Contact us at: sooddram@gmail.com

 

வியத்நாம் விடுதலைப் போராளி தோழர் ஹோ-சி-மீன்

ஆசியப் புரட்சியின் மாபெரும் தலைவர் ஹோ-சி-மின் மூன்று பெரும் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து ஒரு சின்னஞ்சிறு ஏழை நாட்டை பாட்டாளி வர்க்க அரசியலில் திரட்டி மகத்தான வெற்றி கண்டவர். ஆசிய நாடுகளில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு கட்டப்படவேண்டும், ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான அரிச்சுவடி ஹோசிமின்னிடம் இருந்துதான் கற்க முடியும். ஏனெனில், ஹோ-சி-மின்னின் புரட்சி வாழ்க்கை மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டது. முரணற்றது. மார்கஸியம் ஹோசிமின்னின் எளிமையான தூய வாழ்வு மூலம் புதிய பரிணாமத்தை அடைந்தது.

புரட்சிகர அரசியலில் தேசிய விழிப்பும், வர்க்கப் போராட்ட நலன்களும், ஒருங்கிணைந்தது. அது பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தோடு பின்னிப் பிணைந்தது. இந்த மார்க்சிய கோட்பாட்டை வியட்நாமிய மக்களிக் வாழ்க்கையோடும் – மரபோடும் படைப்பாக்க ரீதியில் இணைத்து வெற்றி கண்டவர் ஹோ-சி-மின். அதற்கான புரட்சிக் கட்சியை அவர் கட்டியதுதான் வீர வியட்நாமின் ஆக்கத்துக்கு அடிப்படை. அவர் ஆசியாவுக்கு மட்டுமல்ல உலக முழுமைக்குமான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிற்பிகளில் போற்றுதலுக்குரியவர், கற்றறிதலுக்கான மாபெரும் ஆசான்.

வியத்நாமில் கியான் வட்டாரம் புகழ்பெற்றது. நமது பாஞ்சாலங்குறிச்சி மண்ணைப்போல் வீரம் செறிந்தது. அங்கு வாழ்ந்தவர்கள் வலிமையானவர்களாகவும், மன உறுதி கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள். அங்க வாழ்ந்த பலரின் புகழ் நிலைத்து நிற்கிறது. அந்நியப் படையெடுப்புகளை எதிர்த்து ஆயுதமேந்தி எப்போதும் முன்னணியில் நிற்பவர்கள் இவ்வட்டரத்தினர்தான். பிரெஞ்சு காலனியாதிக்கத்திற்கு எதிராக பல தேசிய இயக்கங்கள் இங்கிருந்தே தொடங்கின.

அந்த வட்டாரத்தில் சிம்லியன் என்னும் அழகான சிற்றூர் உள்ளது. சிம்லியன் என்றால் தங்கத்தாமரை என்று பொருள். அங்கு வாழ்ந்த குயென்சின்சாக் என்பவர்தான் அவ்வூரிலேயே அதிகம் படித்தவர். கன்பூசிய தத்துவத்தில் தேர்ச்சி பெற்றிருந்த அவர், சிவில் நிர்வாகத்துறைக்கான உயர் படிப்பில் ப்யோ-பாங் பட்டம் பெற்றிருந்தார். தங்கள் ஊரின் முதல் ப்யோ-பாங் ஆன குயென்சின்சாக்கை பாராட்ட விரும்பிய அவ்வூர் மக்கள் வீடுகட்ட இடம் ஒதுக்கி, ஒரு புது வீடும் கட்டிக் கொடுத்தனர். 1890 மே மாதம் 19ம் நாள் தனக்குப் பிறந்த குழந்தைக்கு குயென் டாட்தாங் எனப் பெயரிட்டார் குயென் சின்சாக். இக் குழைந்தைதான் பின்னாளில் உலகப் புகழ் பெற்ற டாக்டர் ஹோ-சி-மின்.

கன்பூசியனிக் கட்சியின் தேசிய இலட்சிய உணர்வுகளை டாட்தாங்கிற்கு ஊட்டி வளர்த்தார் தந்தை. டாட்தாங்கும் கன்பூசினிசத் தத்துவக் கருத்துக்களையும் அரசியல் பார்வையையும் தெளிவாகக் கற்றுத் தேர்ந்தார். சிம்லியனில் வாழ்ந்த மக்கள் மிகவும் ஏழைகள் மிகக் கடின வாழ்வு வாழ்ந்து வந்தனர். இருப்பினும் அரசு அதிகார்கள் அவர்களிடம் இரக்கமற்ற முறையில் வரி வசூல் செய்தனர். அதே சமயம் ஆடம்பர வாழ்வு வாழ்ந்த அரச குடும்பத்தினரையும், வெளிநாட்டு அதிகாரிகளையும் டாட்தாங் பார்த்தார். உணர்ச்சி வயப்பட்ட டாட்தாங் ”ஏன் இந்த ஏற்றத்தாழ்வு?” என்று யோசிக்க ஆரம்பித்தார்.

அந்தச் சமயத்தில்தான், வியத்நாம்-லாவோ எல்லையை ஒட்டி கியாதாவோ சாலைத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வந்தது. மனிதன் நுழைந்திராத காட்டுக்குள் அச்சாலை அமைக்கப்பட்டது. அப்பகுதியிலுள்ள அனைத்து மக்களும் அத்திட்டத்தில் கட்டாயமாகப் பணியாற்ற வேண்டும் என்று நிர்பந்திக்கப் பட்டார்கள். கால் வயிற்றுக்கு உணவுமில்லை, உறங்க இடமுமில்லை. கொடுரமாக அடித்துத் துன்புறுத்தப்பட்ட மக்கள் பலர் தப்பியோடினர். அவர்களைப் படை வீரர்கள் வேட்டையாடினர். தனக்கு ஊர்க்காரர்கள் கொடுத்த நிலத்தையும் வீட்டையும் டாட்தாங்கின் தந்தை விற்றார். அப்பணத்தை சாலைப் பணிக்குச் சென்ற உழைப்பாளர்களின் நலிந்த குடும்பங்களுக்குக் கொடுத்தார். இது டாட்தாங்கின் உள்ளத்தல் பாதிப்பை ஏற்படுத்தியது.

14 வயதாகியிருந்த டாட்தாங் ழீன் ழாக்ருசோ என்ற பிரெஞ்சு அறிஞரின் படைப்புகளைப் படித்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்காக அந்நூல் விடுத்த அறைகூவல் அவரைக் கிளர்ச்சியுற வைத்தது.1905ல் ஏற்பட்ட ரஸ்சியப் புரட்சியன் தாக்கம் வியத்நாமிலும் வெளிப்பட்டது. வியத்நாமில் தேசிய விடுதலை இயக்கம் பரவ ஆரம்பித்தது. 1908ல் ஃபான் பாய்சௌவின் ஆதரவாளர்களால் “நாட்டின் வாழ்வையும் உணர்வையும் புதுப்பிப்பதற்கான இயக்கம்“ தொடங்கப்பட்டது. மத்திய வியத்நாம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. சாரிசாரியாக விவசாயிகள் வீதிக்கு குடும்பத்தோடு வந்து போராட்டத்தில் குதித்தனர். வரிகளைக் குறைக்க வேண்டுமென்றும், கட்டாய உழைப்பை ஒழிக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் முனடவைக்கப்பட்டன. டாட்தாங்கின் தலைமையில் கல்லூரி மாணவர்கள் பலர் அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். டாட்தாங் அரசியல் போராட்டத்தில் முதல் அனுபவத்தைப் பெற்றார். அப்போராட்டம் நசுக்கப்பட்ட காட்சிகளை கண்ணெதிரே பார்த்தார்.

எதையும் தாங்கும் மனஉறுதியும் வலிமையும் கொண்டவர்கள்தான் பக்குவப்பட்ட போராட்டக்காரர்களாக மாறமுடியும் என்பதை உணர்ந்து கொண்டார். தான் செல்ல வேண்டிய பாதை எது எனடபதை அறிந்து கொண்டார். இனி மக்களோடு வாழ்வதும் அவர்களுக்காகப் போராடுவதுமே தனது இலட்சியம் என முடிவெடுத்த டாட்தாங், நாடு முழுவதும் பயணம் செய்து நாட்டு நடப்பை நேரடியாக அறிந்துகொள்ள முடிவெடுத்தார். இப்போது அவருக்கு வயது 18.

ஹ்யூவிலிருந்து தென்சீனக் கடற்கரையோரமாக நடந்தே பயணத்தைத் தொடர்ந்தார். அவ்வ்பொழுது சில நகரங்களிலும், கிராமங்களிலும் தங்கிப் பயணம் செய்தார். குயினோன்னில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். இரண்டாண்டுகளில் ஐநூறு கிலோமீட்டருக்கு மேல் பயணித்து பான்தியேட் நகர் வந்து சேர்ந்தார். அங்கு தனியார் பள்ளியொன்றில் ஆசிரியப் பணி கிடைத்தது. அந்த ஊரில் அதிக நாட்கள் தங்கவில்லை. 1910ம் ஆண்டு இறுதியிலேயே சைகோன் வந்து சேர்ந்தார். அங்கு கப்பல் ஓட்டுநர் பயிற்சிக் கழகத்தில் பணியில் சேர்ந்தார்.

கப்பல் பணியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே உலகை இரண்டு முறைவலம் வந்துவிட்டார். விடுதலை, சமத்துவம் என்று அமெரிக்கா பிரகடனம் செய்திருந்தாலும், வறுமையும், அநீதியும் அம்மண்ணில் மலிந்திருப்பதைக் கண்டார். கறுப்பர்கள் ஒடுக்கப்படுவதும், பாகுபாடுபடுத்தப்படுவதும் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆறு மாதங்களுக்குப் பிறகு இங்கிலாந்துக்குப் பயணமானார். 1917 இறுதியில் பிரான்ஸ் போய்ச் சேர்ந்தார். அங்கு ஒரு புகைப்பட நிறுவனத்தில் உதவியாளராகப் பணியேற்றார். பாரிசில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட வியத்நாமியர்கள் குடியிருப்புப் பகுதிக்கு அடிக்கடி டாட்தாங் செல்வார். வியத்நாமியர்கள் தேசபக்தர்கள் சங்கத்தை உருவாக்கி, அனைவரையும் அதில் ஈடுபடுத்தினார். 1918 இறுதியில் பிரான்ஸ் சோசலிஸ்ட் கட்சியில் தன்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டார். இவரே முதல் வியத்நாமிய சோசலிஸ்ட் உறுப்பினர்.

கட்சிக்காக குயென் அய்கோக் என்ற பெயரை 1919 துவக்கத்திலேயே வைத்துக் கொண்டார். பிரெஞ்சு தூதரை அவரது வீட்டில் சந்தித்து இந்தோ சீன மக்களின் சார்பில் கோரிக்கை மனுகொடுத்தார் குயென் அய்கோக். ”வியத்நாமிய மக்களின் கோரிக்கைப் பட்டியல்” என்று தலைப்பிடப்பட்டிருந்த அம் மனுவில் தங்களுக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் எனக் கேட்டிருந்தார். மேலும் வியத்நாம் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு, வியத்நாமியர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகள், பத்திரிக்கை சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, முறையான நீதிமன்றம், பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் வியத்நாமிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தரப் பிரநிதி என்று பல கோரிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தன.

வியத்நாம் மக்களின் கோரிக்கைப்பட்டியல் வியத்நாமின் தென்பகுதியிலுள்ள கொச்சின் சீனா, மற்றும் இந்தோ சீனப் பகுதிகளுக்கு கப்பல் மூலம் அனுப்ப்பட்டு பரவலாக மக்களைச் சென்றடைந்தது. அப்பகுதி ஆட்சியாளர்கள் கதிகலங்கிப்போய் குயென் அய்கோக் என்று கையெழுத்திட்டு இருக்கும் அந்த நபரைத் தேடி அலைந்தார்கள். அவரது அணுகுமுறைகளெல்லாம் புரட்சிகரமாக இருந்தன. சோவியத்து யூனியனின் வெற்றியைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வியத்நாமிய விடுதலையை மார்க்சியக் கண்ணோட்டத்தில் பார்த்த செயல் வீரர் குயென்.

வளர்ச்சியுற்ற நாடுகள் மற்றும் காலனிய நாடுகளில் உள்ள புரட்சிகர இயக்கங்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்று லெனின் குறிப்பிடப்பட்டிருந்தது குயென்னின் மனதில் ஆழப்பதிந்தது. மூன்றாம் அகிலத்தின் இணைப்புக் குழுவில் உறுப்பினர் ஆனார்.
பிரான்சும் பிற ஐரோப்பிய நாடுகளும் சோவியத் நாட்டின் மீது தடை விதித்திருந்த சமயம், ரஸ்யாவிற்கு உதவுவதற்காக பிரான்ஸ் தெருக்களில் தன் நண்பர்களுடன் நிதி வசூலித்தார் குயென். பிரெஞ்சு அரசு உதவியோடு அவர் வியத்நாமுக்குப் பயணமானார்.
1921 ஜுலையில் சர்வதேச காலனி நாடுகள் லீக் என்னும் அமைப்பை உருவாக்கினார். அடிமை நாடுகள் சுதந்திரமடைய பாடுபடுவதே இதன் நோக்கம். லேபரியா என்ற செய்தித்தாள் ஒன்றை வெளியிட்டார்.

கம்யூனிஸ்ட் அகிலத்தைக் கண்டவாறு பழித்தெழுதும் முதாளித்துவ ஏடுகளுக்கு லேபரியா தகுந்த பதிலளித்து வந்தது. மார்க்சின் சிந்தனைகளைப் படியுங்கள் அமைக்கப்பட்ட நமது நாட்டு விடுதலைக்கு கம்யூனிசம் மட்டுமே வழிகாட்டும் என லேபரியா அழுத்தமாகக் கூறியது.
குயென் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். லேபரியாவில் தொடர்ந்து தமது கருத்துக்களை எழுதி வந்தார்.

பிரெஞ்சு நாட்டில் குயென்னின் அரசியல் நடவடிக்கைகள் ஆபத்தானவை என்று அரசு உணர்ந்தது. அவருடைய இயக்கங்களும், எழுத்துக்களும் ஒடுக்கப்பட்டவர்களிடையே உணர்வூட்டிக் கொண்டிருந்தன. எனவே அவரைக் கைது செய்து வியத்நாமுக்கு அனுப்பி விட விரும்புவதாக காலனிய விவகார அமைச்சர் ஆல்பர் சார்ரத் தெரிவித்தார். இந்தோசீன ஆளுநர் அதனைக் கடுமையாக எதிர்த்தார். எனவே பாரிசில் இருந்து பெர்லின் சென்றடைந்த குயென்னை ஜெர்மன் தோழர் ஒருவர் வரவேற்றார். ட்ரான் வாங் என்ற பெயரில் குயென்னுக்கு அனுமதிச் சீட்டு வாங்கி பெட்ரோகிரேடுக்குக் கப்பல் மூலம் அனுப்பிவைத்தார்.

1923 ஜுன் 30ம் நாள் முதன்முதலாக சோவியத் யூனியனுக்குள் நுழைந்தார்.
கோமின்டெர்மினின் கிழக்கிந்தியப் பிரிவில் குயென்னுக்கு வேலை கொடுக்கப்பட்டது. பாட்டாளி வர்க்கப் புரட்சியின் விளைவாய் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றிருந்த அந்த நாட்டிலிருந்துதான் தன் சொந்த நாட்டின் விடுதலைக்கான பணியை முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என முடிவு எடுத்தார்.

மாஸ்கோவிற்கு வந்த நாள் முதல் லெனினைச் சந்தித்துப் பேசிவிட வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்து வந்தார். ஆனால் 1924 ஜனவரி ஆம் நாள் லெனின் மறைந்துவிட்டார்.
ஓராண்டு மாஸ்கோ வாழ்க்கை குயென்னுக்கு மிகுந்த அனுபவத்தை தந்திருந்தது. சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிகுந்த அனுபவம் வாய்ந்தவராக அனைவராலும் மதிக்கப்பட்டார். எத்தைகைய சிக்கலான பிரச்சனைகளுக்கும் திறமையாகத் தீர்வு காணும் ஆற்றல் கொண்டவராகத் திகழ்ந்தார். வியத்நாம் மக்களின் விடுதலையை உயிர்மூச்சாகக் கருதிச் செயல்பட்டார்.

எனவே, தென்சீனத்திற்குச் செல்ல விரும்பினார். அங்கு சன்யாட்சென் அரசு புரட்சிகரத்திட்டங்களை முன்வைத்து ஆட்சி செய்து வந்தது. சீனத்திற்கான கோமின்டெர்ன் பிரதிநிதி மிகெயில் பொரோடின், சன்யாட்சென்னின் அரசியல் ஆலோசகராக இருந்தார். தென்சீனம் சென்றவுடன் பொரோடினைச் சந்தித்தார் குயென். சோவியத் குடியரசுக் கப்பலில் நெடிய பயணம் செய்து கான்டன் நகரம் சென்றடைந்தார் குயென். முற்போக்குத் திசைவழியில் ஜனநாயக சோசலிசக் கொள்கைகளை வலியுறுத்தி நிற்கும் கோமின்டாங்குடன் சேர்ந்து போராடுமாறு சீனக்கம்யூனிஸ்ட் கட்சியை கோமின்டெர்ன் அறிவுறுத்தியது.

இந்தோசீனக் காலனியக் கொடுமைகளுக்குப் பயந்து எண்ணற்ற வியத்நாமியர் கான்டன் வந்திருந்தினர். அதேபோல் பிரான்சில் வாழ்ந்திருந்த வியத்நாமியர்கள் பலரும் கான்டன் வந்திருந்தினர். ஏற்கனவே கான்டன் அரசின் பலதுறைகளிலும் வியத்நாமியர்கள் அநேகம் பேர் பணிபுரிந்து கொண்டிருந்தனர். வியத்நாமிய தேசபக்தர்களோடும், புரட்சி எண்ணம் கொண்ட இளைஞர்களோடும் குயென் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அங்கு ”சிறப்பு அரசியல் கல்விக் குழு” என்ற பெயரில் அரசியல் பயிற்சி வகுப்பு ஒன்றை ஆரம்பித்தார்.
சமூக, தேசிய விடுதலையின் அவசியம், காலனியாதிக்கக் கொடுமைகள் ஆகியவற்றை தம் மக்கள் அறியச் செய்வதற்காக இளைஞன் என்னும் பொருள்படும் ”தான்நியென்” என்ற ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்தார்.

கோமின்டெர்னின் வழிகாட்டுதலுடன் செயல்பட்டு வந்த வியத்நாம் புரட்சிகர இளைஞர் சங்க உறுப்பினர் தேர்வும், பயிற்சியும் குயென்னால் மிகக் கடுமையாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டப் பட்டது. பயிற்சி பெற்ற இளைஞர்கள் தலைமறைவுப் பணி செய்ய இந்தோசீனத்திற்குள் அனுப்ப்பட்டனர். தலைமறைவுக்குழு, விவசாயிகள் சங்கம், தொழிலாளர் விவசாயிகளின் குழந்தைகள் கொண்ட இளம் முன்னோடிகள் குழு, புரட்சிகர பெண்கள் குழு ஆகியவற்றை படிப்படியாக உருவாக்கினார். அரசியல் பிரச்சாரப் பள்ளி ஒன்றைத் திறந்தார். மாணவர்கள் ரகசியமாக வந்து இதில் ஆறுவாரப் பயிற்சி பெற்று தங்களின் சொந்தப் பகுதிகளுக்குத் திரும்பிவிடுவர்.

1927 ஏப்ரலில் சியாங்கே சேக் ஆதரவாளர்களின் பயங்கர எதிர் நடவடிக்கைகள் அதிகரித்தன. கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர், சுட்டுக்கொல்லப்பட்டனர். கோமின்டாங் நிர்வாகக் குழுவினரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சோவியத் ஆலோசகர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் குயென் கான்டனை விட்டு வெளியேறி சாங்காய் வழியாக கோபிப் பாலைவனத்தை நடந்தே கடந்து சோவியத் ரஸ்யா போய்ச் சேர்ந்தார். 1927 டிசம்பரில் ரஸ்யாவில் நடைபெற்ற காலனிய எதிர்ப்புக் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாடு முடிந்ததும் அங்கிருந்து கப்பல் மூலம் தாய்லாந்து பயணமானார்.

ஹானோயிலும் சைகோனிலும் உள்ள கம்யூனிஸ்ட் குழுக்களை ஒருங்கிணைத்து ஹாங்காங்கில் 1930 ஜனவரியில் நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட் குழுக்கள் அனைத்தும் ஒன்றினைவது என்றும் இனிமேல் ஒரே கம்யூனிஸ்ட் கட்சிதான் இருக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்படுத்தினார். இப்படியாக வியத்நாம் கம்யூனிஸ்ட் கடசி உருவானது. கட்சி உருவானபோது அதன் உறுப்பினர் எண்ணிக்கை 211. நாடெங்கிலும் கட்சிக் கிளைகள் தொடங்கப்பட்டன. கட்சியில் தொழிலாளர்களும், விவசாயிகளும் பெருமளவு உறுப்பினராயினர்.

1930 இறுதியில் 116 கிராமங்கள் சேர்ந்து ரஸ்ய மாதிரி சோவியத்துக்களை உருவாக்கினார். ”கே-தின்” சோவியத்துகள் என்று அவை அழைக்கப்பட்டன. ஊர் தலைவர்களையும், நிலப்பிரபுக்களையும் விரட்டிவிட்டு கிராம மக்களே ஆட்சிப் பொறுப்பேற்றனர். பொது நிலங்கள் நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டன. பிரெஞ்சு அரசு விதித்த வரிகள் நீக்கப்பட்டன. ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த கே-தின் சோவியத்துகள் குறுகிய காலமே நீடித்தன. பிரெஞ்சு அரசு மீண்டும் இவைகளை முற்றுகையிட்டன.

இதனால் குயென் 1931 ஜுன் மாதத்தில் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னமே அரசு இவருக்கு மரணதண்டனை விதித்திருந்தது. அதனால் ஹாங்காங்கிலே வழக்கு நடந்தது. மரண தண்டனை விலக்கப்பட்டு அவர் இந்தோசீனாவிற்கு அனுப்பப்பட வேண்டும் என தீர்ப்பாயிற்று. ஆனால் 1932 ஜுனில் அப்பீல் செய்து மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு குயென் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் அவர் தன் பணியினைத் தொடர சோவியத் வியாபாரக் கப்பலில் ஏறி மாஸ்கோ சென்றார். மாஸ்கோவில் கோமின்டெர்னின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று தனது பழைய நண்பர்களுடன் இணைந்தார். 1935 ஜுலையில் கோமின்டெர்னின் 7வது மாநாடு தொடங்கியது. அதில் வியத்நாமில் ஜனநாயக முன்னணி உருவாக்கப்பட்டு செயல்படும் முறையை கோமின்டெர்னுக்கு அறிக்கையாகக் கொடுத்தார்.

1938ல் சோவியத் நாட்டைவிட்டு புறப்பட்டு கோபிப் பாலைவனம் வழியாக சீன எல்லை வந்தார். பிறகு ஆபத்தான மலைப்பகுதியில் வெறுங்காலுடனேயே நடந்து கடந்து மலைகள் சூழ்ந்த யேனான் பகுதிக்கு வந்து அங்கு தனது சீனத் தோழர்களுடன் இணைந்தார். பின் அனைவரும் எல்லைப் புறத்தில் உள்ள சிசி நகர் அடைந்து அங்கிருந்து வியத்நாதிற்குள் நுழைந்தனர்.

1941 மே 10 நாள் அடர்ந்த காட்டுக்குள் கட்சியின் பிளீனத்தைக் கூட்டினார். 10 நாட்கள் தொடர்ந்து அந்தப் பிளீனம் குயென் தலைமையில் உலகப்போரின் போக்குகள் குறித்தும், சோவியத் ரஸ்யா, ஜெர்மன் போன்ற நாடுகளின் தற்போதைய நிலைகள் குறித்தும் கலந்தாலோசித்தனர். ஜுன் மாதம் ஒரு அறிக்ககை வெளியிடப்பட்டது. அறிக்கை நாட்டின் அனைத்து இடங்களிலும் வீடுவீடாக விநியோகம் செய்யப்பட்டது. வியட்மின் இயக்கதத்தின் கெரில்லா தளங்கள் பல உருவாயின. அப்போது ஜப்பானிய ஆக்கிரமிப்பால் வியத்நாமின் வடக்கு தெற்கு பகுதிகளுக்கு இடையேயான தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் சீனாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள குயென் தனது பெயரை ஹோ-சி-மின் என மாற்றி வைத்துக் கொண்டார். ஹோ-சி-மின் என்ற பெயருடன் முதிர்ந்த சீன கம்யூனிஸ்ட் தோழர் ஒருவருடன் 10 நாட்கள் இரவும் பகலும் இடைவிடாது நடந்து சீனாவின் கியென்டங் வந்து சேர்ந்தார். பயணக்களைப்பில் ஒரு விடுதியில் தங்கியிருந்த ஹோ-சி-மினை சீனப் போலிஸ் கைது செய்தது.

அவரை விடுதலை செய்யக்கோரி இந்தோசீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் இயக்கங்களை நடத்தியது. 13 மாதகால சிறை வாழ்விற்குப்பின் ஹோ-சி-மின் விடுதலை செய்யப்பட்டார். பின் 1944 ஜுலையில் மீண்டும் வியத்நாம் திரும்பினார். வியத்நாம் சூழலில் அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டம் இரண்டும் கலந்ததொரு திட்டமே சரியானதாக இருக்குமென்று முடிவுக்கு வந்த ஹோ-சி-மின் மக்களிடையே அரசியல் பிரச்சாரம் செய்ய விடுதலைப் பிரச்சார படை அமைக்க உத்தரவிட்டார். மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஆயுதபாணி ஆக்க வேண்டுமென்றும் அவர்கள் கொரில்லா போர் முறையை கையாள வேண்டுமென்றும் கூறினார். இதன்வழி ஆயுதமேந்திய முதல் அரசியல் பிரச்சாரக் குழு ஜெனரல் கியாப் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழு முதல் தாக்குதலை பிரெஞ்சு சாவடிகள் மீது நடத்தி முதல் வெற்றியை ஈட்டியது. இம்முறை மக்களிடையே மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

தொடர்ந்து சாதகமான சூழ்நிலை உள்ள இடங்களிலெள்ளாம் கொரில்லா தாக்குதலை நடத்தி அந்தப் பகுதிகள் விடுவிக்கப்பட்டன. 1945 ஏப்ரல் மாதத்தில் ஹனோய்க்கு வடக்கில் உள்ள பல மாநிலங்கள் புரட்சிப்படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. மே மாதத்தில் ஹோ-சி-மினும் முக்கிய தோழர்களும் நீண்ட பயணம் செய்து தூயென்குவாங் மாநிலத்திலுள்ள டான்ட்ராவோ என்ற ஊரை கைப்பற்றி அதை தற்காலிகத் தலைநகராக ஆக்கிக் கொண்டு புரட்சி நடவடிக்கைளை தொடர்ந்தனர். டான்ட்ரோ நகரில் கட்சி மாநாட்டை ஆகஸ்ட் 13ம் நாள் கூட்டினார். மாநாடு ஆயுதம் தாங்கிய புரட்சி மூலம் ஆக்கிரமிப்பு அரசை அகற்றவும், ஜனநாயகக் குடியரசை அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றியது.

மாநாட்டில் அமையப்போகும் குடியரசின் தேசியக் கொடியும் உருவாக்கப்பட்டது. ஹோ-சி-மின் தலைமையில் 11 பேர் கொண்ட தேசிய விடுதலைக் குழு அமைக்கப்பட்டது.
மாநாட்டு முடிவுப்படி விடுதலைப்படை ஆயுதபோராட்டத்தை தொடங்கியது. ஹனோய் உட்பட வடவியட்நாம் முழுவதும் கைப்பற்றப்பட்டது. ஹனோய் நகரில் ஆகஸ்ட் 19ம் நாள் இலட்சம் பேர் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. ஆகஸ்ட் 27ம் தேதி விடுதலைப் படையின் பெரும்பகுதி ஹனோய்க்கு வரவழைக்கப்பட்டது. அன்று புரட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்ட செய்தி அறிவிக்கப்பட்டது. புதிய அரசின் தலைவராகவும் வெளியுறவுத்துறை அமைச்சாராகவும் ஹோ-சி-மின் பொறுப்பேற்றார். வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் ஹோ-சி-மின் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969 செம்டெம்பர் 3ம் நாள் தனது 79ம் வயதில் ஹோ-சி-மின் காலமானார்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com