Contact us at: sooddram@gmail.com

 

அவர்களே அவர்களைப்பற்றி கூறுகின்றார்கள்......

ஐயா ஜெயானந்த மூர்த்தி அவர்களே! ஓய்வூதியம் அல்ல ஒற்றுமை ஐயா ஒற்றுமை வேண்டும்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர ! உங்களுக்கு மீண்டும் ஒரு மடல். பல மடல் எழுதியும் நீங்கள் பதில் தருவதில்லை என்பது எனது வருத்தம். ஆனாலும் தமிழீழ தேர்தலில் உங்களுக்கு வாக்களித்தவன் என்ற முறையில் ஒரு திறந்த மடல்.

உங்கள் ஓய்வூதியம் மாவீரர் குடும்பத்துக்கு அளிப்பது பற்றி அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி !. உங்கள் பணம் அல்ல மனம் இங்கே முக்கியமாக தெரிகிறத ! ஆனால் இது வெறுமனே இலங்கையில் செய்யும் அரசியலாக மாற கூடாத . உங்கள் ஓய்வூதியம் இங்கிலாந்தில் ஒருவருட அடிப்படை சம்பளத்தின் சிறு பகுதியாகத்தான் இருக்க முடியும் என்பது எனது கணிப்பீடு. இங்கேதான் நான் கூறுகிறேன , இது அரசியல் பேச்சாக இருக்க வேண்டாம்.

நீங்கள் உண்மையில் எங்கள் மக்களுக்கு பல விதங்களில் உதவலாம். தமிழீழ அரசை நிர்மாணிக்கும் போது என்னை போன்ற சாதாரண மக்கள் எவ்வளவு மகிழ்வடைந்தோம ! தமிழர் போராட்டங்களில் மேடைகளில் முழங்கிய நீங்கள் தமிழீழத்துக்கு செல்ல முடியாமல் போக (ஆனால் அதே மேடைகளில் முழங்கிய சிவாஜிலிங்கம , பத்மினிஎன பலர் இப்போதும் தாய் மண்ணில்தான் இருகின்றனர் என்பதையும் நினைவில் கொள்வோம் !) உங்கள் குரல் எங்களுக்கு வேண்டும் என்பதற்காக வாக்களித்து உங்களை தமிழீழ அரசில் இணைத்தோம்.

நீங்கள் தாய் மண்ணிற்கு செல்லமுடியாமல் போனது பற்றி கணிப்பீடுகள் பல இருந்தாலும் அது உயிர் சம்பந்த பட்ட விடயம் என்பதால் கருத்து கூற முடியவில்லை. ஆனால் தமிழீழ அரசின் அமர்வுக்கு போக முடியாமல் போக, காரணங்களாக நாங்கள் நினைப்பத , போட்டி, பொறாமை , அல்லது பதவி ஆசை என்பது மட்டுமே . உருத்திரகுமாரன் ஒருமுதல் அரசின் முன்னோடி மட்டுமே. நாங்கள் அவரையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம ! உங்கள் கதைகளையும் கேட்டு கொண்டுதான் இருக்கிறோம !

உங்களோடு இயங்கும் அந்த கூட்டம், பிரித்தானிய தமிழ் மன்றம் என்ற ஒரு இல்லாத அமைப்பின் பேரில் விட்ட அந்த போஸ்டர்கள் இன்னமும் கையில் உள்ளத . உருத்திரகுமாரன் முன்னெடுத்த முயற்சியில் இணைய மாட்டேன் என்று அறிக்கை விட்டு ஒதுங்கி இருந்தால் நிச்சயம் அதை பற்றி கருத்து கூறி இருக்க மாட்டேன். போட்டியிடுவது போல நடித்து, உள்ளே நுழைந்த பின் தமிழீழ அரசை பால் பொங்கி வரும் போது பானையை உடைக்கும் முயற்சியில் நீங்களும் உங்கள் பின்னால் இருப்பவரும் செயற்பட்டது ஒரு கோழைத்தனம !

உங்களுக்கு மாவீரர் குடும்பங்களுக்கு உதவி செய்யும் நிஜ எண்ணம் இருந்தால , தமிழீழ அரசில் ஒரு அமைச்சை பொறுப்பெடுத்தோ அலது தமிழீழ அரசின் மாவீர குடும்ப அலுவல்களுக்கான அமைச்சரூடாக செய்வதுதானே சரி ? இது எப்படி உங்களுக்கு நாங்கள் காசு தருவத ? நீங்கள் யார ?

சிறிதரன் எம் பி, ஒரு நாடாளுமன்ற உறுபினராக செய்கிறார். நீங்கள் தமிழீழ நாடாளுமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ செய்யக்கூடிய ஒரு விடயத்தை தனிப்பட்ட முறையில் செய்வதும , உங்கள்ஓய்வூதியத்தை அளித்தேன்என்ற அரசியல் வசனமும் உங்கள் மேல் எனக்கு நம்பிக்கையை தரவில்லை . இலங்கை அரசியலுக்கே பழக்கப்பட்டு போன ஒரு தலைமுறையின் இணையதளங்கள் உங்கள் வாக்கை பெரிதாக போட்டு ஏதோ பெரிய அலுவல் செய்துவிட்டார் என நம்பவைக்கலாம ! நாங்கள் நம்ப மாட்டோம !

உங்கள் ஓய்வூதியத்தை நீங்கள் கொடுத்துவிட்டு என்ன பட்டினி கிடக்க போகிறீர்கள ? இல்லைய ! தனக்கு பின் தானே தானம ?இங்கிலாந்தில் வாழும் உங்களுக்கு உங்கள் நாளாந்த செலவுடன் ஒப்பிடும் பொது உங்கள் ஓய்வூதியம் ஒரு பெரிய விடயமே அல்ல என்பது எனக்கும் பலருக்கும் தெரிந்த ஒரு விடயம்.

இங்கே மக்கள் பலர் எமது மக்களுக்கு உதவ தனிப்பட்ட முறையிலும் பல்லாயிரம் அமைப்புகள் ஊடாகவும் செய்து வருகின்றனர். தனிப்பட்ட நபரை விட அமைப்பை மக்கள் நம்புவது ஏன் என்பது வெளிப்பட . தினமும் அங்கே செய்கிறோம் இங்கே செய்கிறோம் என்று பல அழைப்புகள் வருகின்றன. அதனால் நீங்கள் மட்டும் ஏதும் புதிய முயற்சி செய்வதாக தோன்றவில்ல .

ஆனால் நீங்கள , மனம் திருந்தி , தமிழீழ அரசின் கீழ் இணைந்து ஒரு பாராளுமன்ற உறுபினராக தமிழீழ அரசின் அமைச்சர் ஊடாக இந்த முயற்சியை செய்து இருந்தால் அது பெரிய மாற்றத்தை தரும் . இதை செய்தியாக ஒரு இணையத்தளம் போட்டால் அது அந்த இணைய தளத்தின் நல்லெண்ணத்தை வெளிகாட்டும ! இங்கே உங்கள் ஓய்வூதியம் போல ஆயிரம் மடங்கு பணம் மாதம் தோறும் சேர கூடும ! இதற்காகத்தான் மக்கள் உங்கள் எல்லோரையும் முதலில் தமிழீழ அரசாக ஒன்றாக நின்ற , முதல் அடியை , சட்ட வல்லுநர் உருதிரகுமாரனின் வழிகாட்டலில் வையுங்கள் என வாகளிதோம் !

உங்களோடு நான் வாக்களித் , டெல் மொரிஸ் , கருணாகரன் , பாலாம்பிகை முருகதாஸ் போன்றோர் இன்று நாங்கள் வைத்த நம்பிக்கைக்கு ஏற்ற மாதிரி முன்னெடுக்கிறார்கள் . உங்களை போல சிலர , முகம் தெரியாமல் ஓடி ஒளித்த சில புலம் பெயர் தலைவர்களின் பொம்மைகளாக , என்றைக்கும் ஒரு பகிஸ்கரிக்கும் நபராக , இன்று எமக்கு தெரியும் பொது என்ன நம்பிக்கையில் உங்களுக்கு பணம் அனுப்புவது ?

நீங்கள் பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தின் பேரில் பணம் கேட்கிறீர்கள ? தமிழீழ அரசின் பேரில் பணம் கேட்கிறீர்கள ? இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் பணம் கேட்கிறீர்கள ? இல்லை தனி மனிதராக கேட்கிறீர்கள ! தனி மனிதராக நீங்கள் செய்வதற்கு உங்களை ஆதரிப்போர் பணம் தரக்கூடும , ஆனால் நீங்கள் தமிழீழ அரசின் ஊடாக செய்ய மறுபதனால் உங்கள் முயற்சியை மீண்டும் இலங்கையில் வழமையாக செய்யும் ஒரு அரசியல் முயற்சி ஆகவே பார்கிறேன் . உங்கள் சரிந்து போன விம்பத்தை நிலை நிறுத்தும் ஒரு முயற்சியாக பார்கிறேன். தவறு என்றால் மன்னிக்கவும். இப்படிதானே கருணாநிதியும் பல தடவை உண்ணாவிரதம் இருந்தும் தன சம்பளத்தை கொடுத்ததும் இருக்கிறார ?

ஒரு தலைமைத்துவம் நிறைந்தவன் தவறுகளை உணரவேண்டும ! மனம் மாறி , தமிழீழ அரசில் இணைந்து , தமிழீழ அரசின் அமைச்சறூடாக உங்கள் முயற்சியை தொடரவேண்டும் .

நீங்கள் பகிஷ்கரித்தாலும , தமிழீழ அரசு வீறு நடை போடும் ! அங்கே தமிழீழ அரசின் சில்லுகள் வேகமாக உருள தொடங்கும் பொத , புகையிரதத்தை தொலைத்து நிற்கும் பயணியாக நீங்கள் தனித்து விட பட கூடும் !

நீங்கள் மனம் திருந்தி எங்கள் ரத்தத்தில் அரசியல் செய்வதை நிறுத்தி , ஒற்றுமைக்கு வித்திட மறுத்தால் , இந்த தேர்தலில் உங்களை ஆதரித்து வாக்களித்த நான் , அடுத்த தேர்தலில் உங்களை எதிர்த்து பிரசாரம் செய்வேன் . அந்த நிலைக்கு புலம் பெயர் இளையோரை தள்ளவேண்டாம !

வார்த்தைகளும் வெறும் பரிசுகளும் எங்களுக்கு வேண்டாம ! பணம் இங்கே ஏராளமாகவே உண்டு. எங்களுக்கு வேண்டும் ஒற்றும ! சகலரும் தமிழீழ அரசை வளர்த்தெடுக்க வேண்டும். உருத்திரகுமாரன் பிடிக்கவில்லை என்றால் அடுத்த தேர்தல் வரை பொறுத்திருங்கள , ஆனால் அடுத்த தேர்தலுக்கு இடையில் நீங்கள் அரசியல் அரங்கில் இருந்து மறைந்து விடுவீர்கள் போல அல்லவா உள்ளது !

மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் அதே நேரம் எங்கள் மாவீரர் விட்டு சென்ற கனவை அடைய தமிழீழ அரசின் பயணம் தொடரும !

(ஒரு புலிதாசனின் ஈனக்குரல்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com