Contact us at: sooddram@gmail.com

 

கிழக்கு பிரிந்தால் யாழ்ப்பாணத்தானுக்கு கோவணம்தான் மிஞ்சும் என்கிற வரலாற்று உண்மை

யாழ்ப்பாணத்தானுக்கு மற்ற ஊர்க்காரனை இளப்பமாகக் கதைப்பதில் தனிக்குஷி. வன்னியான்,,,, மட்டக்களப்பான், மன்னாரான், வடக்கத்தையான் இப்படி மற்ற ஊர்க்காரர்களை பட்டப்பெயர் கொண்டு அழைத்து தன்னை ஒரு மேன்மையானவனாகக் காட்டிக்கொள்வதில் அவனுக்கு நிகர் இல்லைதான். ஆனால் ஆயுதப்போராட்டம் தொடங்கியபோது யாழ்ப்பாணத்தான் செய்த வேலை ஐரோப்பா நாட்டிற்கு பறந்துபோனதுதான் அதன் பின் போராட்டத்தை நடாத்தியவர்கள் வன்னி இளைஞர்களும் கிழக்கு மாகாண இளைஞர்களும்தான்.  யாழ்ப்பாணத்தான் ஐரோப்பிய நாட்டில் கக்கூசு முதற்கொண்டு அனைத்தையும் கழுவிக்கொண்டு காசு சம்பாதிப்பதில் கவனமாக இருந்தான். அரைவேற்காடு பிரபாகரனை உசுப்பேத்தி புலிஇயக்கத்தை வீங்கச்செய்து பெருமை கொண்டாடிய யாழ்ப்பாணத்தான் வீரபாண்டிய கட்டப்பொம்மன் பாணியில் வீர வசனம் பேசிக்கொண்டிருந்தான்.

2004ல் கிழக்கு மாகாணம் புலிகளிடம் இருந்து விலகியபோது புலிகளுக்கு வீழ்ச்சியும் அழிவும் தொடங்கியது. வெளிநாடுகளில் இருந்து வீரவசனம் பேசிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தான் களத்திற்குப்போய் சண்டைபோடத்தயாரில்லை. வன்னி இளைஞர்கள் அநியாயமாக யுத்தத்தில் அழிந்துபோக புலம்பெயர்நாடுகளில் காசு சேர்ப்பதில் யாழ்ப்பாணத்தான் குறியாக இருந்ததான். புலிகளுக்க  எதிராக இந்தியா இலங்கை பாகிஸ்தான் சீனா என கூட்டு சேர்ந்து அடியைப்போட ஐரோப்பிய கனடா அவுஸ்திரேலிய  தெருக்களில் விழுந்து புரண்ட யாழ்ப்பாணத்தானால் பிரபாகரனைக் காப்பாற்ற முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் கோவணத்தோடு பிரபாகரன் கிடந்தபோது சேர்ட்டும் ரவுசரும் போட்டு போய் பார்த்த கிழக்கான் கருணா கண்கலங்கியதும் பத்திரிகைகளில் வந்த செய்திகள்.

அப்போதும் யாழ்ப்பாண்த்தானுக்கு தெரிந்திருக்கவேண்டும். எல்லொரையும் அணைத்துப்போகின்ற அரசியல் இல்லாட்டி என்ன நடக்குமென்று.  கிழக்கு பிரிந்தால் யாழ்ப்பாணத்தானுக்கு கோவணம்தான் மிஞ்சும் என்கிற வரலாற்று உண்மை அது.

இதில் பிரதேசவாதம் இல்லை. ஆனால் யதார்த்த உண்மை இருக்கிறது. வீரவசனம் பேசுவது மட்டும் விவேகமில்லை. யாழ்ப்பாணத்தான் அதை மட்டும்தான் பேசி வந்திருக்கிறான். புலிகள் கடைசிக்காலத்தில் வன்னி மக்களை துன்புறுத்தியிருக்காவிட்டால் அந்த மக்கள் புலிகளுக்கு நல்லதொரு அரணாக இருந்திருப்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தான் மாவிலாறில் கைவைத்து மடுமாதாவை தூக்கிக்கொண்டு ஓடி சிறுவர் சிறுமிகளை பலாத்காரமாக இயக்கத்திற்கு கடத்தி மக்களை ஆயுதமுனையில் முள்ளிவாய்க்கால் வரை கடத்தி கடைசியில் யாருமே காப்பாற்ற முடியாதவாறு அழிந்துபோனார்கள்.

சிந்திப்பதில்லை. மற்றவர்களின் கருத்துக்களை ஏற்பதில்லை. முற்று முழுக்கு சுயநலப்புத்தி கடைசியில் சர்வதேசமும் கைவிட்ட நிலையில் உலகின் நான்காவது பெரிய ராணுவத்தை விரட்டிய வீரர்கள் உலகின் சிறிய ராணுவத்திடம் தோற்றுப்போனார்கள்.

துலைஞ்சுபோயும் புத்தி வரவில்லைப்பாருங்கள். இன்னும் வீரவசனத்திற்கு குறைவில்லை. 12000 பேரோடு தலைவர் வரப்போகிறாராம். உருப்படுமா இந்தக்கூட்டம். உலகத்தில் எந்தவொரு விடுதலைப்போராட்ட தலைவரும் பிரபாகரனைப்போல் கோவணத்தோடு போய்ச்சேர்ந்த வரலாறு இல்லை. வீரமரணம் எய்தாமல் சரணடைந்த பிரபாகரன் மக்களுக்காக தன் உயிரை தானே மாய்க்கத்தயராரக இருக்கவில்லை. அதனால்தான் அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழ்ச்சமூகமே தயராக இருக்கவில்லை.  பிரபாகரன் தமிழ்மக்களுக்காக விட்டுச்சென்றது சீரழிந்த ஒரு வரலாற்றைத்தான். இந்த உண்மை இருக்க இன்னும் அரைகுறை யாழ்ப்பாணத்தான் வரலாற்றுவீரன் தேசியத்தலைவன் என இன்டநெட்டுக்களில் வசனம் பேசிக் கொண்டு இருக்கிறான்.

கருணா, பிள்ளையான் அரசியல்களில் முரண்பாடுகள் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் அன்று எடுத்த முடிவால் பல ஆயிரம் கிழக்கு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். கிழக்கு மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். 95ல் புலிகளால் வன்னிக்கு யாழ்ப்பாணத்தான் பலவந்தமாக அழைத்துச்செல்லப்பட்டாலும் கொஞ்ச நாட்களில் திரும்ப இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த குடாநாட்டிற்கு அவன் ஒடி வந்துவிட்டான். ஆனால் புலிகளிடம் மாட்டுப்பட்ட வன்னி மக்களுக்கு இறுதியில் கிடைத்தது துன்பமும் துயரமும்தான்.

வீரவசனம் பேசிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தானுக்கு சொல்கிற புத்திமதி இதுதான். அரவணைத்துச்செல்கின்ற அரசியலுக்கு போகாமல் இருந்தால் இன்னமும் தலைவர் வருவார் புடுங்குவார் என்று ஒரே பல்லவியைப் பாடிக்கொண்டிருக்காமல் கால மாற்றத்திற்கேற்ப சிந்தனைகளை மாற்ற வேண்டும் இல்லாவிட்டால் மாறாத வரட்டுச்சிந்தனைகளுக்கள் நீயும் துலைஞ்சு சமூகத்தையும் துலைச்சுப்போட்டு நிற்பதை தவிர வேறு வழியில்லை.

(பாலன்)

கவனிக்க: பிரதேசங்களின் பெயரை இழுத்து எழுதியிருக்கும் சொற்பிரயோகங்களில் எமக்கு உடன்பாடு இல்லை. ஆனால் சொல்லப்பட்ட கருப் பொருளுக்கு இக்கட்டுரையை ஆக்கியவரே பொறுப்பு என்றவகையில் இதனைப் பிரசுரிக்கின்றோம். (ஆர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com