Contact us at: sooddram@gmail.com

 

வட மாகாண தேர்தலிலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும்!

(எஸ். ஹமீத்)

வட மாகாணத்தைப் பொறுத்தவரை தேர்தலிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகி, வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது, 23 வருடங்களாக அகதி வாழ்விற்குள் நொந்து நூலாகி, வெந்து கரியாகிக் கிடக்கும் வட மாகாண முஸ்லிம்களுக்குச் செய்யும் பேருதவியாக இத் தருணத்தில் அமையும். வட மாகாண முஸ்லிம்களுக்கென்று இப்போது அத்தியாவசியமாகத் தேவைப்படுவது, அவர்களின் இருண்டு போன வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சம். அந்த இருட்டு வாழ்க்கையிலிருந்து வெளியேறி ஓரளவாவது வெளிச்சத்தைக் கண்ட பின்புதான், தமது அரசியல் உரிமைகளைப் பற்றியோ, ஏனைய உரிமைகளைப் பற்றியோ அவர்களால் சிந்திக்கத் தொடங்க முடியும். இந்த வெளிச்சத்தை ஆளும் கட்சியினால், அல்லது ஆளும் கட்சியுடன் இணைந்து தமது மக்களின் விடிவுக்காகப் போராடும் ரிசாத் பதியுதீனின் கட்சியினால் மட்டுமே வழங்க முடியும்.

வட மாகாண முஸ்லிம்களினால் காலம் காலமாக ஆராதிக்கப் பட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினால் அம் மக்களுக்கு, இந்த 23 வருடங்களாக எந்தவித காத்திரமான உதவிகளோ, குறிப்பிடத்தக்க சேவைகளோ, சொல்லக் கூடியளவுக்கு அபிவிருத்திகளோ வழங்க முடியவில்லை. மாறாக, காலத்துக்குக் காலம் வன்னி முஸ்லிம் மக்கள் ஒன்று பட்டு ஒன்றோ, இரண்டோ பாராளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கி வந்திருக்கின்றனர்.

எதிர்க் கட்சியில் இருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் கட்சியில் இருந்த அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வந்த செல்வாக்கைக் கண்டு பயந்து போயும் பொறாமைப் பட்டும் அரசாங்கத்துடன் அவசர அவசரமாகத் தானும்  இணைந்து அமைச்சுப் பதவியையும் பெற்றுக் கொண்டது. ஆனாலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கபட நாடகத்தைத் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கும் அரசாங்கம், அதனை வைக்க வேண்டிய இடத்தில்தான் வைத்திருக்கிறது. தானாகவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேற வேண்டிய பல அழுத்தங்கள் அதற்கிருந்தும், பதவி மோகமும், ரிசாத் பதியுதீனை வளர விடக் கூடாதென்ற காழ்ப்புணர்வும் சேர்ந்து, கழுத்தைப் பிடித்து அரசாங்கம் தள்ளும் வரை அது காத்துக் கொண்டிருக்கிறது.

ரிசாத் பதியுதீனின் வருகையின் பின்னர்தான் வட மாகாண முஸ்லிகள் ஆறுதலையும் பாதுகாப்பையும் சேவைகளையும்  ொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்க ஆரம்பித்தார்கள். அரச எதிர்ப்புக் காட்டி(அது எந்த அரசாக இருந்தாலும்) வீராப்புப் பேசுவதற்கு கிழக்கு மாகாணம் போல் வடக்கு மாகாணம் முஸ்லிம்களுக்கு ஒரு சிறந்த  தளமல்ல என்பதை வடக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் தயவு செய்து புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

வட மாகாண முஸ்லிம்களுக்குத் தன்னால் எந்த சேவைகளையும் செய்ய முடியாத ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இரவும் பகலும் அம் மக்களுக்காக அயராது உழைக்கும், அரும் பாடுபடும் ரிசாத் பதியுதீனுக்குத் தமது மானசீக ஆதரவை வழங்குவதற்குப் பதிலாக, அவரை வஞ்சகக் கண் கொண்டு பார்ப்பதும்-அவரை வீழ்த்தத் திரை மறைவு எத்தனங்களில் ஈடுபடுவதும் கண்டிக்கப்பட வேண்டியவைகளாகும்.

வட மாகாணத்தில், சிறப்பாக வன்னி மாவட்டத்தில் ரிசாத் பதியுதீனுக்கு இருக்கும் நற் பெயரும், செல்வாக்கும் உலகமறிந்த விடயம். அதனைத் தகர்த்து, அரசாங்கத்திடம் அவருக்குள்ள செல்வாக்கைக் குறைக்க வேண்டுமென்பதுதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது வகுத்துள்ள சதி வியூகம். அதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு, வட மாகாண முஸ்லிம்களைப் பலி கொடுக்கும் கைங்கரியத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

இந்த சதிக்கு வட மாகாண முஸ்லிம்கள் பலியாகி விடக் கூடாது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், வட மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு அளிக்கும் வாக்குகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.    

எனவே, எதிர்வரும் 21ம் திகதி தத்தமது மாவட்டங்களில் வெற்றிலைச் சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் முஸ்லிம் வாக்காளர்களுக்கு தமது எதிர்கால சுபீட்ச வாழ்வைத் தீர்மானிக்கும் வாக்குகளை வட மாகாண முஸ்லிம்கள் அள்ளி வழங்க வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் ரிப்கான் பதியுதீனின் தலைமையில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் மில்ஹான் லதீப், அலிகான் ஷரீப், அமீன் போன்ற அனைத்து வேட்பாளர்களும் சமூக நோக்கமுடைய சிறந்த வேட்பாளர்களே. தலைமை வேட்பாளர் ரிப்கான் பதியுதீனுக்கு தமது வாக்கை அளிப்பதோடு, ஏனைய தமக்குப் பிடித்தமான முஸ்லிம் வாக்காளர்களுக்கும் விருப்பு வாக்குகளை அளித்து மூன்று முஸ்லிம் பிரதிநிதித்துவங்களையாவது வட மாகாண சபையில் உறுதிப்படுத்த வேண்டும்.

வரலாற்றில், வடக்குக்கென்று தனியாக நடக்கும் இந்தத் தேர்தலில், வட மாகாண முஸ்லிம்களின் வருங்காலம் தங்கியுள்ளது. எனவே, வெற்றிபெறும் நிலைமையில் இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை மேலும் அமோக வெற்றி பெறச் செய்து, தமது எதிர் காலத்தை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தனது கட்சியினால் ஒரு ஆசனத்தைக் கூடப் பெற முடியாது என்பது நன்கு தெரிந்திருந்தும், முஸ்லிம்களின் வாக்குகளைச் சிதறடித்து, அதன் மூலம் வடக்கில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் எதுவும் கிடைக்காத நிலைமையை உருவாக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முனைப்புடன் ஈடுபடுவது வேதனைக்குரியது மட்டுமல்ல, வெட்கப்பட வேண்டியதுமாகும்.

தன்னை நம்பியிருந்த வட மாகாண முஸ்லிம்களுக்குத் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்ற வக்கற்ற தன்மையைப் புரிந்து கொண்டு, தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கும் ரிசாத் பதியுதீனுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தாமல், அவராவது செய்யட்டும் என்றெண்ணி, இந்தத் தேர்தலிலிருந்து இறுதி நேரத்திலாவது வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது, வட மாகாண முஸ்லிம்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும். வட மாகாண சபைத் தேர்தலிலிருந்து விலகிக் கொள்வது மட்டுமல்ல, தனது ஆதரவாளர்களிடம் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படிப் பகிரங்கமாகவும் அறிவிக்க வேண்டும். இதுவே, வடக்கு முஸ்லிம்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்யக் கூடிய மிகப் பெரும் சேவையாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com