Contact us at: sooddram@gmail.com

 

மார்க்சிச கண்ணோட்டத்தில் இரண்டாம் உலகப்போரும் பாசிசத்தின் தோல்வியும்

கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி ஹட்டனில் நடைபெற்ற கிறிஸ்தவ தொழிலாளர் சங்கத்தின் மேதின தொழிலாளர் ஆராதனையின் போது பாசிசம் தோற்கடிக்கப்பட்ட 70வது ஆண்டு விழா தொடர்பாக தோழர் மோகன் சுப்பிரமணியம் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இது. கடந்த மே மாதம் 09ம் திகதி பாசிசத்தை தோற்கடித்த 70வது ஆண்டு விழாவை உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சோசலிஸ சக்திகள் விமர்சையாக கொண்டாடின. அன்றைய தினம் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ரஷ்யாவின் செஞ்சேனையும், சீனாவின் விடுதலை இராணுவமும் கூட்டாக அணிவகுத்து இந்த தினத்தை அனுஷ்டித்தன. பாசிசத்தை தோற்கடித்தது மட்டுமல்லாது உலக போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் 70வது ஆண்டாகவும் இதை நினைவுகூர வேண்டும்.

20ம் நூற்றாண்டை புரட்சியின் நூற்றாண்டாக வரலாறு கூறுகின்றது. அதற்கு காரணம் உண்டு. இந்த நூற்றாண்டில்தான் உலகை மாற்றி அமைத்த தீர்க்கமான சம்பவங்கள் நிகழ்ந்தன. இருபதாம் நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்கள் நிகழ்ந்துள்ளன. 1914 - 1918 வரை முதலாவது உலக போரும், 1935 - 1945 வரை இண்டாம் உலக போரும் நிகழ்ந்தன.

உலகை மாற்றியமைத்த மகத்தான அக்டோபர் புரட்சியும், சீனப் பெரும் புரட்சியும் நடைபெற்றதும் இதே நூற்றாண்டில்தான். அதேபோல் கொரிய புரட்சி, வியட்நாம் புரட்சி, கியூபா புரட்சி உட்பட தேசிய விடு தலை போராட்டங்கள் எழுச்சிப் பெற்றதும், காலனி ஆதிக்க கட்ட மைப்பின் வீழ்ச்சியடைந்ததும், முதலாவது சோசலிச அரசு உதயமா னதும் உலக சோசலிச கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டதும் இந்த இருபதாம் நூற்றாண்டில்தான்.

கடந்த நூற்றாண்டில் ஐக்கிய நாடுகள் சபை உருவானதும் விசேட அம்சமாகும். 20ம் நூற்றாண்டில் மேற்குறிப்பிட்ட மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்த காரணங்களை ஆராய்ந்து பார்த்தோமானால் 19ம் நூற்றாண்டில் அவை உருவாகி ஊற்றெடுத்ததைதப் பார்க்க முடிகிறது.

1871 பாரிஸ் கம்யூனியன் தோற்றம் பெற்றது. 1886 இல் எட்டு மணிநேர வேலைக்காக தொழிலாளர் வர்க்கம் மேற்கொண்ட எழுச்சிப் போராட்டமே மேதின போராட்டமாகும். சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் ஆரம்பமான தையும் உலகம் பூராவும் சோசலிச கருத்துக்கள் வியாபித்து சென்றதையும் 20ம் நூற்றாண்டின் நிகழ்வுகளுக்கு அத்திவாரமிட்ட காரணிகளாக நாம் கொள்ள முடியும்.

1935 - 1945 காலப் பகுதியில் இரண்டாம் உலகப் போர் மூள்வதற்கு அடிப்படையான காரணங்களை ஆராய்வோம். முதலாவது உலக போர் 1914, 1918 இல் நடைபெற்றது. அதற்கு முன் 1905 இல் ரஷ்யா ஜப்பான் போர், 1910 இல் லிபி யாவை கைப்பற்றுவதற்கு இத்தாலி மேற் கொண்ட ஆக்கிரமிப்பு, 1912 - 1913 இல் போல்க்கன் பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதல்கள் என்பன முதலாம் உலகப் போர் மூள்வதற்கு காரணங்களாக அமைந்தன. சுருங்கச் சொன்னால், ஏகாதிபத்திய நாடுகள் உலகை பங்கு போட்டுக் கொள்ள முயன்றதால் நிகழ்ந்த போரே முதலாம் உலகப் போர்.

மேற்குறிப்பிட்ட சகல வரலாற்று காரணங்களும், சம்பவங்களும், முதலாளித்துவம் ஏகாதிபத்தியத் துக்கு மாறுகின்ற போது ஏற்பட்ட நிகழ்வுகளாகும் என்று தோழர் விளாடிமிர் லெனின் குறிப்பிட்டார். இரண்டாம் உலக போர் முதலாம் உலக போரை விட வித்தியாசப்படுவது எவ்வாறு?

முதலாவது சோசலிச அரசு ரஷ்யா வில் நிறுவப்பட்டது, முதலாவது உலகப் போரின் போது தான். ஆனால் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமான போது உலகம் மாற்றம டைந்திருந்தது. 1917 - 1939 ஆண்டுகளுக்கிடையே ரஷ்யாவின் சோசலிச அரசு சோவியத் யூனியனாக ஒரு பிரமாண்டமான தேசமாக உரு வெடுத்திருந்தது. அது மாத்திரமன்றி ஐரோப்பா முழுவதும் சோசலிச இயக்கங்கள் பல்கிப்பெருகியிருந்தன. அத்துடன் தேசிய விடுதலை போரா ட்டங்கள் ஆசியா, ஆபிரிக்கா கண் டங்களில் நடைபெற்றுக் கொண்டி ருந்தன. மறுபுறம் சர்வதே ரீதியாக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மிகப் பெரிய அளவில் அதன் தத்துவார்த் தத்தை பரப்புரை செய்து கொண்டி ருந்ததுடன் மிகப்பெரிய மக்கள் இயக்கமாகவும் அது மாறிக் கொண் டிருந்தது.

இது இவ்வாறிருக்க, உலக வளர்ச்சிப் போக்கில் எதிர் மறையான இரண்டு அரசியல் கொள்கைகள் எதிரெதிர் முறைகளில் இயங்கிக் கொண்டிருந்தன.

சோசலிசத்துக்கும், முதலாளித் துவத்துக்கும் (ஏகாதிபத்தியம்) முரண் பாடுகள் உச்ச கட்டத்தை அடைந்தி ருந்தது. இதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலைமையே முதலாம் உலக போரின் போது காணக்கூடியதாக இருந்தது. அப்போது ஏகாதிபத்திய நாடுகளுக் கிடையில் தான் போட்டி நிலவியது.

இரண்டு உகல போரின் போதும் நிலவிய ஒற்றுமைகள் என்னவென்றால், ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே உலக நாடுகளை பங்கு போட்டுக் கொள்ளும் நோக்கம் இருந்தது. அத ன்படி உலகை பங்கு போட்டுக்கொள்ள இவர்களுக்கிடையே உடன்படிக்கை களும் ஆக்கிரமிப்புகளும் 19ம், 20ம் ஆகிய இரண்டு நூற்றாண்டுகளிலும் காணக்கூடியதாக இருந்தது. முதலா ளித்துவம் ஏகாதிபத்தியத்துக்கு தன்னை தயார்படுத்துவதை தெட்டத்தெளிவாகக் காண முடிந்தது.

மேலும் உலக நாடுகளில் தொழி லாளர் வர்க்க இயக்கங்களின் தோற் றமும் வளர்ச்சியும் 19ம், 20ம் நூற்றா ண்டுகளில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இவ்வாறான தொழிலாளர் வர்க்க இயக்கங்களின் வளர்ச்சி, முதலாளித்துவத்துக்கு பெரும் சவாலாக அமைந்தது.

எனவே, தொழிலாளர் வர்க்க இய க்கங்களை ஒடுக்குவதற்காக கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒரு அமைப்பு தேவைப்படவே, அத் தேவையை பூர்த்தி செய்வதற்காக பாசிசம் தலை தூக்கியது. தொழிலாளர் வர்க்க இயக்கங்களின் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காகவே பாசிசம் தோன்றியது என்பதே சரியானது.

பிரித்தானியா, பிரான்ஸ் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பாசிச முறை நிலவி வந்த போதிலும் பாசிசத்தின் ஒட்டு மொத்த செயற்பாடுகளும் ஜப்பான், ஜெர்மன், இத்தாலி ஆகிய நாடுகளில் தான் செயல்பட்டன. இந்த பாசிச அரசுகள் இரண்டாம் உலகப் போரின் போது ஓர் அணியில் நின்று செயல் பட்டது விசேட அம்சமாகும்.

பிரித்தானியாவும் அதன் ஏகாதிபத்திய முகாமும், ஜெர்மன் உட்பட அதன் ஏகாதிபத்திய முகாமும் தமது பொது எதிரியான சொஷலிச முகாமையே கருதின. சோசலிசத்திற்கும், முத லாளித்துவத்திற்கும் இடையே பிர தான முரண்பாடுகள் இருந்த போதும், ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையேயும் வேற்றுமைகள் காணப்பட்டதால் போர் தந்திரமும் மூலோபாயமும் வேகமாக மாற்றமடைந்து வந்ததையும் காணலாம்.

சோவியத் யூனியன் இரண்டாம் உலகப் போரின் போது தனது போர் தந்திரோபாயங்களை ஏகாதிபத்திய முகாம் இரண்டுக்கும் எதிராக (பிரித்தானியா உட்பட அதன் நேசப் படை, ஜெர்மனி உட்பட அதன் நேசப் படை) ஆகியவற்றுக்கெதிராக போர் முறைகளையும் அணுகுமுறை களையும் கையாள வேண்டிய நிலை தோன்றியது. இதில் ஒரு முகாம் ஒரு சந்தர்ப்பத்தில் சோவியத் யூனியனுக்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டியது. மற்றொரு புறத்தில் சோவியத் தேசத்திற்கெதிராக உடனடி தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டது. செக்கோஸ் லோவாக்கியா, போலந்து ஆகிய இரண்டு நாடுகளையும் ஜெர்மனி ஆக்கிரமிப்பு செய்ததன் நோக்கம் சோவியத் யூனியனை பலவீனப் படுத்துவதற்காவே. பிரித்தானியா உட்பட அதன் தேச முகாமை சேர்ந்த அணியினர் எதிர்பார்த்தது, ஜெர்மன் ஊடாக ரஷ்யாவை அச்சுறுத்துவதற்கு. மற்றொரு சந்தர்ப்பத்தில் ஜெர்மன், ரஷ்யாவுக்கு நட்புக்கரம் நீட்டி ரஷ்யா ஊடாக பிரித்தானியா உட்பட அதன் நேச ஏகாதிபத்திய வாதிகளை ஒடுக் குவதற்கு முயற்சித்தது.

இருப்பினும் இந்த இரண்டு ஏகாதி பத்திய முகாம்களும் உலக நாடுகளை பங்கு போட்டுக்கொள்ள மேற்கொள்ளும் சூழ்ச்சியினை ரஷ்யா புரிந்து கொண்டு தனது போர்த் தந்திரோபாயங்களை தீட்ட வேண்டிருந்தது. இந்த இரண்டு ஏகாதிபத்திய முகாம்களும் ரஷ்யாவை குறைத்து மதிப்பிட்டதாகவே வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

1945 மே 9ம் திகதி ஐரோப்பா நாடு களில் போர் நிறுத்தப்பட்டது. 1945 ஆகஸ்ட் மாதம் ஐப்பான் சரணாகதி அடைந்ததன் காரணமாக இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஆசிய கண்டத்தை பொருத்தவரையில் சீனாவின் புரட்சிக்கு பின்னரேயே போர் ஒரு முடிவுக்கு வந்ததாக கருதினால் அது பிழையாகாது. காரணம் ஏகாதி பத்திய சக்திகள் ஆசிய கண்டத்தில் விசேடமாக கிழக்காசிய பிராந்தியத்தில், தொடர்ச்சியாக செயற்பட்டு வந்தன.

கொரிய போர் மற்றும் வியட்நாம் போர்களை உலகப் போரின் ஒரு தொடர்ச்சியாகவே கருத வேண்டும். 1975 இல் இந்து - சீன பிராந்தியம் விடுதலை பெற்றதும் வியட்நாம் வெற்றி பெற்று மீண்டும் ஐக்கியப்பட் டதும் இரண்டாம் உலகப் போரின் மிச்சமிருந்த ஆக்கிரமிப்புகளும் அழிக் கப்பட்டன. இது இந்து - சீன பிராந் தியத்தில் அமெரிக்கா அடைந்த படு தோல்வியாகும். இதன் அடிப்படையி லேயே இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. இந்த அடிப்படை யில்,

1. பாசிசம் தோல்வியுற்றது.

2. சோவியத் யூனியன் அரசு கட்டுமானம் ஸ்தாபிக்கப் பட்டது.

3. சீன வியட்நாம் - கொரியா புரட்சிகள் வெற்றி பெற்றன.

4. காலனித்துவ ஆட்சி முறை வீழ்வதற்கு அத்திவாரமிடப் பட்டது.

5. ஜனநாயகத்திற்கு உயிர் ஊட் டப்பட்டது.

6. பனிப்போர் சூழ்நிலை நிலவினாலும் உலக சமாதானம் ஸ்திரம் பெற்றது.

7. புதிய உலக கட்டமைப்பு உருவானது.

8. சர்வதேச கம்யூனிச இயக்கம் பலம் பெற்றது.

9. சோசலிச கருத்துக்கள் பிர பலமடைந்தன.

இவை அனைத்துமே பாசிசத் தின் தோல்வியால் ஏற்பட்ட நன் மைகளாகும். இந்த நிகழ்வு உலகம் பூராவும் உள்ள மக் கள் கொண்டாட வேண்டிய வர லாற்று நிகழ்வா கும்.

சட்டத்தரனி ஈ. தம்பையா

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com