Contact us at: sooddram@gmail.com

 

நச்சுத்தன்மை நிறைந்த காய்கறிகள் பயன்பாட்டால் நோய்கள் அதிகரிப்பு

உணவுகளில் நச்சுத் தன்மை கலப்பதால் மக்களுக்கு ஏற்படக்கூடிய நோய்த் தாக்கங்களில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இன்று ஒரு முக்கிய பிரச்சினையாகும். விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதால் நச்சுத் தன்மை கலந்த காய் கறிவகைகளையே மனிதன் தன் அன்றாட உணவுக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் போன்ற கொடிய நோய்த் தாக்கங்களின் அதிகரிப்புக்கு விவசாயிகள் இரசாயனக் கலவைகளைப் பயன்படுத்துவதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகின்றது. இதனால் இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தாதவாறு நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கி விவசாய உற்பத்தியை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் தேவையும் இன்று முக்கியம் பெறுகின்றது.

மக்களது உணவுப் பயன்பாட்டுக்கு இரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்ப டாத விவசாயப் பொருள்களை உண் டுபண்ணுவதற்கான தொழில்நுட்பங் களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்து வதில் யாழ் விவசாயத் திணைக்களம் முனைப்புடன் உள்ளது என்பதன் எடு த்துக்காட்டாகவே இம்முறை இடம்பெ றும் விவசாயக் கண்காட்சி அமைகிறது.

இன்று சனிக்கிழமை 18.09.2010 முதல் திங்கட்கிழமை 20.09.2010 வரை நடைபெறவுள்ள இந்த ஆண்டிற்கான விவசாய விலங்கு வேளாண்மைக் கண்காட்சிசந்தைப் பொருளாதாரத்தை நோக்கிய சூழல் பாதுகாப்புடனான விவசாய உற்பத்திஎன்ற தொனிப் பொருளைக் கொண்டு சேதனப் பசளைகளைப் பயன்படுத்தி நச்சுத் தன்மைகளற்ற விவசாய உற்பத்திப் பொருள்களை நுகர்வோர் பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்கள் பாதுகாப்பான உணவுப் பொருள்களைப் பெறக்கூடியதான விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கான அறிவையும் திறனையும் விவசாயிகள் பெறுவதற்கு வாய்ப்பை அளிக்கிறது என யாழ். விவசாயப் பணிப்பாளர் எஸ். சிவகுமார் கூறுகிறார்.

அதற்கு உகந்த வகையில் விவசாயப் பொருள்களுக்கான மாதிரி உற்பத்தித் துண்டங்களை விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த அனைத்து உத்தியோகத்தர்களும் இணைத்து அமைத்துள்ளனர். விவசாயிகள் இரசாயன உரங்களுக்குப் பதிலாக பயன்படுத்தக்கூடிய சேதனப் பசளைகள் மண்புழு உரம் மண்புழுத் திரவம் கூட்டெரு தாவரவியல் பீடை நாசினி தாவர அடிப்படையிலான திரவப் பொருள்களைத் தயாரிக்கும் தொழில்நுட்ப முறைமைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயத் திணைக்களத்துடன் விவசாய திணைக்கள ஆராய்ச்சி நிலையம், யாழ். பல்கலைக்கழக விவசாய பீடம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், வானிலை அவதான நிலையம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், சுதேச மருத்துவத் திணைக்களம், தென்னை பயிர்ச்செய்கைச் சபை, பனை வள அபிவிருத்திச் சபை ஆகிய திணைக்களங்கள் ஒன்றிணைந்து திருநெல்வேலி விவசாய வளாகத்தில் நடத்தும் இக் கண்காட்சியில்,

இரசாயனக் கலவைகளைப் பயன் படுத்தாத சேதனப் பசளைகளின் பய ன்பாட்டுடன் காய் கறிகளை உற்பத்தி பண்ணக்கூடியதும் தூர நோக்குடன் விவசாய உற்பத்திகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய தொழில் நுட்பங்களை விவசாயிகளும் பொது மக்களும் தெரிந்து கொள்ளக்கூடியதாக அமையும். மரக்கறிச் செய்கைகளுக்கான காட்சித்துண்டம் மற்றும்

குடாநாட்டில் எமது பாரம்பரிய மருத்துவம் முறையான ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சை நிலையங்கள் தற்சமயம் பல்வேறு பிரதேச சபைகளூடாகவும் நடத்தப்பட்டு வருகின்றது. ஆயுர்வேத மருந்துகள் உற்பத்திக்கென மூலிகைகளைப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. இதனால் மூலிகைச் செய்கைக்கான மாதிரித் துண்டமும் கண்காட்சியில் இடம்பெறுகின்றது. இதில் 200க்கும் அதிகமான மூலிகைச் செடிகள் உள்ளன. பாதுகாப்பான மூலிகைச் செய்கைகள் குறித்த விளக்கங்களும் வழங்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் வர்த்தக ரீதியாகச் செய்கை பண்ணப்படும் பயிரினங்களில் வாழை முன்நிலையில் உள்ளது. 2008ல் இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக யாழ் குடாநாட்டில் வாழைச்செய்கை பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் பாதிப்பில் இருந்த விவசாயிகள் மீள புதிய இனங்களையும் அதிகரித்த உற்பத்தியையும் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

சிறந்த முறையில் சந்தைப்படுத்தலுக்கு உகந்ததாகவுமான வாழைச் செய்கை முறைமைக்கான காட்சித் துண்டம் இம்முறை இடம்பெறுகிறது. இதில் யாழ் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட கப்பல், கதலி, இதரை உட்பட ஒன்பது ரகமான வாழைப் பயிர்களுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய கவன்டிஸ் என்ற வாழை இனமும் வரட்சி கூடிய இடங்களில் உற்பத்தி செய்யக்கூடிய அபிஷேக மொந்தனும் அறிமுகமாகிறது. அத்துடன் தக்காளி, மிளகாய் உட்பட முக்கிய பயிரினங்களில் உற்பத்தி குறித்த மாதிரிகளும் இடம்பெறும்.

சந்தைப் பொருளாதாரத்தை நோக் கிய பாதுகாப்புடனான இந்த விவசா யக் கண்காட்சியில் விவசாய உற்பத்தி தொடர்பான புள்ளிவிபரங்கள் யாழ். மாவட்ட மண் வளம் மண் சம்பந்த மான பிரச்சினைகளுக்குத் தீர்வு, உயர்தர நாற்றுக்களின் உற்பத்தி மண்ணின்றிய பயிர்ச்செய்கை, நீர் முகா மைத்துவம், நிலத்தடி நீரு சேமிப்பு நிலைபேறான வீட்டுத் தோட்டம் ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை, பண்ணைப் பெண்கள் விரிவாக்கச் செயற்பாடு தென்னை பனை வள அபிவிருத்திகள் காளான் செய்கை, பண்ணை இயந்திரங்களை மேம்படுத் தல் போன்ற இன்னோரன்ன 24 பயன்பாடுகள் குறித்த அறிவினைப் பார்வையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

கண்காட்சியைப் பார்வையிடுவோரின் நன்மை கருதி விவசாயப் பிரசுரங்கள் விதைகள் பழ மற்றும் அலங்கார நாற்றுக்கள் என்பனவும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. காட்சியில் விவசாயம் தொடர்பான தனியார் நிறுவனங்களும் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கது. கண்காட்சியை பாரம்பரிய தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைக்கிறார். பல்வேறு திணைக்களங்களையும் சேர்ந்த அதிகாரிகள் காட்சியின் விருந்தினர்களாக இடம்பெறுகின்றனர். விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிறந்த பயனையும் அறிவுத் திறனையும் தரக்கூடியதாக கண்காட்சி அமையும். அதனைப் பார்வையிடுபவர்கள் அதிஷ்டசாலிகளே.

(நெடுங்கிள்ளி)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com