Contact us at: sooddram@gmail.com

 

அதர்மம் நீங்கி தர்மத்தை உணர்த்தும் தீபாவளி திருநாள்

சிவனை முழுமுதல் கடவுளாகக் கொண்டவர்கள் சைவர்கள். இவர்களின் வாழ்வில் விரதங்களும், பண்டிகைகளும் வந்துபோகின்றன. இதனால் இவர்களின் வாழ்வில் ஓர் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அனுபவபூர்வமாக அடைகின்றார்கள். இந்துக்களைப் பொறுத்தவரையில் இயற்கையை தெய்வமாகக் கண்டனர். அதன் பிரதிபலிப்பாக வாழ்வை வளப்படுத்தி நெறிப்படுத்த வேண்டிய பல விரதங்களோடு, கொண்டாட்டங்களையும், உற்சவங்களையும் வாழ்வோடு பிணைக்கப்பட்டவர்களாக இந்துக்கள் மிளிர்கின்றார்கள். இவ்வாறு வந்த விரதங்களில் நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஷ்டி விரதங்கள் முன்னிலையில் காணப்பட்டு வருகின்றன.

இந்த விரதங்களில் தீபாவளி வாழ்வுடன் பிணைக்கப்பட்டதாக காணப்பட்டுள்ளது. உற்றார், உறவினர்களுடனும் சமூகத்தின் உறவுப் பாலத்தை ஏற்படுத்தவும் உந்துசக்தியாக இருக்கின்றன. உற்றார், உறவினர்களுடன், அன்புள்ளம் கொண்டவர்களையும் இணைப்பு உறவை ஏற்படுத்த இந்த தீபத் திருநாள் கட்டியம் கூறி நிற்கின்றது.

தீபாவளி என்பது தீபம் + ஆவலி எனப் பிரிபடும். தீபங்களை வரிசையாக வைத்து வழிபடுவதைக் குறிக்கும் தீபம் என்பது ஒளிமயமான எதிர்கால வாழ்வை ஒளியேற்றுவதை குறிக்கும். ஒளியை வணங்கும் மரபை இந்துக்கள் தமது வழிபாட்டின் பண்பாட்டின் ஓர் கூறாகவே கொண்டார்கள்.

ஒளி எல்லா உயிர்கள் விரும்பும் தன்மையைக் கொண்டது. இருள் அகற்ற ஒளி தேவைப்படுவதுபோல வாழ்வு என்னும் இருளிலிருந்து விடுபட்டு ஒளிமயமான எதிர் காலத்தை தேடுவதை போல சூரியனைக் கண்ட பறவைகள் வைகறையில் சிறகையடித்துக் கொண்டு ஆரவாரம் செய்வதுபோல கதிரவன் ஒளி கண்ட மலர்கள் மலர்ந்து மணம் பரப்புகின்றன.

மரம், செடி, கொடி என்பன கண் விழித்துப்பார்க்கின்றன. மக்களும் மகிழ்கின்றார்கள் இதன்மூலம் நாம் அறியக் கிடக்கின்றது. உலகில் ஒளி இன்றியமையாதது என்பதை உணர்கின்றோம்.

இப்பாரினிலே ஒளியைத் தரும் பொருள் மூன்று உள்ளன. கதிரவன். திங்கள், விளக்கு என்பதாகும். இதன் மூலம் நாம் நன்மை அடைகின்றோம். சூரியனும், சந்திரனும் உலகில் ஒளியைத் தந்தாலும் கூட வேண்டிய இடத்திற்கு உதவுவதில்லை. ஆனால் விளக்கானது வேண்டிய போதெல்லாம், வேண்டிய இடங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆதலின் விளக்கின் ஒளி தேவையான நேரத்தில், தேவையான இடங்களுக்கு தேவை ஏற்படும் போது பயன்படுத்தப்படும் பொருளாக விளக்கு திகழ்கின்றது. இதனால் தான் இறைவன் திருவிசைப்பாவில்

ஒளிவளர் விளக்கே! உலப்பிலா ஒன்றேஎன்று அழைக்கின்றது-

சூழொளி விளக்கே’, என்று மணிவாசகனார் அழைக்கின்றார். விளக்கு மனித வாழ்வில் ஒளியாக கலந்துள்ளது.

தீபத்தை மகாலக்ஷ்மியாக பாவனை செய்து வழிபடுவது தீப வழிபாடாகும். அம்மன் கோவில்களில் தீப பூசையன்று பெண்கள் தீபத்தை இறைவியாக பாவனை செய்து வழிபடுவார்கள். இது இந்து பண்பாட்டின் கூறாகும்.

இந்துக்கள் மனமுருகி வழிபடும் அக, புற வழிபாட்டில் புற வழிபாட்டை விட அக வழிபாடு முன்னுதாரணமாகும். ஆன்மாக்களிடத்தில் ஏற்படும் கோபம், துன்பம், பொறாமை, அழுக்காறு என்பனவற்றை நீக்க வேண்டியும் அகதூய்மை அடைய என்னாலும் தியானமெனும் ஒளியேற்ற இறைவனை மன ஒளியால் அவனை வரங்கள் கேட்டு துதிக்கின்றோம். நாம் தூய்மை அடைகின்றோம். புனிதராகின்றோம்.

இந்துக்களிடத்தில் திருவிளக்குப் பூசை செய்வதும், புதுமனை, நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும்போது விளக்கேற்றி ஆரம்பிக்கின்றோம். திருமண நாட்களில் கூட விளக்குகளை வைத்து வலம் வருகின்றோம்.

இறைவனை திருவிளக்கில் ஆவாகனஞ் செய்து வழிபடும் முறை இந்து பண்பாட்டின் நெறிமுறைகளில் ஒன்றாகும். இறைவனை அருணகிரிநாதர்தீமங்கள ஜோதி நமோ நமஎன்று துதித்தார்.

விரதம் நோற்கும் முறை:

புரட்டாசி மாதம் பூர்வபட்சம் அஷ்டமியில் தொடங்க வேண்டும். நிறைகுடம் வைத்து சிவனை ஆவாகணம் செய்து இருபத்தொரு இழையுடைய கையில் புனைந்து அருச்சுனை செய்து தூபதீப நிவேதனம் செய்ய வேண்டும்.

ஐப்பசி மாத அமாவாசைக்கு முந்திய நாள் சதுர்த்தசியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, தூய உடை அணிந்து நெல்லின் மேல் நிறை குடம் வைத்து மாவிலையும் தருப்பையும் வைத்து அதில் சிவமூர்த்தியை நிறுவி, சிவமாகவே பாவனை புரிந்து பக்தி பரவசமாக அருச்சித்து பாராயணம் புரிந்து தூப தீப நிவேதனங்கள் செய்து வழிபட வேண்டும்.

மறுநாள் அமாவாசையன்று காப்பை அவிழ்த்துவிட்டு உணவருந்த வேண்டும். இந்த விரதம் கேதாரவிரதம் (இதுதான் தீபாவளி) எனப்படும். இருபத்தொரு நாள் அனுஷ்டிக்க முடியாதவர்கள் ஐப்பசி தேய் பிறைச் சதுர்த்தசியன்று மட்டும் மேற்கூறிய முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும்.

தீபாவளி திருநாளின் உட்பொருள்பல தத்துவங்களைக் கொண்டாக இருகின்றது.

தர்மம் மறைந்து எப்போது அதர்மம் தலைதூக்குகின்றதோ அப்போது நான் அங்கே தோன்றுவேன்பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா. அன்று உலகின் அதர்மத்தின் உருவமாகி தோன்றி மக்களை ஆட்டிப் படைத்த நரகாசுரனை தன் சக்கராயுதத்தால் அழித்து பகவான் மக்களைச் காத்த அந்தநரகாசுர வதத்தை நினைவுபடுத்தும் நாள் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளியாகும்.

இத்தினம் பல இடங்களில் வெவ்வேறு வடிவில் நிகழ்கின்றது. மகாராஷ்ர மக்கள் மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தபோது பாதங்களை மகாபலியின் தலையில் வைத்து ஆட்கொண்ட நாளாகவும் சமணர்கள் கடைசி தீர்த்த சங்கரர் மறைந்த நாளாகவும் ஜெனர்கள் மகா வீரர் ஞானம்பெற்ற தினமாகவும், கூர்ஜரமக்கள் புதுவருட தினமாகவும், பங்காள மக்கள் காலி தேவியை மகாலஷ்மியாகக் கருதி பூஜை செய்த நாளாகவும், தென்னிந்தியர் நகராசுரனை வதைத்த நாளாகவும் கொண்டாடுகின்றனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com