Contact us at: sooddram@gmail.com

 

வடக்கு மாகாண வாக்காளப் பெருமக்களுக்கு சில தாழ்மையான வேண்டுகோள்கள்

(அபிமன்யு)

இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டிய வடக்கு மாகாணசபைத் தேர்தல் இன்னும் வெகு சில நாட்களில், எதிர்வரும் செப்ரம்பர் 21ம் திகதி, நடைபெறவிருக்கிறது.    இந்த இருபத்தாறு ஆண்டுகள் நடைபெற்ற போர் ஏற்படுத்திய அனாவசிய அளப்பரிய உயிர்ப் பலிகள், உடமை அழிவுகள், அவயவ இழப்புகள், வாழ்வாதார அனர்த்தங்கள், இன்னல்கள், அனாதைகள், விதவைகள், மற்றும் இடப்பெயர்வுகள், இராணுவப் பிரசன்னங்கள்,  ஆகியவற்றின் பின்னணியில் இந்த வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தலில் நீங்கள் வாக்குச் சாவடிக்குள் அடியெடுத்து, உங்களதும்,   உஙகளது பிள்ளைகளின் வருங்காலத்தை நிர்ணயிக்கப்போகும் வாக்குகளை அளிக்கும் முன்னர், பின்வரும் கேள்விகளுக்கான விடைகளைச் உணர்ச்சிகளுக்கு உட்படாமல், அறிவுக்கூர்மையுடன் சிந்தித்து, சீர்தூக்கி வரும் பதில்களுக்கேற்ப உங்களது வாக்குகளைப் போடுங்கள்.

  1. இலங்கை -இந்திய ஒப்பந்தத்த்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட 13வது அரசியல் திருத்தத்தை, அதன் ஆரம்பகாலத்திலிருந்தே அதனை எமது இனப் பிரச்னைக்கான அடித்தளமாக நாம் ஏற்றுக் கொள்வதே அறிவுடமை என்ற நிலைப்பாட்டை தீர்க்கதரிசனத்துடன் எடுத்தவர்கள் உங்களைப் பிரநிதித்துவப்படுத்த லாயக்குள்ளவர்களா? அல்லது, அந்த ஒப்பந்தத்தை நிர்மூலமாக்கி, அத்தனை அழிவுகளுக்கும் காரணமாகி, உங்கள் வாக்குகளைக் கேட்கும் தூரநோக்குப் பார்வையற்றவர்கள்தான் உங்களைப் பிரநிதித்துவப்படுத்த லாயக்குள்ளவர்களா?
  1. மேற்குறிப்பட்ட அளப்பரிய அவலங்களும் அனர்த்தங்களும் இன்னல்களும், இந்தக் கொடுமையான யுத்தம் விளைவிக்கும்--தமிழ் பேசும் மக்களுக்குப் பல பாரிய தீய பலன்களையே பரிசளிக்கும்-எனக் கடந்த பல ஆண்டுகளாகக் கூறி வந்தவர்கள் நல்லவர்களா? அல்லது இந்த யுத்தம் தொடர்வதற்கு முண்டு கொடுத்து வந்தவர்கள் நல்லவர்களா?
  1. இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் 13வது அரசியல் திருத்தம் அர்த்தமற்றது என்று நிராகரித்து விட்டு, இப்பொழுது அதே 13வது அரசியல் திருத்தத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளர்களாக முண்டியடித்துக் கொண்டு நிற்கும் சுரணையற்றவர்கள்தான் உங்களின் உண்மையான நலன் கருதும் நேர்மையாளர்களா?
  1. நாம் விரும்பியோ விரும்பாமலோ தவிர்க்க முடியாதவகையில்,  பெரும்பான்மையான  சிங்கள சமூகத்தினர், அச் சமூகத்தின் முற்போக்குவாதிகள், முஸ்லிம் சமூகத்தினர், மற்றும் மலையகத் தமிழர்கள் ஆகியோர்களைப் பிரநிதித்துவப்படுத்துவோர்கள் இலங்கை அரசில் அங்கம் வகிக்கின்றனர். எனவே, இலங்கை அரசாங்கத்துடன் எல்லாவற்றிற்கும் முரண்பட்டுக் கொண்டிராது, அரசின் நல்ல காரியங்களை ஒப்புக் கொண்டு இணக்கப்பாடு அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கூறி வருபவர்கள் தமிழர் நலன்  காப்பவர்களா?, அல்லது தமது சொந்தச் சலுகைகளுக்காக அரசாங்கத்திடன் அவ்வப்போது தொடர்புளைப் பேணிக்கொண்டு, வாய்வீச்சு மற்றும் வீறாப்பு அரசியல் மூலம் உங்கள் வாக்குகளைக் கவர்பவர்கள்தான் தமிழர் நலன்  காப்பவர்களா?
  1. சப்ரா நிறுவனத்தின் மூவம் தன்னை நம்பி முதலீடு செய்த தமிழர்கள் பலரை ஏமாற்றி நிதி மோசடி செய்தவரை-- தற்கொலைகளுக்குத் தள்ளியவரை--உள்ளடக்கிய கட்சியின்  தலைமைத்துவம் உண்மையில் உங்களுக்கு நல்லது செய்யும் என நம்புகிறீர்களா?
  1. பாராளுமன்றப் பதவிகளுக்காக தங்கள் போராளிகளையும், தலைவர்களையும் கொன்றவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டவர்கள், பொதுமக்களைக் கேடயமாகப் பாவித்துக் கொண்ட போது வாளாவிருந்தவர்கள்தான்  உங்களின் அல்லகள் தீர, நீங்கள் சுதந்திரத்துடனும், மானத்துடனும் வாழ, நேர்மையாகவும், செயற்திறனுடனும் பாடுபடுவார்கள் என நீங்கள்  எதிர்பார்க்கிறீரகளா?
  1. சில பேட்டிகளில் புலிகள் பயங்கரவாதிகள் என்றும், தேர்தல் பிரச்சாரங்களில் அவர்கள் விடுதலைப் போராளிகள் என்றும்  அவ்வப்போது முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் வாக்கு வேட்டைக்காரர்களையா, நல்லவர்கள், வல்லவர்கள் நேர்மையானவர்கள் என நினைக்கிறீர்கள். இவர்களையா இனப் பிரச்னை, தமிழர் நலன், வாழ்வாதாரங்கள் சம்பந்தமான விடயங்களில் முரணற்ற முடிவுகளை எய்துவார்கள் என்று  நம்புகிறீர்கள்?
  1. தேர்தல் முடிந்ததும் தங்களுக்குள்ளேயே முரண்பாடுகளை மறுபடியும் வெடிக்க வைக்க வாய்ப்புள்ள கட்சியின் கூட்டைச்  சார்ந்தவர்களையா ஒற்றுமை என்ற பெயரில் உங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்?
  1. சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம் என்றும்,  அவ்வப்போது கேட்பவர்களுக்கேற்ப  தமிழ்ஈழக் கோரிக்கையைக் கைவிடவில்லை என்றும் மாற்றி மாற்றி, யதார்த்த்தில் உள்ளூர் அரசியல் சூழலிம் சரி, சர்வதேச அரசியல் சூழலிலும் சரி, இப்பொழுது நடைமுறைச் சாத்தியமற்றவைகளைப் பேசிக்கொள்பவர்கள் சாதிப்பதுதான என்ன?- உங்களை உசுப்பேற்றுகிறார்கள். உங்களைக் கற்பனைக் காட்சிகளில் மூழ்க வைக்கிறார்கள். அத்துடன், நாட்டைப் பிரிக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகள் இன்னமும் செயற்படுகிறார்கள், எனவே இராணுவம் தமிழ்ப் பிரதேசங்களில் பரவலாகத் தொடர்ந்திருக்க வேண்டும் என்னும் சிங்களப் பேரினவாதிகளின் குரல்களுக்குத் தூபம் போடுகிறார்கள். இவர்களைத்தான் தமிழர் நலனில் உண்மையாகவே அக்கறை கொண்டவர்கள் என்று  நம்புகிறீர்களா?. இவர்கள்தான் தேர்தல்களில் வெல்வதைத் தவிர இனப்பிரச்னைக்கு ஒரு சுமூகமான தீர்வை எய்த மானசிகமாக செயற்படுவார்கள் என நம்புகிறீர்களா? .
  1. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்று மாகாணசபையை நடாத்தும் அதிகாரத்தைப் பெறுவது, மாகாண சபையைச் செயற்படுத்தாதிருப்பதற்கு வழி சமைப்பது, இலங்கை அரசாங்கத்துடன் முரண்படுவது, பின்னர் சிங்கள இனவாதம்  தமிழர்களுக்கு ஒன்றும் தராது என்று சொல்லிக் கொண்டே தமிழ் இனவாத அரசியல் நடாத்துவது, அடுத்த தேர்தல்களிலும் உங்களிடம் அவற்றை வைத்தே உங்கள் வாக்குகளைக் கோரி தமது வெற்றியை உறுதிப்படுத்துவது --இவற்றையே முன்னெடுத்துக் கொண்டு அரசியல் பிழைப்பு நடாத்திக் கொண்டிருப்பவர்களையா நீங்கள் தொடர்ந்தும் தெரிவு செய்யப் போகிறீர்கள்?. சிங்கள அரசுகள் ஒன்றையும் தராது, அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்,  இப்படிச் செய்கிறார்கள் என்று குறை சொல்லியே தம் பதவிகளை தக்க வைத்துக் கொள்வோரையா நாம் தொடர்ந்தும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?. வாராமல் வந்த வடக்கு மாகாணசபை அதிகாரத்தையும் அவர்களுக்கு அளித்து எமது வாக்குகளை வீணாக்கப் போகிறோமா?
  1. எங்கள் வாழ்வும் வளமும் இவ்வளவு சீர்குலைந்தமைக்கு தாமும் காரணமாக இருந்து விட்டு, அதற்காக எதுவித பச்சதாபமுமின்றி, மக்களிடம் மன்னிப்புக் கேட்க மனச்சாட்சியின்றி, இலங்கை அரசாங்கத்தை மட்டுமே குறை கூறிக்கொண்டு  இருப்பவர்களையா உங்கள் பிரதிநிதிகளாக்கப் போகிறீர்கள்?. இப்பொழுது நாம் அனுபவிக்கும் அவல நிலைமைகளை மேலும் அதிகரிக்கச் செய்யப் போகிறவர்களையா நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீரகள்?
  1. பட்டு வேட்டிக் கனவில் வாழ வைத்து கட்டியிருந்த கோவணமும்  களவாடப்பட்ட நிலைமைக்கு எம்மை இட்டவர்களின் பேச்சுக்கும், வாயச்சவாடல்களுக்கும், உறுதி மொழிகளுக்குமா நீங்கள்  மதிப்பளிக்கப் போகிறீர்கள்?
  1. எல்லாவற்றிற்கும் சிங்கள மக்களையும், முஸ்லிம் சமூகத்தையும் மட்டுமே காரணம் காட்டி, தமது அரசியல் வங்குரோத்துத்தனம்,   கையாலாகாத்தன்மை, மக்கள் நலன் சார்ந்த தூரநோக்குப் பார்வையற்ற விவேகமற்ற அணுகுமுறைப் பிசகுகள் பலவும் நாம் இன்றைய இழிநிலைக்கு ஆளானத்திற்குக் காரணம் என்பதை மறைப்பவர்கள், சுயவிசாரணை செய்யாதவர்கள், தமது பங்கினை ஒப்புக்கொள்ளாதவர்களையா நாம் மறுபடியும் அரியாசனத்தில் ஏற்றி மறுபடியும், மறுபடியும் எமது தலையில் நாமே மண்ணை வாரிப் போடப் போகிறோமா?
  1. எத்தனையோ உள்ளாட்சிச் சபைகளில் பெரும்பான்மைப் பிரதிநிதிகளாக இருந்தும் அவற்றை நிர்வகிக்கும் திறமையற்றவர்களை, அவற்றின் மூலமாக தமிழ்ப் பிரதேசங்களுக்கு எதுவித நற் பலாபலன்களையும் பெற்றுத் தராதவர்களையா நாம் இன்னமும் நம்பி வடக்கு மாகாணசபை அதிகாரத்தையும் அவர்களுக்கு அளித்து எமது பொருளாதார நிலைமைகளையும் வாழ்வாதாரங்களையும் மேலும் சீரழிக்கப் போகிறோமா?-- சீரழிந்த வாழ்க்கையையும், பாதகமான பலன்களையுமே தர வல்லவர்களுக்காகவா நாம் எமது வாக்குகளை அளிக்கப் போகிறோம்?.
  1. புண்களைக் காட்டித் தொடர்ந்து வாக்குப பிச்சை கேட்பவர்கள் சிறந்தவர்களா?, அல்லது அநதப் புண்கள் விலக, தமிழர் வாழ்வு தழைக்க இலங்கையில் அங்கம் வகிக்கும் ஒரு சமூகமாக வாழ வழி சொல்பவர்கள் சிறந்தவர்களா?
  1. தமக்கு நிரந்தரமான நண்பர்களும் இல்லை, நிரந்தரமான எதிரிகளும் இல்லை, தமது புவிசார் அரசியல், பொருளாதார பாதுகாப்பு என்பதே சரவதேச அரசுகளின் நெறிமுறைகள் என்ற அடிப்படையில்  இயங்கும் சர்வதேசங்களின்  ஆதரவுதான்  எமது அரசியல் பலம் என்ற மாயையில் எம்மைச் சிக்க வைத்து, இலகு அரசியல் நடாத்துபவர்கள்தான் உங்களின்  அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க்க்கூடியவர்கள் என நம்புகிறீர்களா?.
  1. உங்களை உணர்ச்சிவயமாக்கி, உசுப்பேத்தி, இன்னல்களும் அவலங்களும் நிறைந்த இன்றைய நிலைக்குத் இட்டுச் சென்றவர்களை, இப்படியே இன்னமும் மேலும் இநத இழி நிலை தொடர வழிசமைப்வர்களையா நீங்கள் நம்புகிறீர்கள்?
  1. நாட்டை விட்டு ஓடியவர்கள் தமதும், தமது பிள்ளைகளது வாழ்க்கையையும் சீராக்கிக் கொண்டார்கள்.  எஞ்சி இலங்கையில் வாழும் உங்களதும் உங்களது பிள்ளைகளது வாழ்க்கையும் தொடர்ந்து சீரழிய வேண்டுமா? அழுகுரல்களும் விரக்திகளும் வேதனைகளுந்தான் அடுத்த தேர்தல்களுக்கும் தொடர வேண்டுமா?
  1. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் வாழ்வு உதாசீனப்படுத்தப்பட்டு, சரணாகதி அரசியலுக்கும் இணக்கப்பாடு அரசியலுக்கும் பேதம் தெரியாது, மாயைக்கும் யதார்த்திற்கும் வேறுபாடு தெரியாது, இப்பொழுது இருப்பதும் இல்லாமல் போய் இலங்கையில் வாழும் எமது வாழ்க்கையும் எமது பிள்ளைகளின் வாழ்க்கையையும் மேலும்  மோசமாக்கப் போகிறீர்களா?.

தெரிவு உங்களுடையது!

—கேள்விகளுக்கான விடைகளை, இன்றைய அரசியல் சமூக யதார்த்தத்தில் சீரதூக்கி சிந்தித்து வாக்களியுங்கள்!

போலிகளிடமும், இரட்டை வேடதாரிகளிடமும் எத்தனையோ தடவைகள், எத்தனையோ தேர்தல்களில் ஏமாந்தது போதாதா?.

மின்னுவதெல்லாம் பொன் என நினைக்காதீர்கள்!.

நாங்கள சொல்லவில்லை எனப் பின் கூறாதீர்கள்!.

பின்னர் வருந்தாதீர்கள்.--வருந்துவதையே வாடிக்கையாக்கி விடாதீர்கள்!. 

என்றும் அன்புடன்

அபிமன்யு

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com