Contact us at: sooddram@gmail.com

 

கூட்டமைப்புக்குள் பாகிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ - சித்தார்த்தன் எம்.பி.யின் பின்னணி அறிந்த சம்பந்தன் அதிர்ச்சி..!!

கூட்டமைப்புக்குள் பாக்கிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ: தா்மலிங்கம் சித்தாத்தன் எம்.பி.யின் பின்னணி அறிந்து இரா.சம்பந்தன் அதிர்ச்சி..! (உண்மை சம்பவங்களின் தொகுப்பு)
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கையில் தங்களுடைய நலன்கள் பாதிக்கப்படுவதாக கருதும் பாகிஸ்தானிய வெளியக உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஊடுருவுவதில் வெற்றி பெற்றிருக்கிறது. நீண்டகாலமாக தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் தங்களுக்கான முகவர்களை உருவாக்குவதில் வெற்றிபெற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த ஜ.எஸ்.ஜ நாடாளுமன்ற உறுப்பினர் தா்மலிங்கம் சித்தாத்தன் மூலம் தங்கள் இலக்கில் வெற்றி பெற்றிருக்கிறது.
இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள உல்லாச விடுதியொன்றில் வைத்து, தா்மலிங்கம் சித்தாத்தாத்தனுக்கும் ஜ.எஸ்.ஜயிற்கான இலங்கை அதிகாரி ஒருவருக்கும் இடையில் இரகசிய சந்தித்திப்பொன்று இடம்பெற்றிருக்கிறது.

இந்த சந்திப்பில் தா்மலிங்கம் சித்தாத்தனுடன் புளொட் அமைப்பில் மட்டக்களப்பில் வெற்றி பெற்ற அமல் மற்றும் ஆர்.ஆர் மாகாண சபை பிரதேச சபை உறுப்பினா்களும் கலந்து கொண்டுள்ளனா். காரணம் அன்மையில் ரோ அமைப்பினா் புளொட் மூலமாக கூட்டமைப்பிற்குள் நுளைந்ததை அடுத்து ஜ.எஸ்.ஜ தீவிர வாத அமைப்பின் முக்கியஸ்தா்கள் சித்தாத்தனை தொடா்பு கொண்டு இந்த சந்திப்பினை மேற் கொண்டள்ளனா்.

ரோ அமைப்பு புளொட் தொடர்புடை செய்தி

இப்படியான தொடா்புகள் உள்ளதை அறிந்த கூட்டமைப்பின் தலைமைப்பீடம் அதிர்ச்சியடைந்திருக்கிறது. சித்தாத்தன் பகிரங்கமாகவே தான் விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதாிக்க வில்லை எனவும் புலிகள் அழைத்துக் கூட கூட்டமைப்பில் இணையாத நான் புலிகள் அழிந்த பின்னே கூட்டமைப்பில் இணைந்தேன் என்னை வழிநடத்துவது வேற சக்தி காலம் வரும் போது அதை வெளிப்டுத்துவேன் என 2009 இல் புலிகள் அழிக்கப் பட்ட வேளையில் குறிப்பிட்டது இன்று வெளிப்பட்டுள்ளது. இப்படியாக சித்தாத்தனால் எப்படி புளொட் அமைப்பபை நிரூவகிக்க முடிகிறது பணம் எங்கிரந்து வருகிறது என பலாிடமும் ஐயப்பாடு இருந்தது. இப்படி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே பலரிடமும் விசாரிக்குமளவிற்கு, சித்தாத்தனின் பணம் ஒரு பாரிய மர்மமாகவே இருந்துள்ளது.

காரணம் மாகாணசபையில் பல கோடிகளை செலவிட்டவா் பாராளுமன்றத்திலும் அதை விட கூடுதலான பணத்தை செலவு செய்யதே அதற்கு காரணம். ஆனால் அந்த மர்மத்திற்கும் பின்னால் இருப்பது ஆசியாவில் அனைத்து நாடுகளிலும் தன்னுடைய முகவர்களை பரப்பியிருக்கும் மிகவும் ஆபத்தான பாகிஸ்தானிய உளவுத்துறை என்பது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டவர் என்பதை துல்லியமாக கணித்திருந்த ஜ.எஸ்.ஜ, கூட்டமைப்பிற்குள் தங்களின் விசுவாசி ஒருவரை வளர்க்க விரும்பியது.

இதற்காக மிகவும் பொருத்தமான நபராக நீண்டகால போராட்ட அனுபவமும் மொழி ஆற்றல் இராஜதந்திரம் உள்ள சித்தாத்தன் தான் தங்களுக்கு ஏற்ற ஆள் என்பதை ஜ.எஸ்.ஜ இனம் கண்டதைத் தொடர்ந்து சித்தாத்தனுக்கு வலைவீசியது. ஜ.எஸ்.ஜ சித்தாத்தன் பற்றிய தகவல்களை திரட்டிக் கொண்டிருந்த வேளையில் தான் ஜ.எஸ்.ஜ இற்கு கூட்டமைப்பிற்குள் இருந்த ஒரேயொரு தொடர்பாளரான (நேரடியாக அல்ல) வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் தொடர்பை இந்தியா கண்டு பிடித்திருந்தது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர், இந்திய தூதரகத்திற்கு அழைத்து அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, அந்த தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இந்த அனுபவத்தையும் கருத்தில் கொண்ட ஜ.எஸ்.ஜ,, கட்சியின் தலைமைக்கு அடங்காத அதே வேளை, எதிர்காலத்தில் கூட்டமைப்பின் தலைவராக வரவேண்டும் என்பதில் ஆசையுள்ள ஒருவரை தங்களின் முகவராக மாற்றுவது தான் சரியானதென முடிவுசெய்தது.
இந்த அடிப்படையில் சித்தாத்தனை கொழும்பில் வைத்து பல தடவைகள் பாகிஸ்தானிய தூதரகத்துடன் தொடர்புடைய முஸ்லிம் வர்த்தகர்கள் மூலமாக சந்தித்து, தங்களின் முகவராக மாற்றும் வேலைகளில் ஈடுபட்டது.

ஒரு சில சந்திப்புக்களிலேயே சித்தாத்தன் பலவீனங்களை துல்லியமாக மதிப்பிட்ட ஜ.எஸ்.ஜ, சித்தாத்தனை தங்களின் நிரந்தர முகவராக்கிக் கொண்டது. ஜ.எஸ்.ஜ வழங்கிய அறிவுரைகளுக்கு அமையவே சித்தாத்தன் அன்மைக் காலங்களில் தன்னை விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக காண்பித்து வந்தார். இவ்வாறு சித்தாத்தன் பேசுகின்ற போது இலங்கை பாதுகாப்பு தரப்பினால் வரப் போகும் அச்சுறுத்தல்களை தாங்கள் பார்த்துக் கொள்வதாக ஜ.எஸ்.ஜ வாக்குறுதியளித்தது. அந்த வாக்குறுதியை அவர்கள் காப்பாற்றினர். இது சித்தாத்தனுக்கு மேலும் உற்சாகமளித்தது.

ஜ.எஸ்.ஜயின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே சித்தாத்தன் , இலங்கை நாடாளுமன்றத்தில் செயல் படுகிறா். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சித்தாத்தன் பணத்தை வாரி இறைத்திருக்கின்றார். சித்தாத்தனால் எப்படி இந்தளவு பணத்தை செலவழிக்க முடிகின்றது என்று கூட்டமைப்பின் தலைவர்களே ஆச்சரியப்பட்டிருக்கின்றனர். ஆனால் அதற்கான விடை பாக்கிஸ்தானிய உளவுத் துறை என்பது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் சித்தாத்தனை வெல்ல வைப்பதற்காக ஜ.எஸ்.ஜ கோடிக்கணக்கில் வழங்கியிருக்கிறது.

இன்று சித்தாத்தன் வடக்கு கிழக்கிலேயே ஆசனங்கல் எதுவும் இன்றி இருந்த புளொட் இரு ஆசனங்களைக் கைப்பற்றி உள்ளது என்றால் அதன் முதலீடு யா் என புியும்.
எதிர்காலத்தில் கூட்டமைப்பின் தலைவராக வர வேண்டுமாயின், சித்தாத்தன் தன்னுடைய மக்கள் செல்வாக்கை காண்பிக்க வேண்டும். இந்த ஆலோசனையும் பாக். உளவுத்துறையே வழங்கியிருந்தது.

இலங்கையின் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையில் பாகிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ மற்றும் சீன உளவுத்துறையான எம்.எஸ்.எஸ் ஆகியன இலங்கையிலுள்ள சிறிய அரசியல் கட்சிகளுக்குள் ஊடுருவுவதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருக்கும் நிலையில் தான் ஜ.எஸ்.ஜ கூட்டமைப்பைக்குள் ஊடுருவியிருப்பது அம்பலமாகியிருக்கிறது.
ஆட்சி மாற்றத்தின் போது, சிறிய அரசியல் கட்சிகளின் பங்கு பிரதானமாக இருந்ததே, மேற்படி இரு உளவுத்துறைகளும் சிறிய, முக்கியமாக தமிழ் அரசியல் கட்சிகளை இலக்கு வைத்து செயற்பட்டு வருகின்றன என்றே அரசியல் ஆய்வாளா்கள்.

புளொட் அமைப்பினா் அரபு நாடுகளுடன் நெருங்கிய தொடா்புகளில் உள்ளவா்கள் காரணம் இவா்களின் ஆயுதப் பயிற்சிகள் அனைத்தும் அரபு நாடுகளில் நடந்தமை குறிப்பிடத் தக்கது.
மாலைதீவினை புளொட் கைப்பற்ற சென்ற வேளை பாக்கிஸ்தான் தீவிர வாத அமைப்பின் உதவி பெறப்பட்டதை அறித்தே இந்தியா அதனை அன்று முறியடித்தது.
பாக்கியாக இருந்த ஜ.எஸ்.ஜ தீவிரவாத அமைப்பும் சித்தாத்தன் மூலம் தனது வரவை உறுதிப் படுத்திக் கொண்டது.
தகவல்
ந.சந்திரபாலன் -வவுனியா

(இந்தக் கட்டுரைக்கான பதிலை சம்மந்தப்பட்ட அமைபினர் ஒருவரிடம் இருந்து எதிர்பாரக்கின்றோம் - ஆசிரியர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com