Contact us at: sooddram@gmail.com

 

இன்று உலக சிறுவர்கள் உரிமை தினம்

(அருணா தருமலிங்கம்)( ெங்கலடி)

இவ்வுலகின் எதிர்கால சமுதாயச் சிற்பிகளாக மிளிரவிருக்கும் சிறுவர்கள் பற்றிய எண்ணக்கருவானது இன்று சர்வதேச ரீதியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது எனலாம். இதனால் சிறுவர்களது பாதுகாப்பு, அவர்களது உரிமை பற்றிய சட்டங்களும், செயற்றிட்டங்களும் புதிய வடிவம் பெற்றுள்ளன என்பது நிதர்சனமாகும். ஆரோக்கியமான சூழ்நிலையில் வாழுகின்ற சிறுவர்களே எதிர்கால நற்பிரஜைகளாக உருவாகலாம். எனவே அவர்களை வழிநடத்தி பாதுகாத்து சமூகத்தை சிறுவர்களிடம் கையளிப்பதற்கேற்ற பாத்திரங்களாக உருவாக்க வேண்டியது பெற்றோர்கள், ஆசிரியர்களின் பொறுப்பாகும்.

எனவே சிறுவர் உரிமைகள் பற்றி ஆராய்வது உலக சிறுவர் உரிமைகள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இன்றைய தினம் உசிதமானதொன்றாகும் எனலாம்.

சிறுவர் உரிமைகள் என்றால் சர்வதேச மெங்கும் வாழுகின்ற சிறுவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளவும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உள்ள உரிமையைக் குறிக்கும்.

உலகெங்கம் வசித்து வருகின்ற சிறுவர்கள் குறிப்பாக இயற்கை அனர்த்தம், உள்நாட்டு யுத்தம், பஞ்சம் போன்றவை நடைபெறும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுக்கும் நோக்கத்துடன் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை (ஸி. னி. லி) 1919ம் ஆண்டு மார்ச் மாதம் இருபதாம் திகதி சிறுவர்கள் உரிமை சாசனத்தைப் பிரகடனப்படுத்தியது. இதன் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையே சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பாக உருவாகியுள்ளதையும் காணக் கூடியதாகவுள்ளது.

இனி சிறுவர்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அம்சங்கள் எவை என்பதையும் சிறிது ஆராய்வோம்.

சாதி, நிறம், பால், மதம், தேசம் போன்ற வேறுபாடுகளின்றி சிறுவர்களின் உரிமைகள் மேலோங்கச் செய்ய வேண்டும்.

சுதந்திரத்துனுடனும், சுய கெளரவத்துடனும், சுகமாகவும், அவர்கள் வாழ்க்கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பிறந்த நாள் போன்ற முக்கிய தினங்களில் பெருவிழா கொண்டாடக்கூடியதாக இருக்க வேண்டும். சமுதாயப் பாதுகாப்பு, சத்துணவு, வீடமைப்பு, விளையாட்டுகள், மருத்துவப் பரிசோதனைகள் போன்றவற்றை அவ்வப் போது தவறாது வழங்க வேண்டும். அங்கவீனமான சிறுவர்களுக்கு விசேட கல்வியும் பாதுகாப்பும் நல்க வேண்டும். பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் சிறுவர்களுக்கு பொறுப்பாக இருப்பதுடன் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பையும் அன்பையும் அளித்திட வேண்டும். சிறுவர்களுக்கு வேண்டிய இலவசக் கல்வி, விளையாட்டு வசதிகளில் ஈடுபடச் செய்து அவர்களது ஆக்கத்திறனை வெளிக்கொணர சந்தர்ப்பம் அளித்திட வேண்டும். துஷ்டர்களினால் சிறுவர்களுக்கு ஏற்படும் கொடூரம், பாலியல் துஷ்பிரயோகம் பழிவாங்குதல் என்பவற்றிலிருந்து பாதுகாப்பு வழங்குவது அவசியம் ஆகும்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மேலே குறிப்பிட்ட சிறுவர் உரிமைகள் அற்ற நிலையில் தற்பொழுது உலகெங்கும் சுமார் பத்துக் கோடி சிறார்கள் பெற்றோர்களினால் கைவிடப்பட்ட நிலையில் பரிதவிப்பதையும் காண முடிகின்றது. இந்நிலைக்குள்ளான சிறுவர்களில் அனேகம் பேர் கொள்ளை, களவு, சட்டவிரோத செயற்பாடுகள், பாலியல் இச்சைக்கு ஆளாகுதல் என்பனவற்றில் அதிகம் ஈடுபடுவ தையும் காண முடிகின்றது. இவர்கள் சுதந்திரமான தமது கருத்துக்களை வெளியிட உரிமையற்றவர் களாகவும் துன்பத்தில் வேதனைப்படுபவர்களாகவும் காணப்படுகின்றனர். இவற்றை சிறுவர் துஷ்பிரயோகம் எனவும் கொள்ளலாம். சிறுவர் உரிமை பேணுவதற்கு தடைக்கல்லாக அமையும் காரணிகள் சில உள்ளன. அவற்றில் முக்கியமானது பொருளாதாரத்தில் நலிவு ஏற்படுதல் ஆகும். சர்வதேச நாடுகள் சிலவற்றில் பொருளாதாரம் வளர்ச்சி அடையாமல் இருப்பதாலும், சனத் தொகைப் பெருக்கம், இயற்கை அனர்த்தம் காரணமாக உணவு உற்பத்தியில் வீழ்ச்சி காணப்படுவதாலும் சிறுவர்கள் இலகுவில் பாதிப்பிற்குள்ளாகின்றனர். வறுமை காரணமாக உணவு பெற முடியாமலும் கல்வி, சுகாதாரம் என்பவற்றை உரிய முறையில் பெற முடியாமலும் அல்லலுறுகின்றனர். இது மட்டுமா? வறுமையின் நிமித்தம் சிறுவர்கள் உடல் உள ரீதியாகப் பாதிப்பிற்குள்ளாகின்றனர். சிறுவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்துதல், விபச்சாரத்தில் ஈபடுத்துதல் போன்ற தீய பழக்கத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். பெற்றோர்கள், பாதுகாவலர்கள் போன்றோரின் அன்பு, ஆதரவு, பாதுகாப்பு என்பவை கிடைக்காத பட்சத்தில் அவர்கள் உள ரீதியாகப் பாதிப்பு அடைகின்றனர்.

பல்லின மக்கள் வாழ்கின்ற நாடுகளிலே அவ்வப்போது யுத்தம் ஏற்படுவது சகஜம். போர் உக்கிரமடையும் வேளையில் சிறுவர்களே அதிகம் பாதிப்படைகின்றனர். ஐ. நா. வின் சிறுவர் போராளிகளைக் கண்காணிக்கும் விசேட பிரதிநிதியாகக் ராதிகா கடமையாற்றுகின்றார்.

ராதிகா குமாரசுவாமியின் கூற்றின் பிரகாரம் உலகெங்கிலும் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் போர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனராம்.

பொதுவாக மூன்றாம் மண்டல நாடுகளில் ஆயுத மோதல்கள், இயற்கைச் சீற்றங்கள், பொருளாதாரச் சீர்குலைவு போன்றவற் றால் கணிசமான மக்கள் அகதிகளாகவும், இடம்பெயர்ந்தும் வாழவேண்டிய துரதிர்ஷ்ட நிலையில் உள்ளனர்.

இதன் காரணமாக பெற்றோர் பாதுவாலரை இழந்து வீதியோரச் சிறுவர்களாக உருவாகியுள்ளமை மனவருத்தம் ஏற்படுத்தக் கூடிய விடயமாகும்.

ஊட்டச்சத்து குறைவான உணவை சிறுவர்களுக்கு ஊட்டுவது சிறுவர் உரிமையைப் பாதிக்கின்றது. ஐ. நா. வின்யுனிசெப்வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் சர்வதேசமெங்கிலும் பதினைந்து வயதுக்குட்பட்ட எழுபத்து ஐந்து மில்லியன் சிறுவர்கள் மந்த புத்தியினாலும் சுமார் இரண்டு மில்லியன் குழந்தைகள் அங்கவீனர்களாகவும் உருவாகியுள்ளனராம்.

ஆகவே எதிர்காலச் சந்ததியினரை வழிநடத்திச் செல்லும் தலைவர்களாக மாறவிருக்கும் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படாது இருக்க வேண்டியதை நலன்விரும்பிகளும், புத்திஜீவிகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com