Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை தமிழர்களின் இன்றைய தேவை தமிழ் ஈழம் அல்ல

தமிழகம் முழவதும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் உணர்ச்சிபூர்வமாக அனுசரிக்கப்படுகிறது. அது வெறும் நினைவேந்தலாக நின்றுவிடாமல், தமிழ் ஈழத்திற்கான உறுதி ஏற்பாகவும் முன் வைக்கப்படுகிறது. 'ஐக்கிய நாடுகள் சபை ஒரு கருத்தக்கணிப்பை நடத்தி தமிழ் ஈழத்தை பெற்றுத்தரவேண்டும்' கருணாநிதி பேசத் தொடங்கியிருக்கிறார். அவர் தனது அரசியல் மறு உயிர்ப்புக்கு அதையே கடைசி துரும்பாக நம்பி களமிறங்கியிருக்கிறார்.

இந்த தருணத்தில் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை சென்று தமிழர்களின் நிலையைப் பார்வையிட்டுத் திரும்பிய குழவில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் கூறிய கருத்தொன்று என் நினைவில் ஆடுகிறது. 'ஈழத் தமிழர்களின் இன்றைய கோரிக்கை தமிழ் ஈழம் அல்ல' என்பதுதான் அவர் சொன்னது. தீவிர விடுதலைப்புலி ஆதரவாளர்கள் இதைக் கண்டு ஆத்திரமுற்றனர். முக நூல் பக்கங்களில் அவர் திட்டி தீர்க்கப்பட்டார். ஆனால் இரண்டாண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வரை சென்று வந்திருந்த இன்னொரு விடுதலைப்புலி ஆதரவாளரான ஒரு பெண் தோழர் கிட்டத்தட்ட இதே மாதிரியான கருத்தைக் கூறியிருந்ததும், அப்போது இங்கே ஒரு இறுக்கமாக மௌனம் நிலவியதும் என் நினைவுக்கு வந்தது.

போர் முடிந்த ஓராண்டுக்கு பின் நானும் அங்கு தடைசெய்யப்பட்ட முள்ளிவாய்க்கால், திருகோணமலை தவிர, கிட்டத்தட்ட எல்லா பகுதிகளுகும் சென்று வந்தேன். பல தரப்பினரையும் சந்தித்து பேசினேன். மேலோட்டமாக எல்லாவற்றையும் பார்க்கும்போது ரெங்கராஜனும், அந்த பெண் தோழரும் சொன்னது உண்மை என்றே தோன்றும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்கள் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அதுவே முழு உண்மையல்ல! முழு உண்மையையும், உய்த்தறிய கொஞ்சம் கற்பனைத் திறன், இலக்கிய மனம் வேண்டும்.

ஈழத் தமிழர்கள் இன்று ஒரு தோற்கடிக்கப்பட்ட மனநிலையில், கையறுநிலையில் உள்ளனர். இன்னொரு பக்கம் பெரும்பான்மையினரான சிங்கள இனம் வெற்றி மமதையில் திளைக்கிறது. இன்றைய சூழலில், சிங்களர்களுக்கு தமிழர்களை எழும்பவிடாமல் தடுப்பதற்கு இந்த வெற்றிப் பெருமிதத்தை மிகவும் தந்திரமாக பயன்படுத்தகிறது சிங்கள பேரினவாத அரசு. நான் இலங்கை சென்றிருந்தபோது ஒரு தமிழ் நாளிதழ் ஆசிரியர் இப்படிசொன்னார், 'போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் தமிழகத்திலிருந்து குரலெழும்பும் ஒவ்வொரு முறையும் அது சாத்தியமாகிறதோ இல்லையோ, ராஜபக்ஷே அரசுக்கு இன்னொரு 5 சத சிங்கள ஆதரவு அதிகமாகிறது. தமிழர்களிடம் இருந்து தாம் விலகிப் போவது குறித்து அவர்கள் கவலைப்படுவது இல்லை, ஏனெனில் அவர்கள் எந்நாளும் தமிழர்களின் ஆதரவை நம்பியிருந்ததில்லை.

ஒரு நாற்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்திற்குப் பின் ஒரு சமூகம், அதுவும் தோற்கடிக்கப்பட்ட சமூகம் என்னென்ன துயங்களையும் என்னென்ன பிரச்சினைகளையும் சந்திக்க நேருமோ, அத்தனையையும் இன்று ஈழத் தமிழர்கள் சந்தித்து கொண்டுளள்னர். தொண்ணூறு ஆயிரம் விதவைகள், ஏராளமான ஆண் துணையற்ற குடும்பங்கள், குடியேற்றங்களாலும் ராணுவ ஆக்கிரமிப்புகளாலும் பறிபோன நிலங்கள், பாழடிக்கப்பட்ட விவசாயம், பாதிக்கப்பட்ட மீன் பிடித் தொழில், அதிகரித்துள்ள குற்றச் செயல்கள், எல்லாவற்றிக்கும் மேலாக தம் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கும் போராடுவதற்கும் இல்லா விட்டாலும் கூட மேலெழுந்து கேட்பதற்கான அரசியல் வெளி(Political Base) இல்லாமை ஆகியவற்றின் ஊடாக இன்று நொய்ந்து கிடக்கிறது ஈழத் தமிழ் சமூகம்.

இந்நிலையில் மீண்டும் ஒரு போரைச் சந்திக்க அச்சமூகம் தயாராக இல்லை. உச்சபட்ச கோரிக்கையை எழுப்புவது போர்ச் சூழலுக்கே இட்டுச் செல்லும் என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். அவர்களுக்கு இன்று தேவைப்படுவது ஒரு குறைந்தபட்ச கௌரவமான வாழ்வுரிமை. இந்த நிலை அவர்களது ஒவ்வொரு பேச்சிலும், அசைவிலும், கண்களின் தெறிப்பிலும் வெளிப்படுகிறது. வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு அவர்களின் இன்றைய தேவை தமிழ் ஈழமல்ல என்றே தோன்றும்.

தமிழர்களின் அரசியல் குரலாக இன்று பரிணமித்து வரும் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களும் கூடத் தமிழகம் வந்து மேடைகளில் பேசும் போது இதைத்தானே சொல்கின்றனர்?  ஆக, நான் தொடக்கத்தில் சொன்னதுதான். இதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் இதுவே முழ உண்மையல்ல. அடக்குமுறைக்கு ஆளாகியுள்ள ஒரு மக்கள் திரளிடம் தனிநாடு குறித்து கேள்வி எழுப்பும்போது அவர்கள் அளிக்கும் பதிலை தீர்மானிக்கிற மிக முக்கியமான கூறு, அது இப்போது சாத்தியமா, இல்லாயை? என்பதுதான். பிரான்சிலிருந்து அல்ஜீரியா பிரிந்து செல்வது குறித்து ஒரு முறை வாக்கெடுப்பு நடத்தியபோது 97 சத மக்கள் 'பிரிவினை வேண்டாம்' என வாக்களித்தனர். ஆனால் அடுத்த சில மாதங்களில் அரசியல் சூழலும் மாறியபோது, 97 சதம் பேர் பிரிவினைக்கு ஆதராக வாக்களித்தனர்.

தனி ஈழம் குறித்த கோரிக்கை அம்மண்ணில் இன்று பேரினவாதத்திற்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடம் மங்கிபோயிருப்பதன் பின்னணி இதுவே. இந்த எதார்த்தத்தை மனதில் கொண்டே, 'தனி ஈழம் ஒன்றே தீர்வு' என சொல்பவர்களும் சரி, 'சேர்ந்து வாழ்தல் ஒன்றே சாத்தியம்' எனச் சொல்பவர்களும் சரி, இயங்க வேண்டும். மாறாக நம்முடைய தேர்வுகளையும், தேவைகளையும் இவற்றால் ஏற்படும் அத்தனை பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வாழ நேர்ந்துள்ள ஈழ மக்களிடம் திணிப்பது அவர்களுக்கு நாம் செய்கிற துரோகமாகவே அமையும். தனி ஈழத்திற்குக் குறைவாகப் பேசுவதே சிங்கள பேரினவாதத்திற்கு துணைபோவதாக கருதும் நிலை இங்கு தீவிர புலி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்படுவது பிரச்சினையின் இம்முழு பரிமாணங்களையும் உணர்ந்து கொள்ளாததன் விளைவே! இரண்டாவதாக அவர்கள் செய்யும் தவறு, தாங்கள் கொடுக்கும் வெளி அழுத்தங்களின் ஊடாகக் கொசோவாவையும், தெற்கு சூடானையும் போல இன்று இங்கும் உடனடியாக தமிழ் ஈழத்ததை கொண்டு வர முடியும் என நம்பவது! கோசோவா, தெற்குசூடான் ஆகியவற்றின் வரலாறும் அவை பிரிந்த சூழலும் அதற்கு பின்னுள்ள மேற்கத்திய அரசியல் நலன்களும் ஈழச் சூழலில் இருந்து முற்றிலும் வேறானது. தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்துவதற்கு சர்வதேச அழுத்தம் அளிப்பதற்கான சூழலும் இன்றில்லை.

இந்து மாகடலில் போர் முக்கியத்துவம் கருதி முற்றிலும் சீனாவின் பக்கம் இலங்கை சாயந்துவிடாமல் இருக்க மேற்கொள்ளும் அரசியல் தந்திரமே இன்று ஐ.நா தீர்மாக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இப்படியான ஒரு தீர்மானம் இயற்றக்கூடிய நிலை ஏற்பட்டதற்கு ராஜபக்ஷே அரசின் ராஜதந்திரத் தோல்வியே காரணம் எனவும் தேவையில்லாமல் ஐ.நா வையும், அமெரிக்காவையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் இன்று சிங்கள அறிவுஜீவிகளிடமிருந்து அழுத்தம் வருகிறது. ராஜபக்ஷே அரசு கண்துடைப்பு விசாரனை ஒன்றை நடத்தி பிரச்சினையை முடித்துக் கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படகிறது. எக்காரணம் கொண்டும் மீண்டும் தாயகம் திரும்பி வாழத் தயாராக இல்லாத புலம்பெயர் தமிழர்களின் விருப்புகளுக்கும் ஈழத்தில் வசிக்க நேர்ந்துள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புகளுக்குமான வேறுபாட்டை நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. ஆனால் வேறுபாடுகள் உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவ  'தனி ஈழம்' என்பதை ஏதோ தாரக மந்திரம் போல உச்சரித்துக் கொண்டிராமல், ஈழத் தமிழர்கள் இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினையை நாம் இன்று பேசியாக வேண்டும்.

நான் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் தவிர சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்தல், அவர்களது மறுவாழ்வு முதலியவற்றையும் எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு கண்ணியம் மிக்க அரசியல் தீர்வையும் நாம் வலியுறுத்தியாக வேண்டும். யாழ்ப்பாணத்தில் ஊற்றுப்பாசனம், வன்னியில் ஏரிப்பாசனம் என்பன சீரழிந்துள்ளன. போர் மற்றும் சுனாமியை ஒட்டி வடக்கின் இரண்டாவது முக்கிய தொழிலான மீன் பிடிப்பும் சீரழிந்துள்ளது. இவற்றையெல்லாம் சரிசெய்தல் வேண்டும்.

நிலம் அங்கு ஒரு மிக பெரிய பிரச்சினையாக உள்ளது. மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்கள், பலாலி முதலான இடங்களில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்கள், புலம் பெயர்ந்து சென்றவர்கள் விட்டுச் சென்ற விவசாய நிலங்கள் எல்லாம் முறையாக நிலமற்றவர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். கருத்துக் கணிப்பு தொடர்பாக வெளி அழுத்தங்களுக்கு முயற்சிக்கும் அதே நேரத்தில், இதனிலும் முக்கியமாக ஈழ மக்கள் இன்று எதிர்கொண்டுள்ள இப்பிர்சினைகளுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். அதற்கு முதல்படியாக இந்தப் பிரச்சினையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

என் பார்வை என் கோணம் (27.5.12 திகிதியிட்ட ரிப்போட்டர் வார இதழில் அ.மார்க்ஸ் எழுதியது)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com