Contact us at: sooddram@gmail.com

 

வட்டுக்கோட்டை முதல் தேசியக்கொடி வரை வரலாறு பேசவேண்டிய காலமா இது

(இரா.வி.விஷ்ண )

தமிழ் தேசியம் என்பது காலா காலமா எமது தமிழ் சமூகத்தில் பின்னிப்பிணைந்து வந்திருக்கிறது. ஆனால் தமிழ் தேசியத்தை பயன்படுத்துகிற நபர்கள் ஓர் இருவர் தவிர்த்து கால காலமாக மாறுபட்டுக்கொண்டே வருகின்றனர். ஒன்று அவர்கள் முன்னாள் தமிழ் தேசியவாதிகளாக (தற்போது தமிழ் தேசிய வார்த்தையையே பயன்படுத்தாதவர்கள்) அல்லது இந்நாள் தமிழ் தேசிய வாதிகளாக (முன்னர் தமிழ் தேசிய வார்த்தையையே பயன்படுத்தாதவர்கள ) இருக்கின்றனர். அவர்கள் யாரென்று பட்டியலிட்டால் வாசகர்களை ஏதும் தெரியாதவர்கள் என்று நான் இழிவுபடுத்துதல் போலாகிவிடும். ஏனெனில் உங்களுக்கு யார் யாரென்று நன்றாக தெரியும். மேதின தேசிய கோடி விவகாரம் ஆரோக்கியமான சூடான விவாதத்துக்கான களம் என்பது ஆமோதிக்கவேண்டியவிடயமாகத்தான் (விவாதம்) தென்படுகிறது. இங்கு ஆச்சரியமான விடயம் என்னவென்றால் தமிழ் ஊடகங்களுக்கான எமது தலைவர்களின் அறிக்கைகளின்படி இவ்விடையத்தை ஆதரிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் வலுவான தைரியம் தமிழ் சமூகத்திலும், அரசியல் செயற்பாட்டாளர்களிலும் ஏற்பட்டிருப்பதுதான்.

அரசியல்வாதிகளின் விமர்சனங்கள் என்பது அவர்களில் ஆளுமையும் கடந்த கால செயற்ப்பாடுகளுமே அனேகமாக தீர்மானிக்கின்றன. தேசிய கோடியை இரா .சம்பந்தன் தூக்கியதால் (அல்லது மாவை சேனாதிராஜா தூக்கியிருந்தாலோ) விமர்சனம் என்பது வெறும் ஓரிருநாள் பேசப்படும் செய்தியாக ஆகியிருந்தத . ஒரு வேளை தேசியக்கொடியை சுரேஷ் பிரேமச்சந்திரனோ, செல்வம் அடைக்கலநாதனோ தூக்கியிருந்தால் இதன் தாக்கம் ஊடக அளவில் எப்படியிருந்திருக்குமென உங்களாலேயே ஊகிக்கமுடியும். கூட்டமைப்பின் தலைவரின் செயல் பல்வகைப்பட்டவர்களையும் வெ'வ்' வேறு விதமாக தாக்கியிருக்கிறது என்பது யதார்த்தம். பேராசிரியர் திஸ்ஸ விதாரண சொன்னது போல் இது ஒரு எழுச்சிகரமான செயலாகவும் மாற்றமாகவும் ஒருவகையில் வைத்துக்கொள்ளலாம். அதேபோல் புலம்பெயர் சமூகத்தில் ஒரு சாராரின் செயற்பாடுகளையும், தமிழ் நாட்டின் ஒரு சிலரின் வாய் வீச்சுக்களையும் ஒரு வகையில் அடக்குவதாயும் அல்லது அடங்கி இருங்கள் என்று கூறுவதையும் எடுத்துக்கொள்ளலாம .

ஐ.நா தீர்மானம் கூறிய விடையங்களுக்கான நிறைவேற்றுக்காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது என்னவோ மாற்றம் என்பது நீ சொல்வதென்ன நாங்கள் செய்வதென்ன என்பதை போலவே இருக்கிறது. அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளுக்குட்பட்ட பொன்சேகாவின் விடுதலை என்பது மட்டுமே இன்றளவில் இராஜ தந்திரமாக இலங்கை அரசினால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது பல குளறுபடிகளுக்குட்பட்டு. இதில் தமிழர்களுக்கான நன்மை என்பது என்ன என்று போரை நடத்திய தலைவன் தான் என்ற தொனியில் பொன்செகாவில் முதல் நாள் அறிக்கை, பேட்டியிலேயே வந்துவிட்டது. பலரிடம் இவரால் ஆட்சி மாறலாம் என்கிற நிறைவேறும் அல்லது நிறைவேற கனவு இருக்கலாம். இதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சி , தமிழ் கூட்டமைப்பு கூட்டின் மூலம் தமிழர்க்கும் நன்மை விளையுமேனவும் எதிர்பார்க்கலாம். இதற்கான கால எல்லை என்பது நிர்ணயம் செய்ய முடியாததாகவே இன்றளவில் இருக்கிறது. அரச கவிழ்ப்புக்கான முயற்சி என்பது வீழ்த்து போயுள்ள ஐக்கிய தேசிய கட்சியை நிமிர்த்துவதற்காகவும , ஜேவிபி ,பொன்சேகா ஆகியோரின் பதில் பழிவாங்கலாகவும் அத்தோடு அதிகாரம் , விலைவாசி என்பன காரணக்களாக இருக்கிறது. தென்இலங்கை அரசியல் சூழலில், இதில் தமிழர் தரப்போ முஸ்லீம்கள் தரப்போ பல எதிர்பார்ப்புகளின் நிமிர்த்தம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு உதவி புரிபவர்களாக இருக்கலாம். அவற்றை வருங்கால அரசியல் சூழ்நிலைகளை வைத்து கவனிக்கலாம்.

இனி மாகாண சபை தேர்தல் வடக்குக்கு மாகாண சபைத்தேர்தல் நடக்குமென்ற எதிர்பார்ப்பு கூடவே பலரின் கனவுகள் முளைவிட்டிருந்த சூழ்நிலையில். கிழக்கு மாகாண சபை தேர்தல் நாடி பிடிப்பை இலங்கை அரசு சோதிக்க தொடங்கியிருக்கிறது. இதன் முதற் படியான நோக்கமென்பது முஸ்லீம் சமூகத்தை தேர்தலுக்கு முன் தன் பக்கம் இழுக்கவேண்டும் என்பதுதான். அடுத்த கட்டம்தான் மாகாண சபைக்கலைப்பும், தமிழர் தரப்பின் நிலைப்பாடுகளும் என்பது அரசை பொறுத்தவரை என்பது சில முஸ்லீம் கட்சிகளின்அண்மைய ஊடக செவ்விகள் மூலமும , முஸ்லீம் காங்கிரஸ் அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்த நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான பரிந்துரை அறிக்கையையும் வைத்து அவாதானிக்கலாம். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் என்பது அரச , முஸ்லீம் தரப்புக்கு இடையில் விரிசல் ஏற்படக்கூடிய சூழ்நிலையை தோற்றுவித்திருந்த போதும், ஹிஸ்புல்லாவுக்கு வந்த விமர்சனம் மற்றும் ஜம்மியத்துல் உலமா சபை இரண்டாக பிளவு போன்ற நிகழ்வுகளோடு அரச பக்கம் பெரும்பாலான முஸ்லீம் தலைவர்கள் இருப்பதன் நிமிர்த்தமும் அப்பிரச்சனை ஓரளவுக்கு அமர்ந்திருக்கிறது. அத்தோடு கிழக்குமாகாண தேர்தல் விவகாரமும் இப்பிரச்சனையில் ஓரளவு அமைதி ஏற்பட காரணமாக அமைந்தது.

கிழக்கு முதல்வர் பதவி முஸ்லீம் தரப்புக்குள்ளும் மற்றும் தமிழ், முஸ்லீம் தரப்புக்குள்ளும் போட்டியாகவே இருக்கும். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் சேர்த்த பின் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் போட்டி இடவேண்டியது மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பது மட்டுமில்லாது சூழ்நிலைகளே அரசியலையும் கொள்கைகளையும் தீர்மானிக்க கூடியவை என்பதையும் உணர்த்துவதாய் உள்ளது. இதற்கான முதல் படி என்பது கூட்டமைப்பின் கிழக்கு மாகாண தேர்தல் வேட்பாளர்கள் தெரிவின் மும்முரமும . முன்னாள் வடகிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இந்நாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா. துரைரெட்ணத்தின் கூட்டமைப்பின் (சுரேஷ ) இணைவுக்கான அறிக்கையும் காட்டுகின்றன . ஆரம்பத்தில் குறிப்பிடதுபோல் தமிழ் தேசியம் பேசுபவர்கள் இந்நாள் அல்லது முன்னாள் வாதிகளாக இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்க.(புதுசா இணைபவர்கள்தான் தீவிரமா தேசியம் பேசுகின்றனர் அதன் மாயம் தான் புரியவில்லை இதில் கூட்டமைப்பால் ஓர் இரு தடவை பாராளுமன்றம் வந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அடக்கம் ) எது எப்படி இருப்பினும் கிழக்கு மாகாண சபைத்தேர்தல் வரும் சில காலத்தில் உறுதியாகிவிடும். இதில் தமிழ , முஸ்லீம் என இனவாதம் கடந்த தேர்தலைபோல் தலை தூக்கிவிடக்கூடாது என்பது இன ஒற்றுமை விரும்பிகளின் கருத்து . அது மாத்திரமல்ல கிழக்கு மாகாண சபை என்பது இன ஒற்றுமையை முக்கியமாக தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலுப்படுத்தியிருக்கிறது என்பது கிழக்கு மாகாண சபையின் கடந்த கால சாதைனையாக கூட கருதலாம். அது கட்டி காப்பற்றப்படுமா..?! காலம் நிச்சம் ஒருத்தரை கிழக்கு முதல்வராக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்கிடையில் விளையாடப்படும் சதுரங்கம் நல்ல தலைவரை தரவேண்டுமென்பதே சாதாரண கிழக்கு குடிமகனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இன்றைய எமது பலவீனமான சூழ்நிலையில் (தமிழ் மக்கள ,இலங்கை ) தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளேயே தீர்வு வேண்டும் என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் குரல்கொடுத்துவரும் சூழலில். புலம்பெயர் சூழலில் ஒரு சில அமைப்புக்களின் செயற்பாடுகள் முக்கியமாக தமிழ் நட்டு அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் வங்குரோத்துக்களை நிரப்ப தம் கட்சி பதவி சார்ந்து எடுக்கும் தான்றோன்றித்தனமான தீர்மானங்களும் தமழீழ கோசங்களும் ஐநா தீர்மானம் கொண்டுவர காரணமாய் இருந்த தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த ஆதரவையும் நன்றி உணர்வோடு பார்க்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு நெருக்கடிகளை கொடுக்கும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளாமல் நடப்பதுவே மன வேதனை அளிக்கின்ற விடயமாக இருக்கின்றது. ஐ.நா காலக்கெடு வரையேனும் அமைதி காக்க ஈழக்கோச அமைப்புக்களும் தமிழகத்தில் அரசியல் வந்குரோத்துடைய அமைப்புக்களும் முன்வரவேண்டும். அதிகாரமிக்கவர்களின் இராஜ தந்திர அழுத்தங்களே இன்றைய சூழ்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவுமே ஒழிய வெற்றுக்கோசங்களல்ல!

"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு"

(நீதி வழுவாமல் நன்மைகளை செய்து பிறருக்கு பயன்பட பணியாற்றுபவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும )

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com