Contact us at: sooddram@gmail.com

 

(பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் யத்தத்தால் பாதிக்கப்பட்ட போராளியின் உள்ளக்குமுறுல். உதவி செய்ய முடியவில்லையா தயவு செய்து வரும் உதவிகைள தடுத்து தமக்கு உபத்திரம் கொடுக்காது இருக்க வேண்டும் இந்த மடலை தயவு செய்து தாழ்மையுடன் உங்கள் இணையத்தில் வெளியிடுமாறு தாழ்மையுடன் கோருகிறோம்.)

நாம் புலம்பெயர் சமூகத்திடம் பிச்சை கேட்கவில்லை. எமது வாழ்விற்கு நம்பிக்கை தாருங்கள்

அன்புடன் …. அண்ணாவிற்கு,

இந்த மடலை எமக்காக நேர்மையாக குரல் கொடுக்கும் ஒருஊடகத்தில் பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

காரணம் இன்று முன்னாள் போராளிகள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கபட்ட தமிழருக்கு என குரல் கொடுக்கிறோம் என்று கூறிச்செயல்படும் பல ஊடகங்கள் இன்று எமது வேதனையில் இன்பம் காணுகிறார்கள்.

எமது வேதனை அவர்களின் ஊடகத்திற்கு ஒரு செய்தி ,அத போட்டி போட்டு வாசிக்க ஆயிரம் புலம் பெயர் வாசகர்கள். இந்தசெய்திகள் எமக்குதரும் மரணவலியை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.

கணவனை இழந்த முன்னாள் போராளியின் மனைவி தன் குடும்பத்தை காப்பாற்ற விபச்சாரம் செய்வதை செய்தியாக போடும் தமிழ் ஊடகங்கள் இன்றுவரை அந்த பெண்ணின் அவலத்தை நீக்க முன்வரவில்லை என்பதே உண்மை. ஒருவேளே இந்த அவலம் நீங்கினால் இவர்களிற்கு கிடைக்கும் இந்த செய்தி இல்லாமல் போய்விடும் என்று இவர்கள் நினைக்கிறார்களோ தெரியாது.

ஆனால் இதுதான் உண்மைபோல் எமக்கு தெரிகிறது. பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது என்ற நிலையே இன்றைய எமது நிலை. புலம் பெயர் நாட்டில் புலிக்கொடி பறந்த செய்தியை வீரத்துடன் இந்த ஊடகங்கள் செய்தியாக போட்ட அடுத்த நிமிடம் எங்கள் வீட்டுக் கதவுகள் புலனாய்வுதுறையினரால் தட்டப்படுவது இவர்களிற்கு ஒரு ஆனந்தமான செய்தி. ஆனால் எங்களிக்கு அது ஒரு சீவன் போய்வரும் நிகழ்வு என்பது இவர்களிற்கு தெரியாதா? அல்லது தெரியதது போல் நடிக்கிறார்களா? புலம்பெயர் மக்கள் தம் பொழுது போக சனி ஞாயிறு கிழமைகளில் புலிக்கொடியுடன் போராட்டம் செய்ய, நாங்கள் இங்கு வாரம் முழுவதுமே கண்காணிக்கப்படுவதன் அவலம் இவர்களிற்குபுரியாது.

கால் இழந்து, கை இழந்து, மனைவி இழந்து, கணவனை இழந்து பிள்ளையை தாயை தந்தையை இழந்து அனாதைகளாக நாம் செய்வதறியாத நிற்கிறோம். வறுமைவாட்டி எடுக்கிறது. வேலை இல்லை. குழந்தைகளிற்கு தரமான கல்வி இல்லை. கல்வி கற்பிக்க ஆசான் இல்லை. இரவு வந்தால் பயம் நம்மை வாட்டி எடுக்கிறது. பகலில் பட்டினி நம்மை வதைக்கிறது. இது புலம்பெயர் மக்களிற்கு நல்ல செய்திதானே. ஆதனால் தான் நமக்கு உதவ முன்வருபவர்களையும் தடுத்து துரத்திஅடிக்கிறார்களா?

அண்மையில் புலம் பெயர் மண்ணில் இருந்து கருணை உள்ளம் கொண்ட சிலர் வந்து நம்மை பார்த்து உதவிசெய்து சென்றது எமக்கு ஒரு சிறு அறுதலாக இருந்தது. ஆனால் அதையும் இந்த சுயநலம் பிடித்த புலம் பெயர் ஊடகங்கள் விட்டுவைக்கவில்லை. உங்களது விறுவிறுப்பு செய்திக்காக எமது பட்டினிக்கும், அறிவிற்கும், தொழிலுக்கும் உதவ முன்வருபவர்களை ஏன் விரட்டுகிறீர்கள்? அவர்கள் யரரை சந்தித்தார்கள் எந்தப் பாதையால் வந்தார்கள் எப்படி வந்தார்கள் என்பது எல்லாம் எமக்கு வேண்டாதவை. அவர்கள் எங்களை மதித்து நேரம் ஒதுக்கி வந்து பார்த்து ஒரு பெரும் ஆறுதலை தந்தது.

எமது எதிர்காலம் பற்றி அவர்கள் எம்முடன் பேசியது எமக்கு நம்பிக்கையை தந்தது. எமது தொழில் பற்றிய அவர்களின் உறுதிமொழி எமக்கு பலத்தை தந்தது. எமது குழந்தைகளின் கல்வி பற்றிய அவர்களின் ஆர்வம் எமது குழந்தைகளின் இருண்ட வாழ்விற்கு ஒரு ஒளிகாட்டியாக இருந்தது .ஆனால் இவை அனைத்தையும் புலம் பெயர் தமிழ் ஊடகங்கள் போட்ட விறுவிறுப்பான செய்தி குண்டு வைத்து தகர்த்ததுள்ளது. 22 பேர் வந்தனராம் என்பது உங்களிற்கு வெறும் ஒருசெய்தி. அனால் எமக்கு அது ஒரு சிறு துளி நம்பிக்கையை நமக்கு தந்தது. ஆனால் அந்த நம்பிக்கை பூக்க முன்னரே கருக்கிவிட்டது என்பது இந்த ஊடகங்களற்கு தெரியாதா? 22பேர் வந்ததிற்கே நாம் பெருத்த ஏமாற்றம் கொண்டோம். காரணம் போர் காலத்தில் அள்ளி அள்ளி ஆயிரக்கணக்கில் வழங்கியவர்களில் ஆக 22 பேருக்;குமட்டும் தானா நம்மில் உண்மையான அக்கறை உள்ளது? ஏனையவர்கள் எங்கே? அவர்களும் ஆயிரக்கணக்கில் வந்தால் நம் ஏதிர்காலம் துளிர்ப்பதில் எமக்கும் ஒருதைரியம் வரும் நம்பிக்கைவரும். ஆனால் அந்த நம்பிக்கையில் கூட இந்த ஊடகங்கள் மண்ணை அள்ளிப்போடுகிறதே.

நாம் புலம்பெயர் சமூகத்திடம் பிச்சை கேட்கவில்லை. எமது வாழ்விற்கு நம்பிக்கை தாருங்கள், எமக்கு ஒரு சிறு தடியை தந்து அதில் எம்மை படரவிடுங்கள் என்று மட்டும் தான் கேட்கிறோம். சரி உங்களால் உதவி செய்ய முடியவில்லையா? உபத்திரமாவது கொடாமல் இருங்களேன். நீங்களும் உதவமாட்டீர்கள் உதவ வருபவர்களையும் விடமாட்டீர்கள். உளவாளி உல்லாசப் பிரயாணி என்று நீங்கள் அழகாக எழுதும் ஒவ்வரு எழுத்தும் எமது இருப்பிற்கு நீங்கள் போடும் வாய்க்கரிசி. நாம் பட்டினியால் சாவதுதான் உங்களிற்கு தேவையான செய்தி என்றால் அது மிக விரைவில் உங்களை வந்து சேரும். இங்கு அரசிற்கு உளவாளிகள் தேவையில்லை. புலம்பெயர் மண்ணில் இருந்த காசுகொடுத்தவர் இயக்கத்திற்கு ஆதரவுகொடுத்த அனைவரினதும் விண்ணப்பங்கள் படவிபரங்களுடன் அரசிடம் 2009இல் வன்னியில் இருந்து சிக்கியது உங்களுக்கு தெரியாதா? இனி உளவு சொல்ல என்ன இருக்கிறது இங்கு?

கனடா, லண்டன், சுவிஸ், அவுஸ்திரேலியா என்று ஆயிரக்கணக்கான தமிழர் உல்லாசப்பயணிகளாக வன்னியை கடந்து எம்மை திரும்பி கூட பாராது யாழ்ப்பாணத்திற்கு உல்லாசப் பயணயம் போவது உங்களிற்கு தெரியாதா? அனால் எம்மை பார்க்க வந்த 22 பேர் மட்டும் உங்களின் கண்களை உறுத்துவது ஏன்? இதில் என்ன அரசியலை நீங்கள் கண்டுபிடித்தீர்கள்? அதை விட ஆபத்தான அரசியலை உல்லாசப் பயணத்தில் வரும் உலகத் தமிழர்கள் செய்வது உங்கள் கண்களிற்கு தெரியவில்லையா?

இந்த புலம் பெயர் ஊடகங்கள் இன்று எமக்காக என்று சொல்லும் ஒவ்வரு செய்தியும் எம் வறுiமையை நீடிக்கிறது? நாம் பட்டினிசாவால் இனி காணமால் போவது என்பதுஅரசின் கெடுபிடியால் அல்ல இந்த புலம் பெயர் ஊடகங்களின் அரசியலால் தான். எமதுமரணங்கள் தான் உங்களிற்குஅரசியலா? எமதுபட்டினிதான் உங்களிற்கு இன்பமா? எமது குழந்தைகள் கல்வியைத் தொலைத்து விட்டு மீண்டும் போராடிமடிவதுதான் உங்கள் சந்தோசமா? எழுதுங்கள் இன்னும் எழுதுங்கள். துரோகி உளவாளிஎன்று இனிப்பான வார்தைகளை போட்டு உங்கள் செய்தி தளங்களிற்கு நன்றாக ஆட்சேருங்கள். நீங்களும் பிரபல கனவான்களாக மாறுங்கள். அதை நாம் சாகும் வரை செய்து கொண்டே இருங்கள். பட்டினியால் நாம் செத்த பின்னரும் எமது கல்லறையையும் விட்டுவைக்காது அதைப் பற்றியும் சுடச்சுட நீங்கள் அலுக்கும்வரை செய்திகளை எழுதுங்கள். எமது ஆத்மாவும் சாந்தியடையாது உங்கள் ஆசைக்கும் தேவைக்கும் எற்ற செய்திகளை அது தந்து கொண்டே இருக்கும்.

நன்றி

முன்னாள் போராளி என்று சொல்ல வெட்கப்படும் ஒரு தமிழன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com