Contact us at: sooddram@gmail.com

 

தமிழகத் தேர்தலில்

ஆதரவு அலையா... ஆட்சி மாற்றமா?

யாரும் எதிர்பாராத அளவு வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்திருப்பது அரசியல் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுத் தேர்தலில் 60 முதல் 65 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடப்பது வழக்கம். வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக இருந்தால் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகம் என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் இருந்து வருகிறது.

ஆனால் திருமங்கலம் இடைத்தேர்தலின்போது இந்தக் கருத்து அடிபட்டுப் போனது. அப்போது அதிமுகவின் வாக்கு வங்கி குறையவே இல்லை. ஆனால் திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கூடுதலாக பதிவான வாக்குகளில் பெரும்பாலானவை திமுக வேட்பாளருக்குக் கிடைத்தவை.

எல்லா வாக்காளர்களையும் வாக்களிக்கச் செய்வது, அதுவும் தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்கச் செய்வது என்ற அணுகுமுறையை திமுகவினர் அப்போது கையாண்டதால் அந்த வெற்றி கிடைத்தது.

இப்போது முடிந்துள்ள வாக்குப் பதிவில் 80 சதவீதத்துக்கும் மேலானோர் வாக்களித்துள்ளனர்.

வாக்களிக்க தாமதம் ஆனபோதிலும்கூட யாரும் கோபம் கொள்ளவோ, தகராறு செய்யவோ, திரும்பிச் செல்லவோ இல்லை. பொறுமையாகக் காத்திருந்து வாக்களித்திருக்கிறார்கள்.

அந்த உறுதி, மனமாற்றம் வாக்களர்களிடம் ஏற்படக் காரணம் என்ன என்பது அரசியல் கட்சிகள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண் வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தார்கள். இது அரசியல் கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே பெண்கள் இரட்டை இலையின் ஆதரவாளர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட விஷயம்.

இப்போது அவர்கள் அதிக அளவில் வந்திருப்பதற்கு மூன்று அம்சங்கள் காரணமாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

1. கடந்த 5 ஆண்டுகளில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கேஸ் அடுப்பு, கிலோ அரிசி ஒரு ரூபாய் விலையில் கிடைத்தது, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை மனதில் கொண்டு இந்த ஆட்சி தோற்கக்கூடாது என்பதற்காக அதிக அளவில் வாக்களிக்க வந்திருக்கலாம்.

2. அல்லது தேர்தலுக்கு முன்பே வேட்பாளர்களிடம் பெற்ற பணத்துக்காக, அவர்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக வாக்களிக்க வந்திருக்கலாம். பெண்கள் சென்டிமெண்ட் உள்ளவர்கள் என்பதால் இந்த இரு வாய்ப்புகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

3. அதேசமயம், ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு வாங்கிய அரிசியைச் சமைக்க இதர மளிகைப் பொருள்களுக்கு ரூ.100 செலவிடும் அளவு விலைவாசி உயர்வு,பஸ கட்டணம் மறைமுக உயர்வு, மின் தடைகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த அரசு மறுபடி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில்கூட அவர்கள் பெருமளவு வந்திருக்கலாம் என்கிறார்கள்.

பல இடங்களில் வாக்களித்துவிட்டு வந்த பெண்களிடம் விசாரித்தபோது, ""யாரும் சுத்தமான ஆட்சியைத் தரப் போவதில்லை. இந்த முறை மாற்றித்தான் பார்ப்போமே. அதனால் தவறு செய்தால் 5 ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற அச்சமாவது அரசியல்வாதிகளுக்கு ஏற்படும்'' என்று கூறினர்.

மாற்றம் வேண்டும் என்ற கருத்து பரவலாகக் காணப்பட்டது என்றாலும், மகளிர் சுய உதவிக் குழு என்ற வாக்கு வங்கி இதில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கடைசி நேரத்தில் பரிசுகள் மூலம் பெண்கள் அமைப்பினர் ஒரு பக்கமாக சாய்ந்திருப்பார்களா என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தொகுதிகளில் வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பணமோ, பரிசுப் பொருள்களோ தரப்பட்டுள்ளது என்று தெரிகிறது. ஆனால் பண பட்டுவாடா நடக்காத பகுதிகள் உள்பட, பரவலாகவே வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது. காலையில் இருந்தே கூட்டம் படிப்படியாக அதிகரித்தது. எனவே பணம் தராத பகுதிகளிலும்கூட வாக்காளர்கள் அதிகமாக வந்திருப்பது பணம் தந்துவிட்டு, அந்த நம்பிக்கையில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல இடங்களில், ""பணம் தந்தார்கள் வாங்கிக் கொண்டோம்; ஆனால் எங்கள் விருப்பப்படிதான் முடிவெடுத்து வாக்களித்தோம்'' என அடித்தட்டு மக்கள் கூறினர். அப்படியானால் ""பணம் வாங்கியது தவறு இல்லையா?'' என கேட்டால், ""அது எங்களுக்கு உரிய பணம், இப்போதுதான் தந்தார்கள், வாங்கிக் கொண்டோம்'' என்று உரிமையோடு கூறினர்.

வாக்காளர்கள் அதிகமாக வந்திருப்பது அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றாலும், பணம் தந்ததால் மட்டும் இந்தத் தேர்தல் முடிவு இப்படி அமைந்தது என்று கூறுகிற அளவுக்கு முடிவுகள் இருக்காது என்பது மட்டும் வாக்காளர்களிடம் பேசியதில் இருந்து தெரிகிறது.

இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். ஊழல் எதிர்ப்பு என்ற கருத்து அவர்களிடம் அதிகம் காணப்படுவது ஆளும் கூட்டணிக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.

ஜெயலலிதா கூறியிருப்பதுபோல, வெளியில் எதுவும் சொல்லாமலே "மௌனப் புரட்சி' என்பது வாக்குச் சீட்டுகள் மூலம்தான் நடந்து வருகின்றன.

1977, 1996 ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் காணப்பட்ட எழுச்சி இந்தத் தேர்தலில் காணப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்த மௌனப் புரட்சியின் முடிவுக்காக இன்னும் 4 வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை பலரையும் வேதனையடையச் செய்திருக்கிறது. 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com