Contact us at: sooddram@gmail.com

 

கே.பத்மநாபாவின் அரசியல் தத்துவம் மற்றும் நடைமுறை

(தயான் ஜயதிலகா)

தோழர் பத்மநாபா முதலில் ஒரு புரட்சிகர லெனினிச மார்க்கசியவாதி,ஒரு தேசிpathmanaba-5ய விடுதலையாளர் மற்றும் ஒரு மனிதாபிமான சோசலிசவாதி. அவருடைய குணாதிசயங்களை நாங்கள் மறப்போமானால் பின்னர் அவருடைய பங்களிப்பையும் மறந்தவர்களாவோம். தமிழீழ விடுதலைப் புலிகளால் சாதாரணமாக வெட்டி வீழ்த்தப்பட்ட தமிழ் தேசிய இயக்கத்தின் மற்றொரு தலைவரல்ல பத்மநாபா. அவர் அதையும் விட மேலானவர் இதை நாங்கள் எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும்.

தோழர் பத்மநாபாவின் அரசியல் வாழ்க்கை 1970ன் தசாப்தங்களின் ஆரம்ப வருடங்களை நோக்கிப் பின் செல்கிறது. அந்த நாட்களில் இருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் இனவாத கொள்கைகளுக்கு எதிராக எழுச்சி பெற்ற தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர் முன்னணியினர் மேற்கொண்ட செயற்பாடுகளில் அவர் பங்கெடுத்திருந்தார். இந்த அரசாங்கத்தில்தான் தமிழ் ஈழக் கோரிக்கைக்கு உறுதியான அத்திவாரத்தை ஏற்படுத்திக் கொடுத்த முற்போக்கான இடதுசாரிக் கட்சிகள் என அழைக்கப்பட்ட கட்சிகள் அங்கம் வகித்தன, 1956ல் பண்டாரநாயக்காவின் சிங்களம் மட்டும் கொள்கைதான் அந்தக் கோரிக்கைக்கு அடிக்கல் நாட்டியது. 70களின் ஆரம்பத்தில் மொழி வாரியாகவும் மற்றும் மாவட்ட வாரியாகவும் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறைக்கும் மற்றும் பாகுபாடான 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சிப் பிரச்சாரங்களில் தோழர் பத்மநாபா ஆர்வத்துடன் பங்குபற்றினார்.

தமிழ் தேசிய இயக்கத்தில் அவரது தனித்துவமான பங்களிப்பு இருந்தபோதிலும்,70களின் நடுப்பகுதியில் ஸ்ரீலங்கா முழுவதுக்குமான முற்போக்கு இயக்கத்திலும் அது இடம்பெறத் தொடங்கியது. தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களிடையே முதன் முதலாக சோசலிசம் சார்ந்த அமைப்பு ஒன்றை நிறுவியவர்களில் அவரும் ஒருவர். அது 1974 – 75ல் நிறுவப்பட்ட ஈழ விடுதலை இயக்கம் ஆகும். தமிழ் தேசியவாத இயக்கத்துக்கு வெகுஜன அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று பத்மநாபாவும் மற்றவர்களும் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய முன்னணி பின்பற்றி வந்த முதலாளித்துவ மற்றும் பாராளுமன்றக் கொள்கைகளை முறியடித்த முதல் இளைஞர் போராளிக் குழுக்களில் இவருடையதும் ஒன்றாக இருந்தது. போராட்டத்தின் அதிக காலம்வரை வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் உமாமகேஸ்வரன் ஆகியோர் ரி.யு.எல்.எப் இன் முதலாளித்துவ அரசியலின் அரசியல் மற்றும் கருத்தியல் வரம்புக்குள் அடைபட்டிருந்தார்கள் என்கிற உண்மையை வலியுறுத்திக் கூறவேண்டியது அவசியம் என்று நான் எண்ணுகிறேன்.

பத்மநாபாவும் மற்றவர்களும் தமிழ் தேசிய விடுதலை பற்றிய செய்தியை கிராமப்புறங்களில் வாழும் உழைக்கும் மக்களின் மத்தியில் கொண்டு செல்வதற்கு முயற்சி செய்தார்கள். அப்படிச் செய்யும்போது அடிப்படைவாதப் பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தொழிலாளர்க்கும் மற்றும் விவசாயிகளுக்கும் குறிப்பாக விவசாயிகள் சாதி ஒடுக்கு முறையினால் பாதிக்கப்பட்டிருக்கும் போது தமிழ் ஈழத்துக்கான போராட்டம் அவர்களுக்கு எதைக் கொண்டு வரப்போகிறது? பத்மநாபாவின் அரசியல் தத்துவம் இடதுசாரிகள் பக்கம் ஒரு கூரிய திருப்பத்தை மேற்கொண்டதில் இந்தக் கேள்விக்கான பதில் அடங்கியுள்ளது. இதனால்தான் ஈழ விடுதலை இயக்கம் சோசலிசம் சார்ந்த அமைப்பாக உருவாக்கப்பட்டு தமிழ் தேசிய விடுதலைக்கு அர்ப்பணிக்கப் பட்டது.

பத்மநாபா ஒற்றுமை பற்றிய கோட்பாடு மற்றும் நடைமுறை என்பனவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தார் மற்று@ம் ஈழ விடுதலை இயக்கம் ஆயத அபகரிப்பு தந்திரோபாயங்களை பின்பற்றியது. புலோலி வங்கிச் செயற்பாட்டில் அவர் தனிப்பட்ட முறையில் பங்குபற்றினார், தமிழ் எதிர்ப்பு வரலாற்றில் இடம்பெற்ற அப்படியான முதல் சம்பவம் இதுவாகும். அந்த ஆயத அபகரிப்பு சம்பவத்துக்கு பின்னர் உடனடியாக பத்மநாபா ஓடவேண்டிய நிலைக்கு ஆளானார், அந்தப் பகுதி மக்கள் அவருக்கு அடைக்கலம் கொடுத்து அவரைப் பாதுகாத்தார்கள். இது சாதாரண மக்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பையும் மரியாதையையும் மேலும் ஆழப்படுத்தியது. தேசிய விடுதலைப் போராட்டத்தில் பாதுகாப்பு மற்றும் விவேகம் என்பனவற்றுக்கான பெரிய மூலவளம் மக்கள்தான் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். இந்த அனுபவம் காரணமாக மக்கள் சார்பான அவரது நோக்குநிலையின் தரம் மேலும் ஆழமானது.

புலோலி வங்கிச் செயற்பாட்டின் விளைவாக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறையில் இருந்து ஈழ விடுதலை இயக்கத்தினால் உயிர்வாழ முடியவில்லை. இயக்கம் சிதைவடைந்தது தோழர் பத்மநாபா நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்து சென்றார். லண்டனில் இருந்த வேளையில் அவரது குடும்ப அழுத்தத்துக்கு பணிந்து தனது படிப்பைத் தொடர சம்மதித்து அங்கு ஒரு கணக்கியல் மாணவராக தன்னை பதிவு செய்து கொண்டார்.

ஆனால் இங்கிலாந்தை அடைந்த முதல்நாள் தொடங்கி ஒரு அமைதியற்ற இளைPathmanaba_CIஞனாகவே அவர் காணப்பட்டார். அவருடைய சிந்தனை முழுவதும் விரைவிலேயே தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் பணியிலேயே அர்ப்பணமாகியிருந்தது. லண்டனில் இருந்தபோது, அவரது ஓய்வு நேரம் சமூகத் தொடர்புகள் மற்றும் அவரது தனிப்பட்ட இடையீடுகள் யாவும் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான தேவைக்கு வேண்டி நண்பர்களை தேடும் முயற்சிக்காகவே அர்ப்பணிப்புச் செய்யப்பட்டது. அவர் லண்டனில் இருந்தபோதுதான் ஈழ மாணவர்கள் பொதுச் சங்கம் (ஜி.யு.ஈ.எஸ்) மற்றும் ஈரோஸ் என்பனவற்றில் இணைந்தார், உண்மையில் அவை உருவாக உதவியாக இருந்தார். லெபனானில் பலஸ்தீனிய விடுதலை இயக்கத்தினால் பயிற்சி வழங்கப்பட்ட தமிழ் போராளிச் செயற்பாட்டாளர்களின் முதல் குழவில் அவர் இடம்பெற்றிருந்தார். அங்கு பெற்ற அனுபவங்கள் மற்றும் பெய்ரூட்டில் உள்ள சக தோழர்கள் ஆகியோர் பலஸ்தீனப் போராட்டம் பற்றிய ஒரு நிரந்தர அன்பை அவர் மனதில் ஏற்படுத்தியிருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தின் பின்னர் ஓரளவு பலம் பொருந்திய விடுதலை இயக்கம் ஒன்றின் தலைவராக அவர் மாறிய பின்னர் தன்னால் இயன்றவரை தார்மீக,பொருள் ரீதியான, மற்றும் அரசியல் ரீதியான ஆதரவை பலஸ்தீன போராளிகளுக்கு அவர் வழங்கினார். பலஸ்தீனியர்களுடன் இருந்த தொடர்பு காரணமாக தோழர் பத்மநாபா எரித்திரியன் விடுதலை போராட்டத்துடனும் ஒரு வலிமையான ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்தியிருந்தார்.

தோழர் பத்மநாபா நாட்டுக்கான தனது பயணத்தை திரும்பவும் 1978ல் ஆரம்பித்தார். ஸ்ரீலங்காவுக்கு திரும்புவதற்கு முன்னர் சில காலத்தை இந்தியாவில் செலவிட்டு தனது இயக்கத்துக்கான அடுத்த நடிவடிக்கைகளுக்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்தியாவில் அவர் மேற்கொண்ட அரசியல் வேலைகள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை, ஏனெனில் அந்த நேரம்வரை தமிழ் போராளிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த தொடர்பு கடத்தல்காரர்களுக்கும் மற்றும் சமூக விரோதிகளுக்கும் மற்றும் கடும் போக்குடைய தமிழ்நாட்டு தேசியவாதிகளுக்கும் உள்ள ஒரு இணைப்பாகவே இருந்தது. எனினும் பத்மநாபா தென்னிந்தியாவில் உள்ள லெனினிசிய மார்க்கசிய புரட்சிகர சக்திகளுடன் உறுதியான இணைப்புகளை ஏற்படுத்தினார். அவர்களிடமிருந்து தனக்காக அவர் நிறையக் கற்றுக் கொண்டார், ஆனால் அவரது கூட்டணிக்கான தெரிவு அவரது கருத்தியல் மற்றும் அரசியல் தெளிவையும் மற்றும் அவரது சமூக புரட்சிகர அர்ப்பணிப்புகளையும் மேலும் விளக்குவதற்கான சான்றாக இருந்தது.

சென்னையில் தோழர் சுரேஸின் கீழ் ஜி.யு.ஈ.எஸ் இனது குழு ஒன்றை அமைத்த பின்னர் அவர் ஸ்ரீலங்காவுக்கு திரும்பி வந்து அரசியல் ரீதியாக யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி மலையகத்திலும் பணியாற்றினார். தோழர் பத்மநாபா தமிழ் தேசிய விடுதலைக்காக தோட்டப்பகுதிகள் மற்றும் கொழும்பு பாடசாலைகளில் இருந்து தமிழ் இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பரந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அப்படிச் செய்ததின் மூலம் ஏனைய தமிழ் தேசிய விடுதலைப் போராளிகள் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி செயல்படுத்திய குறுகிய வரையறைகள் கொண்ட வெளிப்பார்வையை அவர் தகர்த்தெறிந்தார். அத்துடன் சிங்களப் புரட்சியாளர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளுவதற்கும் பத்மநாபா தீவிரமாக முயற்சி செய்தார். அத்தகைய பலரைச் சந்தித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமை விடயத்தில் அவர்களின் ஆதரவு தேவை என்று அவர்களை இணங்க வைக்க முயன்றார். இது தொடர்பான பெரும்பாலான விடயங்களில் அவர் வெற்றி பெறவில்லை. எனினும் இதில் முக்கியமானது என்னவென்றால் எந்த வகையான குறுகிய தமிழ் தேசிய பேரினவாதத்தில் இருந்தும் அவர் முற்றிலும் வேறுபட்டவராக விளங்கினார் என்பதுதான்.

1978ன் ஆரம்ப காலங்களில்தான் நாங்கள் பேராதனையில் சந்தித்துக் கொண்டோம், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தான் முதல்படி மற்றும் ஒட்டு மொத்த ஸ்ரீலங்காவுக்குமான சோசலிசப் புரட்சியை அரங்கேற்றுவது என்பதில் அவர் வெகு தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். தமிழர் போராட்டமானது அதன் ஜனநாயக கட்டத்திலிருந்து மாற்றம் பெற்று ஒரு சோசலிச தமிழ் ஈழத்தை அமைக்கும் உச்ச நிலையை அடையும் எனவும் அவர் நம்பினார். இந்த இரண்டு முன்மொழிவுகளிலும் பத்மநாபாவுக்கு பெருத்த நம்பிக்கை இருந்தது, இந்த யோசனைகள் சுதந்திரமாகவே அவரிடத்தில் உதித்தன. சிங்களப் புரட்சியாளர்களை இணைப்பதற்கான அவரது முயற்சி இந்த மூலோபாய கண்ணோட்டத்தின் விளைவினாலேயே உருவானது.

1981ல் ஜனநாயக மத்தியத்துவம் குறைவாக உள்ளது என்பது தொடர்பான பிரச்சினை காரணமாக அவர் ஈரோஸிலிருந்து பிரிந்தார். அதேசமயம் அந்த விரிசல் ஏற்படுவதற்கு அதுதான் காரணம் என்றாலும், ஈபிஆர்எல்எப் இனை நிறுவி தேசிய விடுதலைப் போராட்டம் என்கிற தனித்துவமான கருத்துருவைச் செயல்படுத்த தோழர் பத்மநாபாவுக்கு அது அனுமதி வழங்கியது. போராட்டத்துடன் அவர் சோசலிச அரசியல் கல்வி, அதேபோல வெகுஜன இயக்கங்களின் வலையமைப்பின் அடித்தளம் ஆகிய இரண்டையும் வழங்க முயன்றார். அதனால்தான் கிராமப்புற தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் முன்னணி, ஈழ மகளிர் விடுதலை முன்னணி, மீன்பிடி தொழிலாளர் முன்னணி மற்றும் பெருந்தோட்ட பாட்டாளிகள் முன்னணி என்று முக்கியமான அமைப்புகளின் வரிசை ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்த வெகுஜன அமைப்புகளை பின்னர் அவர் தனியான பிரபலமான ஒரு ஒற்றை அமைப்பான ஈழ மக்கள் விடுதலை முன்னணியாக ஒருங்கிணைக்க முயன்றார். இது 1983ல் நடந்தது.

ஆயுத போராட்ட அமைப்புகள் வெகுஜன அமைப்புகளைச் சார்ந்ததாகவும் அவற்றில் இருந்து உருவாக்கப்பட்டதாகவும் இருப்பதுடன் அது கட்சியின் அரசியல் தலைமையின் கீழ் இயங்க வேண்டும் என்பதில் அவர் வெகு தெளிவாக இருந்தார். அதனால் மாவோவின் முக் கூற்றுத் தொகுதியான கட்சி, இராணுவம் மற்றும் ஐக்கிய முன்னணி என்பனவற்றை அவர் பின்பற்றினார். ஆனால் அது ஒரு வறட்டுத்தனமான மாவோயிசமாக இருக்கவில்லை, அவரது திட்டமான தனியான வெகுஜன அமைப்புகள் பின்னர் ஒரு பிரபலமான குழுவாக நிறுவப்பட்டதால் அது நிரூபணமானது. அவர் தனது சொந்த சிந்தனைகளின் தொகுப்பானது, பலஸ்தீனிய விடுதலை முன்னணி, எரித்திரியரான கலாநிதி ஜோர்ஜ் ஹபாஸ் மற்றும் இந்திய மார்க்கசிய லெனினிசிய அமைப்புகள் என்பனவற்றின் சிந்தனைகளில் இருந்து பரிணாமம் அடைந்திருக்கும் என நான் நம்புகிறேன். ஒரு மார்க்சிசவாதி என்கிற வகையில் ஸ்டாலின், மாவோ, வியட்னாமியர் குறிப்பாக சே,பிடல் போன்றவர்களிடம் அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.

நிச்சயமாக இது சம்பந்தமாக தனது இலக்குகளை அவரால் நிறைவேற்ற முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த இயக்கரீதியான கட்டமைப்பு அது உருவாக்கப்பட்ட அர்த்தத்திலும் மற்றும் அது இயங்கவேண்டிய வகையிலும் செயல்படவில்லை என்பதும் தெளிவாக உள்ளது. இதற்கு பலவகையான காரணங்கள் உள்ளன. அதில் ஒரு வகையான தொகுப்பு தவிர்க்கக் கூடிய அகநிலை தவறுகள் மற்றும் அமைப்பு ரீதியான பிழைகள் என்பனவற்றைக் கொண்டுள்ளது. மற்றைய தொகுப்பு, எங்கள் எல்லோரையும் போல தோழர் பத்மநாபாவும் மரபுரிமை வழியாக வந்த வரலாற்று ரீதியான நிபந்தனைகளுக்கும் மற்றும் சூழ்நிலைகளுக்கும் கட்டுப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகும். அவர் ஒரு சோசலிச தேசிய விடுதலை அமைப்பை, பழமைவாதம் மற்றும் ஒரு உயர்மட்ட சமூக கட்டமைப்புகளில் ஊறிப்போன ஒரு இன மற்றும் சமூக அமைப்புக்குள் கட்டியெழுப்ப முயற்சி செய்தார். தேசிய விடுதலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து பெண்கள் விடுதலைக்கான தேவையை வலியுறுத்திக்கொண்டு சாதி ஆதிக்கம் மற்றும் வர்க்கச் சுரண்டல் என்பனவற்றுக்கும் எதிராக போராடினார், இதனால் தமிழ் மக்களிடத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த சலுகையுள்ள சமூக அடுக்குகளில் உள்ளவர்களிடமிருந்து ஈபிஆர்எல்எப் அளவற்ற விரோதத்தை சம்பாதித்துக் கொண்டது. இதன் காரணமாக ஈபிஆர்எல்எப் இனது பொருளாதார வளங்கள் சுருக்கமடையத் தொடங்கின.

1983 ஜூலையின் பின்னர் போராளி இயக்கங்கள் தென்னிந்தியாவில் தஞ்சம் கோரிச் சென்றதுடன், தங்கள் தளங்களையும் அங்கு அமைத்துக் கொண்டன, ஈபிஆர்எல்எப் தனது சித்தாந்த கொள்கைகளை சமரசம் செய்து கொள்ள மறுத்ததின் மூலம் தனித்துவம் பெற்றது. மற்றைய குழுக்கள் யாவும் தமிழ்நாடு மாநில அரசாங்கத்திடமிருந்து பெருமளவிலும் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள அதிகம் தேசியவாதமும், பேரினவாதமும் மற்றும் முதலாளித்துவமும் கொண்ட அரசியல் சக்திகளிடமிருந்தும் பயன்களைப் பெற்றுக் கொண்டன. தோழர் பத்மநாபா கொழும்பிலோ அல்லது வேறு இடங்களில் உள்ள சிங்கள பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குவதற்கு உறுதியாக மறுத்துவந்தது இந்தியாவிலோ அல்லது மேற்கிலோ உள்ள முதலாளித்துவ தமிழ் தேசியவாதிகளை உவப்படையச் செய்யவில்லை, மற்றைய சில குழுக்களுக்கு பயங்கரவாத செயற்பாடுகளை நடத்துவதற்காக இவர்கள் பணப்பட்டுவாடா செய்து வந்தார்கள் அத்தகைய குழுக்களும் வாய்வழியாக மார்க்கசிய கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டு பயங்கரவாதச் செயற்பாடுகளை நடத்தி வந்தன.

ஈபிஆர்எல்எப் ஆனது ஒரு சக்திவாய்ந்த இராணுவ உபகரணமாக அபிவிருத்தி அடைவதற்கு காலதாமதமானதற்கான காரணம் தோழர் பத்மநாபாவின் சொந்த தத்துவங்களின் தணடனைதான் என நான் கருதுகிறேன், பாரிய போராட்டம் மற்றும் வெகுஜன அமைப்புகள் என்பன சரியான அரசியல் நோக்கு நிலையை அடைவது மிகவும் முக்கியமானது ஆகும். பலஸ்தீனியர்களால் லெபனானில் பயிற்சி பெற்ற அவருக்கு இந்த கௌரவ ஓட்டத்தில் முந்துவதற்காக சிங்கள இலக்குகள்மீது இராணுவ தாக்குதல்களை மேற்கொள்வது எளிதான ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு உணர்வுபூர்வமாக அத்தகைய ஒரு இராணுவ வேறுபாட்டை பலி கொடுக்காமல் ஒதுங்கிக் கொண்டார் என நான் எண்ணுகிறேன். ஒருவேளை தமிழ் விடுதலைப் போராட்டத்தில் உருவாக்கப்படும் அந்த மிருகத்தனமான செயற்பாடுகளுக்காக அவர் வேறு சில வழிகளைக் கண்டிருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், அரசியல் மற்றும் வெகுஜன அமைப்புகளின் பெயரில் எளிதான இராணுவப் பாதையை தெரிவு செய்யாது நிராகரித்த பத்மநாபாவின் மறுப்பை வரலாறு நிரூபித்துள்ளது என்றுதான் நான் சொல்வேன்.

1985ல் எல்.ரீ.ரீ.ஈ அனுராதபுரத்தில் தனது தாக்குதலை தொடுத்த போதும், மற்றும் திரும்பவும் மே 1986ல் ரெலோ தாக்குதலைத் தொடர்ந்த போதும், பத்மநாபா மற்றும் ஈபிஆர்எல்எப் என்பன மிகவும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருந்தன. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் பத்மநாபா இந்த அலைக்கு எதிராகவே சென்றார். ரெலோ இயக்கத்துக்கான தனது முழு ஆதரவையும் மற்றும் ஒத்துழைப்பையும் அவர் வழங்கியிருந்தார், ரெலோ அங்கத்தவர்களை புலிகள் கொலை செய்ததை எதிர்த்து கண்டனம் செய்து ஹர்த்தால் நடத்திய ஒரே குழு அவருடையது மட்டும்தான்.அவர் அதை உதாசீனம் செய்ய எண்ணவில்லை. இருப்பினும் அவர் கொள்கைகளைப் பின்பற்றினார். நியாயத்தின்படி சரியானவற்றையே அவர் செய்தார்.

தோழர் பத்மநாபாவின் பெருந்தன்மை அவரது நியாயமான அணுகுமுறைகளில் மட்டும் வாழவில்லை, நிச்சயமாக தவறான செயல்களை செய்யாமல் மனப்பூர்வமாக ஒதுங்கியதிலும் அது தங்கியிருக்கிறது என்று நான் சொல்வேன். அவரது தலைமையின் கீழிருந்த ஈபிஆர்எல்எப் சிங்களப் பொதுமக்களை கொல்வதில் ஈடுபடவில்லை. வருமானம் தேடுவதற்காக போதைப் பொருள் கடத்தலை செய்வதை அது நிராகரித்து வந்துள்ளது. இந்த கடைசி விடயத்தில் மென்மையான நாபா மிகவும் உறுதியாக இருந்தார்.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் எந்தவொரு ஈபிஆர்எல்எப் அங்கeprlf nabaத்தவருக்கும் தீhப்பாக மரண தண்டனை நிறைவேற்றும் யோசனையை அவர் உறுதி செய்தார்.”நாங்கள் செய்வது மற்றும் எங்கள் போராட்டம் எல்லாம் மானிடர்களுக்காகவும் மனிதாபிமான இலட்சியங்களுக்காகவுமே. போதைப் பொருள் கடத்தலின் விளைவாக மற்றைய நாடுகளில் சிறந்த பல மனித உயிர்கள் அழிவுக்கு உள்ளாகின்றன. இது நாங்கள் கடைப்பிடிக்கும் இலட்சியங்களை முட்டாள்தனமானதாக மாற்றுகிறது” என்று அவர் அடிக்கடி சொல்வார். தோழர் பத்மநாபாவின் சோசலிச புரட்சிகர அர்ப்பணிப்புகளில் மனிதநேயம் மிகுதியாக வியாபித்திருந்ததை இது தெளிவாக அடையாளம் காட்டுகிறது. அந்த நேரத்தில் தமிழ் ஈழ இயக்கத்தில் இருந்த பிற போலித்தனமான சோசலிச அமைப்புகள் சித்திரவதை அறைகளையும் மற்றும் மரண முகாம்களையும் பராமரித்து வந்தபோது உள்ளக கொலைகளை அனுமதிப்பதை அவர் நிராகரித்து வந்தது ஜனநாயகத்துக்காக போராடும் அவரது நம்பகத்தன்மைக்கு சான்றாக விளங்கியது, அதேவேளை சிங்கள பொதுமக்களை கொல்வதை ஊக்குவிக்க அவர் மறுத்தது அவரது சர்வதேசத் தன்மைக்கு சான்று பகருகிறது.

உண்மையில் தோழர் பத்மநாபாவிற்கு சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்த ஒரு புரட்சிகரத் திட்டத்தினை உருவாக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆழமான ஆர்வம் இருந்தது, ஏனைய தமிழ் விடுதலை இயக்கங்கள் செய்ததை போல் இந்தப் பணிக்காக துணை ஒப்பந்தங்களை மேற்கொள்ளவோ அல்லது போலி கருத்தியல்வாதியாகவோ அவர் இருக்கவில்லை, இது ஒட்டு மொத்த ஸ்ரீலங்காவின் புரட்சிக்கான இலக்கு என்ற அவரது கொள்கைக்கான அர்ப்பணிப்பிற்கான மற்றுமொரு ஆதாரமாகும். தமிழ் விடுதலை இயக்கங்களின் ஏனைய தலைவர்களைக் காட்டிலும் தோழர் பத்மநாபா உடல் ரீதியாக மட்டும் உயர்ந்து நிற்கவில்லை ஆனால் அவரது சர்வதேசியம் மற்றும் மனிதாபிமானம் என்பனவற்றிலும் அவர்களைவிட முன்னணியில் நிற்கிறார். கம்யுனிசம் மற்றும் புரட்சிகர அமைப்பு என்கிற உலகின் பரிணாமத்துக்கு பத்மநாபாவின் சொந்த கருத்தியல் உருவாக்கங்கள் சாட்சியாக உள்ளன. இப்போது அதன் இலக்கை எட்டியுள்ள மார்க்கசிய இயக்க உலகம், அதன் இலக்கை அடைவதற்காக ஜனநாயக மனிதாபிமான சோசலிசத்தில் நம்பிக்கை கொண்டு அதற்காக உழைத்த ஒருவராக பத்மநாபா விளங்குகிறார்.

அவரது மனிதாபிமான விடயத்தில் பத்மநாபா, ஆழ்ந்த இனவாத எதிர்ப்பு மற்றும் சர்வதேசிய இலட்சியம் என்பனற்றைக் கொண்டு ஜனநாயக சோசலிசம் என்கிற கொள்கைக்காக தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்த விஜய குமாரதுங்கவினை ஒத்தவராக விளங்குகிறார்.

தோழர் பத்மநாபாவின் வரலாற்று சாதனைகளை கணிப்பீடு செய்வது எளிதான பணியல்ல, நாங்கள் எங்கள் பயணத்தின்போது பகிர்ந்து கொண்ட தனிப்பட்ட பல நினைவுகளும் அனுபவங்களும் ஏராளமாக உள்ளன. ஆனால் அது ஒரு நீண்ட கதை அதை மற்றொரு சமயத்தில் வைத்துக் கொள்வோம். இந்த நாட்டின் தமிழ் இனம் உற்பத்தி செய்த தலைசிறந்த மார்க்கசியவாதி நிச்சயமாக தோழர் பத்மநாபா என்று நான் உறுதியாகச் சொல்வேன் - தோழர் வைத்தியலிங்கம், கந்தையா மற்றும் சண்முகதாசன் போன்ற ஏனையவர்களும் உள்ளார்கள். ஆனால் மற்ற எந்தவொரு மார்க்கசியவாதிக்கும் ஆயுதப் புரட்சி நடவடிக்கையினை ஒன்றுபடுத்திய கோட்பாட்டினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அல்லது ஒருவேளை திறமை கிட்டவில்லை என்று நான் சொல்ல விரும்புகிறேன். அந்த அர்த்தப்படி பார்த்தால் தோழர் பத்மநாபா தமிழ்சமூகம் உருவாக்கிய ஒரு சிறந்த மார்க்கசிய – லெனினிச புரட்சியாளர் என்று சொல்வது தவறானதாக இருக்க முடியாது. நான் இன்னும் ஒரு படி முன்னே செல்கிறேன். ஸ்ரீலங்காவில் நாங்கள் உருவாக்கியவர்களில் யார் சிறந்த மார்க்கசிய – லெனினிச புரட்சியாளர் தலைவர் என்று என்னிடம யாராவது கேட்டால், என்னால் பத்மநாபாவை தவிர மற்றொருவரை நினைத்துப் பார்க்க முடியாது.

தோழர் பத்மநாபா பற்றிய விரிவான பகுப்பாய்வு மதிப்பீட்டை மேற்கொள்வது மற்றொரு மன்றத்தின்; பணியாகும். ஆனால் பத்மநாபாவினை புரிந்து கொள்வதற்காக புரட்சிகர மூலோபாயம் மற்றும் அரசியல் தத்துவம் மற்றும் நடைமுறை கோட்பாடுகள் பற்றிய பல பெரிய பிரச்சினைகளை – அது அரசியலுக்கும் மற்றும் இராணுவத்துக்கும் உள்ள தொடர்பானலும் சரி, கட்சி மற்றும் ஐக்கிய முன்னணி, அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ட திட்டங்கள், தேசியம் மற்றும் சர்வதேசியம், சோசலிசம் மற்றும் மனிதாபிமானம், முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் உலக கம்யுனிச இயக்கத்தின் நெருக்கடி போன்ற எத்தகைய தொடர்புகளாக இருந்தாலும் சரி - எங்கள் முன் நேருக்கு நேர் கொண்டு வரவேண்டும் என்று நான் சொல்ல விரும்புகிறேன். பத்மநாபாவின் நடைமுறை மற்றும் சிந்தனை என்பன அவை அனைத்திலும் ஆழமாக ஊடுருவி இருந்தது. பத்மநாபாவை புரிந்து கொள்ள தமிழ் விடுதலைப் போராட்ட வரலாறு, தமிழ் சமூக அமைப்பின் தன்மை,ஸ்ரீலங்காவின் புரட்சிகர நடைமுறைகள், தென்பகுதி அரசியல் நடைமுறைகள் என்பனவற்றின்மீது வெளிச்சம் பாய்ச்சப்பட வேண்டும்.

ஆசியா மற்றும் இந்த சிக்கலான புரட்சிகர அமைப்புகளின் போக்குகள், உலகின் வன்முறையான பகுதி மற்றும் முழு உலகத்தையும் எடுத்துக் கொண்டால். அவரது இயக்கம் பாசிசப் புலிகளால் தாக்கப்பட்டபோதெல்லாம் குறிப்பிடத்தக்க மீள்திறனை பெற்றுக்கொள்ளும் வகையில் பத்மநாபா தனது அமைப்பை விட்டுச் சென்றுள்ளார்ஆனால் இவை அனைத்துக்கும் மேலாக பத்மநாபா தனது முன்மாதிரியை நம்முன் விட்டுச் சென்றுள்ளார். அவர் ஒருபோதும் ஒரு பேச்சாளராகவோ அல்லது எழுத்தாளராகவோ இருந்ததில்லை. ஆனால் அவரது செயற்பாடுகளில் அவர் நிறைந்து நிற்கிறார்.எனவே நாம் ஒன்றுசேர்ந்து அமைப்பு ரீதியாக பத்மநாபாவின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய முன்மாதிரியை நாம் பின்பற்ற வேண்டும். தோழர் பத்மநாபாவினை புலிகள் கொன்றிருக்கலாம் ஆனால் நந்தன மாரசிங்கவின் மரணச்சடங்கின்போது விஜய குமாரதுங்க சொல்லியது போல ‘அவர்கள் ஒரு விடுதலை வீரனைக் கொல்லலாம் ஆனால் விடுதலைப் போராட்டத்தை கொல்ல முடியாது. விடுதலைப் போராட்டம் நித்தியமானது’. ஒரு நாள் சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த புரட்சிப் படை மக்கள் எதிர்வினை மற்றும் சர்வாதிகாரப் போக்குக்கு எதிரான தங்கள் ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்கும்போது உலகம் இதை அறியும் - நிச்சயமாக ஒரு தீhக்கமான கட்டத்தில் மற்றும் போராட்டத்தை நிர்ணயிக்கும் தருணத்தில் அவர்கள் விஜய மற்றும் பத்மநாபா ஆகியோரின் இரட்டைப் பதாகைகளை விரித்துப் பிடிப்பார்கள்.

பத்மநாபாவின் தார்மீக மற்றும் ஒழுக்க அந்தஸ்து ஒருபோதும் குறையாது மாறாக எங்கள் நாட்டின் கலாச்சார நெருக்கடி மற்றும் புரட்சிகர இயக்கங்களின் தாக்கம் எங்கள் மீது பிரதிபலிக்கும் வேளையில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அது வளர்ந்து கொண்டே போகும். பத்மநாபாவின் கருததுக்கள், கோட்பாடு மற்றும் நடைமுறை, எங்கள் சொந்த வரலாறு, இருத்தியல் மோதல் மற்றும் எதிர்காலத்தில் திரும்பவும் எழக்கூடிய போலியான மோதல்கள் என்பனவற்றுக்கு பொருத்தமான ஒரு சுலோகத்தை தேடுவதுடன் இதை நான் நிறைவு செய்ய விரும்புகிறேன். சோசலிசப் புரட்சி அல்லது மரணம்! என்பதுதான் அந்த சுலோகம்.

(தயான் ஜயதிலகா ஸ்ரீலங்கா மகாஜனக் கட்சியின் உதவிச் செயலாளரும் மற்றும் அரசியல் குழு அங்கத்தவருமாக இருந்தவர். இந்தக் கட்டுரை 1990 நவம்பரில் எழுதப்பட்டது)

(தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com