Contact us at: sooddram@gmail.com

 

ஆயரின் அரசகாணி அக்கறை

மூன்று தசாப்த கால ஆயுதப்போராட்டம் போதும் போதும் என்னும் அளவிற்கு அழிவுகளையும் அவலங்களையும் அள்ளிஅள்ளி தந்திருக்கிறது. அந்தவிடயத்தில் யுத்தம் சாதி, மத பேதம் ஏதும் காட்டவில்லை. அதே போல யுத்தம் மொத்தமாகவும் சில்லறையாகவும  ெவ்வேறு தவணையடிப்படையில் உயிருடைமைகளை பறித்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குள் ஏகமனதாக ஒரு கருத்து இருந்ததென்றால் அது, தாயகத்தில் மீள்குடியேறும் தாகம் ஒன்றுதான்.

குறிப்பாக வடமாகாண முஸ்லிம்களைப்பொறுத்தவரை. அவர்கள்1990 ஓகஸ்ட் 29ல் புலிகளால் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டதில் இருந்து இன்றுவரை அதன் கோரவடுக்களை சுமந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உடைமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டு வெறுங்கைகளுடன் விரட்டப்பட்ட போதும், நாடெங்கும் அகதிகளாக வாழ்ந்து பல்வேறு மனஅழுத்தங்களை எதிர்கொண்ட போதும், அவர்களது தாயகநினைவும் மீள்குடியேற்றக்கனவும் தன்னம்பிக்கையோடு அவர்களை வாழவைத்திருக்கிறது.

கொடிய யுத்தமும் முடிந்த கையோடு தமிழ்தேசியவாதத்தின் அத்தனை கொடிய முகமும் ஒழிந்தது என வடக்கில் மீள்குடியேறப்போன முஸ்லிம்களுக்கு பிரச்சினை இப்போது ஆயர்வடிவில் வந்திருக்கிறது.

புலி சிதைத்த வாழ்வைச் சுமந்து திரியும் மக்களுக்கு மீள்குடியேறுவதில் ஏற்படுத்தப்படும் திட்டமிட்ட சதியானது, மாடேறிமிதித்த கதையாகியிருக்கிறது. 'நிலம் எமது. வீடு உமது. தூக்கிக் கொண்டோடும்.' என்ற அகங்காரம் பேச யாரும் இல்லை என்ற போதிலும் மன்னார் ஆயரின் கூற்றுக்கள் மீள்குடியேறப்பொன முஸ்லிம்களுக்கு வெந்தபுண்ணில் வேல் எறிந்து கொண்டிருக்கின்றன.

மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் அண்மைக்காலமாக தம் சொந்த நிலத்தில் மெல்ல மெல்ல மீள்குடியேறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கிணறுவெட்டப் பூதம் வெளிப்பட்ட கதையாக மன்னார் ஆயர் நாளுக்கொரு அறிக்கை வெளியிடத்தொடங்கியுள்ளார்.

அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோரை விஞ்சும் அளவுக்கு அரசகாணிகளின் மீது ஆயருக்கு அதீதபற்றுவந்திருக்கிறது. 'மன்னார் மாவட்டத்தில் அடாவடித்தனமாக அரசகாணிகளில் முஸ்லிம்கள் குடியேறுவதை எதிர்க்கின்றேன்' என ஆயர் வெளியிட்ட கோசத்தை 13.05.2012 ஞாயிறு பத்திரிகை ஒன்று தலைப்புச் செய்தியாக்கியிருக்கிறது. மற்றும் சில இணையத்தளங்களும் இதில் ஆர்வம்காட்டியிருக்கின்றன.

அதாவது, முஸ்லிம்கள் காடுகளை வெட்டித் துப்பரவாக்கியதைக் கண்ட போதே ஆயரது அரசகாணிமீதான அக்கறை பீறிட்டிருக்கிறது. ஒரு வகையில் ஆயருக்கு அக்காடு அரசகாணியாகத்தெரிந்ததில் ஆச்சரியமில்லைத்தான். பாவிக்கப்படாத அரச காணியும் அப்படித்தான் இருக்கும். அதேநேரம் காடாகக் காட்சியளிக்கும் அப்பிரதேசமானது, அம்மரங்களின் ஆழஅடியில் (பாரதி பாணியில்) எந்தையும், தாயும் மகிழ்ந்துகுழாவி இருந்த பூமியென்பதுவும் ஆயர் அறியாததல்ல. ஏனெனில் முப்பதுவருட யுத்தவரலாற்றில் ஆயரின் இடம் தனித்துவமானது.

புலிகளால் சூறையாடப்பட்டு பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட சில நாட்களிலேயே வீட்டின் பாகங்கள் பெயர்த்தெடுத்துக் களவாடப்பட்டமை ஒன்றும் ரகசியமில்லை. அரசகாணிகளைப் பாதுகாக்கும் அதிகாரம் ஆயருக்கில்லையெனினும், வீடுடைத்துக் கொள்ளையிடப்படுவதைத் தடுத்திருந்தருக்கக்கூடிய தார்மீகப் பொறுப்பு ஆயருக்கிருந்தது. மட்டுமல்லாது, மீள்குடியேறப்போன போது சில முஸ்லிம்களது காணிக்குள் தமிழ்மக்கள் ஆயரின்பாணியில் சொல்வதானால், அடாவடியாக இருந்து கொண்டுஎழும்பமாட்டோம்' என்றும், பத்தாண்டுகள் தாண்டினாலே அது தமக்கு சொந்தமாகிவிடும் என்றெல்லாம் தமிழ்தேசியவாதம் பேசியதெல்லாம் யாவரும் அறிந்ததே.

மன்னார்பிரதேசத்தில் முஸ்லிம்கள் குடியேறப்போனபோது, அதன் முற்பகுதியில் 147 தமிழ்க்குடும்பங்கள் பலாத்காரமாக குடியேறியிருந்தனர். எனினும் அதனை விட்டுக்கொடுத்துவிட்டு முஸ்லிம்கள் பிற்பகுதியில் குடியேறவேண்டிய நிலை ஏற்பட்டமை ஆயருக்கு அறியக்கிடைக்கவில்லைப்போலும். அதே நேரம் நானாட்டான் அளவக்கைபிரதேச முஸ்லிம்கள் அங்கு குடியேறப்போன போது, அங்குவிரைந்த ஆயரவர்கள் 'அங்கு யாரும் குடியேறக்கூடாது மீறிக்குடியேறினால் சாபமிடுவேன்'என எச்சரித்துச்சென்றதை அம்மக்கள் இன்றும் நினைவுகூருகிறார்கள்.

நானாட்டான், அச்சங்குளம்,,நொச்சிக்குளம் போன்ற பிரதேசத்தில் மீள்குடியேறி, மரங்களின் கீழ் குடியிருந்து கிடுகுகளைச்சாத்தி இருப்பிடம் அமைத்துக்கொண்டு அல்லல் பட்ட 108முஸ்லிம்குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் நிறுவனம் வீடு கட்டிக்கொடுக்க முன்வந்த போது அதனை எதிர்த்து மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்து இறுதியில் அவ்ஏழைகளுக்கு கிடைக்கவிருந்த இல்லிடத்தை இல்லாமலாக்கிய கைங்கரியத்தைச்செய்து புண்ணியத்தைக்கட்டிக்கொண்ட ஆயரவர்கள் இப்போது, முஸ்லிம்கள் அரசகாணிக்குள் குடியேறுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பதானது எல்டிடியின் முஸ்லிம் விரோதச் செயலுக்கு மில்லிகிராமும் குறைவானசெயலல்ல. எனவே உயிரிழந்து, உடமையிழந்து, சொந்த நிலமும் இழந்து போன முஸ்லிம்கள் எங்கெல்லாமோ அலைந்து தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். வடக்கே அவர்களை வாஞ்சையுடன் வரவேற்க ஆயிரம் ஆயிரம் நல்லுள்ளங்கள் காத்திருக்கின்றார்கள். ஆதலால் அவர்கள் உங்களிடம் இருந்து உபத்திரவம் எதனையும் இனிமேலும் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் ஆயர் அவர்களே! ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதமாக உங்களை முஸ்லிம்கள் பார்க்கவும் இல்லை. என்பதை இங்கு சொல்லிவைக்கின்றேன்.

(மூதூர் முகம்மதலி ஜின்னாஹ்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com