Contact us at: sooddram@gmail.com

 

உள்கட்சியின் முரண்பாடுகளால் சிதைந்துள்ள ஐ.தே.க

கடந்த வாரக்கடைசியில் ரணிலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமும் மற்றும் அதன்விளைவாக ஏற்பட்ட வெட்டுக் குத்துக்களும் நான்கு வகையில் பெரிதான ஓர் அரசியல் உண்மையை நாட்டுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. வாக்குகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இழந்து இரத்தக் கசிவுக்கு ஆளாகியுள்ள ஐ.தே.க இப்போது உடன்பிறப்புக்களைக் கொல்ல நினைக்கும் அரசியல் முரண்பாடு காரணமாக இரத்தம் சிந்தும் நிலைக்கு ஆளாகியுள்ளது. அடுத்தது என்ன? ரணிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்வதா? எனும் கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.

ஐ.தே.க என்பது இரண்டு கட்சிகள் ஒன்றுபோல பொய்த் தோற்றம் காட்டுகிறது. ரணில் தலைவராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தும் சிலர் ஒரு பக்கம், ரணில் இப்போது வெளியேறாவிட்டால் அடுத்து சுற்று தேசிய மட்டத்திலான தேர்தல்கள் வரை கட்சியை அழிவிலிருந்து மீட்டெடுக்க முடியாது என நம்பும் சீர்த்திருத்தவாதிகள் மறுபக்கம்.

உடனடியாக அனைவரையும் அனைத்து நடந்து தற்போதுள்ள வியாதியை குணப்படுத்தக்கூடிய ஒருவரால் திரு. விக்கிரமசிங்காவை மாற்aடு செய்யாவிட்டால், ஐ.தே.க. வாக்காளர்களின் கட்சித்தாவல், நிறுவன ரீதியான முட்டுக்கட்டை, தெருச் சண்டைகளினால் ஏற்படும் கூட்டழிவு மற்றும் ஒழுக்க நெறி பிறழ்வு என்பனவற்றால் மரணிக்க நேரும். அரசியல் சமநிலையற்ற தன்மையின் விளைவாக தெற்கில் ஜனநாயகம் மெல்ல மெல்ல மரணத்தை தழுவ நேரிடும்.

பல்வேறு காரணங்களினால் ஐ.தே.க. செத்துக் கொண்டிருக்கிறது. அது வாக்குகளை இழந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே தன்னுடைய சொந்த வாக்குகளை மட்டுமன்றி ஓர் எதிர்க்கட்சி என்கிற வகையில் அது கவர்ந்திழுக்கக்கூடிய புதிய வாக்குகளையும் அது இழந்து கொண்டிக்கிறது. அது பாராளுமன்ற அங்கத்தவர்களையும் இழந்து கொண்டிருக்கிறது, இறுதியானதும் மிகத் தெளிவானதுமான உதாரணம் தயாசிறி ஜயசேகர. அது அபத்தமான ஒழுங்கு விசாரணைகள் மூலமாக ஆர்வலர்களையும் பிரதிநிதிகளையும் இழந்து கொண்டிருக்கிறது.

கட்சியிலிருந்து வேண்டாதவரை நீக்கிக் கழிக்கும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு இளம் வழக்கறிஞர்களான சிரால் லக்திலக மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோரின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் இதற்கு நல்ல உதாரணம். அது அரசியல் முறையின் ஒவ்வொரு மட்டத்திலும் வாக்குகளையும் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரநிதிகளையும் இழந்து வருவதினூடாக பாராளுமன்றத்தில் எண்ணிக்கையையும் இழந்து வருகிறது. இப்போது அது தொலைக்காட்சி படப்பிடிப்பு உபகரணங்களுக்கு முன்பாக பூரணமாக காட்சி தரத்தக்க விதத்தில் தனது அதிருப்தியாளர்களை தாக்குவதன் மூலம் சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் அனுதாபம் என்பவற்றையும் இழந்து வருகிறது.

திரு. மங்கள சமரவீரவின் பேரணி, ரணில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் முன்யோசனையற்ற விதத்தில் மோதிக்கொண்டது, மற்றும் ஆரம்ப இடையூறுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட தாக்குதல்கள் ஒரு தற்கொலைக் குண்டுத்தாக்குதலைப்போல தென் மாகாணசபை மற்றும் சிலவேளைகளில் மேற்கு மற்றும் ஊவா மாகாண சபைகளிலும் ஐ.தே.க. வின் தேர்தல் பிரச்சாரங்களை முன்கூட்டியே சிதைவடையச் செய்திருக்கிறது.

தொலைக்காட்சியில், மங்களவின் அணியினை சேர்ந்தவர்கள் எங்களுக்கு ரணில் உள்ள ஓர் அரசாங்கம் வேண்டும் என்று கூச்சலிடுவதை கேட்கக்கூடியதாக இருந்தது. உண்மை என்னவென்றால் அவர்களிடம் ஏற்கனவே அப்படியான ஒரு அரசாங்கம் உள்ளது. (நான் எனது மனைவிக்கு கடமைப்பட்டுள்ளேன் என்று கிண்டலடிப்பதை போல, தற்போதுள்ள அரசாங்கத்தில் திரு. விக்கிரமசிங்க எதிர்க்கட்சி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராக உள்ளார்).

கிழிந்து கந்தலாகியுள்ள பச்சைக் கூடாரத்தின் கீழ் இரண்டு பிரிவினர் போராட்டம் நடத்துகிறார்கள், என்கிற உண்மையை யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை போலத் தெரிகிறது. மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய கிரம்பே ஆனந்த மேற்கொண்ட தலைமைத்துவ சபை பிரேரணைதான் ஒற்றுமைக்காக மேற்கொண்ட கடைசி முயற்சி. அது நடைமுறைக்கு ஒவ்வாத முயற்சியாகப் போய்விட்டது ஏனெனில் அது திரு. விக்கிரமசிங்காவின் நன்மதிப்பு மற்றும் நல்லுணர்வுகளையே கணக்கில் எடுத்திருந்தது.

எனினும் மிகவும் நெஞ்சழுத்தம் மிக்க கீழ்ப்படியாத பழங்கால ஆட்சியினரைப்போல அவர் மேடையிலிருந்து கீழே இறங்க தயாராக இல்லை. ஆகவே ஐ.தே.க வினை பாதுகாக்க இரண்டு நடைமுறைகள் மட்டுமே உள்ளன. முதலாவதாக கட்சியின் உள்பிரிவுகள் அனைத்தும் மீள ஒருங்கிணைக்கத்தக்க, குணமாக்கத் தக்க அரவணைப்பு வழங்கக்கூடிய ஆளுமையுள்ள ஒருவரின் தலைமையின் கீழ் கட்சியை மீளக்கட்டியெழுப்புவது.

இரண்டாவதாக ஐ.தே.க தனது மின்கலங்களுக்கு மீண்டும் சக்தி ஊட்டி, புதுப்பித்து, புதிய சின்னமிட்டு, மீள ஆரம்பிக்க வேண்டும். இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் ஓர் உடனடி அங்கீகாரம் கிடைக்கிறது என்று முன்னதாகவே எண்ணிக்கொள்வோமானால் பிரச்சினைக்கு அல்லது பிரச்சினையின் பெரும்பகுதிக்கு காரணமாக ரணில் விக்கிரமசிங்கா அதன் தீர்வுக்கான எந்த ஒரு பகுதியாகவும் இருக்கமுடியாது. ஐ.தே.க.வானது தான் புலிகளைத் திருப்திப்படுத்திய இருண்ட யுகத்தை அப்புறப்படுத்தி விட்டதாக காட்டும் ஒரு தோற்றத்தை தேசிய தேர்தலில் காண்பிக்க வேண்டும்.

இந்த இரண்டு நகர்வுகளுக்கும் தேவையாக உள்ளது ஒரு தலைவர் என்கிற நிலையிலிருந்து ரணிலை மாற்றி பொதுமக்களின் பார்வையிலிருந்து அவரை அகற்றக்கூடிய ஒரு புதிய வெளிச்சம்.

ஐ.தே.க ரணிலை தொடர்ந்தும் தலைவராக கொண்டிருக்குமானால் வெளிப்படையாக அச்சம் எதுவுமின்றி பரஸ்பர நாசம் ஏற்படுத்தும் உள்ளக முரண்பாடுகள் மூலம் கட்சியை கூறுபோடும் செயல்முறை தொடரும், இதனால் அடுத்த தேர்தலில் அது செயலிழப்பதற்கு முன்னரே அதன் வாக்காளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகிய அனைவரையும் கட்சி இழந்துவிடும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒரு பெரிய தனியார் ஊடக நிறுவனம் மற்றும் அதன் தலைவர் ஆகியோர் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துவருவதாக ஐ.தே.க. வின் தகவல் தொடர்பு மற்றும் ஊடகத் தலைவரான திரு. சமரவீர குற்றம் சாட்டியுள்ளார்.

அது உண்மையாயின் அதற்கான காரணம் என்னவென்று அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். தனியார் ஊடகத் துறையிலுள்ள ஒரு செயற்பாட்டாளரை தாக்குவதற்கு முன் அவர் தன்னிடம் கேட்கவேண்டிய அடுத்த கேள்வி அவருடைய தலைவருக்கும் மற்றும் அவரது வேட்பாளர்களுக்கும் எதிராக செல்வாக்குள்ள தனியார் ஊடகங்களின் ஒரு பிரிவினர் ஆகிய இரண்டும் செயற்பட்டால் ஒரு தேர்தலை எப்படி வெல்லமுடியும் என எதிர்பார்ப்பது என்று.

ரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கட்டாயம் உணரவேண்டியது ஐ.தே.கவின் வாக்குகள் சுருங்கிக் கொண்டே போகிறது, பாராளுமன்றத்துக்கு மீளத் தெரிவாகும் வாய்ப்பு ஆவியாகிக் கொண்டேபோகிறது மற்றும் ஐ.தே.கவுக்கு வாக்களிப்பவர்களாலும் இவர்கள் மேலும் தண்டனை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ஐ.தே.க வாக்காளர்களே தங்கள் வெறுப்பை வெளிக்காட்டும் வகையில் ஒரு ஜனநாயகக் கட்சி ஒருபோதும் கொண்டிராத ஒரு மோசமான தலைவருக்கு பக்கபலமாக நின்றார்கள் என்பதற்காக தங்கள் விருப்பு வாக்குகளை இவர்களுக்கு வழங்காமல் போவதற்கு நிச்சயம் இடமுண்டு.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com