Contact us at: sooddram@gmail.com

 

ஆமினா அஸாத் சாலிக்கு ஒரு பகிரங்க மடல்


கைது செய்யப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் அஸாத் சாலியின் புத்திரி ஆமினா சாலி அவர்களின் கவனத்திற்கு,


முஸ்லிம்களினதும், சிறு பான்மையினரதும் உரிமைகளுக்காக குரல் கொடுத்த உங்களது தந்தை அஸாத் சாலி அவர்கள் 02.05.2013 அன்று கைது செய்யபப்ட்டுள்ளமைமை குறித்து எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அவரது கைதைத் தொடர்ந்து இடம்பெற்ற சில நிகழ்வுகள் முஸ்லிம் மக்கள் மனங்களில் உங்கள் தந்தை குறித்து இருந்த நல்லபிப்பிராயத்தை இல்லாமல் செய்துள்ளதுடன், பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியுள்ளன. உங்கள் தந்தையை தீவிரமாக ஆதரித்தவர்களில் ஒருவன் என்ற வகையில் இந்த மடலை வரைகின்றேன்.


உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எதிராக, முக்கியமாக Facebook மூலம் பரவலாக முன்வைக்கப் பட்டிருந்த ஒரு குற்றச் சாட்டுக் குறித்து நீங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் மூலம் பகிரங்கமாக உங்கள் தரப்பு விளக்கமொன்றை வழங்க முயற்சி செய்துள்ளமை குறித்து மகிழ்ச்சி. எனினும் குறித்த விளக்கம் போதுமானதாக இல்லாததாலும் மேலும், முக்கியமான சில விமர்சனங்களுக்கு நீங்கள் பதிலளிப்பதை தவிர்த்திருப்பதாலும், சில விடயங்களை உங்கள் விளக்கத்தினை நாடி முன்வைக்க விரும்புகின்றேன்.


கங்காராம பூஜை வழிபாடு தொடர்பான விடியோக்கள் வெளியிடப்பட்டு 5 நாட்களின் பின்னரே உங்கள் விளக்கம் வெளிவந்துள்ளது. எப்படியான விளக்கத்தை அளித்தால் நன்றாக இருக்கும் என்று சிந்தித்து விடயங்களை தயார் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதா என்பதை நீங்களும், உங்களை சார்ந்த்தவர்களும், அல்லாஹ்வுமே அறிவார்கள். எனினும் உங்கள் விளக்கம் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டதாக் காணப் படுகின்றது. ஊடகங்களில் உங்களின் தமிழ் மொழிக் கருத்துக்களை செவி மடுத்த வகையில்குறித்த விளக்கம் உங்களால் சுயமாக எழுதப்பட்டதா என்ற கேள்வி, அதன் தமிழ் மொழி நடையை நோக்குமிடத்து எழுகின்றது


குறித்த விளக்கத்தில், "எமது சமூகத்தில் எனது தந்தையையும் எமது குடும்பத்தையும் வெளுத்துக் கட்டுவதற்கென்றே ஒரு கூட்டம் தயார் நிலையில் அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கின்றது என்று புரிந்துகொண்டேன்" என்கின்ற வசனங்கள், உண்மைக்குப் புறம்பானவையும், உங்களின் தந்தையை நியாயமான காரணங்கள் என்று தாம் நம்பிய காரணங்களுக்காக ஆதரித்தவர்களையும் நியாயமின்றித் தாக்குபவையாக அமைந்துள்ளன.


Facebook மூலமே உங்களின் தவறு குறித்த விமர்சனங்கள் அதிகமாக முன்வைக்கப் படுகின்ற நிலையில், மேற்படி விமர்சனங்களை முன்வைப்பவர்கள், அவற்றை பகிர்பவர்களின் Facebook Timeline இல் சற்று முந்தைய பழைய பதிவுகள், பகிர்வுகளைப் பார்த்தீர்கள் என்றால், அங்கே உங்கள் தந்தைக்கு ஒரு ஹீரோ அந்தஸ்த்துக் கொடுத்து பல பதிவுகள், பகிர்வுகள் இருப்பதை தெளிவாகக் காணலாம். ஆகவே "வெளுத்துக் கட்டுவதற்கென்றே ஒரு கூட்டம் தயார் நிலையில் அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கின்றது" என்ற கருத்து முற்றிலும் பிழையானது என்பதனையும், மேலும் உங்களது தவறுகளை சுட்டிக் காட்டும் அத்தகைய பதிவுகளை அவர்கள் பகிரக் காரணம், இஸ்லாத்தின் மீதுள்ள பற்றே ஆகும். அதே இஸ்லாத்தின் மீதுள்ள பற்றுக் காரணமாகவே உங்கள் தந்தையை அவர்கள் நேசித்தார்கள் என்பதனையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


அடுத்து உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் எதிராக முன்வைக்கப் பட்ட ஏனைய முக்கிய குற்றச் சாட்டுக்களாவன :


1. உங்களின் பெரிய தந்தை, (அஸாத் சாலியின் சகோதரர்) ரியாஸ் சாலி (கங்காராமவில் உங்களுடன் காணப்பட்டவர்அவர்கள் லக்பிம, த ஐலண்ட் ஆகிய பத்திரிகைகளில்  "இலங்கையில் வஹ்ஹாபிய பயங்கரவாதப் பயிற்சி" என்று முற்றிலும் பொய்யான தகவல்களைக் கொண்டு எழுதிய கட்டுரை தொடர்பானது. மேற்படி கட்டுரை முஸ்லிம் சமூகத்தையே காட்டிக் கொடுப்பதாகவும், பொது பல சேனா உட்பட இனவாதிகளுக்கு பல்வேறு தகவல்களை வழங்கிய ஒன்றாகவும் காணப் படுகின்றது. 2010 - 09 - 19 அன்று லக்பிம மற்றும் The Island போன்ற பத்திரிகைகளில்இலங்கையில் வஹ்ஹாபிய பயங்கரவாத பயிற்சி”  எனும் தலைப்பில் ஓர் ஆக்கத்தை றியாஸ் சாலி வெளியிட்டார். இலங்கையில் வஹ்ஹாபிஸம் வளர்க்கப்படுவதாகவும், பள்ளி வாசல்கள் இதற்கான களமாக இருப்பதாகவும், மத்ரஸாக்கள் வஹ்ஹாபிசத்தை போதிப்பதாகவும், சவுதி இதற்கு நிதி உதவி செய்வதாகவும், கிழக்கில் ஜிஹாதிய குழுக்கள் இருப்பதாகவும் இக்கட்டுரையில் றியாஸ் சாலி குறிப்பிட்டிருந்தார்.  முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான துரோகத்தனமான மேற்படி கட்டுரை குறித்து உங்கள் குடும்பத்தின் சார்பில் எத்தகைய விளக்கத்தினை முன்வைக்கப் போகின்றீர்கள்?


2. உங்கள் தந்தை, பொது பல சேனாவின் ஹலால் எதிர்ப்புப் பிரச்சாரம், முஸ்லிம் பெண்களின் ஆடை குறித்  ிசமப் பிரச்சாரம் ஆகியவற்றை கடுமையாக எதிர்த்தார். எனினும் நீங்களும், உங்கள் தாயாரும் இஸ்லாமிய ஆடையை அணியாத, இஸ்லாம் ஹராம் என்று சொல்லும்படியாக தலையை பகிரங்கமாக திறந்தவர்களாக காணப் படுகின்றீர்கள். இது எந்தவகையில் சரியாகும்? இது குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்? தவறு என்று நீங்கள் உணர்ந்தால் திருத்திக் கொள்வதுதான் சரியாகும் (அது உங்களின் தனிப்பட்ட விடயம், இது ஜனநாயக நாடு, உங்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்று பதிலளிப்பீர்களாக இருந்தால்உங்கள் தந்தை உண்மையாகவே இஸ்லாத்தில் ஈடுபாடில்லாத, குடும்பத்தையே வழிநடாத்தத் தெரியாத ஒருவர், அல்லாஹ்வுக்காக அல்லாமல் தனது அரசியல் லாபத்திற்காக மட்டும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த சந்தர்ப்பவாத அரசியல் வாதி என்று அர்த்தமாகிவிடும்


3. கங்காராம விகாரையில் செய்தது தவறு என்பதனை ஏற்றுக் கொண்டு, அதற்காக நீங்களும், உங்கள் தாயாரும் அழுது புலம்பி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டதாக கூறியுள்ளீர்கள், நல்ல விடயம். எனினும், தெவட்டகஹ கல்லறைக்குச் சென்று பிரார்த்தனைகள், வழிபாடுகளில் ஈடுபடும் இணைவைப்புக் குறித்தோ, அதற்காக அழுது புலம்பி இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவது குறித்தோ, மீண்டும் அவ்வாறு செய்யாமல் இருப்பது குறித்தோ நீங்கள் சிந்தித்ததுண்டாகொலை, களவு, விபச்சாரம், போதை போன்ற அனைத்தையும் விட அல்லாஹ்விடத்தில் பயங்கரமான பாவமாக இணைவைப்புக் காணப்படுகின்றது.


4. உங்கள் தந்தை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுடன் இணைந்து இருந்த காலத்தில், முஸ்லிம் பாடசாலைகளுக்கான விசேட நோன்புகால விடுமுறையை ரத்துச் செய்ய வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப் பட்ட பொழுது, 2011 ஜூன் 29, புதன்கிழமை மாலை, கல்வியமைச்சர் பந்துல் குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை ரத்துச் செய்யப்படுவதை தொடர்ந்தும் அப்பொழுது ஆதரித்த ஒரே முஸ்லிம் அரசியல்வாதியாக உங்கள் தந்தைதான் இருந்தார். மகிந்தவின் அரவணைப்பில் இருந்த நேரம், காலாகாலமாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் அனுபவித்து வரும் விசேட உரிமையை விட்டுக் கொடுக்கத் துணிந்தாரே? இது எவ்வகையில் நியாயம்? தற்பொழுதும் அதே நிலைபாடில் தானா  இருக்கின்றாரா? அறிய ஆர்வம்.


5. பொது பல சேனாவினால் அகில இலங்கை ஜமியத்துல் உலமா மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப் பட்டு குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப் பட்ட பொழுது, முழு இலங்கை முஸ்லிம் சமூகமும், ஜமியத்துல் உலமாவின் பக்கம் ஆதரவளித்தபோளுது உங்கள் தந்தை மட்டும் ஜமியத்துல் உலமா குறித்து எதிர்மறையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாரே? இது எந்த வகையில் நியாயமானது?


6. இறைவன் மனிதனின் செயல்களுக்கன்றி, எண்ணங்களுக்கே கூலி கொடுக்கின்றான் என்று ஒரு கருத்தை முன்வைத்துள்ளீர்கள், இது தவறாகும். எண்ணமும் செயல்களும் சரியாக இருக்க வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அதே நேரம் ஒருவன் முர்தத் (மதம் மாறியவன்) ஆகுவதில், எண்ணம் மட்டுமல்ல, சொல் சார்ந்த ரித்தத், செயல் சார்ந்த ரித்தத், எண்ணம் சார்ந்த ரித்தத் என்ற மூன்று வகை உள்ளதையும் தெரிந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

இலங்கை முஸ்லிம்களின் தலைவராக வர விரும்புகின்ற ஒருவர் தனது தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக / பொது வாழ்விலும் இறைவனுக்கு இணை வைக்காத, ஹால் ஹராத்தை பேணும் சிறந்த முஸ்லிமாகவும், சந்தேகங்கள், சதிக் குற்றச் சாட்டுக்கள், இரகசிய தொடர்புகளுக்கு அப்பாற் பட்டவராகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே மேற்படி பகிரங்க மடலை வரைந்துள்ளேன்.


இது குறித்து ஆக்கபூர்வமான பதிலொன்ற , இலங்கையின் அனைத்து முஸ்லிம்கள் சார்பிலும் எதிர்பார்க்கின்றேன்.


இனாமுல்லாஹ்
கல்கிஸ்
(09.05.2011)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com