Contact us at: sooddram@gmail.com

 

புங்குடுதீவு வித்யா

(மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்)

யாழ். புங்குடுதீவு ஆலடி சந்திப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த சி. வித்தியா (வயது 18) என்ற உயர்தர வகுப்பு மாணவியே கடந்த 14ம் திகதி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் செய்தியானது வடக்கு மாகாணமெங்கும் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இம்மிலேச்சத்தனமான படுகொலையையிட்டு வடக்கின் பல பிரதேசங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சமூக நல அமைப்புகளும் பிரபல அரசியல் கட்சி தலைவர்களும் தத்தமது கண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் இந்நிலையில் எல்லாவித செய்தி ஊடகங்களும் முகனூல் பதிவாளர்களும் இந்த மாணவியின் கொலை தொடர்பாக பல கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

மாணவி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவர்கள் மூவரும் கொலை செய்யப்பட்ட மாணவியின் உறவினர்கள் எனவும் குடும்ப பகையே இக்கொலைக்கு காரணம் எனவும் சொல்லப்படுகின்றது.

யாழ் மாவட்ட பா. உறுப்பினர்களான டக்லஸ் தேவானந்தா, மாவை, சேனாதிராசா, சி.சிaதரன் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட மக்கள் பிரதிநிதிகளும் வித்தியாவின் இறுதி நிகழ்விற்கு வந்து இறுதி விடை கொடுத்தனர்.

இந்த வித்தியாவின் கொலைக்கு காரணமானவர்களென சந்தேகத்தின் பெயரில் கைதாகியுள்ள குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜர் ஆக கூடாது என யாழ். பல்கலைக்கழக சமூகம் சபதம் எடுத்துள்ளது. புங்குடுதீவு மாணவியின் படுகொலை நீதி கோரி யாழ். பல்கலைக்கழக சமூகத்தால் மேற்கொள்ளப்பட்ட கண்டன போராட்டத்தின் பின்னரே யாழ். பல்கலைக்கழக சமூகம் அவ்வாறு சபதம் எடுத்துக்கொண்டது. அத்துடன் அவ்வாறான குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜர் ஆகும் சட்டத்தரணிகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியான மாபெரும் போராட்டத்தினை முன்னெடுப்போம் எனவும் பல்கலைக்கழக சமூகம் எச்சரித்துள்ளது.

இக்கொலை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் வடக்கு மாகாண பிரதிபொலிஸ் மாஅதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “வடக்கில் காணப்படும் குற்றங்களோடு தொடர்புடையவர்கள் சம்பந்தமாக பொலிஸ் எடுக்கின்ற நடவடிக்கைகளில் மீது கேள்வி எழுந்துள்ளது. “இத்தகைய கொடூரமான வெறித்தனமான குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படும் சம்பவங்களால் வடக்கு மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது” என்கிற அரசாங்கத்தை நோக்கிய சகட்டு மேனித்தனமான குற்றச்சாட்டுக்களே இடம்பெற்றுள்ளன.

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னரும் யாழ்ப்பாணத்திலே ஒரு பெண் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்னர் கூட வன்னியிலும் இதுபோன்ற சரண்யா என்னும் பெற்றோரை இழந்து பதினாறு வயது மாணவி ஒருத்தி பாலியல் வன்முறைக் குள்ளாக்கப்பட்டு பின்னர் இறந்து போனார். ஆனால் இந்த கொலைகளெல்லாம் இதுபோன்று அதிக கவனம் பெறவில்லை. வெட்டிகொல்லப்பட்ட பெண் கணவனை இழந்தவள் என்பதும் அவள் இளைஞன் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தாள் என்பதும் அவளைப் பற்றி வெளிவந்த செய்திகள்.

இதனூடாக எமது சமூகத்தின் பார்வையில் உண்டாக கூடிய அவள் குறித்த “கீழ் தர” எண்ணமும் அவள் ஏதோ ஒரு வகையில் தண்டிக்கப்பட வேண்டியவள்தான் என்கின்ற வரட்டு மனநிலையும் அந்த மெளனத்துக்கு காரணமா யிருக்கலாம்.

வன்னி சிறுமி சரண்யா ஒரு ஏழை. ஆதரவற்றவள் என்பதனால் அவளது கொலை பற்றிய கேள்விகள் போதியளவு எழுவில்லை.

ஆனாலும் பின்னர் அக்கொலையில் தலையிட்ட மனிதாபிமான செயற்பாட்டாளர்களின் முயற்சியால் அக்கொலை குறித்த விசாரணைகள் பின்னர் முடுக்கிவிடப்பட்டன. எப்படியோ இதுவரை காலமும் இத்தகைய சம்பவங்களின் போது இடம்பெறாத கவனயீர்ப்பு இந்த வித்தியாவின் கொலையின் பின்னராவது இடம்பெற்றிருப்பது நின்மதியை தருகின்றது. ஆனால் இந்த வக்கிர எண்ணம் கொண்ட இளைஞர்களின் உருவாக்கம் எதிலிருந்து தொடங்குகின்றது? இவர்கள் எப்படி இத்தகைய கொடுமைகளை மிக மிக சாதாரணமாக செய்துவிடும் மனோநிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்?

இத்தகைய பாலியல் வன்முறைகளுக்கும் கொலைக ளுக்கும் பின்னணியில் இருந்து செயல்படும் எமது சமூக உறவுகளின் தாக்கம் எத்தகையது? எமது கலாசாரம், பண்பாடு என்கின்ற பெயர்களில் கட்டிக் காக்கப்படும் சாதிய ஆணாதிக்க தடிப்புகளும், சண்டித்தனங்களும் இத்தகைய மிலேச்சத்தனங்க ளுக்கு எப்படி துணை புரிகின் றன? என்கின்ற கேள்விகளை நாம் ஒருபோதும் கேட்பதில்லை.

பொலிஸ் தரப்பு பதிவுகளுக்கு அப்பால் இது பற்றிய ஆய்வுக ளோ தரவுசேகரிப்புகளோ எமது சமூகமட்டத்தில் இல்ல வேயில்லை. தம்மை சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களோ சிவில் சமூக பிரதிநிதிகள் என்று தேர்தல் காலங்களில் மட்டும் தலை காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குஞ்சம்கட்ட பாதிரிமாரோடு இணையும் அரைவேக்காட்டு புத்திஜீவிகளோ இத்தகைய முயற்சிகளில் இறங்குவதேயில்லை. அவர்க ளுக்கு அது அவசியமானதொரு பணியாக தெரிவதில்லை.

அது பற்றி அக்கறை கொள் பவர்களை எமது சமூகம் வீணர்கள், பிழைக்கத் தெரியா தவர்கள் என்கின்ற பட்டம் கொடுத்தே கெளரவிக்கின்றது. ஏதோ பிறந்தோமா படித்தோமா முடிந்தவரை உழைத்தோமா என்று செக்குமாட்டுதனமாக செயல்படுபவர்களே எமது சமூகத்தின் மதிப்புக்குரிய வர்களாகின்றார்கள். இந்த இழிநிலை எப்போது நீங்குகின் றதோ அப்போதுதான் தமிழ் சமூகத்தில் ஒரு பொதுநல அக்கறைகொண்ட சிவில் கட்டமைப்பு துளிர்க்கமுடியும்.

அதுவரை “எரிகின்ற வீட்டில் முடிந்தவரை பிடுங்கியது இலாபம்” என்னும் கொள்கை கொண்ட கூட்டமைப்பு தலை வர்களே எம்மை வழிநடத்து வார்கள். இல்லாவிட்டால் அமைச்சர் ஐங்கர நேசன் வித்தியாவின் கொலைக்கு புலிகள் இல்லாமையே காரணம் என்று பேசியிருக்கமாட்டார். புலிகளின் காலத்தில் பெண்கள் இரவில்கூட சுதந்தரமாக நடமாடினார்களாம். எனவே புலிகளின் வரவுக்காக மக்கள் மீண்டும் காத்திருக்கின்றார்களாம்.

ஒரு பொறுப்புவாய்ந்த அமைச்சர் பேசுகின்ற பேச்சா இது? அது புலிகளின் நல் லாட்சியின் வெளிப்பாடு அல்ல. ஒரு மயான அமைதி யினை மக்கள் சுதந்திரமாக வாழ்ந்ததன் ஆதாரமாக திரிபுப டுத்த முடியாது. ஒரு நீதிமானின் அமைச்சரவையிலே அங்கம் வகிக்கும் ஒருவர் இப்படி பொய்சாட்சி சொல்லலாமா?

எந்த மக்கள் இவரிடம் புலிகள் மீண்டும் வர காத்தி ருக்கின்றோம் என்று இருந்தனர்? வயிற்றுப்பிழைப்புக்காக சுட்டுவிற்ற அப்பத்துக்கும் புலிகளுக்கு வரிகட்டிய ஏழைத் தாயா? பெற்றமகனை புலிகளின் ஆள்பிடிக்கு பறிகொடுத்த ஏக்கத்தில் பரிதவித்து செத்த தந்தையின் ஆன்மாவா? துரோகி என்றும் சமூக விரோதி என்றும் புலிகள் மின்கம்பத்தில் கட்டி தூக்கப்பட்ட தமிழ்மகனின் பரம்பரையா? பருவமடையா வயதிலே புலிகளால் கடத்தப் பட்டு பயிற்சி முகாம்களில் நரக வேதனையை அனுபவித்து கரும்புலிகளாய் மாண்டுபோன சிறுமிகளின் சகோதரர்களா? எந்த மக்கள் இவரிடம் புலிகள் மீண்டும் வர காத்திருக்கின்றோம் என்று இருந்தனர்.

இத்தகைய உரைகளுக்கு தடை விதிக்குமாறு நீதிமன் றங்களை அணுக வேண்டும். குறைந்த பட்சம் ஊடக தர்மம் என்பது பற்றிய எந்தவித அறிவும் இலங்கை செய்திகளை மையமாக கொண்டு செயல் படும் செய்தி ஊடகங்களை நடத்துபவர்களில் பெரும்பா லானோருக்கு இல்லை என்பதை கடந்த சில நாட்களாக இணையத்தளங்களில் வித்தி யாவின் படங்கள் பட்டபாடும் அது குறித்து வெளியான ஆபாச தலைப்புகளும் சொல்லி நிற்கின்றன. மேற்கு நாடுகளில் இதுபோன்ற சம்பவங்களின் போது ஒருபோதும் இப்படி யான புண்ணாக்குத்தன ஜேர்னலிசம் செய்ய முடியாது. ஏன் இந்தியாவில் கூட இது போன்ற பாலியல் வன் முறை கொலைகளுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்களின் படங்களை வெளியிடுவது சட்டரீதியாக தடை செய்யப் பட்டேயுள்ளது.

மறுபுறம் எடுத்ததற்கெல்லாம் அரசாங்கத்தையும் ஆமியையும் குற்றம் சொல்லி சொல்லியே வருவதன் அறுவடைதான் மூன்று இளைஞர்கள் அதுவும் சகோதரர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் திட்டமிட்டு ஈடுபடும் தைரியத்தை வழங்குகின்றது. எது நடந்தாலும் எமது சமூகத்தின் வண்டவாளங்களையெல்லாம் மூடிமறைத்து தமிழனின் “புனிதத்தை” பாதுகாக்கும் தலைவர்கள் இருக்கும் வரை வித்தியாவையும் சரண்யாவையும் கொலை செய்யும் பாதகர்கள் பயப்பட போவதில்லை. இதுபோன்ற கொலைகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் விடுகின்ற தூரநோக்கற்ற அறிக்கைகளும் செயல்பாடுகளும் மறைமுகமாக அல்ல நேரடியாகவே இந்த கொலை குற்றவாளிகளை பாதுகாக்ககின்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com