Contact us at: sooddram@gmail.com

 

மனிதன் விண்வெளிக்குள் பிரவேசிக்கும் நீண்ட கால கனவு நனவாகிய வரலாறு

தியில் விண் வெளியில் அதிக தொலை தூரத்தில் பயணிப்ப தென்பது மனிதனின் கனவாகவே காணப் பட்டது எனலாம். இதற்கு காரணம் வாயு மண்ட லத்துக்கு அப்பால் காற்றே கிடையாது. காற்றே இல்லாத வான் வெளி யில் விமானம் பறக்க இயலாது. நாளடைவில் நவீன ரக ரொக்கெட்டுகள் உருவாக்கப்பட்டதும் விண்வெளிப் பயணம் சாத்தியமாகியது. திரவ அல்கஹோலும், திரவ நிலைக்கு மாற்றப்பட்ட பிராண வாயுவும் கலந்த கலவையை பற்ற வைத்து எழுப்பப்படும் உந்து விசையை கொண்டு ரொக்கெட்டுகளை மிக வேகமாக செலுத்தலாம் என்று சோவியத் ரஷ்யா, அமெரிக்க மற்றும் ஜேர்மனிய விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தனர்.

முதல் சாதனை

புளோரிடா கேப் இருந்து ஏவப்பட்ட முதல் ரொக்கெட் முதல் முதலில் வான்வெளியில் 2300 கி.மீ. உயரத்திற்கு ரொக்கெட்டுகளை செலுத்தி சாதனை படைத்தனர். அவை மணிக்கு 1100 கி.மீ. வேகத்தில் செலுத்தப்பட்டன.

விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படும் ரொக்கெட்டு பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு விண்வெளியினுள் செல்வதற்கு ஆரம்பத்தில் மணிக்கு குறைந்தது 40000 கி.மீ. வேகத்தில் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதிக வேகத்தில் பறக்கும் போது வாயு மண்டலத்தின் உராய்வு உண்டாகும். நாம் எமது கைகளை இடைவிடாது சற்று நேரம் தேய்த்தால் உராய்வினால் வெப்பம் உண்டாகின்றது. அவ்வாறே உராய்வு மித மிஞ்சினால் அதிக வெப்பம் உண்டாகி ரொக்கெட் எரிந்து சாம்பலாகிறது.

அவ்வாறே வான வெளியிலிருந்து திரும்பி வரும் ரொக்கெட் வாயு மண்டலத்தினுள் பிரவேசிக்கும் பொழுது ஏற்படும் உராய்வினால் எரிந்து விடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. உராய்வினால் எரிந்து போகாத வகையில் ரொக்கெட்டுகளை அதி தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு பாதுகாப்பான ரொக் கெட்டுகளை தயாரிப்பதற்கும் இயக் கவும் விஞ்ஞானிகள் வழிவகுத்தார்கள்.

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சி.

1957 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி ஸ்புட்னிக் என்னும் செயற்கை கிரகம் ஒன்றை ரஷ்யா பறக்கவிட்டது. இது சந்திரனைப்போல ஒரு துணைக்கிரகமாக பூமியை சுற்றி வந்தது. ஒரு முறை சுற்றி வர 90 நிமிடங்கள் ஆயின. இதனை தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 3 இல் ரஷ்யா ஏவி விட்ட ஸ்புட்னிக் இர ண்டு என்ற செயற்கை கிரகத்தில் லைக்கா என்ற நாயை வைத்து அனுப்பினர். அது பத்திரமாக பூமிக்கு திரும்பியது. ஸ்புட்னிக் 2 விண்வெளியை சுற்றி வரும் போது நாயின் இதயத்துடிப்பை யும் மூச்சையும் பதிவு செய்தார்கள். இச்சாதனைகளால் விண்வெளி பயணத்திற்கு மனித உடல் ஏற்றது தான் என்பது தெரிய வந்தது.

ரஷ்யாவை தொடர்ந்து அமெரிக்கா வும் 1958 ஜனவரி 31 Explorer என்ற தனது முதல் செயற்கை கோளை வானத்தில் பறக்கவிட்டது. நாங்கள் வாழ்கின்ற பூமியானது வினாடிக்கு 29.7 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. இந்த வேகத்தை நமது உடல் தாங்கிக்கொள்கிறது. ஆனால் இந்த வேகத்தில் திடீரென்று மாறுதல்கள் ஏற்படும் போது என்ன நடக்கும் என்று தெரியாமல் இருந்தது.

பூமியில் இருந்து புறப்படும் போது ஏற்படும் கடும் வேகத்தின் போதும் பூமியை சுற்றும் போதும் எடையின்மையின் போதும் விண்வெளி பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் சாதனங்கள் அமைப்பதில் பொறியியல் வல்லுனர்கள் கடுமையாக ஈடுபட்டனர். வேகம் அதிகரிக்கும் போதும் குறையும் போதும் உடலின் மீது பெருமளவு அழுத்தம் உண்டாகின்றது என்பதைக்கண்டு அதனை நிவர்த்தி செய்ய குறுகிய வழிமுறைகளை வகுத்தனர். விண்வெளி வீரர்களின் உடை அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கக் கூடிய வகையில் வடிவ மைக்கப்படுகிறது. பிரதானமாக அதனுள் பிராண வாயு நிரப்பப்படும்.

விமானிகள் வாயு மண்டலமே இல்லாத சந்திரனில் இறங்கும் வேளை அவர்களுடைய உடலுறுப் பிற்குள் இருக்கும் பிராண வாயு பலூன் போல ஊதி வெடிக்காதவாறு பாதுகாக்கப்பட்டிருக்கும். சந்திரனில் நண்பகல் வெப்பநிலை 100 டிகிரி வரை உயர்ந்திருக்கும். இரவில் வெப்பநிலை மைனஸ் 32 பாகை வரை தாழ்ந்து கடும் குளிராக காணப்படும். முற்றிலும் மாறுபாடான இந்த தட்ப வெப்பநிலையை தாங்கிக் கொள்வதற்கு ஏற்றவாறு விண்வெளி வீரர்களின் உடை வடிவமைக் கப்பட்டிருக்கும். இதன்பின் விண்வெளி கலத்தில் மனிதனை வைத்து விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக கொண்டு வரும் வழிகளை காண்பதில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டனர். இதில் வெற்றியும் அடைந்தனர்.

மனிதன் அனுப்பப்பட்டான்

முதலில் ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகளே இதில் சாதனை படைத்தனர். அவர்கள் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 இல் யூரிககாரின் என்னும் விண்வெளி வீரரை விண்வெளி கலத்தில் வைத்து அனுப்பினர். அவர் சென்ற கலம் எந்தவொரு இடையூறும் இன்றி பூமியில் இருந்து சுமார் 300 கி.மீ. உயரம் சென்று பூமியை 108 நிமிடத்தில் ஒருமுறை சுற்றி விட்டு மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வந்தது.

இதனை அவதானித்த அமெரிக்க விஞ்ஞானிகளும் Alenshepard என்பவரை விண்வெளிக்கு அனுப்பி வெற்றி கண்டனர். இதனை தொடர்ந்து சந்திர மண்டலத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டனர். ரஷ்யர்களை Luna என்ற விண்வெளிக்கலங்களை செலுத்தி சந்திரனைப் பற்றிய பல அரிய தகவல்களை சேகரித்தனர். சட்டர்ன் 5 ரொக்கெட்டும் சந்திரனுக்கு பயணமும் விண்வெளி பயணத்திற்கு பயன்பட்ட சட்டர்ன் 5 ரொக்கெட் 3 கட்டங்களாக இயங்கியது.

அது மேலே ஏவப்பட்ட பின்னர் இரண்டரை வினாடிகளில் அதன் முதல் கட்டப்பகுதி கீழே விழுந்து விடும். இரண்டாம் கட்ட பகுதிகளில் இயந்திரங்களை இயங்க தொடங்கி நாலு கோடி பதினாறாயிரம் கிலோ கிராம் உந்து விசை அளிக்கும். அடுத்த ஆறரை வினாடிகளுக்கு பிறகு இரண்டாம் கட்டமும் விழுந்துவிடும். மூன்றாம் கட்டப் பகுதியாகிய அப்பலோவின் வெளிக்கலம் தொண்ணூராயிரத்தி எழுநூறு கிலோகிராம் உந்து விசையுடன் விண்வெளியில் பறக்கும்.

இதுதான் சுற்றோட்டப் பாதையை சேர்ந்தவுடன் ரொக்கெட்டுகள் இயங்காமல் நின்றுவிடும். இப்பகுதி எடை அற்ற நிலையில் பூமியை சுற்றி ஓடத் தொடங்கும். குறிப்பிட்ட நேரத்தில் இயந்திர இயங்கத் தொடங்கும். மணிக்கு 38880 கி.மீ. வேகத்தை எட்டி பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு சந்திரனை நோக்கி பறக்கும். சந்திரனை நெருங்கும் போது இதன் வேகம் மணிக்கு 4800 கி.மி. ஆக குறையும் இந்த நிலையில் ரொக்கெட்டுகள் மீண்டும் இயங்காமல் நின்று விடும்.

சந்திரனுக்கு மனிதனை அனுப்பி வைப்பதில் வெற்றி அமெரிக்காவுக்கு கிடைத்தது. 1969 ஜுலை 16 இல் நீலாம் ஸ்ட்ரோங், எட்வின் அல்டிரின், மைக்கல் கொலின்ஸ் ஸ்ரோவ் ஆகிய 3 அமெரிக்க விண்வெளி வீரர்கள் அப்பலோ - 14 என்னும் விண்வெளி கலத்தில் சந்திரனுக்கு புறப்பட்டு சென்றனர். அக்கலம் சந்திரனின் சுற்றுப்பாதையை அடைந்ததும் கொலின்ஸ் ஆணைக்கூட்டில் (Command Module) இருந்த வண்ணம் சுற்றுப் பாதையில் சுற்றிக்கொண்டு இருந்தனர். நீலாம்ஸ்றோங், எட்வின் அல்டிரின் ஆகிய இருவரும் சந்திரன் ஆணைக்கூட்டினுள் (Lunar Module) இறங்கினர்.

அக்கூடு ஆணைக்கூட்டி னின்றும் தன்னை விடுவித்து கொண்டு ஜுலை 20 இல் சந்திரனில் தரை இறங்கியது. முதலில் நீலாம் ஸ்ட்ரோங்கும் அடுத்து எட்வின் அல்டிரினும் சந்திரனில் காலடி வைத்து சுமார் 22 மணிநேரம் அங்கு தங்கி இருந்து பல சோதனைகளை நடத்தினார்கள். அதன் பின்னர் மீண்டும் பழைய படியே சந்திரன் கூட்டில் ஏறி அமர்ந்தார்கள்.

ரொக்கெட் விசையால் மேலேறி அங்கு சுற்றுப்பாதையில் கொலின்சுடன் வலம் வந்து கொண்டிருந்த ஆணைக்கூட்டை நெருங்கி அதனுடன் தம் கூட்டை இணைத்து கொண்டார்கள். இணைப்பு ஏற்பட்டதும் நீலாம்ஸ்ட்ரோங், எட்வின் அல்டிரின் இருவரும் சந்திரன் கூட்டை கைவிட்டு ஆணை கூட்டினுள ஏறிக்கொண்டனர். பின்னர் சந்திரன் கூடு ஆணைக்கூட்டினின்றும் கழன்று தனியாக சந்திரனை சுற்றி வரத் தொடங்கியது.

ஆணைக்கூட்டை மட்டும் கொண்ட அப்பலோ விண்வெளி கலசம் தன் ரொக்கெட்டுகளை இயக்கி சந்திரனை ஈர்ப்பு விசையிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு 3 விண்வெளி வீரர்களுடன் பூமியை நோக்கி விரைந்தது. அது பூமியை நெருங்க நெருங்க அதன் வேகத்தை அதிலிருந்து வீரர்கள் குறைத்து கொண்டனர். இறுதியாக அக்கலம் பசுபிக் சமுத்திரத்தில் பரஷ¤ட் மூலம் வந்தடைந்தது. விண்வெளிக்கலம் சந்திரனுக்கு செல்லும் போதும் திரும்பி வரும் போதும் சந்திரனில் விண்வெளி வீரர்கள் தங்கி இருக்கும் போதும் அவர்கள் பூமியில் உள்ள நிலையத்துடன் இடைவிடாது தொடர்பை கொண்டிருப்பார்கள். அதி சக்தி வாய்ந்த தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் தொலைக்காட்சி சாதனங்கள் இதற்கு பெரிதும் உதவுகின்றன.

இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள தும்பா என்னுமிடத்தில் 1963 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்று நிறுவப்பட்டது. காந்த மண்டலம் பூமத்திய ரேகை பகுதியில் அமைந்துள்ள தும்பா நிலையம் சர்வதேச ஏவுகணை செலுத்தும் தளமாக ஐ.நா. ஆதரவில் பணியாற்றி வருகின்றது.

இதுவே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் ஏவுகணை தளமாகும். முதன் முதலில் 1963 இல் அப்பாஷி என்ற அமெரிக்க ஏவுகணை இங்கிருந்து விண்வெளிக்கு செலுத்தப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவும், அமெரிக்காவும் இத்துறை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாடுகளும் தும்பா தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆந்திர பிரதேசத்தில் ஹரிக்கோட்டா என்னுமிடத்திலும் ஏவுகணை தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com