Contact us at: sooddram@gmail.com

 

ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் இந்நாட்டு மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியலில் பிரவேசித்து 42 ஆண்டுகள் கடந்த ஞாயிறன்று நிறைவு பெற்றது. 1970ஆம் ஆண்டில் 24 வயது வாலிபனாக பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை இங்கு தருகின்றோம்.

(நேற்றைய தொடர்)

அவர்களின் வாழ்க்கையில் மறுமலச்சியை ஏற்படுத்த வேண்டுமாயின், இந்த கடற்தொழிலை அபிவிருத்தி செய்வதுடன், கடற்தொழிலாளர்களுக்கு காப்புறுதி செய்வதுடன், கடலில் செல்வதற்கான படகுகள் உட்பட வலைகள், மீன்பிடி உபகரணங்களின் விலைகளை குறைப்பதற்கு உதவி செய்தால் எனது பிரதேசத்து மீனவ மக்கள் என்றும் நன்றியுடன் இருப்பார்கள்.

தங்காலை வாடி வீட்டிலிருந்து கிழக்கு திசையில் பார்த்தால் தூரத்தில் தென்படும் ரக்கவதுடுவ வரையில் வட்டமாக தென்படும் தங்காலையில் உள்ள அழகிய இயற்கை துறைமுகம் இன்று சோபை இழந்து காட்சியளிக்கிறது.

இது குறித்து, தங்காலை பிரதேசத்து கடற்தொழிலாளர்கள் கண்ணீர் மல்க பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள். அன்று அங்கிருந்த துறைமுகமும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் பணம் ஒதுக்கி ஏற்படுத்தியிருந்த கடற்தொழில் நிலையமும் இன்று அங்கு இல்லை.

இன்று அங்கு தென்னை மரங்களை வளர்க்கக் கூடிய மண்மேடுகள் இருக்கின்றது. இப்போது இது ஒரு துறைமுகம் அல்ல. கடலை தரையாக மாற்றும் ஒரு முயற்சியாகவே காட்சியளிக்கிறதுஎன்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

தங்காலைக்கு சகல வசதிகளையும் கொண்ட ஒரு கடற்தொழில் மீன்பிடித் துறைமுகத்தையும், மீன்பிடி நிலையம் ஒன்றையும் அமைத்துக் கொடுக்குமாறு வேண்டுகிறேன்.

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியில் பெருமளவு மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளார்கள். பல்லாண்டு காலம் நிலைத்திருக்கும் சிறிய கிராமத்து குளங்களிலிருந்து நெற் செய்கைக்கான நீரைப் பெற்று இந்த விவசாயிகள் விவசாயம் செய்கிறார்கள்.

இந்த நீர்ப்பாசன குளங்களை நவீன முறையில் திருத்தியமைத்து நவீன விஞ்ஞான யுக்திகளின் மூலம் விவசாயத்தை செய்வதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அவ்விதம் செய்தால் அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வருவதற்கு உதவி செய்த இந்த விவசாய பெருமக்களுக்கு நாம் நன்றி தெரிவிப்பதாக அமையும்.

மகாதேசாதிபதி, தனது சிம்மாசன உரையில், சிறிய நீர்ப்பாசன திட்டங்களை புனரமைப்பு செய்யும் பணியை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இந்த உறுதிமொழி சிறிய குளங்களை நம்பி விவசாயம் செய்யும் பெலியத்த பிரதேசத்து விவசாய பெருமக்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

ஆகவே, தங்காலையில் உள்ள விளைச்சல் நிலத்தில் கடலின் உவர் நீர் சங்கமிப்பதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்தால், 2400 ஏக்கரைக் கொண்ட இந்த நெற் காணியில் பெரும் போகம் மற்றும் சிறுபோகத்தில் நல்ல விளைச்சலை ஏற்படுத்த முடியும் என்பதை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

பெலியத்த தொகுதியில் பெருமளவு விவசாயப் பெருமக்கள் சேனைப் பயிர்ச் செய்கையை நம்பியே வாழ்கிறார்கள். அவர்கள் உப உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து மிகவும் கஷ்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

றுகுணு பிரதேசம் குரக்கன் உற்பத்திக்கு பிரபல்யம் பெற்று விளங்குகிறது. றுகுணு பிரதேசத்தின் சிங்கம் என்று புகழ்பெற்று விளங்கிய காலம் சென்ற டி.எம். ராஜபக்ஷ அன்று அம்பாந்தோட்டை தொகுதியின் சட்ட சபை அங்கத்தவராக இருந்தார். இவர் தனது குரக்கன் நிற சால்வையை தெரிவு செய்தார்.

ஆகவே, குரக்கன் போன்ற உப உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் கிராமிய விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தால் இந்த அரசாங்கத்திற்கு மக்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.

சிம்மாசன பிரசங்கத்தில் காணியற்ற விவசாயிகளுக்கு காணிகளை பெற்றுக் கொடுப்போம் என்ற மகாதேசாதிபதி கருத்தை மகிழ்ச்சியுடன் பாராட்ட விரும்புகிறேன். சிறு கைத்தொழில் வீட்டுக் கைத்தொழில் அல்லது குடிசைக் கைத்தொழில் அல்லது சிறிய கைத்தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதையும், அவற்றை அபிவிருத்தி செய்வது குறித்தும் இந்த சிம்மாசன பிரசங்கத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியிலுள்ள அங்குலுமடுவ என்ற தொகுதியில் வரலாற்று முக்கியவத்துவம் வாய்ந்த பாரம்பரிய கைப்பணி பொருட்கள், உலோகத்திலான கைப்பணி பொருட்கள், மற்றும் களிமண், சட்டி, முட்டிகள், பித்தளை பொருட்களை தயாரிக்கும் பணி ஆகியனவற்றில் ஈடுபடும் மக்களுக்கு மகிழ்ச்சியூட்டக் கூடிய கருத்துக்களும் இந்த சிம்மாசன பிரசங்கத்தில் தெரிவிக்கப்பட்டன.

பெலியத்த தொகுதியில் வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் தாய்மொழியில் பல்கலைக்கழக கல்வியை பெற விரும்பும் இளைஞர்களும், யுவதிகளும் பெருமளவில் இருக்கிறார்கள். அரசாங்க சேவையிலுள்ள வெற்றிடங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கும், தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கக் கூடிய புதிய திணைக்களங்களை அமைப்பது போன்ற கருத்துக்கள் சிம்மாசன பிரசங்கத்தில் தெரிவிக்கப்பட்டமை குறித்து எமது மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

தென்னிலங்கையில் இன்னுமொரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவோம் என்ற கருத்து மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்காக நான் அவர்களின் சார்பில் அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

இந்நாட்டின் வருங்கால சந்ததியினர் வேலையின்மை, எதிர்பார்க்க முடியாத எதிர்காலம், நிலையற்ற கலாசார நிலவரம் ஆகிய காரணங்களினால் அவர்களின் எதிர்பார்ப்புக்களும், அபிலாஷைகளும் தவிடுபொடியாகி பெரும் விரக்தி மனநிலையில் இன்று இருக்கிறார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதனால் தான் இந்த விரக்தி நிலை அடைந்திருந்த தென்னிலங்கை மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இந்தளவு மகத்தான வெற்றியை அரசாங்கக் கட்சிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்கள். இதற்காக அவர்கள் பகல், இரவு பார்க்காமல் கடுமையாக உழைத்தும் இருக்கிறார்கள்.

இளைஞர்களின் பிரச்சினைகள் குறித்து அவதானத்தை செலுத்தப் போவதாகவும், இளைஞர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவர்களின் நல்வாழ்வு குறித்தும் புதிய திணைக்களம் ஒன்றை அமைப்போம் என்று தெரிவித்துள்ள கருத்து இலங்கை சனத்தொகையில் 50 சதவீதமாக அமைந்திருக்கும் இளைஞர், யுவதிகளும் பெருமகிழ்ச்சியடைகிறார்கள். எனது தொகுதியை சேர்ந்த இளைஞர், யுவதிகள் சார்பாக இதனை நான் இங்கு எடுத்துரைத்து எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.

ஜனநாயக ஜேர்மன் குடியரசு, வியட்நாம், கொரியா மற்றும் வியட்நாம் புரட்சிவாத தற்காலிக அரசாங்கங்களுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கும், தற்போது இஸ்ரேலுடன் இருந்து வரும் ராஜதந்திர உறவுகளை முறித்து கொள்வது என்ற கருத்தும், அணிசார நடுநிலை கொள்கை ஒன்றை கடைப்பிடிப்போம் என்ற கருத்தும், ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான தூரதரிசன கொள்கையுடன் நடுநிலை வெளிநாட்டு கொள்கையை கடைப்பிடிப்போம் என்று தெரிவித்து இருக்கும் கருத்து குறித்தும் இந்நாட்டு மக்கள் அதிக விசுவாசத்தை கொண்டுள்ளார்கள்.

இந்நாட்டின் பொதுமக்கள் ஏகாதிபத்தியவாதத்தை அங்கீகரிக்கமாட்டார்கள். அதுபோன்று முதலாளித்துவவாதத்தையும் அங்கீகரிக்கமாட்டார்கள். அதுபோன்று சகல விதமான சூறையாடல்களையும் அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் 1970 ஆம் ஆண்டு தேர்தலில் மூன்றில் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களை இந்த அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுத்தும் இந்த இலட்சியக் கனவை நிறைவேற்றுவதற்காகவே என்பதை ஞாகப்படுத்த விரும்புகிறேன்.

மக்கள் இந்த கூட்டரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சிறிதளவேனும் சிதைத்து விடாமல், இந்த மக்களின் அபிலாஷைகளை இந்த அரசாங்கம் சரியான முறையில் நிறைவேற்றும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த அரசாங்கத்தை தீங்கிழைக்கக் கூடிய பின்னணியில் மறைந்திருக்கும் சதிகார ஏகாதிபத்தியவாத, முதலாளித்துவவாத சக்திகள் குறித்து நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஆகவே, இத்தகைய தடைகளை முறியடித்து எமது முற்போக்கு செயற்பாடுகளுக்கு இந்நாட்டின் இளைஞர் வர்க்கம் உயிர்த்தியாகம் செய்தும், உறுதுணை புரியத் தயாராக இருக்கிறது என்பதை நான் இளைஞர் என்ற முறையில் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

இந்த பாராளுமன்றத்தின் புதிய அங்கத்தவர் என்ற முறையில், இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிவதற்கு வாய்ப்பளித்த சபாநாயகருக்கும், பிரதம மந்திரிக்கும், அரசாங்க கட்சியினருக்கும் நான் நன்றியை தெரிவித்து, மகாதேசாதிபதி நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையை முன்மொழிகிறேன்.

மகாதேசாதிபதி பாராளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து நீங்கள் நிகழ்த்திய உரை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் உங்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். நீங்கள் தெரிவித்த இந்த கருத்துக்கள் குறித்து நாம் எமது அவதானத்தை காண்பிப்போம் என்பதையும் நாம் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com