Contact us at: sooddram@gmail.com

 

பாசத்திற்க்குரிய தமிழ் ஈழ மக்களே!

(சந்திரமோகன்)(கனடா)

மாவீரர் தினத்தில் எனது குரலைக்கேட்டு இதோ வந்திட்டானடா எங்கள் தலைவன் என்று கற்பனையை கன்னாபின்னாவாக ஓடவிடவேண்டாம் இது மாவீரர் தின உரையல்ல மாவீரனாகிபோன என் மனக்குறை. என் குரலை கேட்டு பலபேருக்கு பயத்துடன் கூடிய அதிர் ச்சியாகவும், சிலபேருக்கு மகிழ்வான அதிர்ச்சியாகவும் இருக்கலாம். எனக்கு இறப்பில்லை நான் மறுபடியும் வருவேன் என அப்பாவிதனமாக காத்திருக்கும் மக்களே உங்கள் உண்மையான அன்புக்கு தலைவணங்கி உங்களால் தாங்கிக்கொள்ளமுடியாத விடயம் இது என்றாகினும் நான் மாவீரரானதை சொல்லிக்கொள்ளவேண்டிய இறுதிதருணம் இது என்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன்.  மரணத்தை தழுவிய நான் எப்படி உங்கள் முன்னால் உரையாற்ற முடிகிறது என்ற நியாயமான சந்தேகம் உங்களை போல் எனக்கும் ஆச்சரியமான ஒன்றுதான்.

பொதுவாக மரணம் அடைந்த ஒரு ஆத்மா அவர்களுக்குரிய இறுதிக்கிரியைகள் நடந்தேறும் வரை இவ்வுலகத்தை விட்டு நீங்கா என நானும் என் மரணத்திற்க்கு பின்தான் உணர்ந்தேன். அப்படி கடந்த ஐந்து வருடங்களாக அலைந்ததால் திடீரென என் முன் தோன்றிய கடவுள் ஐந்து வருடங்களாக உன் ஆத்மா இந்த மண்ணைவிட்டு போகாதலால் உனக்கு ஓருமுறை பேசும் வாய்ப்பு கிட்டியுள்ளது என்றது. எனக்கும் இந்த வாய்ப்பு பெரிதும் தேவைப்பட்டது. நான் மரணம் அடைந்ததை நம்பமுடியாமல் அப்பாவிதனமாக என் வரவுக்காக காத்திருக்கும் உங்களிடம் என் மரணத்தை உறுதிப்படுத்தி என் ஆத்மா சாந்தியடைய என்ன செய்யவேண்டுமோ அதை செய்யும்படி உங்களிடம் வேண்டிக்கொள்ளவும், என் மரணத்தை அறிந்திருந்தும் அதை தங்கள் சுயநலம் கருதி மறைத்து கொள்ளையடிக்கும் கும்பலை இறுதியாக எச்சரி க்கவும் இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதுகிறேன்.

என் மரணத்தை வைத்து விளையாடும் அனைவருக்கும் இது எனது இறுதி எச்சரிக்கை தவறும் பட்சத்தில் ஆண்டவனால் எனக்கு சொல்லப்பட்ட கொசுறு செய்தியை தெரியப்படுத்த விரும்புகிறேன், அதன்பின்னராவது திருந்திக்கொள்ளுங்கள் அதாவது எனது மரணத்தை மூடிமறைத்து அதனால் எனது ஆத்மா மேலும் ஒரு வருடம் இவ்வுலகில் அலையும் பட்சத்தில் அதாவது எனது ஆத்மாவுக்கு ஆறு வயது ஆகும்போது நான் ஒருநாள் உடல்பெற்று நான் விரும்பியவர் களை அழிக்கும் சக்தியும் எனக்கு கிடைக்கும் என்பதாகும்.

உங்கள் சூரியதேவன் அழிக்கபிறந்தவன் அழிந்துவிடமுடியுமா? என்பதை ஏற்றுக்கொள்வது என்பது கொஞ்சம் கடினமானவிடயமாக இருக்கலாம், ஆரம்பத்தில் இதுவிடயத்தில் எனக்கிருந்த பயம் உங்கள் அளவற்ற நம்பிக்கையால் எனக்குள் மறைந்துபோனது. அதுவே என் அழிவுக்கு காரணமானது. என் அழிவில் எனக்கிருக்கும் பங்கைவிட உங்களுக்கே அதிகம் உண்டென்ற கசப்பான உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். ஏனெனின் அதே தவறை இப்பொழுதும் நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதானால். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு கொலைகள் செய்யும்போது எங்கே நான் தவறு செய்கின்றேனே என்ற மனஉறுத்தல் எனக்கும் இருந்தது. ஆனால் நீங்களோ எங்கள் தலைவன் எது செய்தாலும் அதில் நியாயம் இருக்கும், செத்தவன் நிச்சயம் சாகவேண்டிய துரோகிதான் என்று என்னை தட்டிக்கொடுத்து ஊக்குவித்து இன்று என்னை அசிங்கமான சாவில் முடித்துவைத்துவிட்டீர்கள். அன்று என்னை நீங்கள் தட்டி கேட்டிருந்தால் இன்று எனக்கு ஒரு ஜட்டி கூட இல்லாமல் சாகும் நிலை வந்திருக்குமா?

உங்களில் பலபேர் என்மீதுள்ள பயத்தினாலோ அல்லது நமக்கேன் வம்பு என்று என நினைத்தோ கம்முன்னு இருந்திருக்கலாம். அதற்க்கான காரணம் நானாக இருப்பதால் மன்னித்துவிடுகிறேன். ஆனால் நான் செய்வது மாபெரும் தவறு என்று அறிந்திருந்தும் தங்கள் சுயலாபத்திற்க்காக என்னாலும் எனக்காகவும் செய்யப்பட்ட பல கொடூரகொலைகள், அழிவுகள் அத்தனையையும் வீரச்செயல்களாக, தமிழீழ போராட்டமாக சித்தரித்து பேசியயும் எழுதியும் தங்கள் வயிறுகளை வளர்த்த படுபாதகர்களை என்னால்கூட மன்னிக்கமுடியவில்லை. இந்த உள்ளுர் பச்சோந்திகளுக்காவது ஏதோ ஒருவகையில் சில அச்சுறுத்தல்கள் இருந்தது ஆனால் எமது அண்டை நாட்டில் சில அரசியல் கோமாளிகள் எந்த அச்சுறுத்தலும் இன்றி தங்கள் அரசியல் பிழைப்புக்காக என்னை நன்மை தீமை சிந்திக்கமுடியாதபடி வளர்த்தெடுத்து என் அகோர சாவுக்கு பின்னும் வயிறு வளர்ப்பதை பார்க்கும்போது நான் எவ்வளவு அறிவற்ற கிணற்றுதவளையாய் வாழ்ந்து அழிந்திருக்கிறேன் என்பதை எண்ணி வெட்கப்படுகிறேன்.

இந்த புலம்பெயர்ந்த கூட்டங்கள் நான் எங்கே தப்பி பிழைத்து விடுவேனே என்று பயந்ததுகளோ என்னவோ புலம்பெயர்ந்த நாடுகளில் அத்தனை குதிகுதித்து என்னை கொன்றே போட்டுதுகள். என் கண்முன்னால் என் குடும்பத்தை சேர்ந்த அத்தனை பேரும் அழிந்ததிற்க்கு பின்னாலும் நான் வாழ ஆசைப்பட்டு அதற்க்காக பணிந்துவரும் வேளையில் அப்பவும் எங்களுக்கு தமிழீழம் தான் வேணும் அதை எப்படியாவது எங்கள் தலைவன் எடுத்து தருவான் என என்னை உசுப்பேற்றிவிட நானும் என் இமேஷ்சை காப்பாற்றபோய் என் உடம்பு டமேஷ்சாய் போனதுதான் மிச்சம்.
இந்த இடத்தில் நான் தெரிந்து கொண்ட கதை ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. ஒரு தாய்க்கு ஒரேயொரு செல்லமகன் ஒரே மகன் என்பதால் தாய் அவனிடம் அளவற்ற பாசம் வைத்திருந்தாள், அதனால் அவன் செய்யு ம் குறும்புகளை கண்டுகொள்ளாமல் மன்னித்து வந்ததுமில்லாமல் அவனை முத்தமிட்டு அன்பை பொழிந்தாள். அதுவே அவன் பெரியவனானதும் பெரிய குற்றங்களை செய்வதற்க்கு வழிவகுத்து ஒரு கொலைக்குற்றத்திறக்காக மரணதண்டனையில் முடிந்தது. அவனிடம் கடைசி விருப்பமாக எது வேண்டுமென்று கேட்டபோது தனது தாயை ஒருதடவை முத்தமிட விரும்புகின்றேன் என்றான் அப்படி அவன் முத்தமிடும்போது தாயின் மூக்கை பலமாக கடித்துவிட்டு சொன்னான் இந்த மூக்குதானே நான் செய்த தவறுகளை கண்டுகொள்ளாமல் முத்தமிட்டது அதனால்தானே எனக்கு இந்த சாவு வந்தது என்றான். கிட்டத்தட்ட என்நிலமையும் அதுதானே.

இதோ இந்த கூட்டமைப்பு கூத்தாடிகளில் பாதிபேருக்கு மேல் என் கொலைப்பட்டியலில் இருந்தவர்கள் அது அவர் களுக்கும் தெரியும் ஆனால் பதவி சுகம் என்ற ஒரே நோக்கத்திற்க்காக வெட்கம் மானமின்றி எனது காலில் விழுந்துகிடந்து தங்கள் உயிரை காப்பாற்றிக்கொண்டு நான் என் இனத்திற்க்கு செய்த அத்தனை அட்டூழியங்களையும் மறைத்ததுமில்லாமல் அதை சரியென்று ஏற்றுக்கொண்டார்கள். இன்றும் தங்கள் இருப்புக்காக என்னை மாவீரன் என்றும், தமிழினத்தின் ஒரே காவலன் என்றும் கதையளந்து உங்களிடம் ஓட்டுக்கேட்க நீங்களும் அதுகளை உங்கள் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர் கள். இத்தனைக்கும் பின்னால் திருந்திக்கொள்ளமுடியாத உங்களை நினைத்து பரிதாபத்திற்கு பதில் கோபம்தான் அதிகமாக வருகிறது. எக்கேடு கெட்டாவது போங்கள்.

இன்று மாவீரர் தினம். உயிரிழந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள். இதில் உயிரிழந்த பாதி போராளிகளுக்கு தாங்கள் எதுக்கு செத்துப்போனோம் என்றுகூட தெரியாது. மீதிப்போர் உண்மையான தமிழீழத்திறக்கான போராட்டம் இது என்று நினைச்சு செத்துப்போனார்கள். மொத்தத்தில் நான் ஒருவனுக்காக செத்துப்போனவர்கள். அதை நினைத்து என் மனம் கூனிகுறுகி நிற்கிறது. அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்க என் இதயம் தவியாய் தவிக்கிறது அதற்காவது என் ஆத்மாவை விரைவில் சாந்தியடையவிட்டு அவர்களிடம் என்னை சேர்த்துவிடுங்கள். இதுதான் உங்கள் மாஜி தேசியத்தலைவன் முதல்முதலாய் மன்றாடிகேட்பது. செய்வீர்கள் என நம்புகிறேன், அல்லது நான் உடல்பெற்று வரும்வரை காத்திருக்க முடிவெடுத்தால் அது உங்கள் தலையெழுத்து. அப்பாடா முதல்முதலாய் ஒரு மாவீரர் தின உரையை என்னால் எழுதி படிக்கமுடிந்தது.

(சந்திரமோகன்)(கனடா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com