Contact us at: sooddram@gmail.com

 

23 ஆவது ஆண்டு நிறைவு

வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம்

வட மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையில் இடம்பெற்ற அந்த இருண்ட நாட்களை இன்னமும் தெளிவாக நினைவில் கொண்டுள்ளார்கள். அது 1990 ஒக்டோபர் மாதக் கடைசி, வட மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம்கள், சில மணி நேரக் காலக்கெடுவுக்குள் தங்கள் சொந்த வீடுகளையும் சொத்துக்களையும் விட்டு உடனடியாக வெளியேறும்படி திடீரென கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். எந்தவிதமான பெறுமதி வாய்ந்த பொருட்களையும் தங்களுடன் எடுத்துச் செல்லக்கூடாது என அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து தேடிய தங்கள் பணத்தையோ அல்லது நகைகளையோ தங்களுடன் எடுத்துச் செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவர்கள் தங்கள் சொத்துக்களையோ அல்லது உடமைகளையோ விற்பதற்கும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. உடுத்த உடையுடனே தாங்கள் பிறந்த இடங்களை விட்டு அவர்கள் கட்டாயப்படுத்தி வெளியே தள்ளப்பட்டார்கள். நவீன நாகரிக உலகம் என்று அழைக்கப்படும் இந்த உலகத்தில்தான் இது நடைபெற்றது.

வடபகுதியிலுள்ள யாருக்கும் தீங்கிழைக்காத அப்பாவி முஸ்லிம்கள் மீதுதான் ஒரு வகையான காட்டுமிராண்டித்தனம் எல்.ரீ.ரீ. ஈ.யினால் திணிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்டம் என்ற பெயரின் கீழ்தான் இது நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட இந்த அப்பாவி மக்களின் தாங்கமுடியாத துன்பங்களையும் மற்றும் கஷ்டங்களையும் கூறும் உருக்கமான உண்மை வரலாறுகள் மற்றும் கதைகள் யாவும் நிபுணத்துவம் வாய்ந்த வகையில் இன்னமும் ஆவணப்ப டுத்தப்படவில்லை.

உண்மையில் இந்த அப்பாவி மக்களின் கடும் சோதனைகளை ஆவணப்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் பாதிப்புக்கு உள்ளான இந்த அப்பாவிகளின் கதறல், அரசியல் வாதிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரின் காதுகளுக்கும் மற்றும் இதயங்களுக்கும் இன்னமும் எட்டவில்லை. இந்த தீவின் அநேக பகுதிகளில் இந்த மக்கள் இன்னமும் இடம் பெயர்ந்தவர்க ளாகவே வாழும்படி விதிக்கப்பட்டுள்ளது.

விரும்பியோ அல்லது விரும்பாமலோ இந்த மக்களில் சிலரின் சோதனைகளையும் வேதனைகளையும் காண வேண்டிய விதி எனக்கும் நேர்ந்துள்ளது. 1990களில் இந்த சோதனைக்கதை கட்டவிழ்த்து விடப்பட்ட சமயத்தில் எனக்கு புத்தளத்தில் இருக்க வேண்டி நேர்ந்தது. வீசிய கையும் வெறுங்கையுமாக, வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைத் தேவைகள் எதுவுமின்றி புத்தளத்துக்கு வந்து சேர்ந்த இந்த மக்களின் துயரங்களை என்னால் காண நேர்ந்தது. அவர்களில் சிலர் நூற்றுக்கணக்கான மைல் தூரம் நடந்தே வந்திருந்தார்கள். சிலர் பசியுடன் வெறும் வயிறாக வந்திருந்தார்கள்.

இன்னும் சிலர் தங்களுக்கு ஏற்பட்ட வேதனைகளாலும், துயரங்களாலும் அதிர்ச்சி அடைந்திருந்தார்கள். அவர்களில் சிலர் சுகவீனமுற்றவர்களாகவும் மற்றும் துயரத்தினாலும் மனவுறுத்தலினாலும் பாதிப்படைந்தும் இருந்தார்கள். இந்த கடும் அதிர்ச்சியான சோதனைகளுக்கும் மற்றும் கலக்கத்துக்கும் இலங்கையில் வாழும் முழு முஸ்லிம் சமூகமும் சாட்சியாக இருந்தது.

முஸ்லிம் சமூகம் இந்த அப்பாவி மக்களுக்கு ஆறுதல் வழங்க முயற்சித்தது, இருந்தாலும் இந்த துன்பத்தின் அளவு மிகப் பெரிதானதாகவும் மற்றும் மனிதர்களால் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதற்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. புத்தளம் மற்றும் அதன் சுற்றாடலில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் இவர்களுக்கு இந்த அவசர நெருக்கடி நேரத்திற்கு தேவையான உதவிகளைச் செய்ததை நான் சொல்லியே ஆக வேண்டும். பூமியில் வாழும் எந்த ஒரு மானிட ஜென்மமும் இப்படியான துன்பங்களுக்கு உள்ளாகக் கூடாது என நான் எண்ணுகிறேன். உண்மையில் அது ஒரு பரிதாபகரமான நிலமை. இந்த மக்கள் அனுபவித்த சோதனையை எழுதுவ தென்றால் என்னால் அதை பல தொகுதிகளாக எழுத முடியும்.

கடந்த 23 வருடங்களாக அவர்கள் வாழ்வின் பல அம்சங்களிலும் அவர்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்துள்ளார்கள். அவர்கள் வறுமையில் வாடினார்கள். அவர்களுக்கு தங்கள் குடும்பத்துடன் வசிப்பதற்கு ஏற்றதான நல்ல இல்லிடம் கிடைக்கவில்லை. அவர்களால் அவர்கள் குழந்தைகளை உரிய முறையில் படிப்பிக்க முடியவில்லை. அவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்புகள் கிட்டவில்லை. அவர்கள் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தது. இந்த இடம்பெயர்ந்த இடங்களில் அவர்களால் ஒரு கெளரவமான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. அவர்களுக்கு நடந்தது ஒரு வரலாற்று கணக்கு, இன்னும் அதிலிருந்து பாடம் கற்பதற்காக நாங்கள் அவைகளை பதிவு செய்தல் வேண்டும்.

இன்று மிகவும் முக்கியமானது கடந்தகாலம் அல்ல, ஆனால் இந்த மக்களின் இன்றைய நிலமைதான் மிகவும் முக்கியமானது. 23 வருடங்களாக இன்னல்களை அனுபவித்த பிறகும் இந்த மக்கள் இன்னும் தங்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்படவில்லை மற்றும் இன்னமும் இடம்பெயர்ந்த மக்களாகவே வாழ வேண்டியுள்ளது. எல்.ரீ.ரீ.ஈ யின் தோல்விக்குப் பிறகு கூட இந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. இந்த மக்களில் சிலர் ஏற்கனவே தங்கள் சொந்த இடங்களுக்கு சென்றுவிட்டார்கள் என்பது உண்மைதான், இருந்தாலும் அவர்களில் அநேகர் பல இடங்களிலும் உள்ளக இடம் பெயர்ந்தோர்களாகவே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் சொந்த இடங்களுக்கு சென்றுள்ள இவர்களில் பலர் தங்கள் சொந்தச் செலவிலேயே அங்கு சென்றார்கள்.

இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு சமூகமும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் மற்றும் அபிவிருத்திக்கும் தனது பங்களிப்பை செய்கிறது. இந்த நாட்டிலுள்ள எந்த ஒரு சமூகத்துக்கோ அல்லது எந்தவொரு தனிப்பட்டவருக்கோ எதிரான பாகுபாடு காட்டப்படுவதை நியாயப்படுத்த முடியாது. இந்த நாட்டில் ஒரு சமூகத்தை ஒதுக்கிவிட்டு மற்றொரு சமூகத்துக்கு சாதகமாக நடப்பது அநீதியான செயல். இருந்தும் வடபகுதி முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயத்தில் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்வதற்கு அதிகாரிகள் தவறிவிட்டார்கள்? ஏன் அவர்களுக்கு எதிரான இந்த வெளிப்படையான பாகுபாடு? சில அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் சமூக சேவைகள் திணைக்களம் என்பன சில நேரங்களில் இந்த மக்களுக்கு சில உணவுப் பங்கீடுகளை வழங்கியுள்ளன என்பது உண்மைதான். இருந்தும் அவர்கள் மீள் குடியேற்றப்படவில்லை.

சர்வதேச முஸ்லிம் சமூகம்கூட இந்த விடயத்தில் பெரிதும் தவறிழைத் துள்ளது? இஸ்லாம், சர்வதேச இஸ்லாமிய சகோதரத்துவ விசுவாசத்தைப் பற்றி உபதேசித்த போதும்கூட, எந்தவொரு முஸ்லிம் நாடோ அல்லது சர்வதேச இஸ்லாமிய அமைப்போ இந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடிய மர்த்துவதற்கு உதவ முன்வரவில்லை.

அரசாங்கம் இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக ஆக்கபூர்வமான ஏதாவது செய்வதற்கு முன்வரவேண்டும். இந்த அரசாங்கம் நியாயமான முறையில் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க விரும்பினால் அது பக்கச்சார்பு மற்றும் பாரபட்சம் அற்ற முறையில் சிறுபான்மை சமூகங்களுக்கு உதவ வேண்டும்.

(கலாநிதி றிபாய் நஸ்மி)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com