Contact us at: sooddram@gmail.com

 

ஜே.வி.பி விஷமிகளை வெளியேற்றி பல்கலைக்கழகங்களை பாதுகாப்போம்...

எங்கள் நாட்டின் உயர் கல்வித்துறையை சீர்குலைத்து வரும் பல் கலைக்கழகங்களில் நிலைபெற்றிருக்கும் பகிடிவதைக்கு நிரந்தர தீர் வொன்றை ஏற்படுத்த வேண்டுமாயின், சமூகவிரோத செயற்பாடு களை அப்பாவி இளைஞர்களை கைப்பொம்மைகளாக மாற்றி, மேற் கொண்டு வரும் ஜே. வி.பியின் செல்வாக்கை பல்கலைக்கழகங்களிலிரு ந்து முற்றாக ஒழித்து விட வேண்டும்.

இந்தப் பாரிய சமூகப் பணியை ஏற்றுக் கொண்டிருக்கும் உயர் கல்வியமைச் சர் எஸ். பி. திஸாநாயக்காவின் பகிடிவதை ஒழிப்பு செயற் திட்டங்களு க்கு பல்கலைக்கழக மாணவர்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமாகும். இன்று, பல்கலைக்கழகங்களில் பிரச்சினை தோன்றுவதற்கு பகிடிவதை என்ற மனிதாபிமானமற்ற செய்முறையே பின்னணியில் புற்றுநோயைப் போன்று ஊடுருவிய வண்ணம் இருக்கின்றது.

பகிடிவதையினால் 50 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இது வரை உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். இதனால் பல்கலைக்கழகங்க ளின் உடைமைகளுக்கும், சொத்துக்களுக்கும் கடந்த பல்லாண்டு கால மாக ஏற்பட்டிருக்கும் அழிவு பல கோடி ரூபாவையும் தாண்டியிருக் கிறது.

பல்கலைக்கழகத்திலிருந்து பகிடிவதை என்ற கொடுமையை இனிமேலும், சகித்துக் கொள்ள முடியாத நிலையில் பல நூற்றுக்கணக்கான மாணவர்க ளும், மாணவிகளும் பல்கலைக்கழக கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஏதாவது ஒரு தொழிலை புரிய வேண்டும் என்ற உணர்வு அவர்கள் மனதில் தோன்றுவதற்கும் பகிடிவதை என்ற அச்சுறுத்தலே பிரதான கார ணமாக இருந்து வருகிறது.

பல்கலைக்கழகங்களில் விலை மதிப்பற்ற கல்விப் போதனைக்காக ஒதுக்கப் பட்டிருக்கும் நேரம் இதனால் அநியாயமாக விரயமாகி வருகிறது. பகிடி வதையின் தாக்கத்தினால், எங்கள் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் ஒரு சில நாட்களல்ல, வாரங்களுக்கும் மாதங்களுக்கும் மூடிக் கிடக்கின் றன.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் சில கிராமத்து மண்வாசனை யுடைய அப்பாவி மாணவர்களை, ஜே.வி.பி.யினர் இந்த நாட்டில் பாமர மக்கள் புரட்சி ஒன்றை ஏற்படுத்தி, மக்கள் ஆட்சியை மலர வைப் பதற்கு உதவி செய்யுங்கள் என்று போலி வார்த்தைகளின் மூலம் ஏமா ற்றி, அவர்களை தாங்கள் விரிக்கும் வலையில் வீழ்த்தி விடுகிறார்கள்.

அதையடுத்து, அந்த மாணவர்களை பல்கலைக்கழக மாணவ சங்கங்களின் முக்கிய பதவிகளுக்கு நியமித்து, அம்மாணவ சங்கங்களை ஜே.வி.பி தனது விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டி வைக்கின்றது. இதன் மூலமே, பல தரப்பட்ட பிரச்சினைகளும் அமைதியின்மைகளும் முரண்பாடுகளும் பல்கலைக்கழகங்களில் ஏற்படுவதற்கு ஜே.வி.பி அடித்தளம் அமைத்து, தனது சமூக விரோத செயற்பாடுகளை நிறைவேற்றிக் கொள்கிறது.

ஜே.வி.பியின் செல்வாக்கைப் பெற்ற சில பல்கலைக்கழக மாணவ சங்கங்க ளின் நடவடிக்கைகளுக்கு ஜனநாயகத்தின் மீது அசையாத நம்பிக்கை வைத்திருக்கும் வேறு சில பல்கலைக்கழக மாணவ சங்கங்களின் உறுப்பினர்கள், தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும்போது, ஜே. வி. பி யினரின் ஆதரவைப் பெற்றுள்ள மாணவ சங்கங்கள் அங்கு வன்முறை களை கட்டவிழ்த்து விடுகின்றன.

இதனால் நூற்றுக்கணக்கான அப்பாவி மாணவ, மாணவிகள் காயமடைவது டன் தங்கள் பெற்றோரின் லட்சியக் கனவை நிறைவேற்றுவதற்கான பல் கலைக்கழக கல்வியை தொடர முடியாத அவல நிலைக்கும் தள்ளப் படுகின்றனர்.

பல்கலைக்கழகங்களில் இவ்விதம் ஏற்படும் வன்முறைகளுக்கு தேவையான பொல்லு, இரும்புக் கம்பிகள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை மாணவர்களைப் போன்று தோற்றமளிக்கும் ஜே.வி.பி குண்டர்களே பல் கலைக்கழகத்திற்குள் எடுத்து வருவதாக பொலிஸார் சந்தேகிக்கிறார்கள்.

பகிடிவதை என்ற இந்த துஷ்ட அரக்கனை துவம்சம் செய்து, எங்கள் பல் கலைக்கழகங்களை கல்வியை புகட்டும் தூய தேவாலயங்களாக மாற்ற வேண்டுமாயின், முதலில் பல்கலைக்கழகங்களில் உள்ள துஷ்ட சக்தி களை இனங்கண்டு, அவர்கள் மாணவர்களாக இருந்தாலும் கூட, சம் பந்தப்பட்ட அனைவரையும் பல்கலைக்கழகங்களிலிருந்து சட்டபூர்வ மான முறையில் நிரந்தரமாக வெளியேற்றுவது அவசியமாகும்.

ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கும் கொடுக்கப்படும் அடையாள அட்டைகளை பல்கலைக்கழகங்களின் வாயிலில் இருக்கும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பார்வையிட்டு, அவர்கள் உண்மையி லேயே பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் தான் என்று ஊர்ஜிதம் செய்த பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். வெளி யார் பல்கலைக்கழக வளவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படலாகாது. அதுபோன்றே, பல்கலைக்கழகங்களின் மாணவர் விடுதிகளுக்கும், வெளி யில் உள்ளவர்கள் செல்வதை தடைசெய்ய வேண்டும்.

இலங்கை பல்கலைக்கழகம் சுமார் 8 தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பிக் கப்பட்டபோது, புதிய மாணவர்களுக்கும் பழைய மாணவர்களுக்கும் இடையில் நட்புப் பாலத்தை ஏற்படுத்துவதற்கான பகிடிவதை என்ற ஒரு விளையாட்டு உன்னத நோக்கங்களை மனதில் கொண்டு, ஆரம்பிக்கப் பட்டது. அன்று, ஓரிரு நாட்களுக்கு மாத்திரமே புதிய மாணவர்கள் பகி டிவதை என்ற சிறு துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள். அதற்கு பின் னர், பழைய மாணவர்களும் புதிய மாணவர்களும் வாழ்நாள் பூராவும் நண்பர்களாக இருப்பதற்கு பகிடிவதை ஒரு சிறந்த அடித்தளமாக அமைந்தது.

நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட பகிடிவதை இன்று பல்கலைக்கழ கங்களில் மட்டுமன்றி, பாடசாலைகளுக்கும் புற்றுநோயைப் போன்று பரவி, எங்கள் நாட்டின் கல்வித்துறையை சீர்குலைத்துக் கொண்டிருக்கி றது.

இந்த பேராபத்திலிருந்து எங்கள் நாட்டின் கல்வித்துறையை காப்பாற்றி கரை சேர்க்க வேண்டுமாயின், ஜே.வி.பி யினர் பல்கலைக்கழகங்களுக்குள் ஊடுருவி சமூக விரோத செயற்பாடுகளை மாணவர்கள் மூலம், செய் விப்பதை தடுப்பதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com