுக்குள்ளி ருந்து எனது முதலாளிக்கு தொலை பேசியில் எங்கள் நிலைமையைச் சொன்னோம். அவர் அரசின் மூலமாக நடவடிக்கைகளை மேற் கொள்ளப் போவதாக பதில் அளித் துள்ளார். இதேநிலையில் இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக இலங்கையின் எந்த ஊடகத்தினூடாகவும் செய்தி வெளியிடக்கூடாது எனவும் எங்க ளின் முதலாளிக்கு தெரிவிக்குமாறும் கடற் கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஒருநாள் இந்தக் குழுவினர் மற்றுமொரு சோமாலிய கடற் கொள்ளையர் குழுவுக்கு எங்கள் அனைவரையும் விற்றுவிட்டனர். எங்களை இவர்களிடம் கையளிக் கும் போது முதலாவது குழு மிo sriழிanka என அதட்டியபடியே எங்களை அவர்களிடம் கையளித் தனர். இக்குழு எங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தனர். எங்களின் படகு, அதற்குத் தேவையான எண்ணெய்யின் அளவு என்பனவற்றை மிகவும் அவதானமாகக் கேட்டனர். தேவை யானவற்றை படகில் ஏற்றினர். குடிப்பதற்கு சேற்றுத் தண்ணீரையே வழங்கினர். இக்கடற் கொள்ளையர் குழுவில் 13 பேர் இருந்தனர்.

இவர்களின் திட்டம் தென் ஆபிரிக்கா சென்று பெரிய கப்ப லொன்றை கடத்த வேண்டும் என்பதாகத் தெரிந்தது. அதற்காக எங்களின் படகுடன் கொள்ளையர் களின் சிறு படகு ஒன்றையும் இணைத்துக் கொண்டனர். அப்பட கில் அறுபது மற்றும் நாற்பது குதிரைவேகம் கொண்ட (என்ஜின்) இயந்திரங்கள் காணப்பட்டன. மறுநாள் காலை ஆறுமணிக்கு சோமாலிய கடற்கொள்ளையரின் படகு எங்களின் படகுடன் இணைக் கப்பட்டிருந்த இணைப்புக்கயிறு அறுந்து கடலுக்குள் மூழ்கியது. அவர்களின் படகுடன் இரண்டு பெறுமதியான இயந்திரங்களும் கடலுக்கு இறையாகியது.

எங்களின் மூலமாக பெரிய கப்பல்களை கடத்தி கொள்ளைய டிப்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது.

கப்பலொன்றை அவர்கள் கண்டனர். அது இத்தாலி நாட்டைச் சேர்ந்ததாகும். அதனை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக மிகவும் வேகமாக அவர்களின் சிறுபடகில் ஏறி கப்பலை நோக்கி விரைந்தனர்.

கப்பலுக்குச் சமீபமாக இவர்களின் படகு சென்றதும் கப்பலிலிருந்து துப்பாக்கி ரவைகள் கக்கத் தொடங்கியது. கொள்ளையர்கள் எப்படியோ தப்பிப் பிழைத்தனர். ஆனால் நாங்கள் ஆறுபேரும் எங்களின் கதைமுடிந்தது என்றே எண்ணினோம்.

ஒரு கிழமையின் பின்னர் யுத்தக் கப்பல் ஒன்று தென்பட்டது. இக் கப்பலில் கடற்படையினர் காணப் பட்டனர். ஆனால் எந்தநாட்டைச் சேர்ந்தவர்கள் என இனம் காண முடியவில்லை. அக்கப்பலைக் கண்டதும் கடற் கொள்ளையர்கள் மத்தியில் ஒரு வித கலவரமும், பீதியும் ஏற்பட்டது. எங்கள் அனை வரையும் படகின் அடிப்பாகத்தில் மறைவான பகுதியில் ஒளித்து வைத்தனர். அந்த மறைவான இடத்தில் ஒரு சிறு ஓட்டை உள்ளது. அந்த சிறு இடைவெளியூ டாக படகின் மேல் பகுதியில் இடம்பெறுவதை நான் அவதானித் துக் கொண்டு இருந்தேன். அப்போது சோமாலியர்கள் யுத்தக் கப்பலில் இருந்தவர்களை நோக்கி மீன் பிடிவலைகளை காண்பித்து தங்களை மீனவர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டனர். கப்பல் அவ்விடத்தைவிட்டு அகன்று வேறுதிசையில் சென்றது.இக்கப்பல் மறைந்ததும் வேறுமொரு யுத்தக் கப்பல் வந்தது. மீண்டும் எங்களை மறைவிடத்தில் வைத்து மூடினர். யுத்தக்கப்பலில் வந்தவர்கள் சோமாலியருடன் ஏதோ பேசி விட்டு சென்று விட்டனர். மீண்டும் கப்பல் தேடும் படலம் கடலில் தொடர்ந்தது.

ஒரு கப்பல் எங்களின் படகை அண்மித்ததும் துப்பாக்கியால் கப்பலிலிருந்தவர்கள் படகை நோக்கிச் சுட்டனர். கடற் கொள்ளையர்கள் என்னைத் தவிர ஏனயை இலங்கையர் ஐவரையும் மறைவிடத்தில் மறைத்து வைத்தனர். பின்னர் சோமாலியரு டன் நானும் படகில் மல்லாக்காகப் படுத்துக்கொண்டேன். சோமாலியர் களால் படகின் என்ஜினை உரியவகையில் இயக்க இயலாது தடுமாறினார்கள். அந்தக் கப்பலும் போய்விட்டது.

பயணம் மீளவும் தொடர்ந்தது. கடற் கொள்ளையர்களில் பதின்மூன்று பேரில் அறுவர் அவர்களின் சிறிய படகில் ஏறிக் கொண்டனர். அப்படகில் உணவு ஆயுதங்களை ஏற்றிக் கொண்டனர். ஏனைய ஏழு பேரும் எங்களின் படகில் இருந்தனர். இவர்கள் ஏழு பேரும் எங்களை சித்திரவதை செய்தனர். துப்பாக்கியால் சுட்டு, நடு நடுங்க வைத்தனர். இரவு எல்லோரையும் கொலை செய்வோம் என்றனர். பலமுறை தப்பிக்க முயன்றும் இயலாது போனது.

கடற் கொள்ளையர் எங்கள் மீது ஆத்திரப்பட்டனர். கப்பப் பணமும் கிடைக்கவில்லை. கப்பலும் கிடைக்கவில்லை. எங்கள் குழுவும் முழு உயிர் நம்பிக்கையையும் இழந்தது.

இந் நேரத்தில் வானத்தில் சிறு விமானம் ஒன்று வட்டமிட்டுக் கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் ஸ்பெயின் கட்றபடை கப்பல் மிகவேகமாக எமது படகை அண்மித்தது. கப்பலில் இருந்து எமது படகுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. படகை நிறுத்தி படகினுள் ஸ்பெயின் கப்பலில் வந்த கடற்படையினர் உட்பிரவேசித்தனர். அவர்களிடமும் ஆயுதங்கள் இருந்தன. எங்களை அவர்கள் நெருங்கியதும் கைகளை உயர்த்தி நாங்கள் இலங்கையர் இவர்களால் எங்களுக்குப் பிரச்சினை எனத் தெரிவித்தோம். உடனே சோமாலியர்கள் அனைவருக்கும் கைவிலங்கிடப்பட்டது.

எங்களை அவர்களிலிருந்து பிரித்து மருத்துவ உதவிகளை முதலில் வழங்கினர். எல்லா உதவிகளையும் எங்களுக்கு வழங்கினர். எங்களது படகு துப்பாக்கி வேட்டுக்களினால் முழுமையாக சேதமடைந்து இருந்தது. படகை கப்பலுடன் கட்டினார்கள். பின்னர் எங்களை தன்ஸானியாவுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு வைத்து எங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் கதைக்க வழி செய்து தந்தனர். தன்ஸானியாவில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்தனர். மிகவும் பிரபல்ய ஹோட்டல் அது. அங்கு மீண்டும் வைத்திய உதவிகள் வழங்கப்பட்டன.

இங்கு தங்கியிருந்த காலத்தில் அதிகாரிகள் எங்களைப் பற்றி விசாரித்துப் பதிவு செய்து கொண் டனர். பின்னர் கென்யாவிலிருந்து இலங்கை தூதரக அதிகாரிகள் இருவர் வந்தனர். அதில் ஒருவர் தமிழர் ஒருவர் சிங்களவர். அவர்களும் எங்களுடன் தங்கி உதவினர். இவர்களால் நாங்கள் தன்ஸானியாவிலுள்ள பெளத்த விகாரை ஒன்றின் பிரதம தேரரிடம் ஒப்படைக்கப்பட்டோம். இங்கும் பல உதவிகள் கிடைத்தன. பின்னர் இலங்கை திரும்ப பயணச் சீட்டுகளையும் ஏனைய ஒழுங்குகளையும் அரசாங்கம் மேற்கொண்டு இருந்தது. அதற்காக அரசுக்கு நாங்கள் அனைவரும் நன்றி தெரிவிக்கின்றோம்.

எங்களை கடவுள்தான் காப்பாற்றி னார். எங்களின் குடும்பத்தாரின் பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாகவே ஸ்பெயின் நாட்டு விமானத்தின் துப்பறிவு செயலால் அந்நாட்டு கடற்படையினரால் காப்பாற்றப்பட் டோம் என்றார் கண்ணீர் மல்க.

இன்று பெரும் கடன் சுமையில் வாழும் எங்களுக்கு அரசு போதிய உதவிகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார் பி. செல்வராஜ்.

கே. பி. பி. புஷ்பராஜா

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com