Contact us at: sooddram@gmail.com

 

முதலமைச்சர் விக்னேஸ்வரன்

மர்மங்களின் மொத்த உருவம்!

(எஸ். ஹமீத்) 

வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கும் வரை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி திருவாளர் C.V. விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு திறந்த புத்தகமாகத்தான் இருந்தார். பூஜை புனஸ்காரங்கள் என்று ஆன்மீக வழியில் அவரது ஓய்வு காலம் கழிந்து கொண்டிருந்தது. வருடாந்தம் நடக்கும் கம்பன் விழாக்களில் தலைமை தாங்குவதும் உரையாற்றுவதும் அவருக்கு மிகப் பிடித்திருந்தது. தனது பிள்ளைகள், அவர்களின் துணைகள், அவர்களது பிள்ளைகள், தேர்ந்தெடுத்த மிகச் சிறந்த நண்பர்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் அவரது வாழ்க்கை வெகு இயல்பாகக் கழிந்து கொண்டிருந்தது.

எதிர்காலம் மிகக் குறுகி விட்ட நிலையில் கடந்த காலங்களில் தன்னை அதிகமாக அமிழ்த்தி, ஞாபகங்களை இரை மீட்டுகின்ற வயதில் அவர் இருந்தார். தனது குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம், இளமைப் பருவம், கட்டிளமைப் பருவமென அவரது நெஞ்சத் திரையில் அடிக்கடி எண்ணற்ற படங்கள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் உள்ள குறைந்த சுமைகளும் கூடிய சுகங்களும் அவரை ஆகர்ஷித்துக் கொண்டிருக்கும். பல இன்பப் புன்னகைகள், சில ஏக்கப் பெருமூச்சுக்கள் அவரையறியாமலேயே அவரைத் தழுவியிருக்கும்.

ஒரு நீதிபதியாகத் தான் கடமை புரிந்த போது வழங்கிய தீர்ப்புகளின் ஓசைகள் கூட அவரது காதுகளில் திரும்பவும் கேட்டிருக்கும். சரியா..பிழையா என்று அவரது மனசாட்சி இரண்டாகப் பிரிந்து நின்று விவாதம் பண்ணியிருக்கும். அந்த ஏகாந்தம் தந்து கொண்டிருந்த சாந்தி-அமைதி-நிம்மதி அனைத்தையும், வட மாகாண சபை வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தில் இட்ட ஒரு கையொப்பத்தினால் அவர் தொலைத்துவிட நேர்ந்து விட்டது.

நெற்றியில் திருநீறிட்டு, பொட்டு வைத்து, இதயத்தில் பக்தி நிறைத்து, பரவசமாய் வாழ்ந்து கொண்டிருந்தவரின் பயணம் எதிர்பாராத விதமாய் பரபரப்பு மிக்கதும் சூழ்ச்சிகள் நிறைந்ததுமான அரசியற் குகைக்குள் நுழைந்துவிட்டது. இந்த மாயக் குகைக்குள் அவரது வாழ்வின் கணங்கள் எவ்விதம் நகரப் போகின்றன என்பது திகைப்புக்குரிய கேள்வியாகும். தனது சுயத்துடன் அவர் போராடி வெற்றியடைவாரா அல்லது சுயமிழந்து, தொலைந்து போய்விடுவாரா என்பது காலத்தின் கைகளில் தங்கியிருக்கிறது.

அரசியலில் சாணக்கியம், இராஜ தந்திரம், காய்நகர்த்தல்கள் போன்ற கலைகள் அவசியமென்றும் இவை கைவரப் பெற்றவனே வெற்றிகரமான அரசியல்வாதி என்றும் கொள்ளப்படுவான். கூர்மையாக வியாக்கியானம் செய்தால் இவ்வாறான கலைகள் பொய்மையும் வஞ்சகமும் பொல்லாத சூதும் நிறைந்தவை என்பதுதான் உண்மையாகும். இத்தகு கலைகளை இனிமேல் கற்று, அதனைப் பிரயோகம் செய்தால் தான் நுழைந்து விட்ட அரசியற் குகைக்குள் அவர் தனக்குரிய ஒரு மாளிகையைக் கட்டிவிடலாம்.  அது முடியாமற் போனால், அந்தக் குகையிலிருந்து வெளியேறி மீண்டும் இலகு கதிரையில் கால் நீட்டிப் படுத்துக் கம்பராமாயணம் வாசித்தபடியே தனது கடைசிக் காலத்தைக் கழித்து விடலாம்.

''நாம் முடிந்தவரை அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு வட மாகாணத்தில் எம்மக்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். வெறுமனே அரசியல் காரணங்களினால் முரண்டு பிடித்துக் கொண்டு அரசாங்கத்தை பகைத்துக் கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை. அதனால் நாம் அரசாங்கத்தை எதிர்க்கப் போவதுமில்லை!'' என்று மிக அண்மையில் கூறியிருக்கும் விக்னேஸ்வரனின் கூற்று, தமிழ் மக்களுக்கான 30 வருட கால ஆயுத, அரசியற் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளதெனக் குறை சொல்வோரும் இருக்கின்றார்கள்

'முடிந்தவரை அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போனதனால்தானே, தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கிப் போராட ஆரம்பித்தார்கள்...' என்பது தெரியாமலா விக்னேஸ்வரன் அறிக்கை விடுகின்றார் என்று கேட்போரின் கேள்வியிலுள்ள நியாயத்தைப் புறந்தள்ள முடியாமல் இருக்கிறது.

''வெறுமனே அரசியல் காரணங்களினால் முரண்டு பிடித்துக் கொண்டு அரசாங்கத்தை பகைத்துக் கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை.'' என்று விக்னேஸ்வரன் சொல்வதன் அர்த்தம் என்னவென்று புரியாமல் இருக்கிறது.

இதுவரை இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஓர வஞ்சனையுடன் நடாத்தின - தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகளைத் தர மறுத்தன என்ற அரசியற் காரணங்களுக்காகத்தானே சாத்வீகமான அரசியற் போராட்டங்கள் இரத்தம் வழிந்தோடும் ஆயுதப் போராட்டங்களாக  வடிவமெடுத்தன. அப்படியிருக்க 'வெறுமனே அரசியல் காரணங்களினால் முரண்டு பிடித்துக் கொண்டு அரசாங்கத்தை பகைத்துக் கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை.'' என்று விக்னேஸ்வரன் சொல்வது, இதுகால வரையிலான தமிழ் மக்களின் போராட்டங்களைக் கேலியும் கிண்டலும் செய்வது போலல்லவா இருக்கின்றது என்று ஆதங்கப்படுவோரை ஆற்றுப்படுத்த வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக 'அரசியற் காரணங்களினால் அரசாங்கத்தை எதிர்க்காமல், வேறு என்ன காரணங்களினால் எதிர்ப்பதாம்..?' என்று பாமரத்தனமாகக் கேள்வி கேட்கும் அப்பாவித் தமிழனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.

'வட மாகாண தேர்தல் தமிழர்களின் மூன்றாம் கட்டப் போர்' என்றும் 'தமிழன் அவ்வளவு இலகுவாகத் துவண்டுவிட மாட்டான்' என்றும் தேர்தல் மேடைகளிலே சங்காரம் செய்த விக்னேஸ்வரன், 'எமது ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் அரசாங்கத்தில் இணைந்திருப்பவர்களே' என்று கோபாவேசக் குரலெழுப்பிய விக்னேஸ்வரன், இப்போது சாதுவாக அடங்கியொடுங்கி, அரசாங்கத்தைத் திருப்திப்படுத்துமாற்போலப்  ேசுவதன் மர்மம் என்ன..? சாணக்கியமா...? இராஜ தந்திரமா...? காய் நகர்த்தலா...?

அரச சார்பு ஊடகங்கள் கூட 'விக்னேஸ்வரனின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்' என்று சித்தார்த்தனுக்கும், சிவாஜிலிங்கத்துக்கும், ஆனந்த சங்கரிக்கும், சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் அறிவுரை கூறி ஆசிரியத் தலையங்கம் எழுதுவதன் பின்னணி என்ன...?

இதுகாலவரை இலங்கைத் தமிழ் மக்களின் ஆபத்பாந்தவர்களாகச் செயல்பட்ட புலம் பெயர்ந்த தமிழர்களையும், தமிழ்நாட்டின் வை. கோ, சீமான், ராமதாஸ், பழ.நெடுமாறன் போன்றவர்களையும் துச்சமென மதித்து விக்னேஸ்வரன் தூக்கி வீசியிருப்பதன் மர்மம் என்ன...?  இலங்கை அரசாங்கத்தைத் திருப்திப்படுத்தித் தமிழ் மக்களைக் கரை சேர்க்கும் எத்தனமா...? அல்லது வேறு ஏதாவது இராஜ தந்திரமா...?

இன்னும் ஏராளமான மர்மங்கள் விக்னேஸ்வரன் என்னும் வட மாகாண முதலமைச்சர் புகுந்து விட்ட மாய அரசியற் குகைக்குள் நிறைந்திருக்கின்றன. நேரமும் காலமும் கூடிவரும்போது அந்த மர்மங்களின் முடிச்சுகள் அவிழலாம்..அல்லது இன்னும் அதிகமாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com