Contact us at: sooddram@gmail.com

 

ஈழச் சமூகத்தில் நிலவும் தீண்டாமை குறித்துத் தமிழகத்தில் ஏன் இந்த மௌனம்? - அ.மார்க்ஸ்


(பாரதி புத்தாகலய வெளியீடாக தற்போது விருதுநகரில் நடை பெற்றுக் கொண்டுள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் வெளியிடப்படுகிற 'தீண்டத்தகாதவன்" சிறுகதைத் தொகுப்பிற்கு நான் எழுதிய முன்னுரை. தொகுத்தது: தோழர் சுகன். இந்நூலின் முதற்பதிப்பிற்கு நான் எழுதியுள்ள விரிவான முன்னுரையும் நூலில் உள்ளது - அ.மார்க்ஸ்)

ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைக் களமாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகளின் இத் தொகுதியைச் சுமார் ஏழாண்டுகளுக்கு முன் நண்பர் சுகன் தொகுத்ததோடன்றி தன் சொந்த முயற்சியில் வெளியிடவும் செய்தார். ஈழத் தமிழர்கள் மத்தியில் புரையோடிப் போயுள்ள சாதி ஆதிக்கத்தின் பல்வேறு அம்சங்களையும் மிக நுணுக்கமாக வெளிப்படுத்தும் இத் தொகுதி, விரிவாக விவாதிக்கப்படவில்லை ஆயினும் இது குறித்து அக்கறையுள்ள ஈழத்தவர்களால் மட்டுமின்றி இங்குள்ளவர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டு மிக விரைவில் விற்றும் தீர்ந்தது.

நீண்ட இடைவெளிக்குப் பின் இத் தொகுதியின் இரண்டாம் பதிப்பு பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வருவதோடு ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’யின் மாநாடு ஒன்றில் இது வெளியிடப் படுவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது ஏனெனில் ஈழத்தில் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளின், குறிப்பாக நா.சண்முகதாசன் அவர்களின் தலைமையில் இயங்கிய கட்சியின் பங்கு முக்கியமானது. ஈழத் தலித் இலக்கியத்திற்கு மட்டுமின்றி தமிழ் தலித் இலக்கியத்திற்கே முன்னோடியாக அமைந்த கே.டானியல் அவர்கள் தனது படைப்புகள் அனைத்தையும் தமிழகத்தில் வெளியிட முனைந்தபோது அவர் இடதுசாரிக் கருத்துடையவர்களின் மூலமாகவே அவற்றை வெளியிட முயற்சித்தது இந்தப் பின்புலத்திலிருந்துதான். கைலாசபதி, சிவத்தம்பி தவிர பிற ஈழத் தமிழ் எழுத்தாளர்களெல்லோரும் இன்றுவரை புத்தக வெளியீட்டகங்களின் அரசியல் பற்றிக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் “பேர் பெற்ற” வெளியீட்டகங்ளின் வாசல்களிலேயே தவம் கிடக்கிறபோது டானியல் மட்டுமே இறுதிவரை எளிய மனிதர்கள், எளிய வெளியீட்டகங்கள், இடதுசாரிக் கருத்துடையோர் ஆகியவர்களையே நம்பி இருந்தார். அவர் மறைந்த பின்னும் கூட இத்தகையோரே அவரது நூல்களை வெளியிட்டனர். இந்த வகையில்தான் பாரதி புத்தகாலயம் இந்நூலை வெளியிடுவது பொருத்தமானது என்றேன்.

ஈழ அரசியல் குறித்து மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் உள்ள தமிழகத்தில் ஈழச் சமூகத்தின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான தீண்டாமைக் கொடுமை குறித்த அறிதல் முற்றிலும் இல்லாமை வேதனைக்குரிய ஒன்று. ஈழப் போராட்ட ஆதரவு இங்கே வளர்ந்து வந்த அதே நேரத்தில்தான் இணையாக இங்கு தலித் இயக்கங்களும், இலக்கியமும் வளர்ந்து வந்தன. எனினும் ஈழத்தில் நிலவிய, நிலவுகிற தீண்டாமை குறித்த பேச்சு இங்கு முற்றிலும் இல்லாமற் போனது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல ஆய்வுக்குரியதும் கூட. இன்றளவும் இது தொடர்கிறது.

ஈழத்தின் கொடு எதார்த்தங்களில் ஒன்றான தீண்டாமை குறித்துப் பேசுவதே தமிழர் ஒற்றுமைக்கு எதிரானது என்கிற கருத்தை ஈழப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய சக்திகள் வலுவாகப் பரப்பியிருந்தன. சாதி ஆதிக்கம் மற்றும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஈழப் போராட்டம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாகவே பிரச்சாரமும் செய்யப்பட்டது.

போராட்டம் உச்சமாக இருந்தபோது தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பு சாதி வேற்றுமைகளுக்கு எதிராகத் தடை விதித்திருந்தபோதும், அமைப்புக்குள் சாதி வேற்றுமைகள் இல்லாமற் பார்த்துக் கொண்டபோதும் அவ்வமைப்பில் இருந்த கோட்பாட்டு வறுமையின் காரணமாக சாதி ஒழிப்பில் அந்த நடவடிக்கைகள் பெரிய பங்கை ஆற்றிவிடவில்லை.
போராட்டத்தின் மிகப் பெரிய நிதிப் பின்புலமாக அமைந்த புலம் பெயர்ந்த சமூகம் அந்நிய நாடுகளில் தங்கள் பண்பாட்டைக் காத்துக் கொள்வது என்கிற பெயரில் தாம் குடியேறிய ஒவ்வொரு நாட்டிலும் குட்டி யாழ்ப்பாணங்களை உருவாக்கித் தம் சாதி அடையாளங்களைத் தக்க வைத்துக் கொண்டதை அதனால் தடுத்துவிட இயலவில்லை. ஈழத்துக்குள்ளும் கூட நீறு பூத்த நெறுப்பாக சாதி கனிந்து கொண்டு அத்தனை நெருக்கடிகளுக்கும் மத்தியில் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருந்தது.

தமிழக தலித் இயக்கங்களைப் பொருத்தமட்டில், அவைகளுக்குத் தாம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான இயக்கம் என்பதைத் தாண்டி பொதுவான அரசியல் களத்திலும் தங்களுக்கு ஒரு இடமுண்டு, பொதுவான பிரச்சினைகளிலும் தங்களுக்கு வேறு யாருக்கும் சளைக்காத அக்கறையுண்டு என நிறுவுவது அவசியமாக இருந்தது. அந்த வகையில் அவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளில் தலையாயதாக ஈழப் போராட்ட ஆதரவாளர்களுடன் இரண்டறக் கலந்து நின்றது அமைந்தது. தமிழக ஈழ ஆதரவாளர்களைப் பொருத்த மட்டில் அவர்கள் அங்குள்ள தலித் மற்றும் முஸ்லிம் பிரச்சினைகளைப் பேசுவதே இல்லை என்பதோடு அப்படிப் பேசுவதே தவறு என்கிற கருத்தையும் கொண்டவர்கள். அவர்களோடு தோளோடு தோளாக நின்று இயங்கிய தலித் இயக்கங்களும் ஈழத்தில் நிலவும் தீண்டாமை குறித்துப் பேச இயலாமல் போனதன் பின்னணி இதுவே.

தமிழகத்திலுள்ள தலித் இலக்கியவாதிகளும் அறிவுஜீவிகளும் ஈழத் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழகத்தில் பெரிய அளவில் பல பதிப்புகளைக் கண்ட டானியலின் படைப்புகள் ஆகியவை குறித்து இன்றளவும் காக்கும் மௌனமும் சிந்திக்கத் தக்கது. தீண்டாமைக்குப் பின்புலமாக உள்ள பார்ப்பனீய மத அடிப்படைகளைப் பின் தள்ளி இத்தகைய சக்திகளுடன் இணைந்து நின்று பிற்படுத்தப்பட்ட சாதியினரை மட்டுமே எதிர்களாக நிறுத்தி இயங்க வேண்டும் என்கிற நிலைபாட்டை இவர்கள் எடுத்தனர். அதன் ஓர் அங்கமாக இடதுசாரி அரசியலையும் அவர்கள் வெறுத்தனர். ஈழ ஆதிக்க சக்திகளிலிருந்து மேற்போந்த இலக்கியவாதிகளுடனேயே அவர்கள் தம் உறவுகளையும் பேணினர். எப்படியோ ஈழத் தலித் இலக்கிய முயற்சிகள் குறித்த மௌனிகளாகவே அவர்கள் இன்று வரை தொடர்கின்றனர்.

தலித் இலக்கியத்தின் தனித்துவத்தை அங்கீகரிப்பதில் தயக்கம் காட்டிய இடதுசாரிகளும் இது குறித்து இதுவரை ஆர்வம் காட்டியதில்லை.

இவ்வாறு ஈழத் தலித் இலக்கியம் குறித்த மௌனம் தொடரும் நிலையில் அதனை உடைக்கும் வகையில் இந்த நூல் வெளிவருகிறது.

ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது சற்றே பம்மி இருந்த சாதிய மனநிலை போருக்குப் பிந்திய காலகட்டங்களில் மீண்டும் தலை எடுக்கத் தொடங்கி உள்ளதை ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான தோழர் இராகவன் போன்றோர் சுட்டிக் காட்டுகின்றனர். இடம் பெயர்ந்தோர் திரும்பி வருதல், புலம் பெயர்ந்தோர் மீள வந்து சொத்துக்கள் வாங்குதல் முதலானவற்றின் ஊடாக இவை நிகழ்கின்றன.

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒன்றின் தலைவரான தோழர் செந்திவேல் அவர்கள் வெளி நாடொன்றில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், “சிங்களச் சமூகத்தில் துணி வெளுக்கும் பிரிவைச் சேர்ந்த ஒரு பிரேமதாசா முக்கிய தலைவராகவும், ஜனாதிபதியாகவும் வரமுடிந்தது. தமிழ்ச் சமூகத்தில் அது சாத்தியமா?” என்கிற பொருளில் பதிலளித்தது இங்கே குறிப்பிடத் தக்கது.

ஈழச் சமூகம் போருக்குப் பிந்திய மறு உருவாக்கத்தில் எதிர்கொள்ளும் எத்தனையோ சவால்களில் சாதியமும் ஒன்றாக இருக்கிறது. இனவாதத்திற்கெதிரான போராட்டம் அங்கு முதன்மையாக உள்ளது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க இயலாது. ஆனால் இனவாதத்திற்கெதிரான போராட்டத்தில் சாதி ஆதிக்கம் மற்றும் தீண்டாமை குறித்த உரையாடலுக்கு இடமில்லை என்கிற கருத்து மிகமிக ஆபத்தானது.

இந்த வகையில் இந்த அழகிய தொகுப்பு இத்தருணத்தில் மீண்டும் வெளியீடு காண்பது முக்கியமான நிகழ்வு. இந்நூலின் முதற் பதிப்பிற்கு நான் எழுதிய முன்னுரையில் இந்தக் கதைகளின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எழுதியுள்ளதால் இங்கே அது குறித்து நான் ஏதும் எழுதவில்லை.

இந்த முன்னுரையை எழுத வாய்ப்பளித்த பாரதி புத்தகாலயத் தோழர்களுக்கு என் நன்றிகள்.

அ.மார்க்ஸ்.
கும்பகோணம், மே 13, 2015.



இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நிலவும் சாதி அமைப்பு தமிழக நிலவரத்துக்கு முற்றிலும் மாறுபட்டது. இலங்கையில் வெள்ளாளரே மிகப் பெரிய சாதியினராகவும் (உட்பிரிவுகள் நீங்கலாக) கரையார் (மீனவர்) சாதியினர் இரண்டாம் நிலையினராகவும் வகுக்கப்பட்டு பாகுபாடு பார்க்கப்படுகிறது. புலிகள் அமைப்புக்குள்ளும் சாதிப் பாகுபாடு இருந்தே வந்தது. துணுக்காய் என்ற இடத்தில் புலிகளால் நடத்தப்பட்ட மாபெரும் சித்திரவதை முகாமிலும் சாதிப் பாகுபாடு பார்க்கப்பட்டது. அங்கு சித்திரவதைக் கைதிகளாக இருந்த சுமார் நாலாயிரம் பேரில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com