Contact us at: sooddram@gmail.com

 

உத்தேச மாகாண சபைத் தேர்தல்களும் பூர்வாங்க நிலைப்பாடுகளும்

மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்குரிய அரங்கை அரசாங்கம் ஆயத்தம் செய்துள்ளதாக தெரிய வருகிறது. அண்மையில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சி மீள்புனரமைப்பு வேலைத் திட்டம் தொடர்பாக கருத்துக் கூறிய அரச குரல்தரவல்ல அதிகாரி வட மத்திய மாகாண சபைக்கான தேர்தலையும் நடத்துவதன் பொருட்டே அந்த மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அநுராதபுரம் பிரதேசத்தில் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். அதேபோன்று மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களை விரைவில் சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நடத்த இருப்பதாகவும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அதேவேளை வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ மாகாண சபைகளை ஜூன்/ ஜுலை காலப் பகுதியில் கலைத்து செப்டம்பரில் தேர்தல்களை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் அடுத்த வருடத்திலேயே முடிவடையவுள்ளது. என்றாலும் அரசாங்கம் அதன் செல்வாக்கை இழந்து தேர்தல்களுக்கு முகங்கொடுக்க முடியாத நிலைக்குள்ளாகியுள்ளது என்ற எதிர் சக்திகளின் பிதற்றல்களை பொய்ப்பிக்கும் நோக்கத்துடனேயே, குறித்த திட்டமான காலப் பகுதிக்கு முன்பதாக தேர்தல்களை நடத்த முற்படுவதாக ஊடக அமைச்சர் கூறினார். அரசாங்கம் செல்வாக்கை இழந்துவிட்டது என்று வர்ணிக்கும் எதிர்த்தரப்பினருக்கு, போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்டுமாறு அழைப்பு விடுத்த அமைச்சர், காலத்துக்கு முந்திய தேர்தல்கள் சர்வதேச அழுத்தங்களை மறுதலிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை பலப்படுத்தும், மக்கள் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதையும் வெளிக்காட்டும் என்றார்.

கால அட்டவணைக்கு ஒரு வருடத்துக்கு முன்பதாக தேர்தல்களை நடத்துவது புதியதொன்றல்ல. கடந்த காலத்திலும் அவ்வாறு நடத்தப்பட்டமை தெரிந்ததே. உரிய திகதிக்கு முன்பதாக வாக்களிப்பதற்கு மக்களுக்கு உரிமையளிக்கிறோம் என ஆளும்தரப்பு கூறுகிறது. தேர்தல்களுக்கு தயாராகுவது எதிர்க் கட்சிகளின் பொறுப்பு. ஆனால் பிரதான எதிர்க் கட்சிகளான யு. என். பி., ஜே. வி. பி. தங்களது மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கையில் - தேர்தல்களுக்கு முகங்கொடுக்க தாங்கள் தயாராக உள்ள போதிலும், அதற்குச் செல்வதற்குரிய சரியான காலமல்ல என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

பகுதி பகுதியாகவன்றியும், தேர்தல்களை நடத்துவதற்கு அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாமலும் உத்தேச தேர்தல்களை ஏககாலத்தில் நடத்துமாறு அரசுக்கு சவால்விடுவதாக ஐ. தே. க. பொதுச் செயலாளர் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

வடக்கில் மாகாண சபைத் தேர்தல் இதுவரையில் நடத்தப்படவில்லை. அரசாங்கம்விரைவில் நடத்தப்படும் எனக் கூறுகிறது. தனது வளங்கள் அனைத்தையும் ஒன்றுகூட்டி, சில மாகாண சபைகளை வென்றெடுப்பதற்காக முயற்சிப்பதாக அக்கட்சியின் செயலர் குறிப்பிட்டார். சகல மாகாண சபைகளதும் தேர்தல்களை ஏக காலத்தில் நடத்தினால் அதி கூடுதலான கவனத்தை அதன்பால் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் ஒரு சில மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடத்தினால் சிரமமிருக்காது என்றும் குற்றஞ்சாட்டினர்.

இதே வேளை மாகாண சபைகளுக்கான கால எல்லை இன்னும் முடிவுறாத நிலையில் பண வீண் விரயம் என்பதை சுட்டிக்காட்டுவோரும் உள்ளனர். உரிய காலத்துக்கு முன்பு தேர்தல்களை நடத்துவதும் ஒரு வகை ஜனநாயகமே. என்றாலும் பணத்தை விழுங்கிவிடுகின்ற விகிதாசார தேர்தல் முறைமையில் பொதுவாக அரசு - எதிர்க் கட்சி என்ற பாகுபாடின்றி சமகாலத்தில் இருக்கக் கூடிய உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தேர்தல்களை நடத்துவது விருப்பத்துக்குரியதல்ல என்பதை விட மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஒப்படைத்துள்ள மகஜர் வெளிப்படையாகவே உணர்த்துகிறது.

எவ்வாறாயினும் வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளை கலைக்கும் தீர்மானத்தை முன்னெடுத்து, செப்டம்பர் மாதத்தில் தேர்தல்களை நடத்துவது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக அறிய முடிகிறது. அதேவேளையில் தேர்தல் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்த அரசியல் கட்சிகளும் அடிமட்ட செயல்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது. திடீரென தேர்தல்கள் பிரகடனப்படுத்தப்பட்டால், அவற்றை சிறப்பாக எந்த அடிப்படையில் எதிர்கொள்வது என்பது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐ. தே. க. கலந்து பேசியுள்ளது. மூன்று சபைகளதும் ஐ. தே. க. மாகாண சபை அங்கத்தவர்கள் சமுகமளித்திருந்த கூட்டத்தில், தேர்தல்களை எதிர்பார்த்திருப்பதாக அவர்களே கூறியதாக ஐ. தே. க. வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டத்தரணி

இஸ்மாயில் பி. மஆரிப்

தலைவர்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com