Contact us at: sooddram@gmail.com

 

ராசாவும் மந்திரிகளும்.... அலிபாபாவும் 40 திருடர்களும்...!

இரண்டு கிழமைக்கு முன்னம் சனநாயக அணி பிள்ளயளிண்ட பேட்டி ஒண்டப் பாத்தனான். அவயள் சொல்லிறதுளை உண்மை இருக்குத்தான் பாருங்கோ.. 135 உறுப்பினரில 75 சொச்சப்பேரை மட்டும் தான் இண்டைக்கு வரைக்கும் உந்த நாடு கடந்த அரசவைக்கு தெரிவு செய்தவயாம். அதிலயும் முக்கியமான ஆளுமயுள்ள மனிசரின்ர தெரிவுகளை பிரான்சிலும் லண்டனிலும் அறிவிக்காம நிப்பாட்டி போட்டிணமாம்.

நாலஞ்சு நாளுக்கு முன்னம் யாப்பை அனுப்பிப்போட்டு அதைப்பற்றி கதைக்கிற, திருத்திற அமர்வில கதைக்கவிடாம பண்ணி அவசர அவசரமா பிழையான, திருத்த வேண்டிய யாப்ப அங்கீகரிக்க சொல்லி ஒற்றைகாலில நிக்கிரதெண்டா உதில எதோ விசயமிருக்கத்தானே வேணும்.

ஒரு வருசமா இன்னும் நிப்பாட்டி வைச்ச ஆக்களிண்ட முடிவுகள வெளியிட இல்ல. மிச்ச ஐம்பது அறுபது இடங்கள் இன்னும் நிரப்பயில்ல. அதுக்குள்ள உது என்ன அவசர விளையாட்டு எண்டு கேக்கிறன்?

நான் அறிஞ்ச அளவில அமேரிக்கவில 10 பேரை எடுத்திருக்கினம். அந்த அளவுக்கு அங்க தமிழ்ச்சனம் இருக்கிறதா நான் அறிய இல்லை. எவ்வளவு வாக்குகள் விழுந்தது என்ர விபரம் ஒண்டும் இல்லை. நாடு கடந்த அரசாங்கத்திண்ட வேப்சையிட்ட தட்டி உந்த விபரங்களை ஒருக்கா பாப்பமெண்டு போனா, அதில தேர்தல் விபரங்கள் ஒண்டையும் காணயில்லை. ஆனாதமிழீழ நாடு கடந்த அரசாங்கம் - அமெரிக்காஎண்டு கிடக்குது. தமிழீழ நாடு கடந்த அரசாங்கம்எண்டெல்லோ இருக்கவேணும். எனக்கு ஒண்டுமா விளங்கயில்ல. தமிழ் சனம் என்ன கேணையள் எண்ட நினைப்போடையே உவை செயல்படுகினம். சனநாயக அமைப்பெண்டால் உண்மையா சனநாயகமா வெளிப்படையாய் எல்லோ இயங்க வேணும்.

அரசவைக்கு பிரதிநிதியல தெரிவு செய்யிற முறைய ஒருக்காப் பாருங்கோ.. நாடு கடந்த அரசாங்கமெண்டத  ஒர புது கோட்பாடு சரி... புது வடிவம் சரி.. ஒரு பரிசோதனை எண்டு கூ  ொல்லுங்கோவன்.. இது உண்மையான ஒரு அரசாங்கதின்ர அரசவை மாதிரி இல்லயல்லோ!

உண்மையான அரசெண்டா ஆளும் கட்சி இருப்பினம், எதிர்க்கட்சியும் இருப்பினம்.. அப்ப வெல்லுற கட்சி பிரதமர தெரிவு செய்து போட்டு அவர் பிறகு செயலர்கள தெரிவு செய்து அரசாங்கத்தை அமைச்சுப்போடுவார்.

(உதுளையும் கவனியுங்கோ மேற்கத்தைய நாடுகளில அமைச்சர்கள் எண்ணாமல் செயலர்கள் எண்ட சொல்லத்தான் பாவிப்பினம். அது தான் கூட பொருந்தும்.. எங்களுக்கு நாடு இன்னும் கிடைக்கல்லே தானே! பிறகு ஏன் அமைச்சர் அது இது எண்டு பாவிச்சு சும்மா விண்ணானம் பேசுவான்... நாங்களே எங்கண்ட சனத்த பேய்க்காட்டுற மாதிரி எல்லே கிடக்குது.. சரி அத விடுங்கோ...)

அப்ப, அங்க ஒண்டு ஆளும் கட்சியாயும் மற்றக் கட்சி எதிர்கட்சியாயும் இருக்கும். எங்கண்ட நாடு கடந்த அரசாங்கத்த எடுத்தியள் எண்டால் அது எதிர்க்கட்சி.. ஆளும்கட்சி எண்ட விதத்தில இல்லை... இருக்கவும் முடியாது, இருக்கவும் கூடாது. ஏனெண்டா, எல்லாரையும் நாங்கள், மக்கள், தமிழற்ற விடுதலைக்கு போராடுங்கோ! ஒரே குறிக்கோளுக்கு போராடுங்கோ எண்டு தானே தெரிவு செய்து அனுப்பியிருக்கிறம். அப்ப பிரதமரையும் மற்ற செயலர்களையும் உறுப்பினர்கள் தாங்கள் எல்லாருமா சேர்ந்தெல்லே வாக்குபோட்டு தெரிவு செய்யவேணும். அது தானே முறை. எல்லாரையும் தெரிவு செய்யிறது பிரதமர் எண்டால், அவர் விரும்பியவர்களைதான் தானாக தெரிவு செய்வாறெண்டால்.... அவர் ஒரு ஆளும் கட்சி ஆளாகவும் அங்க இன்னொரு எதிர்கட்சியுமல்லோ அப்ப இருக்கவேணும். நான் சொல்லிறது விளங்குதே..?

அப்ப ஒராளின்ட முடிவில எல்லாத்தையும் விடுறதெண்டால் பிறகேன் நாங்கள் மினக்கட்டு 135 பேர உறுப்பினரா தெரியவேணுமேண்டு கேக்கிறன்? எனக்கெண்டா ஒண்டுமாய் விளங்கேல்ல.

இதுக்குள்ள யாப்பில இன்னொரு முசுப்பாத்தியும் இருக்கு பாருங்கோ!...

எல்லா அதிகாரங்களையும் தானே வச்சிருக்ககூடிய பிரதமர தெரிவு செய்யிறது 51 வீதமான பிரதிநிதியளாம். இன்னும் முசுபாத்தி இருக்கு கேளுங்கோ.... எக்கணம் அவரில நம்பிக்கையில்லாமல் பிரேரணை கொண்டு வாறதெண்டால் மூண்டில் ரெண்டு வாக்குகள் வேணுமாம். அதாவது 66.6 வீதமான பிரதிநிதிகள் வாக்குபோட வேணுமாம். உள்ளுக்கு வர 51 வீதம், வெளில அனுப்பிறதெண்டால் 66.6 வீதம் தேவையாம். இது மாறி எல்ல  இருந்திருக்க வேணும். கொஞ்சம் யோசிச்சுப்பாருங்கோ... அப்பதானே யாப்பு திடமானதாய், பாதுகாப்பானதாயிருக்கும். நான் சொல்லிறது சரியெல்லே. அப்ப, உதென்ன விளையாட்டு எண்டு கேக்கிறன்...?  நான் எங்கட ஊர்ச் சங்கக்கடயில கூட உப்பிடி ஒரு யாப்ப கேள்விப்படயில்ல.

யாப்பு சரியாயிருந்தால் ஆருக்கு நன்மை? எங்கண்ட சனத்துகுத்தானே! பின்ன ஏன் உதுக்கு உப்பிடி குத்தி முறியினம்? ஒருக்கா சொல்லுகினம் அது ஒண்டும் பெரியவிசயமில்ல சின்னச்சின்ன திருத்தங்கள் தான் செய்யவேணும் அத செய்து போடலாம் எண்டு. பின்ன அது சின்ன விசயமெண்டா அத செய்து விடுகிறதுதானே! ஏன்அவயள் போகப்போகினம், இவயள் போகப்போகினம்..’ எண்டு கலைக்கப்பாக்கினம் எண்டுதான் எனக்கு விளங்கேல்ல.

அந்தப் பெடி ஒண்டு சொன்னமாதிரி வெள்ளைக்காரங்களும் மற்றதுகளும் உந்த யாப்பப் பாத்தா தமிழற்ற கெட்டித்தனதப்பார்த்து எக்கணம் கெக்கட்டம் போட்டெல்லோ சிரிக்கப் போயினம். அவசரப்படாம உதுகள ஆற அமர இருந்து கதைச்சு திருத்தாம, இத திருத்துவம் எண்டு கேக்கிற பகுதிய வெளியில விடுவம் எண்டு ஒற்றக் காலில நிண்டா, உதுக்குள்ள ஏதோ ஒளிவு மறைவான விளையாட்டு இருக்கு எண்டு, எங்களைப்போல சனம் சந்தேகப்படுறது ஞாயமெல்லோ?

இஞ்ச பாருங்கோ! இது சனநாயக அணி பிரதிநிதியளுடைய கடமை மட்டுமில்ல. எல்லா உருப்பினரிண்டையும் கடமையெல்லே... உவை மற்ற உறுப்பினர்கள் என்ன செய்யினம்? நாங்கள் அவயள சும்மா உதுகள பாத்து கண்ண மூடிகொண்டிருக்கவே தெரிவு செய்து விட்டனாங்கள். இது நல்ல பகிடியாக்கிடக்கு...

சனநாயகம் எண்டுறது, சரி எது பிழை எது எண்டதை வடிவா ஆராய்ஞ்சு சரியானத, மக்கள் எல்லாரும் எற்றுக்கொள்ளுறத, செயல்படுத்திற விசயமல்லோ. உத விட்டிட்டு அவங்கள் வெளியில போறாங்கள், வெளியில போறாங்கள்... எண்டு அவங்கள் சொல்லாததை சொல்லிக்கொண்டு உண்மையா சொல்லிற விசயத்த சனத்துக்கு மறச்சு பிழையள திருத்தாம நடக்கிறதேண்டா உது தமிழருக்கு நல்லதுக்கில்ல நான் சொல்லிப்போட்டன். சும்மா சில ஊடகங்கள விலைக்கு வாங்கி வைச்சுக்கொண்டு திரும்பத்திரும்ப சனத்த திசை திருப்பிற வேலையல்லோ இப்ப நடக்கிது.

சனம் இப்ப வடிவா எல்லாத்தையும் விட்டுப்போட்டு பாத்துக்கொண்டுதான் இருக்குதுகள். முப்பது நாப்பது வருசமா உப்பிடி எத்தனய கண்ட சனம். ஆறார் என்ன செய்யீனம். எந்த எந்த ஊடகங்கள் என்னவிதமா சனத்துக்கு எதிரா வேலை செய்யினம், இதுகல சனம் கவனிக்காமல் இல்ல. சில ஊடகங்கள் காசு கட்டாமலிருக்ககூட வீட்டுக்க வந்தெல்லே சனத்த மூளைச்சலவை செய்யீனம்.

சொன்னாப்போல எனக்கு இப்ப ஒரு இராசவிண்ட கதை ஞாபகம் வருகுது. ஒரு நாட்டில, அரச சபைக்கு ஒரு வழக்கு வந்துதாம். ரெண்டு தாய்மார், ஒரு பிள்ளைய வச்சு இது தங்கண்ட பிள்ளையெண்டு தங்களுக்குள்ள சண்ட பிடிச்சினமாம். பின்ன இராசா இதப் பாத்துப்போட்டு காவலாளியைக் கூப்பிட்டு இந்தாடப்பா இந்த பிள்ளய கொண்டுபோய் வெட்டி ஆளுக்குப் பாதியாக்குடுத்து விடு எண்டு சொல்லிப்போட்டானாம். ஒருத்திக்கு வலு சந்தோசமாம். அவ கொடுப்புக்குள்ள நல்ல ஒரு சிரிப்போட நிக்கிறாவாம். மற்றத் தாய் பிள்ளையை வேட்டிப்போடதயுங்கோ எண்டு கத்திக்கதறினாவாம். இங்கயும் இப்பிடித்தான் கதை இருக்குது. கொஞ்சப்பேர் சனத்த எப்பிடியும் பிரிச்சாலும் பரவாயில்ல, போராட்டம், விடுதலை எண்றதெல்லாம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை அரசாங்கம், அமைச்சர்கள் எண்டு சொல்லி தங்கட அலுவல கொண்டு போடுவம் எண்டு நிக்கிறதா தான் தெரியுது.

ஒண்டை மட்டும் சொல்லிப்போட்டன், எங்களுக்காக 30 வருசமா போராடி விழுந்த பிள்ளையள், பெரிய பெரிய விலைய குடுத்துத்தான் இண்டைக்கு எங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தை வாங்கி தந்திருக்கினம். இதில எல்லாரும் பொறுப்பா நடந்து கொள்ள வேணும்.   

(பெயர் குறிப்பிடாது நல்ல மனுசன் என்ற பெயரில் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கட்டுரை இது. எமது வாசகர்களின் பார்வைக்காக இங்கே தருகின்றோம்.)

(நன்றி: பதிவு)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com