Contact us at: sooddram@gmail.com

 

பாம்புகள், உண்ணிகள், பருந்துகளுடன் பாவப்பட்ட தமிழ் மக்கள்

(மாதவன் சஞ்சயன்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு பதியப்படாது என மாவை அறிவித்து விட்டார். 4 கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே ஏற்படுத்தப்படும் என் கூறும் அவர் ஏற்கனவே கழட்டிவிடப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணி அதில் இடம்பெறாது என்பதி மறைமுமாக 4 கட்சிகள் என வரையறுத்து விட்டார். புலிகளின் அனுசரணையில் ஆரம்பத்தில் த. வி. கூ, ஈ பி ஆர் எல் எப் , டெலோ இணைந்து த தே கூ அமைக்கபட்டது. பின் சங்கரியாரின் தனித்துவ போக்கால் மாவை உள்குத்து வேலை செய்து மீள் உருவாக்கம் பெற்ற தமிழ் அரசு கட்சிதான் எங்கும் எதிலும் தலைமை தங்கவேண்டும் என்ற நிலைப்பட்டாலேயே த தே கூ பதியப்படுவது தவிர்க்கபடுகிறது. த தே கூ வில் புதிதாக இணைந்து வெல்பவர்களை தமிழ் அரசு கட்சி உறுப்பினராக்கும் கைங்கரியத்தை சூட்டோடு சூடாக செய்து விடுவார்கள். அவ்வாறு இணைந்தவர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் அவர்கள் முன்பு வேறு அமைப்புகளில் இயங்கியவர்களாக அல்லது வால்களாக செயல்பட்டவர்களாக இருப்பார்கள்.
அனால் த தே கூ வில் இணைந்த பின் அவர்களுக்கு தமிழ் அரசு கட்சி உறுப்பினர் பதவி தந்து நண்பேண்டா என ஆக்கிவிடுவார்கள். சிறிதரன், சரவணபவன்,சுமந்திரன் முதல் ஆனந்தி,சயந்தன் வரை இது தான் நிலை.

தமிழ் அரசு கட்சி ஆரம்பிக்க பட்டது முதலே தேர்தலுக்கு வேட்பாளர்களாக தெரிபாபவர்களை அவதானித்தால் ஒரு உண்மை விளங்கும். அது அந்த கட்சிக்காக உழைத்தவர்களை விட வாக்குகளை பெறக்கூடிய வசீகரங்களுக்கு தான் வேட்பாளர் அங்கீகாரம் வழங்கப்படும். உரிமை பற்றி பேசி மக்களிடம் வாக்குகளை பெற வசீகரங்களை நம்பியே அதன் பயணம் தொடர்ந்திருக்கிறது. கொள்கை பிடிப்புள்பட்டு, மக்கபட்டு நலன்சார்ந்த முடிவுகளை மேற்கொள்ளகூடியவர்கள் ஓரங்கட்டபட்டு பட்டுபீதாம்பரங்களும் வாய்சொல் வீரர்களும் வாய்ப்பை பெறுவார். கொள்கைவாதி என்பதால் காவலூர் நவரட்ணம் கட்சியில் இருந்து களட்டி விடப்பட்டார். கிளிநொச்சி சிவசுந்தரம் இடையில் எம் பி பதவியை இராஜினாமா செய்தார். உள்ளூர் கொக்குகள் இருக்க வெளியூர் கூளக்கடாக்களான சூசைதாசனும் யோகேஸ்வரனும் தேர்தலுக்காக கூட்டிவரப்பட்டனர். கிழக்கில் மாட்டு வண்டில் கட்டி கிராமம் தோறும் சென்று கட்சி வளர்த்த ராஜதுரையின் காலை வார காசி ஆனந்தனை வீட்டுசின்னத்தில் போட்டியிட வைத்தார் அண்ணன் அமிர்தலிங்கம்.

ஆரம்பகாலத்தில் தமிழரசு கட்சி தலைவர் செல்வா தோற்ற பொது கூட ராஜதுரை வென்றார் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும். அப்படிபட்டவருக்கு கழுத்தறுப்பு செய்ய முற்பட்ட கட்சிதான் தமிழ் அரசு கட்சி. இங்கு அண்மை காலமாக சங்கரியார் கூறும் ஒரு வரலாற்று தவறை சுட்டிகாட்ட வேண்டும். 1974 த வி கூ ஆரம்பிக்கபட்ட பின் மாவை மீளுருவாக்கம் செய்யும் வரை தமிழ் அரசு கட்சி ஒருபோதும் இயங்கவில்லை என அவர் கூறுவது தவறு. 1977 தேர்தலில் மட்டகளப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் ராஜதுரைக்கும் காசி ஆனந்தனுக்கும் வேட்பாளர் அனுமதி கொடுக்க முற்பட்ட போது ராஜதுரை அதனை கடுமையாக எதிர்த்தார். இதனை சாதுரியமாக தவிர்க்க அமிர்தலிங்கம் காசி ஆனந்தனை தமிழ் அரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வைத்தார். காசியை வெல்ல வைக்கவும் ராஜதுரையை தோற்கடிக்கவும் த வி கூ கொழும்பு கிளை ரகுபதி பால ஸ்ரீதரன் தீப்பொறி ஆசிரியர் அந்தனிசில் போன்றோர் மட்டக்களப்பில் மேடைதோறும் ராஜதுரைமீது வசைபாடினார். கோவை மகேசன் சுதந்திரன் பத்திரிகையில் அதனை பிரசுரித்தார்.
இளைஞர்கள் காசிபின்னால் கோசமிட்டு அலைந்தனர். வயல் வெளி கிராமங்களுக்கு செல்ல முள்கம்பி வேலிகளை கடக்கவேண்டும். அப்போது தம்பிமார் கம்பியை தூக்கி பிடிக்க காசி கடந்து போய் கவிதை சொல்வார். "தம்பி தூக்க கம்பி கடந்தான் எம் பி ஆவான்". புல்லரித்து போவர்கள் இளைஞர்கள். தமிழ் ஈழத்துக்கு ஆணை கேட்ட அந்த தேர்தலில் ராஜதுரை துரோகி என வர்ணிக்கப்பட்டார். ஆனால் மக்கள் அவரி வெல்லவைத்தனர். காசிஆனந்தன் தோற்றுப்போனார்.

பின்பு அதே மட்டக்களப்பு மாவட்டத்தில் 1989ல் அண்ணன் அமிர்தலிங்கம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். முற்பகல் செய்தது பிற்பகல் அவருக்கு பதிலாக கிடைத்தது. அமீர் வாரிசு என்பதால் சங்கரிக்கு சங்கூத மீண்டும் தமிழரசு கட்சியை தூசு தட்டி புதுப்பித்தார் மாவை. இங்கு கவனிக்க படவேண்டியது தமிழரசு கட்சியில் வாக்கு அரசியலுக்கே முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது. இது பாம்பு தன் தோலை உரித்து புதிதாக மிளிர்வதுபோல் தமிழ் அரசு கட்சியும் காலத்தேவைக்கு ஏற்ப புதியவர்களை பயன்படுத்தி கவர்ச்சி அரசியல் செய்வதும் அதே பாம்புகளின் செயல்தான்.

இன்று தமிழரசு கட்சியின் பாராளுமன்ற மாகான சபை உறுப்பினர்களை அவதானித்தல் அநேகமானோர் வந்தேறுகுடிகளே. 1977 வரை சம்மந்தர் தமிழரசு கட்சி உறுப்பினர் இல்லை என்பதற்கு சங்கரியார் சாட்சி. மாவையை தவிர்த்து அநேகமானோர் இருந்த இடங்கள் வேறு வேறு. ஆனால் கட்சியை ஆரம்பித்தவர்கள் அதன் வழி தொடர்ந்தவர்கள் இன்றும் கட்சியை காப்பற்ற நினைப்பவர்கள் களட்டிவிடப்பட்டு புதிய தோலுடனான பாம்புகள் கூடாரம் தான் தற்போதைய தமிழ் அரசு கட்சி. எனவேதான் தங்களுடன் வந்து ஒட்டிய ஏனைய கட்சிகளுடன் இணைந்து த தே கூ வை பதிய அது தயங்குகிறது.

அதே வேளை ஓட்டினால் தான் தப்பி பிளைக்கலாம் என எண்ணும் சுரேஸ் பிரேமசந்திரன் எப்படியும் பதிய வேண்டும் என இயன்ற வரை சன்னதமாடி சுவிஸ் வரை விடயத்தை கொண்டு சென்று புலி பினாமிகள் மூலம் மாவையையும் ஜனாவையும் பணிய வைக்க பார்த்தார். பிரபாகரன் பரலோகம் போனபின்பு பயம் தெளிந்த அவர்கள் பொட்டர் கூட இப்போது இல்லை என்ற தைரியத்தில் சிலிர்த்து எழுந்து மறுத்து விட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் டெலோ கூட்டமைப்பில் இருந்தாலும் தனிப்பட்டரீதியில் மன்னர் வவுனியா செட்டிபாளையத்தில் அவர்கள் தங்களை தக்கவைக்க முடியும். புளட் சில இடங்களில் தன்னை நிலை நிறுத்தும். பரிதாப நிலையில் இருப்பது சுரேஷ் மட்டுமே. தனித்து போட்டியிட்டால் துணைக்கு தம்பியாரை தவிர யாரும் கூட வராத நிலை.

வவுனியாவில் ஆனந்தன் வென்றாலும் கூட இவர் எந்த பக்கம் சென்றாலும் சனி வாலயம் தான். ஈ பி ஆர் எல் எப் எனும் கட்சியின் தலைமையை வைத்து கொண்டு அதன் உண்மையான தோழர்களை தொலைத்தவர் இவர் என்பதால் ஒட்டுண்ணியாக இருந்தால் மட்டுமே எம் பி என்ற பதவி இரத்தத்தை சுவைக்க முடியும். எனவேதான் த தே கூ வை பதிந்தால் தானும் இணை தலைமை பெற்று பின் தலைமைக்கு வந்துவிட்டால் காலமெல்லாம் கதிரை நிச்சயம் என கணக்கு போடுகிறார். அதை அறிந்து தான் மாவையார் பின்னடிக்கிறார். மாவை கூறும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுரேஸ் தான் முண்டியடித்து கையொப்பமிடுவார். பிரிந்து போனால் கிழியும் கிருஸ்னகிரி என்பதால் தான் மட்டும் எம் பி யானால் போதும் என ஒத்துப்போவார். ஒட்டுண்ணியாய் வாழ்வதே அவர் அரசியல் வரலாறாகிபோகும் அளவிற்கு அந்த கட்சியின் உண்மை தோழர்களை உதாசீனம் செய்ததால் தான் அவருக்கு இந்த நிலை.
வாக்கு அரசியல் பாம்புகளான தமிழ் அரசு கட்சியும் ஒட்டுண்ணி சுரேசும் ஒரு பக்கம் என்றால்

புது கோசத்தோடு வருகிறது பருந்து அணி. பாம்புகளையும் உண்ணிகளையும் விலத்தி மக்களை வேறு திசை நோக்கி செலுத்த அவர்கள் தமிழ் தேசியம் பேசுகிறார்கள். ஐயா விக்னேஸ்வரனுக்கு பகிரங்க அழைப்பு ஆனந்தியுடன் ஆலோசனை யாழ்ப்பாணத்தில் நிவாரணம் மட்டக்களப்பில் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு என பலவாறான செயல்பாடுகளை ஆரம்பித்துவிட்டார்கள். இது சற்று ஆபத்தான சூழ்நிலையை உருவாக்க போகிறது. அழிவிற்கு பின்னான ஆக்கத்துக்கு வழிசமைக்காது மேலு அவலங்களுக்கான பாதையாகவே இது தென்படுகிறது. யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் சென்றும் தேவையற்ற ராணுவ பிரசன்னம் நீக்கப்படவில்லை. காரணம் புலிகளின் மீள்வருகை எனும் புலுடா கதை. தென் இலங்கையில் அரசியல் செய்ய ஒரு பகுதியினருக்கு இப்போதும் புலிகள் தேவைப்படுகின்றனர். அதற்கு தீனி போடும் செயலை தான் இந்த பருந்துகளும் பறந்து பறந்து செய்கின்றன. வெளிநாடுகளில் புலிபினாமிகள் பிரபாகரன் போனபின் இழந்த தம் வருமானங்களை வசதியான வாழ்க்கையை மீள் நிலை நிறுத்த இவர்களை பயன்படுத்துகிறார்கள். இவர்களும் ஏற்கனவே பிரபாகரன் கால் பணிந்து பெற்ற பாராளுமன்ற பதவிகளை மீண்டும் அனுபவிக்க மக்களை அவலத்தில் தள்ளும் செயலை செய்ய முற்படுகின்றனர்.

பாம்புகள் தோலுரித்து பளபளப்பு காட்டி உர்ந்து திரிந்தாலும் மிதிக்கதவரை கடிக்காது. தன் தோழர்களையே படுகுழியில் தள்ளியது உண்ணி. தம் உயிரை பணயம் வைத்து போரடிய தோழர்களின் இரத்தத்தை உறிஞ்சி பருத்த உண்ணி ஆபத்தானது. செல்வம் சித்தார்த்தன் எப்போதும் தோழர்களுடனும் மக்களுடனும் நிற்கின்றனர். சிவசக்தி ஆனந்தனும் தோழர்களை விலத்தி ஓடுவதில்லை. ஆனால் தான் மேல் ஏற மற்ற நண்டுகளின் காலை பிடித்து தொங்கும் கொளுத்த நண்டு கட்சி தோழர்களை மட்டுமல்ல புத்திஜீவிகளையும் கைவிட்டமைக்கு கேதீஸ்வரன் உட்பட ஐந்கரநேசனும் சாட்சி. இ தை விட ஆபத்தானது பருந்துகள். இந்த பருந்துகள் எம் குஞ்சுகளை தூக்கி சென்று கழுகிடம் கொடுத்துவிடும். யுத்தத்தின் பின் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பிய முன்னாள் போராளிகளை இளைஞர்களை மீண்டும் போராட்ட பாதைக்கு கூட்டி செல்ல முற்படு இந்த கூட்டத்தால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் கொடூரமானவையாக அமையும்.

 முள்ளிவாய்கால் இறுதி நாட்களில் அப்போது லண்டனில் பாதுகாப்பாக இருந்த புலிகளின் பினாமி எம் பி பத்மினி சிதம்பரநாதன் ராணுவபகுதிக்குள் தப்பிவந்த மக்களை பராமரிக்க சென்ற சிவசக்தி ஆனந்தனை தொலை பேசியில் தொடர்பு கொண்டு தலைவரின் பாதுகாப்பை கைவிட்டு வந்த மக்களை துரோகிகள் அவர்களுக்கு உதவேண்டாம் என கூற ஆனந்தன் அவரை திட்டி தீர்த்து மக்களை பலிகொடுத்தா உங்கள் தலைவரை காப்பாற்றவேண்டும் என கேட்டதும் நடந்தேறியது. பிரபாகரனுக்கு பின் தட்டிகேக்க ஆளில்லாத த தே கூ புலி பினாமிகளான பத்மினி, கஜேந்திரன் போன்றோரையும் முரண்பட்ட சிவாஜி, சிறிகாந்தா வையும் களட்டிவிட்டது. அனால் பொன்னர் பேரன் குமார் மகன் மட்டும் உள்வாங்கபட்டார். ஆனால் அவரோ உறவுகள் தொடர்கதை என கூறி தனி வழி சென்று மண்கவ்வினார். இன்று புலி பினாமிகள் உந்துதலில் தமிழ் தேசியம் பேசி இளைஞர்களை திசை திருப்ப பார்க்கிறார்.

உரிமை போராட்டத்துக்கான தேவை இன்னமும் இருக்கிறது. ஏனென்றல் இந்தநாட்டில் தமிழர்கள் பூரண சுதந்திரத்துடன் சுயமரியாதையுடன் வாழும் முழுமையான சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை. அகதிமுகாம் வாழ்க்கை, காணிகள் மீளளிக்கபடாமை, தேவையற்ற ராணுவ பிரசன்னம், பூரண புனர்வாழ்வு கிடைக்காமை என் 30 வருடத்தில் தொலைத்த பல விடயங்களை போராடி பெறவேண்டிய நிலை தான் இன்னமும் இருக்கிறது.
அள்ளித்தந்தாலும் போதாது, கிள்ளித்தான் தரப்படுகிறது. அங்கொன்றும் இன்கொன்றும் என 1000 ஏக்கர் 300 ஏக்கர் என விடப்படுகிறதே தவிர மக்கள் வாழ்ந்த நிலம் மக்களுக்கே என்ற ஒரே முடிவு எடுக்கப்பட, அவை விடுவிக்க பட இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமோ என்ற கவலை வன்மமாக மனதில் உண்டாவது தவிர்க்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக சிறைகளில் வாடுபவர்கள் பற்றிய முடிவு எடுக்கப்பட்டு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் வெளியே வந்தால் மட்டுமே உயிரோடு இருப்பவர்கள் இறந்தவர்கள் யார் என்ற முடிவுக்கு சொந்தங்களால் வரமுடியும். அதுவரை சிறை வாசல்களில் தவம் கிடப்பதும் ரகசிய முகா ங்களை தேடுவதும் வருத்தத்தை வன்மமாக்கும். அதை பயன்படுத்தும் முகமாகவே இவர்கள் தமிழ் தேசிய கோசத்துடன் வருகிறார்கள்.

சமஸ்டி கோசம் தனிநாட்டு கோரிக்கையாக மாறி அது பின் இயக்க மோதல்களாக மாறி முள்ளிவாய்காலில் எதிரி ஏக்காளமிட்ட சத்தம் இன்னமும் அடங்கவில்லை. அதற்குள் அடுத்த தடவையும் அதே நிகழ்ச்சிக்கு அத்திவாரம் போட முனைகிறது இந்த புலம்பெயர் புண்ணியவான்கள் வழிநடத்தும் பதவி வெறி கூட்டம். இன்று தென் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையில் இனவாத பேய் பூதாகரமாக வெடிக்கக்கூடிய சாத்தியம் நிறையவே உண்டு. காரணம் என்னை தோற்கடித்தது வடக்கு கிழக்கு தமிழரும் முஸ்லிம்களும் என தோற்ற அன்றே தங்கலையில் தன் வீட்டில் இருந்து கூறியவர் மகிந்த ராஜபக்ச. டக்ளசும் கருணாவும் அஸ்வரும் அவர்பக்கம் இருந்தபோதும் இனவாதம் அவர் நாக்கில் நர்த்தனம் ஆடியது. இன்று அவரே தலைமை வேட்பாளராக வேண்டும் என்ற கோசத்துடன் புறப்படும் கூட்டம் இனவாத பூதங்களாகவே காணப்படுகின்றன.


விமல், தினேஷ், வாசுதேவ என அனைவருக்கும் மகிந்தரின் பதவியில் இருக்கும் அக்கறை மாற்று இன மக்களின் நலனில் இல்லை. சிங்கள மக்களை சிந்தை மயக்கி சினம் கொள்ள செய்து மகிந்தரை கதிரையில் அமர்த்த அவர்கள் எதனையும் பேசுவார்கள். இதனால் சிங்கங்களின் மோதலில் சிக்குண்ட மான்களின் நிலை எம்மவருக்கு ஏற்படலாம்.
நாமே நம்மை பலியிடுவது போல் தமிழ் தேசியத்தின் நடவடிக்கை மகிந்த அணி புலி வருது என கூறியதை மாற்றி புலி மீளவும் வந்துவிட்டது என கூறவைக்கும். மகிந்தரடி வருடிகள் அத்தனை பேரும் பாராளுமன்றத்தில் படுத்துறங்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டனர்.நீதி அமைச்சராக, வெளிவிவகார அமைச்சராக இருந்த பீரிஸ் அவர்களே கோத்தா வுக்காக குரல்கொடுத்து நீதிமன்றத்தை அவமதித்ததாக நீதிமன்றால் எச்சரிக்கபட்டு பிணையில் விடுவிக்க பட்டத்தை பார்க்கும் போது தமிழர்களை தம் பதவி சுகத்துக்காக பாவிக்க மாட்டர்களா என்ற கேள்வி எழுகிறது.


எங்கோ இருக்கும் புலிபினாமிகள் அந்த நாடுகளில் தம் சுகபோக வாழ்க்கைக்காகவும் இங்குள்ள அதன் வால்கள் தம் பாராளுமன்ற பதவி சுகத்துக்காகவும் நடத்தபோகும் கூத்தில் எம் இனம் இன்னம் எத்தனை முள்ளிவாய்கால்களை சந்திக்க போகிறதோ என்ற கேள்வி எழுகிறது. பாதிக்கபட்ட பாவப்பட்ட எம் மக்கள் சார்பாக நாம் உடனடியாக செய்யவேண்டியது வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாட்டின் சகல பகுதிகளிலும் வாழும் புத்திஜீவிகள் (வைத்தியர், சட்டத்தரணிகள், எந்திரிகள், விரிவுரையாளர்கள், அரச நிர்வாக சேவையாளர்கள் ) கல்விசார் சமூகத்தினர்,சமய சமூக தலை வர்கள் அனைவரும் ஒரு அமைப்பை அரசியல் சாராதவர்களை கொண்டு உருவாக்கி எந்த சுயநல அரசியல் உள்நோக்கமும் இல்லாதவர்களை தெரிவு செய்து எதிர்வரு தேர்தலில் போட்டியிட வைக்கவேண்டும். வென்றபின் அமையும் அரசாங்கத்துடன் எந்தவிதமான உறவுகளை கொண்டிருப்போம், எவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்ற கொள்கை விளக்கத்துடனான தேத்தல் பரப்புரைகளை செய்து மக்களை தெளிவு படுத்தவேண்டும். அவர்களை ஓரணியில் அணிதிரள செய்யவேண்டும்.

இது கலத்தின் கட்டாயம் என சகல ஊடகங்களும் இதய சுத்தியுடன் இந்த காரியத்தை மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டும். காலா காலமாக தோலுரித்து மின்னும் பாம்புகள் மூத்தவர் அரசியல் ஞானம் கொண்டவர் என்ற மாயையை விடுத்து புதியவர்களை கறை படியாதவர்களை களம் இறக்கவேண்டும். பதவி சுகத்துக்கான ஒட்டுண்ணிகள் தோற்கடிக்கவேண்டும். எம் இனத்தில் இலைமறையாக சுயநலமில்லாத மக்களுக்கு நல்லதை செய்யகூடியவர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கான சந்தர்ப்பத்தை கொடுத்து நம் இனம் அழிவில் இருந்து மீளவும் புதிய சவால்களுக்கு முகம்கொடுக்கவும் தயார்ப்படுத்த படவேண்டும்.
 

சென்ற ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்களின் செயல்பாட்டை நாம் முன்னுதாரணமாக கொள்ளவேண்டும்.அந்த தேர்தலில் முஸ்லிம் புத்திஜீவிகள் மததலைவர்கள் சமூகத்தலைவர்கள் செயல்ப்பாட்டால் முஸ்லிம் கட்சிகள் மக்களின் முடிவிற்கு மண்டியிட்டதை போல மக்களும் இன்றிருக்கும் பாம்புகளும் உண்ணிகளும் பருந்துகளும் கோடரிக்காம்புகளாக இனியும் செயல்பட விடாமல் புதியபாதையில் பயணிக்க அது மக்களுக்கு பலன் அளிக்க கூடியவாறான விடயங்களை கட்டுரைகள், கருத்தரங்குகள், நேர்காணல்கள், தொலைகாட்சி பேட்டிகள் மூலமாகவும் பாடசாலைகள் முதல் பல்கலைகழகங்கள் வரை கொண்டு செல்லவேண்டும். வேற்று கோசங்களாலும் வாய்வீச்சு பேச்சுகளாலும் நாம் 30 வருடங்கள் பின்னோக்கி சென்றுவிட்டோம். மீண்டுவர நாம் இதய சுத்தியுடன் செயல்பட்டாலே முடியம். பழையன களித்தலும் புதியன புகுத்தலும் தான் இனி எமக்குள்ள ஒரே வழி
(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com