Contact us at: sooddram@gmail.com

 

பிரிந்தே நிற்கும் உலகத்தமிழர்கள்

வளர்த்த கடாக்கள் மார்பில் பாய்ந்தன
மாவீரர்களையே குறிவைத்தன
கனடாவில் கலியுகம்

மாவீரர்கள் ஈழத்தமிழர்களின் சரித்திர புருசர்கள். அவர்கள் விடயத்தில் மட்டும் எந்த விட்டுக் கொடுப்பையும், ஈழத்தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இது தேசியம் சார்ந்த விடயம். மாவீரர்நாள் குறித்து எமது தேசியத்தலைவர் தெளிவான விளக்கங்களை, செயற்பாட்டு வரைமுறைகளை வகுத்துத் தந்திருக்கின்றார். வெளிநாடுகளில் ஒன்றாக ஒரே இடத்தில் கூடி உரத்துக் குரல் எழுப்புங்கள் என்று பணித்திருக்கின்றார். அதனையே நாம் வருடா வருடம் செய்து வருகின்றோம். இந்தவருடம் திடீரென ஒரு சிலர், மாவீரர் நாளை எங்கும் செய்யலாம், யாரும் செய்யலாம் என்ற கோசத்துடன் களம் இறங்கியுள்ளனர். தேசியத் தலைவரின் சிந்தனை வடிவங்களையும், செயற்பாட்டு வழிகாட்டுதலையும் சிதைக்க முனைந்து நிற்கின்றனர்.

இவர்கள் யார்? இவர்களின் பின்புலம் என்ன? என்னதான் சாதிக்க முனைகின்றனர்? என ஆராய்ந்த போது, அது குறித்த ஆவணங்களைத் திரட்டியபோது எமக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதில் ஒரு சிறு பகுதியை எம் மக்கள் முன் வைக்கின்றோம்.

நபர் 1: டன்ரன் துரைராஐ(Danton Thurairajah)

இவர் கனடிய தமிழர் பேரவையின் இன்றைய நிறைவேற்றுப் பணிப்பாளர். இவரை இந்த பணியில் அமர்த்தியதே உலகத்தமிழர் இயக்கம். 2004 இல் 15 ஆண்டுகளின் பின் அமெரிக்காவில் இருந்து தப்பி கனடாவில் அடைக்கலம் புகுந்தவருக்கு 2005 இல் இப்பதவியையும் கொடுத்து மாதாந்த சம்பளம் மக்கள் பணத்தில் இருந்து வழங்கி, பேரவையின் காரியாலய வாடகையையும் உலகத்தமிழர் இயக்கமே 2009 வரை வழங்கியுள்ளது. முள்ளிவாய்கால் பேரவலத்தின் போது 5 மாதங்களாக கடும் குளிரிலும் மக்களாகிய நாங்கள் வீதிகளில் நிண்ட போது தனது வீட்டிற்குள் முடங்கிக் கொண்டவர். முள்ளிவாய்காலுக்;கு பின்னர் தமிழர் பேரவையை தனது தனிநபர் நிறுவனமாக மாற்றி தனது வயிற்றுப்பிழைப்பை உறுதி செய்து கொண்டுள்ள இவர், மாவீரர்களின் குருதியிலும், வீரச்சாவிலும் தனது குடும்பப்பிழைப்பை கடந்த 10 ஆண்டுகளாக நடாத்திய இவர் தற்போது மாவீரர்கள் இருப்பையே கேள்விக்குறியாக்க முனைந்துள்ளார். தற்போது தமிழர் பேரவையை பல நாட்டு உளவு நிறுவனங்களின் முகவர் நிறுவனமான மாற்றியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் கனடியத் தமிழர்களிடையே திரட்டியுள்ள இவர் ஒரு சதம் கூட தாயக மக்களின் புனர்வாழ்வுக்காக வழங்கவில்லை. மார்பில் பாய்ந்த வளர்த்த முதல் கடா இவர்.

நபர் 2: ரெஜி சபாரத்தினம் (Rege Sabaratnam)

உலகத்தமிழர் இயக்கத்தின் முன்னாள் பொறுப்பாளர். கனடாவில் இருந்து சென்று கே.பியுடன் இணைந்து பணியாற்றியவர். கே.பியினால் பின்னர் கனடா பொறுப்பாளராக அனுப்பப்பட்டவர். பின்னர் இவர் சார்ந்த செயற்பாடுகள் காரணமாக தலைமையினால் பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் தானாகவே தமிழர் செயற்பாட்டில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் எந்தவொரு மாவீரர் நிகழ்விற்கும் சென்றதில்லை. முள்ளிவாய்காலுக்கு பின்னர் கே.பி சார்பில் கனடாவில் மீண்டும் களம் கண்டார். புலம்பெயர்ந்த தமிழர் மனோவியலை மாவீரர்நாளை முன்னிட்டு தகர்க்குமாறு கோத்தபயா விடுத்த பணிப்பை கே.பி சார்பில் செய்து கொடுக்க இவருடன் சக கே.பி செயற்பாட்டாளர்கள் சுப்பிரமணியம் ராஐரட்ணம், சிறிரஞ்சன் கந்தையா ஆகியோரும் சேர்ந்து களம் இறங்கியுள்ளனர்.

நபர் 3: சுப்பிரமணியம் ராஐரட்ணம்





ரெஜயின் காலத்திலேயே பல சொத்துக்கள் கனடாவில் தேசியம் சார்ந்து கே.பியினால் வாங்கப்பட்டன. அதில் பெரும் பகுதி மேற்கண்ட மூவரின் பெயரிலும் உண்டு. மார்பில் பாய்ந்த வளர்த்த இரண்டாவது கடா இவர்.

 

 

 

 

நபர் 4: வேலுப்பிள்ளை தங்கவேலு

மூத்தவர். உலகத்தமிழர் இயக்கத்தின் முன்னாள் உப தலைவர். தற்போது தேசியக்கூட்டமைப்பில் கனடாவின் முதன்மையானவராக காட்டிக் கொள்பவர். குழப்பமான கருத்துகளுக்கு பெயர் போனவர். யாராவது ஏற்றிவிட்டால் முயலுக்கு இரண்டுகால் தான் என வாதிடுவதில் வல்லவர். தான் செய்வது தவறு என்பது புரிந்தும் வீம்புக்கு மாவீரர் நாள் சார்ந்தே நச்சுக்கருத்துகளை விதைக்கின்றார். எழுச்சி நாளை சோக நாள் என்கிறார். மாவீரர்; நாள் நடைமுறைகளை மாற்றவேண்டும் என்கிறார். இவர் அணியை சேர்ந்த மருத்துவர் சாந்தகுமார் தெரிவித்த கருத்து இவர்களின் நோக்கை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. நீங்கள் மாவீரர்களை வைத்து உங்கள் சுயநல அரசியலை முன்னெடுக்கின்றீர்கள் அதை நாம் அனுமதிக்கமுடியாது என்று உறவகள் சிலர் சொல்ல அதற்கு சாந்தகுமார் ஓம் இதைவிட்டால் உலகத்தமிழரை போட்டுத்தள்ள சந்தர்ப்பம் வராது நாம் இதைச் செய்தே ஆகவேண்டும் என்றுள்ளார். ஆகமொத்தத்தில் கனடாவில் தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ள இவர்களால் மாவீரர்கள் பலிக்கடா ஆக்கப்படுகின்றனர்.

நபர் 5:மருத்துவர் சாந்தகுமார்







இது குறித்து தாயகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள பலருடன் பேசினோம். அவர்கள் இவர்களுடைய செயற்பாடுகள் குறித்து அதிர்ச்சியே வெளியிட்டனர். தேசியம் ஒற்றுமைப்பட்டு வெளிப்படவேண்டிய நேரத்தில் மாவீரரை மையப்படுத்திய போலி அரசியல் குறித்த கனடிய தமிழ் மக்கள் கனமாக இருக்கவேண்டும் என்றனர். மார்பில் பாய்ந்த வளர்த்த மூன்றாவது கடா இவர்.

நபர் 5: ஸ்ரான் அன்ரனி





இக்கூட்டணியில் உள்ள மேலும் சிலரை பற்றி சுருக்கமாக. ஸ்ரான் அன்ரனி - தேசிய சொத்துக்களை கையகப்படுத்தி வைத்துள்ளவர்களில் முதன்மையானவர் இவர். தேசிய சொத்தான பல மில்லியன் டொலர் பெறுமதியான பல்கலாச்சார வானொலி (சி.எம்.ஆர்) இவரிடம் உள்ளது. இச் சொத்தை முழுமையாக தன்னகப்படுத்தும் முயற்சியாக மேற்கண்டவர்களை மட்டும் ஆதரிக்கின்றார்.

 

 

நிமால் விநாயகமூர்த்தி

மற்றையவர். நிமால் விநாயகமூர்த்தி - தற்பொது நாடு கடந்த அரசில் அமைச்சராக உள்ளவர். தாயகத்தில் மாற்று இயக்கத்தில் இருந்தவர். அதனால் புலிகளை என்றும் இவருக்க பிடிக்காது. முள்ளிவாய்கால் பேரவல முடிவின் போது அதைக் கொண்டாடிய சிலரில் ஒருவர். சனியன் ஒழிஞ்சிசு. இனிமேல் தான் நிம்மதி என்றவர் தற்போது மாவீரர் நாளுக்கு அழைப்பு விடுக்கின்றார். பிரதமர் ருத்திரகுமரன், மற்றும் கனடாவின் 22 நாடுகடந்த அரச உறுப்பினர்கள் இவர்களுக்கு ஆதரவு இல்லை என்று தெரிவித்தமைக்கு எமது நன்றிகள்.

35 பேருடன் ஒரு பதாதை வெளியிடப்பட்டிருந்தது அதில் கணிசமானோர் அதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்திருந்தனர். தாம் தவறாக வழிநடத்தப்பட்டதாக சிலர் சொன்னார்கள். அதை வெளிப்படையாக சொல்லுமாறு அவர்களை நாம் வேண்டுகின்றோம்.

இது குறித்து தகவல்களைத் திரட்டியபோது பல ஆதாரங்களை கையளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். அதேவேளை தேசிய செயற்பாட்டில் உள்ளோருக்கும் ஒரு அறிவுறுத்தலைவிடுக்கின்றோம். உங்களில் உள்ள குறைகள், தவறுகளை அடையாளம் கண்டு களைய முனையுங்கள். குழப்பம் விளைவிக்க முனைபவர்கள் இது உங்களுக்கான இறுதி வாய்ப்பு உடன் உங்கள் செயற்பாட்டை நிறுத்தி மார்க்கம்; பெயர்கிரண்டில் ஒன்றாக வழமைபோல் சந்திப்போம். இவ்வன்பு வேண்டுகோளை நிராகரித்தால் சேகரிக்கப்பட்டுள்ள உங்கள் குறித்த பல செய்திகள் மக்களுடன் பகிரப்படும்.

குழப்பவாதிகள், சந்தர்ப்பவாதிகள், சுயநலவாதிகளுக்கு உறுதியான செய்தியை சொன்னவாறு மார்க்கம் பெயர்கிரண்டில் ஒன்றாக கூடி உரத்துக் குரல் எழுப்புவோம். வாருங்கள் உறவுகளே.

(கனடியத் தமிழர் சமூகம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com