Contact us at: sooddram@gmail.com

 

வடக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வேரூன்ற வைத்தவர்

நாள யாழ்ப்பாணத்தில் நினைவுதின நிகழ்வு

(சண்முக சுப்பிரமணியம்)

கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்என இலங்கையின் வடபுலத்து மக்களாலும், ‘காத்தார்என யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர் சமூகத்தாலும் அன்புடனும், அர்த்தத்துடனும் அழைக்கப்பட்டு வந்த முருகுப்பிள்ளை கார்த்திகேசன் (மு.கா) அமரத்துவமடைந்து, இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் 10ம் திகதியுடன் 33 வருடங்கள் உருண்டோடிவிட்டன.

இந்த 33 வருடங்களில் அவர் பெரிதும் நேசித்து வந்த தமிழ் மக்களின் வாழ்விலும், உலக அரங்கிலும் எவ்வளவோ பிரமாண்டமான மாற்றங்கள் நிகழ்ந்தேறிவிட்டன. இந்த மாற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம், அவை பற்றி, கார்த்திகேசன் உயிருடனிருந்திருந்தால், என்ன கருத்துகளைக் கூறியிருப்பார், அவற்றுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருப்பார், என்னென்ன நகைச்சுவைகளை அவிழ்த்திருப்பார் என, அவருடன் பழகிய பல்வகை மனிதர்களும் நிச்சயமாக ஊகங்களை வெளியிட்டிருப்பர்.

எமது மதிப்புக்குரிய ஆசானும், தோழருமான கார்த்திகேசன் 1919ம் ஆண்டு இப்பூமியில் அவதரித்து, 1977ல் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவர் இப்பூவுலகில் வாழ்ந்தது மொத்தம் 58 ஆண்டுகள் மட்டுமே. சுமார் அரை நூற்றாண்டுகால இவ்வாழ்க்கையில், அவர் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றிலும், தமிழ் மக்கள் வாழ்விலும் பதித்து விட்டுச் சென்ற சுவடுகள் என்றும் காலத்தால் அழியாதவை.

உலக வரலாற்றில் சொற்ப காலம் வாழ்ந்தாலும், மனித சமுதாயத்துக்காக என்றென்றைக்குமாக தமது வாழ்வை அர்ப்பணித்துவிட்டுச் சென்ற, லெனின், சேகுவேரா, ஜூலியஸ் பூசிக், பகவத்சிங், சுப்பிரமணிய பாரதி போன்றோரின் வரிசையில், எமது தேசத்தின் அழியாத சொத்தாக கார்த்திகேசனும் இருக்கிறார் என்பதை நாம் எவ்வித தயக்கமும் இன்றி பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.

கார்த்திகேசன் தனது கல்லூரிப் படிப்பை மலேசியாவில் முடித்த பின்னர், தாயகம் திரும்பி இலங்கை பல்கலைக்கழக கல்லூரியில் ஒரு மாணவராகச் சேர்ந்து பட்டதாரியானார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்திலேயே அவர், ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளாலும், மார்க்சிய கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக வளர்த்துக் கொண்டார்.

அந்தக் காலத்தில் அவர் பல்கலைக்கழக கல்லூரியிலிருந்து வெளிவந்தமாணவர் செய்திஎன்ற ஏட்டுக்கு ஆசிரியராக இருந்து எழுதிய கட்டுரைகளும் செய்திகளும் மாணவ சமுகத்தை மட்டுமின்றி, இலங்கையின் எதிர்கால அரசியல் தலைவர்களையே ஈர்ப்பனவாக இருந்தன.

அதன் காரணமாக பிற்காலத்தில் இலங்கையின் சக்திவாய்ந்த அரசியல்வாதியாக மாறிய ஜே.ஆர். ஜெயவர்தனாவே, ஒரு சந்தர்ப்பத்தில் தனது செய்தியொன்றை அந்தப் பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக கார்த்திகேசனை நாடிச் சென்ற சம்பவமும் நிகழ்ந்தது.

பல்கலைக்கழகப் படிப்பை மிகவும் சிறப்பாக முடித்த கார்த்திகேசன், விரும்பியிருந்தால் இலங்கையின் மிகச் சிறந்த சிவில் நிர்வாக உத்தி யோகத்தர்களில் ஒருவராக வந்திருக்க முடியும். அல்லது முதலாளித்துவ அரசியல் கட்சியொன்றில் இணைந்திருந்தால் ஒரு அமைச்சராகக் கூட சில வேளைகளில் வந்திருக்கக் கூடும்.

ஆனால் அவர் அதற்கு மாறாக, கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர் என்ற கடுமையான, ஆனால் மக்களுக்கு உவகையுடன் சேவையாற்றக் கூடிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். கட்சிக்கு கிடைக்கும் மிகச் சொற்ப வருமானத்தில், தனது இளம் மனைவியுடன், கொழும்பு கொட்டா வீதியிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்தில், வேறு பல தோழர்களுடன் இணைந்து கிடைப்பதைக் கொண்டு வாழும்கம்யூன் வாழ்க்கை”யை வாழ்ந்தார்.

அவர் கொழும்பில் கட்சியின் முழு நேர ஊழியராக வேலை செய்த காலத்தில் கட்சியின் புகழ்மிக்க ஆங்கில வார ஏடானபோர்வாட் பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றினார். இன்றைய பத்திரிகை ஆசிரியர்கள் போல், குளிரூட்டிய அறையிலோ அல்லது சுழலும் மின் விசிறிக்கு கீழோ அவர் அமர்ந்திருந்து பணி புரியவில்லை. பத்திரிகைக்கு அச்சுக் கோர்ப்பதிலிருந்து, அச்சிட்ட பத்திரிகைகளை மடித்து எடுத்துச் சென்று, வீதிகளில் கூவி விற்பது வரை, அவர் மிகக் கடினமாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார்.

அந்த சூழ்நிலையில் தான், இலங்கையின் வடபுலத்தில் கட்சிக் கிளையொன்றை ஸ்தாபிக்கும் பொருட்டு, கம்யூனிஸ்ட் கட்சி அவரை யாழ்ப்பாணம் அனுப்பியது. அங்கு 1944ல் தன் மனைவி சகிதம் சென்ற அவர், கட்சிக்கு பொருளாதார ரீதியில் ஒரு சுமையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், யாழ். இந்துக்கல்லூரியில் சாதாரண ஆசிரியத் தொழில் ஒன்றைப் பெற்று, அங்கு கல்வி கற்பித்தபடியே, கட்சி அமைப்பு வேலைகளிலும் ஈடுபட்டார்.

அவரது ஆசிரியத் தொழில், அவரது கட்சிப் பணிகளுக்கு மிகவும் வாய்ப்பான ஒரு தொழிலாக அமைந்து கொண்டது. அவர் தன்னிடம் கல்வி கற்ற மாண வர்களுக்கு முற்போக்கான கருத்துகளை ஊட்டவும், அவர்களது பெற் றோர்களான யாழ். தமிழ் சமூகத்துடன் உறவு கொள்ளவும், கல்வித்துறையின் ஏனைய சகாக்களுடன் உறவு பூணவும் அத்தொழில் பெரும் வாய்ப்பைத் திறந்துவிட்டது.

அவர் யாழ். இந்துக் கல்லூரியில் சுமார் 30 வருடங்கள் ஆசிரியராகவும், பின்னர் சிறிது காலம் பதில் அதிபராகவும் கடமையாற்றினார். அதன் பின்னர் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி என்பனவற்றின் அதிபராக இருந்து ஓய்வு பெற்றார்.

தோழர் கார்த்திகேசன் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு கொழும்பிலிருந்து தனியொரு கம்யூனிஸ்ட்டாகச் சென்றாலும், ஏற்கெனவே மார்க்கியக் கருத்துக்களால் ஆகர்சிக்கப்பட்டிருந்த சிலரை இனங்கண்டு, அவர்களையும் இணைத்துக் கொண்டு கட்சி அமைப்புப் பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்தார். அவர்களில் ஆரம்ப காலத்தில் அவருடன் கட்சிப் பணிகளில் இணைந்து கொண்டவர்களில் தோழர்கள் இராமசாமி ஐயர், எம்.சி.சுப்பிரமணியம், டாக்டர். சு.வே. சீனிவாசகம், மகாலிங்கம் மாஸ்டர், ஆர்.ஆர். பூபாலசிங்கம், எஸ்.கே. கந்தையா, வீ. ஏ. கந்தசாமி, அரசடி இராசையா ஆகியோர் முக்கியமானவர்களாவர். பிற்காலத்தில் அ.வைத்திலிங்கம், ஐ.ஆர்.அரியரத்தினம், பொன். கந்தையா, காதர் போன்ற பலர் கார்த்திகேசனுடன் இணைந்து கட்சிப் பணிகளை முன்னெடுத்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி ஏழை எளிய மக்களுக்காக முன்வைத்த விமோசன வேலைத் திட்டங்கள் மட்டுமின்றி, முழுத் தமிழ் மக்களுக்காகவும் முன்வைத்த, ‘வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பிரதேச சுயாட்சிஎன்ற யதார்த்தபூர்வமான தீர்வு, 1956ல் பண்டாரநாயக்க அரசாங்கம் கொண்டு வந்த சிங்களம் மட்டும் சட்டத்தை பாராளுமன்றத்திலும், வெளியிலும் உறுதியாக எதிர்த்து நின்ற நிலைப்பாடு என்பனவும், தமிழ் மக்கள் மத்தியில் கட்சிக்கு பெரும் செல்வாக்கை பெற்றுத்தந்தன. கட்சி எடுத்த இந்த ஆக்கபூர்வமான, காலத்தால் அழியாத தீர்மானங்களில் கார்த்திகேசனின் பங்களிப்பு, மிகவும் உயர்வானதும், தீர்க்கமானதுமாகும். அதன் பிரதிபலிப்பு வட பகுதியில் நடைபெற்ற தேர்தல்களிலும் எதிரொலித்தது.

1956 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பருத் தித்துறை தொகுதியில் போட்டியிட்ட தோழர் பொன். கந்தையா அமோக வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட தோழர் அ.வைத்திலிங்கம், அத்தொகுதியில் வெற்றிபெற்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர் அ.அமிர்தலிங்கத்திடம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியுற்றார். அதேபோல கட்சி சார்பில் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட தோழர் கார்த்திகேசன் கணிசமான வாக்குகள் பெற்று கட்டுப் பணத்தைப் பெற்றார். அங்கு சமசமாஜகட்சி தனது வேட்பாளரை போட்டிக்கு நிறுத்தாது விட்டிருந்தால், சில வேளைகளில் காத்திகேசன் யாழ்ப்பாணத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கலாம் என்பதை, வேட்பாளர்களுக்கு போடப்பட்ட வாக்குகள் காட்டி நிற்கின்றன.

இருந்த போதிலும், யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் வண்ணார்பண்ணை வட்டாரத்தில் கட்சி சார்பாகப் போட்டியிட்ட கார்த்திகேசன், அங்கு போட்டியிட்ட மிகவும் செல்வாக்கு மிக்க, பிற்காலத்தில் மாநகர சபை முதல்வராக வந்த, தமிழ் காங்கிரசின் வேட்பாளரான துரைராசாவைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியமை, அந்தக் காலத்தில் கட்சியின் செல்வாக்கை நன்கு புலப்படுத்துகிறது. அதுமாத்திரமல்ல, அவர் மாநகர சபை உறுப்பினராக இருந்த காலத்தில் தான், அவர் ஒருவர் தன்னந்தனியனாக நின்று, தமிழரசு - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தின் சனத்தொகையில் மிகச் சிறு தொகையினரான முஸ்லிம்களின் பிரதிநிதியாகத் தெரிவான சுல்தான் என்பவரை யாழ். மாநகர சபையின் முதல்வராக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது அந்தப் பங்களிப்பை முஸ்லிம் மக்கள் இன்றுவரை நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு கார்த்திகேசனின் வாழ்வையும் பணியையும் கூறுவதானால், அது அவரதும் தமிழ் மக்களினதும், இலங்கை இடதுசாரி இயக்கத்தினதும் பெரும் வரலாற்று நூலாகி விடும். இன்று நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில், இடதுசாரி இயக்கங்கள் விட்ட தவறுகளாலும், தமிழ்- சிங்கள தேசிய வெறிப் போக்குகள் விளைவித்த நாசத்தாலும், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகள் பலவீனங்களாலும், பொதுவாக இலங்கையிலும், குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும், இடதுசாரி இயக்கம் மிகவும் பலவீனமான ஒரு நிலையில் இருப்பதையே காண முடிகிறது. ஆனால் இது நிரந்தரமானதல்ல.

தோழர் கார்த்திகேசன் அவர்கள் அமரத்துவமடைந்த 33வது வருடத்தை நினைவு கூருகின்ற இவ்வேளையில், வெல்லப்பட முடியாத மார்க்சிசம்- லெனினிசம் என்ற ஆயுதத்தைக் கொண்டு, மீண்டும் இலங்கையில் ஒரு சக்தி வாய்ந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டியெழுப்புவதே, அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com