Contact us at: sooddram@gmail.com

 

ஓர் அபலைக்கான மனித இதயம்...!

(எஸ்.ஹமீத்)

அந்த இளம் பெண்ணின் மரணம் எல்லோரையும் போலவே என்னையும் நிலைகுலைய வைத்திருக்கிறது; உணவில் பிடிப்பின்மையையும் உறக்கத்தில் நிம்மதியின்மையையும் தந்து விட்டிருக்கிறது; நடையின் வேகத்தையும் செய்கின்ற வேலைகளில் இயல்பாகவே இருக்கும் அக்கறையையும் வெட்டி வீசியிருக்கிறது; எப்போதாவது கிடைக்கும் சந்தோஷத்தின் மீதும் அபூர்வமாக உதிக்கும்  ுன்னகையின் மீதும் கவலைகளையும் விரக்திகளையும் போர்த்தி விட்டிருக்கிறது. சிந்தனைகளின் விஸ்தாரங்களைச் சுருக்கி மீண்டும் மீண்டும் அவளின் மரணமென்ற அந்த ஒரு புள்ளியில் மட்டுமே மனத்தைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

சொந்த வாழ்க்கையின் துயரங்களுக்கு மேலாக அவள் மீதான துக்கமும் அனுதாபமும் படிந்து கிடக்கிறது. மழையைச் சமாளிக்க ஒரு குடையும், குளிரிலிருந்து காத்துக் கொள்ள ஒரு போர்வையும் வாங்குவதற்கான தீவிர முயற்சிகளை அவளின் மீதான பரிதாபம் முடக்கிப் போட்டிருக்கிறது. பட்ட கடன்களைத் தீர்க்க முடியாமல் இரவுகளிலெழுந்து கொட்டக் கொட்ட விழித்திருக்கும் தற்காலத்தின் நெருப்பு நிமிடங்களின் மீது, அவளின் மீதான பச்சாதாபம் எண்ணெய்யை வார்த்துக் கொண்டிருக்கிறது

முன்னம் எப்பொழுதும் அவள் எனக்கு அறிமுகமானவள் அல்ல. உலகின் மிகச் சிறந்த ஆடலரசி போல-தனது  வசீகரக் குரலால் கோடிக்கணக்கானோரைக் கொள்ளை கொண்ட இசைராணி போல-காண்போர் விழிமடல்களை விரியச் செய்யுமளவிற்கு அழகுடைய ஆரணங்கு போல-இலக்கியங்களால் புகழின் உச்சத்தைத் தொட்ட எழுத்தாளர் போல-அற்புதமான அரசியல்வாதி போல-மருத்துவர் போல-வழக்கறிஞர் போல-பெண் சாமியார் போல-அவள் எனக்கு எதுவுமே இல்லை. ஆயினும், அவளின் அந்த மரணம் எனக்குள் ஒரு புயலை உற்பத்தி செய்து விட்டிருக்கிறது.

அவள் விடுதலைப் புலியாக இருக்கலாம்;அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை.சமய வழிபாடுகளில் எனக்கும் அவளுக்கும் வித்தியாசங்கள் இருக்கலாம்; அதைப்பற்றியும் நான் அலட்டிக்கொள்ளவில்லை. அப்படியானால், அவள் பேசிய தமிழ் மொழிதான் அவள் மீதான எனது கரிசனைக்குக் காரணமோவென்று பார்த்தால், அதுவுமில்லை. ஒரு சிங்களப் பெண்ணுக்கு அவளின் கதி ஏற்பட்டிருந்தால் கூட நான் இவ்வாறுதான் வேதனைப்பட்டிருப்பேன். அவள் ஒரு தாயின் குழந்தை; ஒரு குழந்தைக்கும் தாயெனத் தெரிந்த போது, இதயத்தில் இன்னும் பாரம் அதிகமாகிவிட்டது.

ஆயிரக் கணக்கில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும் குழந்தைகளும் அந்த இரத்த மண்ணில் அநியாயமாகச் செத்துப் போயிருக்கிறார்கள்தான். அவர்கள் எல்லோரின் மரணங்களிலும் இதயம் வலியால் துடித்திருக்கிறதுதான். ஆனால், இவளின் மரணத்தில் வலியின் உக்கிரம் தாங்க முடியாது இதயம் வெடித்தே போய்விட்டிருக்கிறது.

அவளின் இறப்பு புதிதாக நிகழ்ந்ததல்ல; பல வருடங்கள் கழிந்து விட்டன. அன்று, அரைகுறையாகப் போர்த்தப்பட்ட வெள்ளைத் துணியுடன், அரை நிர்வாண கோலத்தில் அவளது இறப்பைப் பார்த்து  கண்களிலிருந்து கண்ணீரைக் கொட்டியுமாகிவிட்டது. ஆனால், அவளின் சாவு இப்படித்தான் நிகழ்ந்திருக்கிறதென்பதை இப்போது பார்க்கையில்,உணர்கையில் அன்று வழிந்ததைப்  போலல்லாது இன்று அருவியாய் உதித்து ஆறாய் ஓடுகிறது கண்ணீர்!

கால் மடக்கிச் சேற்றுக்குள் அவள் அமர்ந்திருக்கும் அந்தக் கோலம்; மேலாடையின்றிய அவளைத் தொட்டு அவர்கள் தூக்கும்போது, அச்சத்தாலும் வெட்கத்தாலும் அவள் துவண்டு துடிக்கும் அந்தக் கோரம்; அவளை அவர்கள் இழுத்துச் செல்லும் போது, அவளது கால்கள் பின்னி, நடக்க முடியாது அவள் நடக்கும் சோகம்;இத்தனைக்கும் மேலாக, ''ஐயோ..அது நானில்லை..!'' என்ற அவளின் உயிரைப் பிழியும் அந்த அவல ஓலம்...! பின்னர்...அதன்பின்னர்...அப்புறம்...???

இங்கேதான் மனசாட்சிகள் குலுங்கத் தொடங்குகின்றன; குலுங்கிப் பெருந்துயரில் அமிழத் தொடங்குகின்றன...அமிழ்ந்து பின்னர் அரற்ற ஆரம்பிக்கின்றன...

அவளின் மரணத்தில் வேதனையடைகின்ற ஓர் இதயம்விடுதலைப் புலியின் இதயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை; யாழ்ப்பாண இதயமாக இருக்க வேண்டியதில்லை; இந்து இதயமாகவோ, தமிழ் இதயமாகவோ இருக்க வேண்டியதில்லை; அது ஒரு பெண் இதயமாகவும் இருக்க வேண்டியதில்லை; தான் ஒரு மனித இதயம் என்ற ஞாபகம் அந்த இதயத்திற்கிருந்தால், அதுவே போதும்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com