Contact us at: sooddram@gmail.com

 

எகிப்து தந்த பாடம்

(லெனின் பெனடிற்)

ஜனநாயகப் புரட்சி என்பது ஆயுதம் தாங்கி அரசுக்கெதிராகப் போராடுவதே என்று இத்தனை காலமும் சித்தரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் ஆயுதமின்றி இரத்தம் சிந்தாமல் மகத்தான மக்கள் எழுச்சியினாலும் ஒற்றுமையினாலும் ஜனனாயகத்தை வென்றெடுத்த சாதனையை எகிப்திய மக்கள் சாதித்திருக்கிறார்கள். இந்த புரட்சியின் சாதனையான இப்போராட்தைத் தலைமைதாங்க எவ்வித தலைவர்களும் இன்றி அல்லது வழிகாட்டலின்றி எல்லோரும் அந்நாட்டு மன்னர்களாக இந்த ஜனனாயகப் போராட்டத்தை எவ்வித சிதைவோ சீரழிவோ இன்றி உறுதியுடன் முன்னெடுத்துச் சென்று இறுதியாக எகிப்திய சர்வாதிகாரியை பதவியிலிருந்து விரட்டியடித்து ஓர் அற்புத சாதனையைப் படைத்துள்ளார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க மற்றுமொருவிடயத்தை இங்கு பதிவுசெய்தே ஆகவேண்டும். அது எகிப்திலுள்ள பல்வேறு இஸ்லாமியப் பிரிவினரும் குறிப்பாகக் கிறீஸ்தவ சிறுபான்மையினரும் இணைந்து தங்களுடைய மத அரசியல் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டு நின்றதே இப்புரட்சி வென்றெடுக்கப் பட்டதற்கான மிகப் பிரதான காரணமாகும்.
முழு வெகுஜனங்களும் செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையை ஆயுதம்தாங்கிய சாகசவாதிகளால் ஒருபோதும் இடம்பெயர்க்கவோ பிரதியீடுசெய்யவோ முடியாது என்பதை வரலாறு எகிப்துப் புரட்சி மூலம் மீண்டும் ஒரு முறை நிறுவிக்காட்டியுள்ளது. எகிப்து ஒட்டுமொத்த மக்களும் எந்த மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளையும் தலையிட்டு விடுதலை எடுத்துத் தரும்படி மன்றாடாதது மற்றொரு பெரிய படிப்பனையாகும்.
புழுதியில் கிடந்த எகிப்தின் விடுதலையைத் தமது இரத்தக்கறைபடியாத் சொந்தக் கரங்களால் மாத்திரம் பவுத்திரமாக எடுத்து அரியணையிலே வைத்துள்ளார்கள்.

மத்திய கிழக்கைக் கொள்ளையடித்தது மாத்திரமல்ல அவர்களது எண்ளை வளம் தந்த செல்வங்களைப் பேரழிவுதரும் கொலைக் கருவிகளாக மாற்றியதைத் தேவையற்றது என்று நிறுவிக்காட்டியது எகிப்துப் புரட்சி.

மில்லியன் கணக்குப் பெறுமதியான கவசவாகனங்கள்மேல் எகிப்திய மழலைச் செல்வங்கள் ஏறிநின்று முகமலர்ச்சியோடு எகிப்திய தேசியக் கொடிகளைப் பிடித்த காட்சிகளையே பிரபலமான சர்வதேசப் பத்திரிகைகள் தமது முதற்பக்கங்களில் போட்டுப் பிரசுரித்தன.

எகிப்து மக்கள் நவீன பேரழிவுதரக் கூடிய ஆயுதங்களைப் பிரயோகிக்க எந்த நெழிவு சுழிவும் விடாத அரசியல் தந்திரோபாயத்தை உலகுக்குப் படிபித்துச் சென்றார்கள்.

எகிப்து மக்கள் எந்தவித அரச ஆத்திரமூட்டல்களுக்கும் அடிபணியாத மனவைராக்கியம் உடையவர்களாக நடந்து கொண்டார்கள். நானாவித ஆத்திரமூட்டல்களையும் தோற்கடிக்கும் கலையைக் கற்றிருந்தார்கள்.

மற்றுமொரு மகத்தான உண்மை எகிப்திய தொழிலாளவர்க்கத்தின் எந்த ஒரு சிறுபகுதி கூட அரசை ஆதரிக்கவில்லை. தொழிலாளி வர்க்கத்தின் ஒருபகுதி அரசை ஆதரிக்கும் வரை ஒருபோதும் விடுதலையைப் பெறமுடியாது என்ற பேருண்மையை எகிப்து மீண்டும் நிறுவிக்காட்டியது.

இலங்கைத் தொழிலாளி வர்க்கம் தானொரு உணர்மையுள்ள வர்க்கம் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். சமரசப் படக் கூடாத வர்க்கத்தோடு சமரசப்படக் கூடாது என்பதில் பிடிவாதமாக நிற்க வேண்டும்.

வெகுசனங்கள் ஒன்றுபட்டுப் பங்களித்து வென்றெடுத்த அரசியல்மாற்றங்களின் பலாபலன்களை எல்லாமக்களுமே பகிர்ந்து அனுபவிக்க உரிமையுடையவர்கள் என்பதையும் உறுதி செய்தார்கள்.

இலங்கையைப்போல் ராஜபக்ஸ்ச குடும்பமும் மற்றும் உச்சியிலுள்ள ஆயுதப் படையினரும் அரச அடிவருடிகளும் மாத்திரம் அனுபவிக்கும் உரிமையை அவர்கள் விடவில்லை.

ஒட்டுமொத்ததத் தமிழ் மக்கள் செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையை குறுங்குழுத் தனிமனித பயங்கரவாதிகளாலோ அன்றேல் ஒட்டுமொத்த இலங்கை மக்களும் இணைந்து செய்யவேண்டிய வரலாற்று அரசியற்கடமையை ராஜபக்ஸ்ச குடும்ப மற்றும் குறுங்குழுக் கும்பலினால் ஒருபொழுதும் ஆற்ற முடியாது என்பது அசைக்க முடியாத பெரியபாடமாகும்.

தமிழ் மக்களின் அரசியற் போராட்டத்திற்கான தலைமையை பாசிசப் புலிகள் ஏகோபித்த உரிமைகொண்டாடியதும் அதனை ஆதரித்த புலம்பெயர் தமிழர்கூட்டம் கோடானுகோடியைக் கொட்டிக் கொடுத்து உலகிலுள்ள அதிநவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்தும் கப்பற்படைமுதல் பீரங்கிப் படை வரையிலிருந்து விமானப்படையென்று வைத்திருந்தும் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஏனய போராளிகளையும் போராட்டத்தலைமையையும் பூண்டோடு அழித்தொழித்து தமிழ் மக்களின் உயிரோடும் உணர்வுகளோடும் ஒன்றிக்கலந்துநின்ற தமிழ்பேசும் இஸ்லாமிய மக்களை அவர்களுடைய பூர்வீகப் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்தது மட்டுமல்லாமல் அரசியல் பகையாளிகளாகவும் உருவாக்கி தமிழ் மக்களின் ஒன்றுபட்ட வாக்குகளைச்
சிதறிடித்து இந்த ஈழத்தமிழ்மக்களை அரசியல் அனாதைகளாக அரசியல் விதைவைகளாக
ஆக்கியதற்கு யார் காரணம் என்பதை தமிழ் மக்கள் உணரவேண்டும்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் தமிழ்பேசும் மக்களின் நியாயமான அரசியற் தீர்வை ஆதரித்த ஒரு குறிப்பிட்ட சதவீத தென்பகுதி சிங்கள மக்களையும் அதன் அரசியற் தலைவர்களையும் கூட தமது பயங்கரவாத நடவடிக்கையால் வெறுப்படைய வைத்து அரசபயங்கரவாதத்திற்கு நிகரான தமிழ்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து தமிழரின் நியாயமான அரசியற் தீர்வை எதிர்க்க சிங்கள மக்களை தூண்டிய காரியத்தைச் செய்தது யார்?

தமிழ்சிறுவர்களும் மக்களும் கொல்லப்பட்டால் அது அநியாயம். ஆனால் சிங்கள சிறார்களும்
மக்களும் கொல்லப்பட்டால் அது நியாயம்.
எந்த அநியாயத்திற்கு எதிராகப் போராட முற்பட்டோமோ அதே அநியாயத்தை நாமே செய்து தமிழர் பக்கமுள்ள நியாயத்தை அநியாயப்படுத்தியதே புலிகளின் மற்றுமொரு சாதனையாகும்.

காலம் இலங்கைத் தமிழருக்கு ஒரு மகத்தான உண்மையை வெளிக்காட்டியிருக்கிறது. அதாவது இலங்கைத் தமிழரின் சமூக பொருளாதார மற்றும் அரசியல்வாழ்வு மற்றும் எதிர்காலம் இலங்கையிலுள்ள சிங்கள இஸ்லாமிய மக்களோடு பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளதே அது.

தமிழ் மக்களின் நலன் சிங்கள இஸ்லாமிய மக்களின் நலனோடும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் சிங்கள இஸ்லாமிய மக்களின் அரசியலோடும் இணைக்கப்பட்டுள்ளது உண்மையாகும்.

சிங்கள இஸ்லாமிய மக்களின் அழிவில் தமிழ்மக்கள் ஒருபொழுதும் தப்பிப் பிழைக்கவே மாட்டார்கள் என்பதே நியதி. இவற்றைத் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டால் அன்றி ஒருபோதும் தமிழ் மக்களுக்கு அரசியல் விடிவு ஏற்படப் போவதில்லை.

ஆளும் அதிகார வர்க்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளிலிருந்து தம்மை தமிழ்மக்கள் விடுவித்துக் கொண்டு தமது அரசியற் பங்காளிகளான சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்களோடு ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே ஏதேச்சாதிகார சக்திகளையும் சர்வாதிகாரத்தையும் வீழ்த்தி இலங்கையின் ஒட்டுமொத்த விடுதலையின் ஒரு பாகமாகத் தமிழ் மக்களின் நியாயமானதொரு தீர்வைப் பெறமுடியுமென்பதைத் தமிழ் மக்கள் உணரவேண்டும்.

பொதுவாக ஈழத்தமிழர் தம்மை யூதருக்கு இணையாகக் காட்டிக் கொள்வதையும் அதில் பெருமை அடைவதையும் ஒருபழக்கமாகக் கொண்டவர்கள். அப்படி இணையாகக்
காட்டிக் கொள்வதில் சிலவேளை உண்மை இருந்தாலும் கூட ஈழத்தமிழர் தங்களுடைய
அரசியல் உரிமைகளை எப்போதோ வென்றெடுத்து இருக்க வேண்டும்.
யூதரை
விடுவோம்.
எகிப்தியரிடமிருந்தாவது நம்மக்கள் பாடம் கற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2011.02.19

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com