Contact us at: sooddram@gmail.com

 

தண்ணீரில் தத்தளிக்கும் ரோஹிங்யோ மக்களின் கண்ணீர் கதை

(ஸெய்ன)

மியன்மாரில் மூன்று பிரதான இன முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மொத்த சனத்தொகையில் முஸ்லிம்கள் 6 முதல் 10 வீதம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், இது குறித்து துல்லியமான மதிப்பீடுகள் இல்லை. சுமார் 4 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளதாக சில இணையங்கள் கூறுகின்றன.

பிரதான மூன்று இனக் குழுமங்கள்:

01. பான்தாய் (பர்மிய பூர்வீகக் குடிகள்)

02. பஷ¤ஷ் (சீன, தாய்லாந்து பூர் வீகத்தினர்)

03. ரோஹிங்யோ (இந்திய பூர்வீகத்தி னர்) தற்போதைய பங்களாதேஷ் மக்களுக்கு நெருக்கமானவர்கள்.

இவர்களே இன்று இனச் சுத்திகரிப் புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 18ம் நூற்றாண்டில் அரக்கான் சுதந்திர முஸ் லிம் குடியரசை உருவாக்கி, இவர்கள் அமைதியாய் வாழ்ந்து வந்தனர். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அரக்கான், பலாத்காரமாக மியன்மாருடன் இணைக்கப்பட்டு, இன்று அவர்கள் வேரொடு பிடுங்கி வீசப்பட்டுள்ளனர். குடியுரிமை அற்றவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட, தீண்டப்படாத மக்கள் குழு மமாக அவர்கள் குறுக்கப்பட்டுள்ளனர்.

மனித உரிமை குறித்து மார்தட்டிப் பேசும் அமெரிக்காவின் அணுகுமுறையும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் செயற்பாடவே பார்க்கப்படுகின்றது. மியன்மாரில் ஜனநாயகம் துளியளவும் இல்லை. சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பும் இல்லை. இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் வெளிப்படைத் தன்மை குறைந்தபட்சமும் பேணப்பட வில்லை. மக்கள் உண்பதற்காக மட் டுமே வாய்களைத் திறக்கின்ற இந் நாட்டில், இராணுவச் சர்வாதிகாரம் மிகவும் கொடியது என்பதை ஒபாமா நன்கு அறிவார். இருந்தும் மியன்மார் அர சாங்கத்தின் மீதான பொருளாதாரத் தடையின் எச்ச சொச்சங்களையும் நீக் குவதற்கு அவர் மறைமுகமாக முன் வந்துள்ளமை நம்மை மயிர்க் கூச்செறி யச் செய்கின்றது.

மியன்மாரின் இராணுவ சர்வாதிகாரத் தின் 50 ஆண்டு கால வரலாற்றில் தற்போதைய தலைவர் தைன் ஷைனுக் கும் ஒபாமாவுக்கும் இடையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பு பலரது கவனத்தையும் ஈர்த் துள்ளது. இன்னொரு புறம் சமாதானம் குறித்து சர்வதேச அளவில் செயற்படும் சர்வதேச நெருக்கடிக் குழுவின் சமா தானப் பரிசு இவ்வருடம் ஒரு அரச பயங்கரவாதிக்கு வழங்கப்பட்டுள்ளமையும் பெரிய சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

மியன்மார் அரசாங்கம் கடமை யாக்கியுள்ள இரு குழந்தைச் சட்டம் அனைத்து வகை சர்வதேச சட்டங்களையும் ஒட்டுமொத்தமாக மீறும் கொடிய இனவாதமாகும். ரோஹிங்யோ மக்கள் பசியோடும் பட்டினியோடும் தெருக்களில் அலைந்தும் முகாம்களில் அடைந்தும் ஆறுகளில் அமிழ்ந்தும் தமது கணங்களை கடத்திக் கொண்டிருக்கையில், அவர்களுக்கு ஒரு இராணுவ சர்வாதிகார அரசாங்கம் தரும் நிவாரணத்தைப் பாருங்கள். இவையெல்லாம். மனித உரிமை பற்றிப் பேசப்படும். நாகரிகமடைந்த சமூகத்தில்தான் நடக்கின்றதா என்ற கேள்வி மீள மீள நமது சிந்தனையைக் கிளறுகின்றது. ரோஹிங்யோ முஸ்லிம்களின் கண்ணீர்க் கதை மீண்டும் உலகப் பார்வைக்கு வந்துள்ளது. மியன்மார் அரசாங்கத்தின் இனவாத கொலைத் தாக்குதல்களிலிருந்து தம் உயிரைக் காத்துக் கொள்ள தென்கிழக்காசிய நாடு களுக்கு அகதிகளாய் இடம்பெயரும் அவர்களின் நிலைமை அவலத்திற்கிட மாய் மாறியுள்ளது.

ஆயிரக்கணக்கில் கடல் வழியாக பாதுகாப்பற்ற படகுகளில் தென்கிழக்காசியா வில் கரையொதுங்க அவர்கள் எடுக்கும் எத்தனங்கள் தடுக்கப்படுகின்றன. மலே சியா, இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகள் அவர்களை அகதிக ளாக ஏற்க தொடர்ந்தும் மறுத்து வருகின் றன. ஏற்கனவே தமது நாடுகள் உள் வாங்கியுள்ள வெளிநாட்டு அகதிகளை பராமரிப்பது பெரும் சவால் என்று அவை கையை விரிக்கின்றன. சில நாடுகள் அற்ப சொற்ப நிவாரண உதவி களை தமது கடற்படை ஊடாக படகுகளில் மிதந்துகொண்டிருக்கும் அகதிகளுக்கு வழ ங்கி கடலில் தூரச் சென்று விடுமாறு கட்டளையிடுகின்றன.

இத்தனைக்கும் ரோஹிங்யோ இன முஸ்லிம்கள் பிறந்து வளர்ந்த மியன்மா ரில் கொலைத் தாண்டவமாடும் இனவாத அரசு அவர்களை மறைமுகமாக வெளி யேற்றி வருகின்றது. அகதிகளாய் ஏற்பதற்கு அடுத்த நாடுகள் தயாரி ல்லை. இப்படி இரண்டும் கெட்டான் நிலையில் தண்ணீரில் கண்ணீருடன் தத்தளிக்கும் நிலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர்.

மலேசியா உள்ளிட்டு 10 நாடுகள் அங்கம் வகிக்கும் ஏசியான் என்ற அமைப்பில் உள்ளன. இவை ஏற்க னவே 45,000 ரோஹிங்யோ முஸ்லிம் களை உள்வாங்கியிருப்பதனால், இதற்கு மேல் தமக்கு இடமளிக்க முடியாது என்று மறுக்கின்றன. மக்கள் மியன்மார் அரச படைக்குப் பயந்து பாதுகாப்பற்ற படகுகளில் தென்கிழக் குக் கரையோரங்களை நோக்கி இடம்பெயர்கின்றனர். பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், வயோதி பர்கள் என்ற வேறுபாடின்றி, பசியா லும் பட்டினியாலும் கடல் நடுவில் சிறிது சிறிதாக இறந்து கொண்டிருக் கின்றனர். ஏற்கனவே பலர் இந்தக் கொடுமையால் இறந்துவிட்டனர்.

“நாம் நடுக் கடலில் தத்தளிக்கின்றோம். பசியின் கொடுமையால் எமது குழந் தைகள் அழுதழுதே சோர்வடைந்து உறங்கி விடுகின்றனர். காற்று எமது படகை பயமுறுத்துகின்றது. பனிப் புகாரினால் குளிரின் கொடுமை தாங்காது பலர் நோயாளியாகியுள்ளனர். பட்டினியால் உயிரிழக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. உண்பதற்கு உணவோ, உடு துணியோ இல்லாமல் தத்தளிக்கின்றோம்” என படகிலிருந்து ஊடகங்களுக்கு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர் சிலர்.

இதற்கு முழுப் பொறுப்புக் கூற வேண் டிய மியன்மார் அரசாங்கம், அகதிகள் பிரச்சினைக்கும் எமக்கு சம்பந்தமில்லை என்று நழுவிப் போவதை ஐ.நா மெளன மாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. கடல் வழியாகச் செல்லும் ரோஹிங்யோ பட குகளை மிதக்கும் சவப் பெட்டிகள் என்று வர்ணித்துள்ள ஐ.நா இந்த அகதி களை யாரேனும் ஏற்காவிட்டால் சாவு நிச்சயம் என்று தீர்ப்பளித்து விட்டு தனது பணியைச் சுருக்கியுள்ளது. துருக்கி மாத்திரமே இதுவரை நிவாரணக் கப்ப லொன்றை அனுப்பி வைத்துள்ளது.

அறபு, முஸ்லிம் நாடுகளோ பொறுப் பற்ற விதத்தில் செயல்படுகின்றன. ஒரு சமூகம் பிடுங்கி வீசப்பட்டு, நடுக்கட லில் நாதியற்றுத் தத்தளிக்கும்போது நாம் எல்லோரும் அவர்களை வெறும் செய்தியாகவே பார்க்கின்றோம். மனச் சாட்சியுள்ள ஒவ்வொரு மனிதனும் இந்த மக்கள் திரள் குறித்து அக்கறை கொள்ள வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com