Contact us at: sooddram@gmail.com

 

மனித உரிமைகளை அவமதித்து ஈராக், லிபியாவை ஆக்கிரமித்து,
இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை சுமத்துவது நியாயமா?

இலங்கை போன்ற உலகின் சிறிய நாடுகள் மீது மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் அமெரிக்கா, உலகில் உள்ள எல்லா நாடுகளையும் விட அதிகமான அளவில் மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்து இலட்சக்கணக்கான மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றது. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதியன்று அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தி இரண்டு விமானங்கள் மூலமான கொடிய தாக்குதலினால் அன்றைய தினம் 2996 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் அமெரிக்காவுக்கு 10 பில்லியன் டொலர்கள் நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டி இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அரசாங்கம் அல்கைதா இயக்கத்துக்கு எதிராகவும் ஏனைய இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிராகவும் உத்தியோகப்பற்றற்ற முறையில் யுத்தம் ஒன்றைப் பிரகடனம் செய்து தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் அனைவரையும் அல்லது அவர்களுக்கு உதவி செய்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் அனைவரையும் அழித்துவிடுவது இன்னுமொரு பயங்கரவாதத்தை ஆரம்பித்தது.

செப்டெம்பர் 11 தாக்குதலை அடுத்து உலகில் உள்ள பலம் வாய்ந்த அரபு மற்றும் இஸ்லாமிய அரசாங்கங்களின் தலைவர்கள் மீது அமெரிக்கா குறிவைத்து தாக்குதல்களை ஆரம்பித்து. ஈரான் உலகில் உள்ள பலம் வாய்ந்த இஸ்லாமிய நாடாக வளர்ந்து தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அஞ்சிய அமெரிக்கா ஈரானை யுத்தமுனையில் பலவீனப்படுத்தி தங்களுக்கு அடிபணியச் செய்யும் எண்ணத்துடன் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசைனுடன் கூட்டுச் சேர்ந்து ஈரானை அழிப்பதற்கு முயற்சி செய்தது.

இதற்காக ஈராக்கிய அதிபருக்கு அமெரிக்கா நவீன ஆயுதங்களையும் பெருமளவில் பணத்தையும் கொடுத்து உதவி செய்தது. இதனால் ஆரம்பித்த ஈராக், ஈரான் யுத்தம் 10 வருடங்களாக நடைபெற்று எவருக்கும் வெற்றி தோல்வியுற்ற நிலையில் முடிவுபெற்றது. சதாம் ஹுசைனின் உதவியும் நட்பும் தேவையில்லை என்று முடிவெடுத்த அமெரிக்க ஆட்சியாளர்கள் சதாம் ஹுசைனை பதவி நீக்கம் செய்து ஈராக்கில் தங்களின் சொற்படி நடக்கக்கூடிய ஒரு பொம்மையை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த எடுத்த முயற்சி படுதோல்வி அடைந்தது.

இதேவேளையில் சதாம் ஹுசைன் செய்த தவறான ஒரு காய் நகர்த்தல் சதாம் ஹுசைனை அழித்துவிடுவதற்கு அமெரிக்கா தீர்மானிப்பதற்கு ஏதுவாக இருந்தது. குவைட்டில் இருந்து அமெரிக்கா எண்ணெய் வாங்குவதைத் தடுப்பதற்காக சதாம் ஹுசைன் 1990ம் ஆண்டில் குவைட் மீது போர்த் தொடர்ந்து அந்நாட்டை கைப்பற்றுவதற்கு எத்தணித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்காவும் பிரிட்டன் போன்ற நேச நாடுகளும் சதாம் ஹுசைன் மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தன. குவைட் மீதான சதாம் ஹுசைனின் ஆக்கிரமிப்பு அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகளின் படைபலத்தினால தோற்கடிக்கப்பட்டது.

அதையடுத்தே அமெரிக்கா சதாம் ஹுசைன் மீதான இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இறுதியில் அமெரிக்கா சதாம் ஹுசைன் மீது யுத்தம் ஆரம்பிப்பதற்கு உலக நாடுகளுக்கு ஒரு காரணத்தை முன்வைக்க விரும்பியது. அதற்காக சதாம் ஹுசைன் இரசாயன ஆயுதங்களைத் தயாரித்து உலகை அழிக்கப் பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டின் மீது ஈராக்கிற்கு ஐக்கிய நாடுகள் அணு பரிசோதனைக் குழுவின¨ அனுப்பி சோதனையிட வைத்தது. அந்தக் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு அந்த சோதனைகளின் போது எவ்வித ஆதாரங்களையும் கண்டு பிடிக்க முடியாத போதிலும் அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்து சதாம் ஹுசைனை தோல்வியடையச் செய்து பின்னர் மறைந்திருந்த அந்த மனிதனை சிறைபிடித்து தூக்கிலிட்டது.

இதனால் சதாம் ஹுசைனின் ஆதரவாளர்களுக்கும் அமெரிக்க ஆதரவாளர்களுக்கும் இடையிலான சிவில் யுத்தம் ஆரம்பித்தது. இந்த யுத்தம் இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான ஈராக்கியரும் நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்களும் மடிந்துள்ளார்கள். இப்போது கூட அநேகமாக நாளாந்தம் நடைபெறும் குண்டுத் தாக்குதல்களில் ஈராக்கில் பலர் மடிந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே அமைதியான நாடாகவிருந்த லிபியாவிலும் அமெரிக்கா அந்நாட்டின் எண்ணெய் வளத்தைப் பறிப்பதற்காக லிபியத் தலைவர் கேர்னல் கடாபி மீது யுத்தம் தொடர்ந்து 2003ஆம் ஆண்டில் அந்நாட்டை அடிபணிய வைத்து லிபியாவைக் கட்டியெழுப்பிய அந்த மாவீரன் கடாபியை சுட்டுக் கொன்றது.

இன்று லிபியா ஈராக்கைப் போன்ற நாளாந்தம் இரத்தம் சிந்தும் உள்நாட்டு யுத்தம் நடைபெறும் நாடாக அமெரிக்காவினால் மாற்றப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்கா சிரியாவிலும் யுத்தத்தை ஆரம்பித்து அந்நாட்டின் அதிபர் பஷார் அல் ஹஷாரை பதவி நீக்கம் செய்து தங்கள் கைப்பொம்மை ஒன்றை ஆட்சி பீடத்தில் அமர்த்தும் எண்ணத்துடன் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

இத்தகைய தீயநோக்கத்துடனேயே இலங்கையின் மீதும் அமெரிக்கா மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் போன்ற அழுத்தங்களை கொண்டு வந்து எங்கள் நாட்டிலும் ஈராக் மற்றும் லிபியாவுக்கு ஏற்படுத்தியதைப் போன்ற உள்நாட்டு யுத்தத்துக்கு தூபமிட்டு சகல வளங்களும் பெற்ற எங்கள் தாய் நாட்டை இரத்த வெள்ளம் ஓடும் நாடாக மாற்றுவதற்கு முயற்சிகளை செய்து வருகின்றது.

எவ்வாறாயினும் எங்கள் நாட்டைப் பாதுகாக்கும் காவல் தெய்வங்களும் மும்மணிகளும் அத்தகைய அனர்த்தங்கள் எங்கள் நாட்டில் ஏற்படுவதை கச்சிதமான முறையில் தவிர்த்து வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இத்தகைய சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைக்கு எதிரான சுயாதீனமாக 10 நிபுணர்கள் அமெரிக்காவின் சுமார் 30 சிரேஷ்ட அதிகாரிகளை ஜெனீவாவில் புலன் விசாரணைக்கு உட்படுத்தியது.

அந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்காவின் இராஜங்கத் திணைக்களத்தின் சட்ட விவகார ஆலோசகர் மேரி மெக்லொயிட், சில அமெரிக்க இராணுவத்தினர் தவறிழைத்ததனால் தான் இந்த மனித உரிமை மீறல்களும் கைதிகளை சித்திரவதை செய்து துன்புறுத்தும் செயற்பாடுகளும் இடம் பெற்றன் என்று சித்திரவதை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் விசாரணை குழுவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

கியூபாவில் உள்ள கெளதனாமா சிறைச்சாலையில் இன்றும் கூட 148 கைதிகள் மனித உரிமைகளுக்கு மாறான முறையில் துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீது ஒரு தடவை ஒரு அமெரிக்கப் பெண் வீராங்களை உட்பட பல அமெரிக்க இராணுவ வீரர்கள் சிறுநீர் கழித்தும் மனித பண்புகளுக்கு மாறான முறையில் துன்புறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் இராஜதந்திர மொழியில் அந்நாட்டு இராணுவத்தினர் எவரையாவது அடித்துத் துன்புறுத்தி படுகொலை செய்தால் அது தவறாக இடம் பெற்ற விடயம் என்று கூறி அனைத்தையும் பூசி மூடி மறைத்து விடுவார்கள்.

அதேவேளையில் இலங்கையில் பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழித்துக் கட்டுவதற்காக எமது படைகள் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் போது எவராவது தவறுதலாக காயத்துக்கு உள்ளாகி மரணம் அடைந்தால் அது ஒரு பாரதூரமான குற்றம் என்று கூறி இலங்கைக்கு எதிராக பல்வகையான அழுத்தங்களை கொண்டு வருவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கின்றது.

இவ்விதம் தங்களுக்கு ஒரு சட்டத்தையும் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு வேறொரு கடுமையான சட்டத்தையும் கையாண்டு வரும் அமெரிக்க அரசாங்கத்தின் செயற்பாடு நியாயமானதா என்று நாம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் பகிரங்கமாகக் கேட்க விரும்புகிறோம்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com