Contact us at: sooddram@gmail.com

 

மோடியின்

வெளிநாட்டு விஜயங்கள்

இந்தியாவின் பதினைந்தாவது பிரதமர் நரேந்திர மோடி மும்முரமாக வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டு வருகிறார். சீனாவை விட தாம் முந்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் இங்கு இருக்க கூடும். முன்வரும் இருபது வருடங்களில் உலக பொரு ளாதாரத்தை வழிநடத்த முயற்சி செய்யும் நாடுகளே இந்த இந்தியாவும் சீனாவும்.

தனது முதல் விஜயத் தினை ‘சார்க்’ நாடுகளின் ஒன்றான பூட்டானுக்கு இவர் மேற்கொண்டார். இது இந்தியாவுடன் எல்லையை கொண்ட நாடும் கூட. இவருடன் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியு றவு அமைச்சின் செயலாளர் சுதாத்தா சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோரும் சென்றனர். மன்னருடனும் பிரதம மந்திரியுடனும் இவர் பேச்சுவார்த்தை களை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இரு நாடுகளுக்கிடையேயும் இரு தரப்பு வர்த்தகம் மற்றும் நீர் மின்வலு சக்தி தொடர்பான விடயங்கள் பேசப்பட்டதாக தெரிய வருகின்றது. இது தவிர 600 மெக்ஹோவாட் மின்சக்தி வலு கொண்ட நிலையம் ஒன்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

சீனா இதுவரைக்கும் முழு அளவிலான ராஜதந்திர தொடர்புகளை பூட்டானுடன் வைத்திருப்பதாக இல்லை. இந்த விடயத்தில் அக்கறை கொண்டுள்ள சீனா விரையில் முழு அங்கிகாரத்துடனும் ராஜதந்திர தொடர்புகளை ஸ்தாபிக்கவுள்ளது. இப்படியான ஒரு கட்டத்தில் மோடிப் இங்கு வந்திப்பது நோக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

இரண்டு நாட்கள் நீடித்த இவரது விஜயத்தின் போது இரு நாடுக ளுக்குமிடையிலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. தனது முதல் விஜயத்தை முக்கியமாக கருதும் மோடி தனது வெளியுலக பயணத்தை தொடர்கிறார்.

இதுவரைக்கும் 8 நாடுகளுக்கு பிரதமர் மோடி விஜயம் செய்துள்ளார். பிரேஸில், பூட்டான், நேபாள், ஜப்பான், மியன்மார் (முன்னைய பர்மா) பீஜிங், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளே அவை. இத்துடன் அமெரிக்காவும் அடங்கும்.

இவரது இந்த விஜயங்கள் குறித்து பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் கூட சில குறிப்பிடக்கூடிய விடயங்கள் இங்கு உள்ளன. எல்லா விஜயங்களும் குறுகியவைகளாகும். இதே நேரம் இவை கூடுதலான நன்மையை இந்தியாவுக்கு கொண்டு வருவதாகவும் உள்ளன.

இந்தியாவுக்குள் முக்கிய சிக்கல்கள் இருக்கும் நேரத்தில் விஜயங்களை அங்கீகரிக்க கூடியதாக இல்லை எனவும் கூறப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியுள் வெளிநாட்டு கொள்கை நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. எனவே இப்படியான பயணங்களை பிரதமர் தக்க தருணத்தில் மேற்கொள்வது அவசியம் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதேநேரம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சமீபத்தில் பிரதமர் விஜயம் செய்த பூட்டான் மியன்மார் ஆகிய நாடுகளுக்கு பிரதமருக்கு முன்னர் விஜயங்களை மேற்கொண்டார்.

நான் முதல் அமைச்சராக குஜராத்தில் இருந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கலகங்களை உண்டாக்கினார் என்ற குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இவர் மியன்மார் - பர்மாவுக்கு விஜயம் செய்தார். இது ஆகியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடு என்பதால் இந்திய - பர்மிய உறவுகள் முக்கியம் என்ற கருத்து முன்வைக்கப் படுகின்றது. இங்கு நடைபெறவுள்ள சந்திப்பு ஒன்றில் பிரதமர் மோடி சுமார்

40 உயர்மட்ட தலைவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவுக்கான தமது விஜயத்தின் போது இவர் இந்திய மாணவர்களின் விடயம் தொடர்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பெருமளவிலான இந்திய மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கின்றனர். கடந்த சில காலங்களில் இவர்களது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இங்கு இருக்கவில்லை. மாணவர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

கடந்த 28ம் வருடங்களில் அவுஸ்திரேலியாவுக்கு இந்திய பிரதமர் ஒருவர் விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். மெல்பேர்ன், சிட்னி, கென்பெரா, பிரிஸ்பென் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்து இருதரப்பு உறவுகளை மேலும் வலுவடைய செய்தார்.

உல்லாசப் பயணிகளுக்கான விசா உத்தரவாதம் சம்பந்தமாகவும் பேச்சுவார்த்தை நடத்திய மோடி இனிவரும் காலங்களில் அவுஸ்திரேலிய நாட்டு சுற்றுலா வாசிகள் விஸா இல்லாமல் இந்தியா வர முடியும் என்று அறிவித்தார். இந்தியாவுக்குள் இவர்கள் வந்ததும் விஸாக்கல் வழங்கப்படும்.

இது தவிர இரண்டு நாடுகளுக்கிடையேயும் குற்றவாளிகளையும், கிரிமினல்களையும் தங்களது சொந்த நாடுகளுக்கு விசாரணைக்காக கொண்டு வருவது சம்பந்தமாகவும் தஸ்தாவேஜுகள் கைச்சாத்திடப்பட்டன.

சீன - ஜப்பானிய உறவுகள் கசப்பாக உள்ள கட்டத்தில் மோடி ஜப்பான் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவரது விஜயத்தின் போது முக்கியமாக கட்டங்களை நிர்மாணிக்க நிதி உதவி சம்பந்தமாக பேசப்பட்டது. ஜப்பானிய கம்பெனிகள் முதலீடு செய்ய வசதிகள் இந்தியாவில் செய்து கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்தியாவில் ரயில் சேவைக்கு தனியான அமை ச்சு உள்ளது. மிக முக்கிய அமைச்சாக இது கருதப்படுகிறது. ஜப்பானிய உதவியை இந்திய ரயில் வளர்ச்சிக்கும் மக்களின் சேவைக்காகவும் இணைந்து கொள்வது சம்பந்தமாகவும் ஜப்பானிய பிரதமருடன் கலந் தாலோசிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக ஜப்பானிய உதவியுடன் அஹமதாபாத் - மும்பாய் நகரங்களுக்கிடையே அதிவேக ரயில் சேவை ஆரம்பமாகும். மேலும் ஆயுத விற்பனை சம்பந்தமாகவும் பேசப்பட்டது. இதன்படி எதிர் வரும் காலங்களில் ஜப்பானிய யுத்த விமானங்கள் இந்தியா வுக்கு விற்பனை செய்யப்படக் கூடும்.

(பஸ்லி எம். அவ்ப்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com