Contact us at: sooddram@gmail.com

 

வீரத்தையும் கடந்த வீரம்

(பேராசிரியர் க. ராமச்சந்திரன்)

புறநானூறு என் கைகளில் புரள்கிறது. புரட்டுகிறேன். ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டுகிறேன். புரட்டுகிற பக்கங்களில் எல்லாம் தமிழர்களின் பரணிப்பாட்டு, வாகை சூடிய மன்னர்களின் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு, மனசு மகிழ்ச்சியில் திளைக்கிறது. கண்களைச் சிறிது மூடுகிறேன். இப்போது மனசுக்குள் புதிய கோணத்தில் புரள்கிறது புறநானூறு. சேர, சோழ, பாண்டியர் இந்த மூவரும் மூவேந்தர்கள். இந்த மூவேந்தர்கள் யார்? தமிழர்களல்லவா? தமிழன் ஒருவனை ஒருவன் தகர்ந்துக் கொண்டதைப் பற்றிப் பாருக்கெல்லாம் பகிரங்கப்படுத்தும் பாடல்கள் அல்லவா புறநானூறு? இதில் அவர்களின் புகழுக்காகவும், பழிக்காகவும், கண்கள் கொப்பளித்த வீரத்தைப் பார்க்கின்றேன். வீரத்தில் சிந்திய இரத்தத் துளிகளைப் பார்க்கிறேன். அதனால் பாழ்பட்டுக் கிடந்த தமிழ் மண்ணைப் பார்க்கிறேன். வீரம்தான். மண்ணுக்காக மன்னர்கள் சக்தியைக் காட்டிய வீரம்தான்.

இன்னொரு வீரமும் இருக்கிறது. யாரையும் அழிக்காத, துன்புறுத்தாத வீரம். அதுதான் சிறந்த வீரம். வீரத்தைக் கடந்த வீரம் என்பதையும், மனிதநேயத்தோடு ஒன்றிரண்டு பாடல்களில் பதிவு செய்துள்ளனர் சங்ககாலத்துப் புலவர்கள்.மூடிய இமைக் கதவுகளைத் திறக்கிறேன்.

ஒரு ஞானி, வளர்ந்த தாடி, தலையோ வழுக்கை, இடுப்பில் ஒரு துணி, மேலே ஒரு போர்வை. ஓர் எருமை மாட்டின் மீது ஏறி காட்டை நோக்கிப் புறப்படுகிறார். அவர் சீனாவின் ஐந்து சக்கரவர்த்திகளுக்கு ஆலோசகராக இருந்தவர். எண்பது வயதுக்கு மேற்பட்டவர். வாழ்வை நன்கு அறிந்தவர். அனுபவ அறிவோ அபாரம். அவர்தான் சீன ஞானி லாட்சு. அவர் சொல்லுகிறார். வீரத்தின் வழியே வெற்றி காண்பவர் சாதாரண வழி அறிந்த சாதாரண மனிதர். வீரத்தைக் கடந்த வீரம் ஒன்று இருக்கிறது. அதுதான் கருணை, உயர்தர்ம நெறி. இதனால் நாமும் வாழ்கிறோம். எதிராளியும் வாழ்கிறான். நாமும் உயர்கிறோம். நம் எதிரியும் உயர்கிறான். நிரந்தரத் தீர்வு தருவது இது ஒன்றுதான்என்கிறார். என்ன அருமையான வாழ்வியல் சிந்தனை!

வீரத்தின் அடிப்படை என்ன? ஆணவம். வீரத்தின் வெளிப்பாடு என்ன? வன்முறை இதை ஒவ்வொருவரும் கடந்து செல்ல வேண்டும். வன்முறையின் எதிர்ப்பதம் கருணை. அன்பு, பரிவு, மன்னிக்கும் மனோபாவம். உலகத்தில் எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறது. அதுதான் மன உறுதி என்னும் மனோசக்தி, மகாசக்தி. அந்தச் சக்திதானே காந்தியடிகளை மகாத்மாவாக மாற்றியது!

மகாத்மாவின் வாழ்க்கை ஒரு சத்திய சோதனை. அவரது வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம்... மதுரைக்கு கதர்த்துணிப் பிரசாரம் செய்வதற்காக வந்து கொண்டிருக்கிறார் காந்தியடிகள். அப்பொழுது உழவர்கள் தம் இடுப்பில் சிறுதுண்டை மட்டும் உடுத்திக்கொண்டு ஏழ்மையான நிலையில் உழைக்கும் காட்சி அவரது மனதை உறுத்தியது. இரவு முழுதும் அதையே யோசித்துக் கொண்டிருந்தார். காலையில் எழுந்தவுடன் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருகிறார்.

இனிமேல் தன் இடுப்பில் முழு அகலத் துண்டை மட்டுமே கட்டப்போவதாகவும், குளிர் அதிகமாக இருக்கும் போது மேல் துண்டு போடப் போவதாகவும், தன்னுடன் இருந்தவர்களிடம் தீர்மானமாகச் சொன்னார் மகாத்மா. இது போலவே உடுத்திக் கொண்டார்.

ஆங்கிலேயர்கள் அவரைஅரை நிர்வாணப் பக்கிரிஎன்று அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தினார்கள். எந்தச் சூழலிலும் அவர் அந்த உறுதிப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. அந்த மன உறுதிதான் ஆங்கிலேயர்களை அகிம்சையால் முறியடித்து இந்திய தேசத்தை விடுதலை தேசமாக மாற்றக் காரணமாக இருந்தது. அதுவும் வீரம்தான். யாரையும் காயப்படுத்தாத வீரம். காந்திய வீரம். இந்த வீரத்தைத்தான், ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுதுஎன்று நாமக்கல் கவிஞர் பாடினார்.

காந்தியம் என்பது ஓர் உயர்ந்த வாழ்க்கை முறை, அது உடல்பலத்தை விட ஆன்ம பலத்தில் அதிக நம்பிக்கை கொண்ட வாழ்வியல் நெறி. வாழ்க்கை முழுவதும் உண்மையாய் இருப்பதும், அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாய் இருப்பதும்தான் காந்தியத்தின் அடித்தளம்.

வெறுப்புக்கு எதிராக அன்பு, போட்டிக்குப் பதிலாக ஒத்துழைப்பு, தன்னலத்திற்கு எதிராகத் தியாகம், எவரிடத்தும் பகைமை பாராட்டாத இதயம் உடையவர்களும் வீரம் பொருந்தியவர்கள்தான், ‘தீமையை, நன்மையைக் கொண்டு தடுத்துக் கொள்ளலாம்என்கிறது. திருக்குர்ஆன், ‘இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்என்கிறது திருக்குறள். பகைவனுக்கும் அருள்வாய்என்கிறார் மகாகவி பாரதி. தீய எண்ணங்களை நாம் அனுப்பும் நல்ல எண்ணங்கள் வலுவிழக்கச் செய்து விடுகின்றன. வாழ்வின் தாத்பரியம், நல்ல எண்ணம் என்ற ஒரு எசால்லில் அடங்கியிருக்கின்றது.

என்னுடைய மனம் தூய்மையாக இருப்பதால்தான் நான் பத்து மனிதர்களுடைய பலத்தை உடையவனாக இருக்கிறேன்என்பார் சிந்தனையாளர் டென்னிஸன். அன்பான இளைஞனே! வாலிபத்தின் வாசல் படிகளில் பயணம் செய்து கொண்டிருப்பவனே! உன்னிடத்தில் வீரம் இருக்கிறது. உடல் வலிமை என்கிற வீரம் இருக்கிறது. இதைக் கொண்டு எதிரிகளை வீழ்த்தி விடுவேன் என்று நினைக்கலாம். அது அழிவின் வீரம்.

உன்னை உதாசீனம் செய்பவரை எதிரில் கண்டால் அடக்கமாகப் புன்னகை செய். அவன் உன்னைக் கண்டு ஆணவமாகப் புன்னகைப்பான். உன் அடக்கமே அவன் ஆணவத்தை அடக்கிவிடும். அவனை உன் காலடிகளில் அடிபணியச் செய்துவிடும். அதுதான் எதிரியை வீழ்த்துகிற வீரம். வீரத்தைக் கடந்த வீரம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com