Contact us at: sooddram@gmail.com

 

கே.பியின் மீது கோட்டபாய நம்பிக்கை வைக்க காரணம் என்ன?

(பரம்ஜி ஞானாஸ்வரன்)

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள்!

தமிழ் மொழியில் தரித்திரம் என்றொரு சொல் வழக்கத்தில் இருக்கின்றது. வாழ்க்கையில் மிகவும் மோசமான பல நிலைகளை ஒரே நேரத்தில் ஒரு மனிதன் சந்தித்து அல்லற்படுவானாயின் அவனை தரித்திரம் பிடித்துள்ளது என்று சொல்வர். உதாரணமாக வறுமை, பிணி, மரணம் என்பன ஒவ்வொன்றுமே தனித்தனியாக மனிதருக்கு சொல்லொனா துன்பங்களை கொடுக்க வல்லன. ஆனால் அவை மூன்றுமே ஓன்றாக சேர்ந்து ஒருவனை பிடித்து ஒரே நேரத்தில் உலைக்குமாயின் அவனை தரித்திரம் பிடித்துள்ளது என்பர். இலங்கையில் ஈழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் என்ற கண்மூடித்தனமான செயற்பாட்டினால் தமிழர்கள் பட்ட துன்பங்களுக்கும், அடைந்த துயரங்களுக்கும், உறவுகளையும் உடமைகளையும் இழந்தமைக்கும், போராட்டம் முடிந்தும் இன்று அங்கு வாழும் தமிழர்கள் தொடர்ந்து படும் இடர்களுக்கும் காரணம் என்னவாக இருக்கும் என சிந்தித்து பார்க்கையில் கிடைத்த பதில் தமிழர்களை உண்மையில் தரித்திரம்தான் பிடித்துள்ளதோ எனும் சந்தேகமே.

தரித்திரநிலைகளுக்கு மனிதர்கள் ஆளாவதன் காரணம் பொதுவாக அவரவரேயாவர். ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்களை தரித்திரமாக பிடித்து அவர்கள் அவலங்கள் இன்றும் தொடர்வதற்கு காரணமாக இருப்பவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல புலம(பல்) பெயர்ந்த ஈழத்தமிழ் தரித்திரர்கள் என்றால் மிகையாகாது. அறிவு கெட்டு, சிந்திக்கும் திராணிகள் அற்று, தம்மை அதிமேதாவிகள் என்றும் மற்றவர்கள் சுத்த மடையர்கள் என்று எண்ணி உள்ளதையும் கெடுத்த கொள்ளிக்கண்ணர்களாக செயற்படும் சில ஈழத்தமிழ் விளக்குமாறுகளே இலங்கை தமிழர்களை பிடித்த தரித்திரங்கள் ஆவர்.

தென்னை ஓலையில் இருந்து கிழித்து வேறாக்கப்பட்ட பல ஈக்கு கதிர்களை சேர்த்து கத்தையாக கட்டி விளக்குமாறுகள் செய்வார்கள். இவ்வகையாக செய்யப்படும் விளக்குமாறுகளை வீடுகளையும் சுற்றாடல்களையும் கூட்டி சுத்தம் செய்ய மக்கள் பயன்படுத்துவர். சில விளக்குமாறுகளை கோவில்களை சுத்தப்படுத்தவும் சில விளக்குமாறுகளை மலசலக்கூட கழிவுகளையும் கழுவி சுத்தப்படுத்தவும் பாவிப்பர். யார் எதை சுத்தப்படுத்த இந்த விளக்குமாறுகளை உபயோகித்தாலும் அந்த விளக்குமாறுகளுக்கு புரிவதில்லை தாம் கழுவுவது கோவில் நிலங்களா அல்லது மலக்கழிவறைகளா என்பது. ஆனால் அந்த விளக்குமாறுகள் எண்ணிக்கொள்ளுமாம் தம்மால்தான் இந்த உலகமே சுத்தமாகின்றது என. சுத்தப்படுத்த பாவிக்கப்படும் விளக்குமாறுகளை மக்கள் வீட்டினுள் தன்னும் எடுப்பதில்லை. ஏன் எனில் அவை அசுத்தம் என்பதால்.

அவ்வகையான கழிவறைத்தன்மைகளை தம்மகத்தே கொண்டு பல வெளிநாடுகளில் வாழும் புலம(பல்) பெயர்ந்த ஈழத்தமிழர்கள் காசுக்கும், கக்கூசுக்கும் வித்தியாசம் தெரியாத விளக்குமாறுகள் போல பொது அறிவோ பகுத்தறிவோ அரசியல் அறிவோ இன்றி நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் வித்தியாசம் தெரியாமல், தம்மை புத்திசாலிகள் உணர்ச்சி தமிழர்கள் என காட்டி கொள்வதாக மட்டும் எண்ணி தமிழ் சமூகத்திற்கு நன்மை செய்வதாக எண்ணி முட்டாள்தனமாக தீங்குகள் உண்டாகும் வகையில் செயற்படுகிறார்கள். இவர்களே இலங்கை தமிழர்களை இன்று ஆட்டிப்படைக்கும் தரித்திரர்கள் எனலாம்.

இவர்களது குறிக்கோள் தம்மை அதிமேதாவிகளாக, உணர்ச்சி தமிழர்களாக, ஈழவிடுதலை வீரர்களாக, மனித நேய உணர்வாளர்களாக வேடமிட்டுக்காட்டி, வெளிநாடுகளில் மாடாக உழைக்கும் சிந்திக்கும் திறன்கள் அற்ற இழித்தவாய் ஈழத்தமிழர்களை தம்வசப்படுத்தி அவர்களிடம் சுறண்ட எத்தனிப்பது ஒன்றுமட்டும்தான். பெற்ற தாய் முதலான இரத்த உறவுகளை விபச்சாரம் செய்ய வைத்து வருமானம் பார்ப்பதற்கு ஒப்பாக, அப்பாவி தமிழர்களையும் சொந்த உறவுகளையும் யுத்தத்திற்கு பலிகொடுத்து அதனை முதலாக்கி பத்திரிகைகள், தகவல்சஞ்சிகைகள், வானொலிகள் என்ற பெயர்களில் வியாபாரிகாளாக வாழும் ஈனத்தமிழ் பிறவிகள் சிலர் மேற் சொன்ன சில விளக்குமாறுகள் கொட்டும் குப்பைகளை, விளைவுகளை பற்றி எண்ணியும் பாராது படைப்புகள் என்ற பெயர்களில் பதித்து விடுகின்றனர்.

இன்று இந்தியாவின் மற்றும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் ஆதரவுகளுக்காக ஏங்கி நிற்கும் அப்பாவி இலங்கைத்தமிழர்களின் வாயில் மண்ணை போடக்கூடிய நிலைமைகளை தோற்றுவிக்கும் வகையிலேயே இவர்களது உளரல்கள் அமைந்து இருக்க காணலாம். மனித நேயம் மிக்க நல்ல மனிதர்களாக, கடின உழைப்பாளிகளாக, அறிவாளிகளாக கல்விமான்களாக நல்ல சிந்தனையாளர்களாக எழுத்தாற்றல் முதல் கலைத்திறன்கள் மிக்க நல்ல பல ஊடகவியலாளர்களை கொண்டிருக்கும் தமிழ் ஈழ மக்களின் பெருமைகளுக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில், தான் பிறந்த ஊரின் அடைமொழியுடன் தனது பெயரை இணைத்து ஒரு பரதேசி (புலம் பெயர்ந்த) இணையதளம் ஒன்றில் கொட்டி வைத்திருந்த குப்பை கண்ணில் சில நாட்களுக்கு முன் தட்டுப்பட்டது.

தனது வாழ்க்கையை ஆயுதப்போராட்டத்திற்காக அர்ப்பணித்து, தான் சார்ந்த இயக்க கட்டுப்பாடுகளுக்காக தனது காதலை துறந்து, தனது தலைவனின் கட்டளைகளுக்கு பணிந்து, உண்மையாக தனது நாட்டின் விடுதலைக்காக உழைத்த ஒருவன் இன்று தனது இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் ஓய்ந்த பின்பு, தமது இயக்கத்தின் கண்மூடித்தனமான போராட்ட போக்குகளால் பாதிக்கப்பட்ட தனது நாட்டு மக்களுக்கு செய்த தவறுகளை உணர்ந்து அதற்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் இன்று அவர்களுக்காக இயன்ற வரையில் உழைக்க முயற்சிக்கும் கே.பி என்கின்ற குமரன் பத்மநாதன் டி.பி.எஸ் ஜெயராஜிற்கு கொடுத்த சில தகவல்களை பொய் என நிரூபிப்பதற்கு தன்னிடம் போதிய ஆதாரங்கள் இருப்பது போலவும், ஏதோ கே.பியின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தவன் போலவும், என்ன உண்மையில் நடந்தவை என்பவற்றை தெரிந்திருப்பவன் போலவும் சொல்ல எண்ணி, விடுதலைப்புலிகளின் தலைமை பற்றிய இன்றய உண்மைகளை தெரிந்துதிருந்தும் தொடர்ந்தும் தனது அரசியல் வாழ்வுக்காக உணர்ச்சி தமிழன் வேடம் போட்டு உண்மைகளை மறைக்கும் வை.கோவை பெருமைப்படுத்துவதற்காக மறுபடியும் இந்தியாவையும் இலங்கைத்தமிழர்களுக்கு உதவ வல்ல இந்திய அரசியல்வாதிகளையும் சிறுமைப்படுத்தி எழுதி உள்ளான். அதற்காக, கே.பி உண்மை மட்டும் பேசும் ஒரு உத்தமன் என்பதாக வக்காலத்து வாங்குவதாக அர்த்தமாகாது.

அமைச்சர் சிதம்பரமோ அல்லது கனிமொழியோ அப்பாவி ஈழத்தமிழர்களை முள்ளிவாய்க்கால் அழிவில் இருந்து பாதுகாப்பதற்கு வேண்டிய பேச்சுவார்த்தை முயற்சி நடவடிக்கைகளை உண்மையில் எடுக்க முயலவில்லை என்று வைத்துக்கொண்டாலும் கூட, கே.பி, அவர்கள் முயன்றார்கள் என்று கூறியபின்பாவது இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ய அவர்கள் முயற்சிக்கலாம் அல்லவா? அதுதான் இராஜதந்திரம். அதுதான் கே.பியின் எண்ணமாகவும் இருந்திருக்கலாம் அல்லவா? தமிழ் மக்களின் வழமான எதிர்காலத்திற்கு இந்தியாவுடன் அல்லது இலங்கை அரசுடன் நட்பு பாராட்டி காரியங்கள் ஆற்ற முயல்வது ஒன்று தான் ஒரே வழியாக இன்று இருக்கும் நிலையில், அவ்வகையில் முயன்று நன்மை அடைவதில் என்ன தவறு?

நாங்கள் தான் விடுதலைப்புலிகளின் உண்மையான வால்கள் என வேடம்போட்டு பினாமிகளாகி வெளிநாடுகளில் போராட்ட நிதி என தமிழர்களை சுறண்டி சேர்த்த பணங்களில் வயிறு வளர்க்கவும் அதில் சிலர் கோடீஸ்வரர்கள் ஆகவும் காரணமாக இருந்ததும் விடுதலைப்புலிகளின் தலைமையுடன் இருந்த நட்புதான், அப்படித்தான் இதுவும் என எடுத்துக்கொள்ளுங்கள். தமிழர்களை வெறுக்கும் கோட்டபாய, கே.பி நட்பு பற்றி கொச்சைப்படுத்தியும் அதில் புலம்பி எழுதப்பட். தான் வணங்கும், அன்பினை தெய்வமாக போதித்த கௌதம புத்தரை வழிபடுபவர்தான் கே.பியின் மனைவி என்பதற்காகவும், இந்துமதத்தை சார்ந்த கே.பி தனது மனைவியின் மதத்திற்கு கொடுக்கும் மதிப்பின் காரணமாக கே.பியின் மீது கோட்டபாய நம்பிக்கை வைக்க காரணம் இருந்திருக்கலாம். அல்லது போர்க்குற்றங்களுக்காக மற்றய நாடுகளில் இருந்து கிடைக்கும் அழுத்தங்கள் காரணமாக கே.பியை பண்புடன் நடத்த வேண்டிய காலத்தின் கட்டாயமாகவும் இருக்கலாம். எது எப்படி இருப்பினும் யார் இடித்தும் அரிசியானால் சரி என்பதே இலங்கை தமிழர்களின் இன்றய நிலை என்பதை உணர்ந்து வாய் பொத்துவதே தகும்.

யாழ்ப்பாணத்தில் கந்தரோடை என்ற இடத்தில் அமைந்துள்ள புத்தவிகாரை பற்றி  ும்மொழி அறிவிப்பு பலகை காட்டும் படமே மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்கள் சிங்கள பௌத்தமத மயமாக்கப்படுவதன் அறிகுறிகளாக நாம் அதனை எடுத்து கொண்டாலும் நிலைமையை இனி எம்மால் இலகுவாக மாற்றிவிட முடியுமா? அதற்கு முதலில் நட்பும் புரிந்துணர்வும் இரு இனங்களுக்கிடையிலும் மீண்டும் உதயமாக வேண்டும். இந்நிலைமை எமது மண்ணில் இன்று உருவானதற்கு காரணம் யார்? நாம் தான்.

எமது பாழ்பட்ட ஆயுத விடுதலைப்போராட்ட யுத்த தந்திரர்கள் எடுத்த நடவடிக்கைகளின் பதில் விளைவுதான். இந்நிலை எமக்கு வரக்கூடும் என அன்று நாம் எண்ணிப்பார்த்தோமா? இல்லை. இந்நிலமைகளுக்கு தனிப்பட்ட முறையில் பரம்ஜி எந்த வகையிலும் காரணமில்லாவிட்டாலும், நாம் என்று தன்னையும் சேர்த்து சொல்லிக்கொள்வதன் அர்த்தம் ஈழத்தமிழர்களாக பிறந்த நாம் அனைவரும் பழியை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதால்தான்.

 (பரம்ஜி ஞானாஸ்வரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com