Contact us at: sooddram@gmail.com

 

செந்தூரன்! சென்னை வருகிறோம். இதுவரை பார்க்காத மனதை அள்ளும் இடம் ஒன்றினைப் பார்க்க விரும்புகிறோம். ஏற்பாடு செய்ய முடியுமா? கேட்டோம், கனடாவின் ரொரன்ரோ மாநகரில் இருந்து. அந்தமானுக்குப் போகலாம் சம்மதமா? என்றார் செந்தூரன். ஆறு, ஏழு தடவைகள் அவர் அந்தமானின் அழகை அள்ளிப் பருகியவர் அவர். பிறர் சொல்லக் கேட்ட அந்தமானின் அழகை நேரில் பருகவிருக்கிறோம் கேட்டவுடன். அனந்தமாக ஓ.கே. சொன்னோம். உல்லாசப் பயணிகளுக்கு உற்சாகம் தரும் அந்தமான்.

சென்னையில் வாழும் செந்தூரன் ஒரு தொலைக்காட்சி நிறுவன அதிபர் அண்மையில் வெளியான சூழ்நிலை திரைப்படத் தயாரிப்பாளர். தமிழக திரைப்படத் துறையினரின் நல்ல கணிப்புக்கு ஆளான இலங்கையர் கூரான சமூகப் பார்வை கொண்ட இவரது குறும் படங்கள் சர்வதேச புகழ் பெற்றவை.

நானும் எனது மனைவியும் சென்னை சென்று இறங்கினோம். எதிர்கொண்டார் செந்தூரன் தமது அன்புத் தாயார் ஆனந்தலக்ஷ்மியுடன் அனைவருமாக புறப்பட்டோம். சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தலைநகரமான போட் பிளேயர் நகரம் நோக்கி விமானத்தில்

ஆயிரத்து 330 கிலோ மீற்றர் தூரப் பயணம். போட் பிளேயர் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நுழைவாசல்.

போட் பிளேயர் தென் அந்தமானின் கிழக்கு கரையோரமாக அமைந்துள்ளது. அந்தமானின் வரலாறு, கலாசாரம் என்பவற்றை தெரிந்து கொள்வதற்கு ஏற்ற வசதிகள் இங்கு நிறையவுள்ளன. செலூலர் சிறைச்சாலை, அரும்பொருட் காட்சியகம், மிருகக் காட்சிச்சாலை, கடற் பயணங்களுக்கான வசதிகள், உணவகங்கள், ஹோட்டல்கள், இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள், அரச, தனியார் அலுவலகங்கள், சந்தைகள், கடைவீதிகள் எல்லாம் இங்குண்டு. விமான நிலையம் நகருக்கு வடமேற்கே நான்கு கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. அந்தமானின் பிரதான நிலப்பரப்பு 467 கிலோ மீற்றர் நீளமானது. சராசரியாக 54 கிலோ மீற்றர் அகலமானது.

நிக்கோபார் தீவு 259 கிலோ மீற்றர் நீளமானது. சராசரியாக 58 கிலோ மீற்றர் அகலமானது. அந்தமான் மத்திய தீவிலும் நிக்கோபார் பெரும்பாகத் தீவிலும் மக்கள் அதிகம் செறிந்து வாழ்கிறார்கள்.

போட் பிளேயர் நகரில் மகாத்மா காந்தி மரீன் தேசிய பூங்கா, ராஜீவ் காந்தி நீர் விளையாட்டுக் கழகம் என்பவை பார்த்த மாத்திரத்தே நெஞ்சை நிறைக்கின்றன. போட் பிளேயர் நகரில் இருந்து குறுகிய தூரங்களில் உள்ள தீவுகளை மீன்பிடி படகுகள், படகுகள் மற்றும் அதிவேக படகுகள் மூலம் சுலபமாக சென்றடையலாம். அவற்றில் சித்தியா தாப்பா, ஹரியட், மெளவுன்ட் ஹரியட், மதுபான், சதம், ஹடோ, சாகரீக ஆகிய தீவுகள் என்பன கண்களுக்கு பெரும் விருந்தளிப்பவை.

புவியியல் அமைப்பில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்திய பிரதான நிலப்பரப்பில் இருந்து கிழக்கே வாங்காளவிரிகுடாவில் அமைந்துள்ளன. தாய்லாந்து, மியன்மார், இந்தோனேஷியா, ஆகிய நாடுகளை அந்தமான் நிக்கோபார் தீவுகள் அண்மித்து அமைந்துள்ளன.

இந்திய மார்க்கோஸ் விசேட படையணியின் உயர் பொறுப்பதிகாரியான லெப்ரினற் கொமாண்டர் அருள் ஜி.சபேஸ், அவரது துணைவியார் சுபா ஆகியோரின் அனுசரணையுடன் போட் பிளேயரில் வெகு சொகுசாக தங்கியிருந்து தீவுகளின் அழகினை பார்த்து பார்த்து மகிழ்ந்ததை தினகரன் வாரமஞ்சரி வாயிலாக பகிர்வது மகிழ்ச்சி தருகின்றது.

அந்தமான் கடலுக்கும், வங்காள விரிகுடாவுக்கும் இடையில் 800 கிலோ மீற்றர் தூரத்தில் பரவிக் கிடக்கும் அந்தமான் - நிக்கோபார் பவளத் தீவுகளில் தொகை சுமார் மூவாயிரத்து 500. அவற்றில் சுமார் 100 தீவுகள் மக்கள் வாழ்கின்றார்கள்.

அந்தமான் தீவில் மட்டும் அண்ணளவாக ஐந்து இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். ஹிந்தி, தமிழ், வங்காள மொழிகள் அவர்களால் பிரதானமாக பேசப்படுகின்றன. கொல்கத்தா சட்டமன்ற ஆளுநர் நாயகத்தின் நேரடி ஆட்சி அங்கு நடக்கிறது.

அந்தமானைத் தவிர ஏனைய தீவுகள் அடர்ந்த காடுகளாகவே காட்சியளிக்கின்றன. பல்வேறு விதமான மரங்கள், நீர்த்தவாரங்கள், சதுப்பு நிலத் தாவரங்கள் பார்க்கும் இடமெல்லாம் நிறைந்து காணப்படுகின்றன. ஓர்க்கிட் போன்ற அழகிய மலர்கள் எழிற்கோலம் காட்டுகின்றன. தென்பகுதி தீவுகள் பலவிதமான பறவைகளும், வண்ணத்துப்பூச்சிகளும், பாம்புகளும், பன்றிகளும், மான்களும் சரண் புகுந்திருக்கும் மனிதனின் கைபடாத கன்னித் தீவுகளாகவுள்ளன. அத்தகைய தீவுகள் 86 சதவீதமானவை என்பதை அறிந்து கொண்டோம். வெப்ப வலயத்திற்குரிய காலநிலை, அந்தமான் பிரதான நிலப்பரப்பின் பல்வேறு பிரதேசங்கள் எமது மத்திய மாகாணம், குறிப்பாக மாத்தளையை நிகர்த்துள்ளன. அந்தமானும் நிக்கோபாரும் 150 கிலோ மீற்றர் அகலமான கால்வாய் ஒன்றினால் பிரிக்கப்பட்டிருகின்றன. நிக்கோபாரில் 22 பிரதான தீவுகள் உள்ளன.

அவற்றில் 10 தீவுகளில் மட்டும் மக்கள் வாழுகிறார்கள். அந்தமானையும், நிக்கோபாரையும் பார்த்து ரசிக்க ஹெலிகொப்டர் மற்றும் ஆடம்பர பயணிகள் கப்பல் வசதிகளும் உண்டு. ஆனால் நாம் அவற்றை பயன்படுத்தவில்லை. கப்பல், படகுச் சேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொண்டோம்.

நீல்ஸ் தீவு, ஹவலொக் தீவு, நோர்த் பசேச் தீவு, லோங் தீவு, பாரதன் தீவு, ரங்கா தீவு, டிஜிலிபூர் தீவு, மாயாபந்தர் தீவு, பரேன்தீவு மற்றும் சின்சியூ தீவு, லிற்ரில் அந்தமான் தீவு ராதா நகர் கடற்கரை, விஜயநகர் கடற்கரை, எலிஃபன்ற் கடற்கரை என்பன உல்லாசப் பயணிகளுக்கு மிகுந்த பிரமிப்பை ஊட்டுகின்றன.

அந்தமான் நிக்கோபா தீவுகள் பலவற்றை நாம் நேரில் பார்த்தோம். ஓய்வின்றி, உறக்கமின்றி, கடல் மார்க்கமாக சென்று வந்த இடங்கள் பற்றி எழுதுவதனால் அது ஒரு தொடர் பயணக்கட்டுரையாகவே அமைந்துவிடும். எனவே, ஒரு சில இடங்கள் பற்றி மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

றோஸ் ஐலன்ட்

போட்பிளேயரை அண்மித்த ஒரு தீவு. ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பளவு மட்டுமே. ஒரு காலத்தில் இந்த தீவு மூத்த குடி மக்களுக்கு மட்டும் சொந்தமாக விளங்கியது. பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பால் அங்கிருந்த ஐயாயிரம் மக்களின் தொகை 20 வருடகால இடைவெளியில் சுமார் 28 ஆக குறைந்ததாம். 1858 ஆம் ஆண்டு தொடக்கம் 1941 ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் றோஸ் ஐலன்டை தலை நகரமாக கொண்டு செயற்பட்டனர். பிரிட்டிஷ் பிரதம ஆணையாளரின் சிதைந்த இல்லம், தேவாலயம், கிளப், வெதுப்பகம், காவல் அரண்கள், நிர்வாக அலுவல் கட்டடங்கள், பங்கர்கள் மற்றும் மயானம் என்பன இன்றும் பழைய வரலாற்றை அப்படியே தத்ரூபமாக எடுத்துக் காட்டுகின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானியர்கள், றோஸ் ஐலன்டை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அந்த வேளையில் அவர்களுடன் சேர்ந்த செயற்பட்டவர் இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோஸ் என்பது வரலாறு. இங்குள்ள மான்கள் புல்லை மட்டுமல்ல புலாலும் உண்ணப் பழகியுள்ளன.

செலூலர் சிறைச்சாலை

சரித்திரபூர்வமான நினைவுச் சின்னங்களில் மிக முக்கியமானது, போட்பிளேயரில் மிக நுட்பமாக அமைக்கப்பட்ட கட்டடங்களில் உள்ள சிறைக்கூடங்கள். சுதந்திர போராட்ட வீரர்கள் கடும் சித்திரவதைக்குள்ளாகி வந்ததை ஒளி, உரை, ஓசை, பாடல்கள் உள்ளிட்ட விவரணச் சித்திரம் மூலம் உல்லாசப் பயணிகள் சூரிய அஸ்தமனத்தின் பின்னர் அவதானித்து உணர்ச்சிவசப்படுகிறார்கள். நட்சத்திர மீனைப் போல் அமைந்த ஏழு கட்டடங்கள். அவற்றில் மூன்று மட்டுமே இன்று எஞ்சியிருப்பதைப் பார்த்தோம். மத்திய கோபுரம் ஒன்றில் இருந்து தனித்தனியாக சுமார் 700 சிறைக்கூடங்களை ஒரேயொரு இராணுவ வீரர் மட்டும் அவதானிக்கக் கூடிய வகையிலான கட்டட வடிவம். சிறைச்சாலை நுழைவாசலை அண்மித்து தூக்கு மேடை அறை தனியாகவுள்ளது. அங்கு ஒரு நாளில் எத்தனை பேர் தூக்கிலிடப்பட்டார்கள் என்பதை தேவாலய மணி ஒலிக்கும் முறையில் எட்டு கிலோ மீற்றர் சுற்றளவான பிரதேசத்தில் வசிப்பவர்கள் சோகத்துடன் அவதானித்துக் கொள்வார்களாம். இன்று கைதிகள் எவரும் அங்கில்லை. தேசிய நினைவிடமாக மட்டும் சிறைக்கூடங்கள் பேணப்பட்டு வருகின்றன. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வட இந்திய வீரர்களுக்கு சிறைச்சாலைகளுக்கு வெளியே சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர் வீரேந்திர சர்க்காருக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. சிறைச்சாலை விவரண சித்திரத்திற்கு சிறந்த ஆங்கில ஒலிபரப்பாளர்கள் கணீரென குரல் கொடுத்திருக்கிறார்கள். புகழ்பெற்ற முன்னணி ஹிந்தி நடிகர்கள் சிறைச்சாலை ஆணையாளராக, கைதிகளாக, காவலர்களாக நடித்திருக்கிறார்கள்.

சின் - கீயூதீவு

தெற்கு அந்தமானில் சுழி ஓடுவதற்கென்றே பல தீவு கடற் பிரதேசங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சின்-கியூ தீவு. பறவையின் மூக்கு என்று அர்த்தம். போட்பிளேயரில் இருந்து மீன்பிடி படகு மூலம் 26 கிலோ மீற்றர் தூரத்தை தாண்டி சின்-கியூ தீவை அடைந்தோம். சின்தீவு என்று அழைக்கப்படும் இந்த தீவை, மற்றுமொரு அழகிய தீவுடன் மணற் பாங்கான பாதையொன்று இணைக்கிறது. நண்பன் திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சி இங்குதான் படமாக்கப்பட்டது. அந்த இடத்தில் நாமும் கூத்தாடி குதூகலித்தோம்.

பாரதன் தீவு

போட்பிளேயர் நகரில் இருந்து இரண்டு மணி நேர ஜீப் பயணமாக தென் அந்தமான் பிரதேசம் சென்று அங்கிருந்து கப்பல் பின்னர் படகு பயண மூலம் பாரதன் தீவு சென்றோம். அங்கிருந்த சுண்ணாம்பு கற்குகை எமக்கு பெரிதும் ஆச்சரியம் தந்தது. கடல் நடுவில் இருந்த குகை, ஒரு காலத்தில் தரைப்பகுதியாக மாறிய பகுதியில் உல்லாசப் பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. பாரதன் தீவில் இருந்து வடமத்திய அந்தமான் மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய பகுதியொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நாம் சென்ற பாதையின் ஓர் இடத்தில் இறக்கப்பட்டு எலிமலைப் பிரதேசம் ஒன்றுக்கு இட்டுச் செல்லப்பட்டோம். பார்க்க மலைப்பாக இருந்தது. எரிமலைக் குழம்பு ஓர் இடத்தில் சற்று அதிகமாகவும் அதைச் சுற்றிய சில இடங்களில் குறைவாகவும், குபுக் குபுக் என வெளியேறிக் கொண்டிருந்ததை பார்த்தோம். என்றோ ஒரு நாள் இந்த எரிமலை குமுறத்தான் போகின்றது. ஆனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. அங்குதான் மக்கள் இல்லையே.

ஆதிவாசிகள்

அடர்ந்த காட்டுப்பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஆதிவாசிகளையும், பார்க்கக் கிடைத்தால் அது ஒரு கொடுப்பனவே. அந்த கொடுப்பனவு எமக்கும் கிடைத்தது. ஆதிவாசிகள் உறையும் காடுகள் ஊடாக அமைந்த வீதியால் சென்றோம். நிர்வாணமாக வீதியோரங்களில் சென்ற ஆண், பெண் ஆதிவாசிகளை பார்த்தோம். முழு உடலும் தெரியும் வகையில் மரவுரி மட்டும் அவர்கள் தரித்திருந்தார்கள். வெளிப்பார்வைக்கு ஆபிரிக்க வாசிகள் போல் தென்பட்டார்கள். இந்திய அரசாங்கம் இவர்களை வெகு கவனமாக பாதுகாக்கிறது. 100 வாகனங்கள் சேர்ந்த தொடரணி பொலிஸ் பாதுகாப்புடன் காட்டுப் பகுதி ஊடாக செல்ல வேண்டுமென்பது சட்டம். ஆதிவாசிகளை பாதுகாப்பதற்கு அதுவும் கைகொடுக்கிறது. அவர்களை படம் எடுக்க முடியாது. இறங்கிப் பழகவும் முடியாது.

ஆதிவாசிகளை வீதியோரத்தில் பார்த்த போது எமக்கு வியப்பை ஏற்படுத்தியது அவர்களின் கட்டுக்கோப்பான உடல்தான். ஆதி சிவனின் தலையில் உள்ள சந்திரனில் நவீன மனிதன் காலடி எடுத்து வைத்த விஞ்ஞான உலகிலும் அணுவளவேனும் மாறாத ஆதி மனிதனின் வாழ்க்கைப் போக்கு மிக மிக அதிசயமே. நாட்டு மனிதர்கள் அனுபவிக்கும் வசதிகள் என்ன என்பது அவர்களுக்கு எள்ளளவேனும் தெரியாது புரியாது. எமகு மஹியங்கன காட்டில் உள்ள வேடர்களுடன் சிங்கள மொழி பெயர்ப்பாளரின் உதவியோடு நாம் பேசிக் கொள்ளலாம். அவர்களில் பலருக்கு தற்போது சிங்கள மொழி தெரியும். பிள்ளைகள் பாடசாலைக்கும் செல்கிறார்கள். நோய்க்கு சிகிச்சை பெற வைத்தியசாலைக்கும் போகிறார்கள். புகைப்படத்துக்கு முகம் கொடுக்கிறார்கள். அவர்கள் சேர்க்கும் தூய்மையான தேனைக்கூட நாம் பேரம் பேசி வாங்கிப் பருகலாம். அந்தமான் காட்டில் தெருவோரம் சென்று கொண்டிருந்த நங்கை எமது வானத்தைப் பார்த்து நிற்காமல் போ என கையால் அபிநயம் காட்டியது மனதில் நிழலாடுகிறது.

ஆதிவாசிகளை பார்த்து அதிசயிப்பது மட்டுமல்ல அந்தமான் தீவுகளில் வேறும் பல அற்புதங்களைப் பார்க்கலாம். நீர் விளையாட்டு, மீன்பிடித்தல் போட்டி, காடு மற்றும் கடற்கரை முகாம்கள், நீரில் ஸ்னோக்கிளிங், அடர்ந்த மூங்கில் காடுகள் ஊடாக நடந்து செல்லுதல், பறவைகளை அவதானித்தல், அடர்ந்த கடற்கரை தாவரங்கள் ஊடான குறுகிய நீர்ப்பரப்பில் படகுப் பயணம், மலர் வனங்களை பார்வையிடுதல், வண்ணத்துப்பூச்சிகளை காணல் என்பவை அவற்றில் சிலவாகும்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நாம் நூற்றுக்கணக்கான படங்களை எடுத்தோம். ஆயிரம் வார்த்தைகளுக்கு ஒரு படம் சமம் என்ற சீனப் பழமொழிக்கு அமைய சில படங்களை சேர்த்துள்ளோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com